சனி, 20 அக்டோபர், 2018

கடவுள் வருகிறார்!
------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
கட்டு கட கட்டு கட கட்டு
கட்டு கட கட்டு கட கட்டு
கட்டு கட கட்டு கட கட்டு

இன்று என் அதிகாலைத் தூக்கத்தைக் கலைத்தது
இந்த அழைப்பு சமிக்ஞை. தூக்கக் கலக்கத்துடனே
கட்டு கட்டு கட என்றேன். சொல்ல வந்ததைச்
சொல்லுங்கள் என்று இதற்கு அர்த்தம்.

இவையெல்லாம் மார்ஸ் சங்கேதக் குறியீடுகள்.
சாமுவேல் மார்ஸ் என்னும் அமெரிக்க விஞ்ஞானியின்
கண்டுபிடிப்பே இவை.

கிறிஸ்டோபர் நோலனின் இன்டெர் ஸ்டெல்லார் படம்
பார்த்தீர்களா? அதில் கதாநாயகனுக்கு வரும் செய்தி
மார்ஸ் சங்கேதக் குறியீட்டில்தான் வரும்.

செய்தி வந்து விழுந்தது. அது இதுதான்: "கட்டு கட்டு கட,
கட்டு கட்டு கட்டு, கட்டு கட கட/// கட கட்டு, கட கட்டு கட,
கட கட்டு கட, கடகட, கடகடகடகட்டு// கட்டு,
கட்டுகட்டுகட்டு, கட்டு கடகட, கடகட்டு,
கட்டுகடகட்டுகட்டு."      

அதை வாசித்துப் பார்த்ததில்
"கடவுள் இன்று வருகிறார்" (God arrives today) என்று இருந்தது.
மேல் விவரம் அறிய முயன்று தோற்றேன். ஏனெனில்
இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

கடவுள் வருகிறார் என்பதை என்னால் நம்ப
முடியவில்லை. காரணம் கடவுள் இறந்து விட்டார்
என்று நீட்சே சொல்லி இருந்ததுதான். யார் இந்த நீட்சே?
ஜெர்மன் தத்துவஞானி; காரல் மார்க்சின் சமகாலத்தவர்.

நீட்சேவை மறுப்பதற்குரிய வலுவான தர்க்கம் எதுவும்
என் கைவசம் இல்லை. எனவே நீட்சே சொன்னபடி
கடவுள் இறந்துதான் போயிருக்க வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தேன். அப்படியானால் இறந்து போன
கடவுள் எப்படி இன்று வர முடியும்?

இதற்கு ஒரு anti thesisஐ என் சிந்தனை வழங்கியது.
ஏன் இயேசுநாதரைப்போல கடவுளும்
உயிர்த்தெழுந்திருக்கக் கூடாது என்று கேட்டது.
சரிதான், ஆக நீட்சே சொன்னபடி இறந்து போன கடவுள் மறுநாளிலோ அல்லது சில நாட்களிலோ உயிர்த்தெழுந்து இருக்கக்கூடும் என்று எண்ணினேன். இதற்கான
நிகழ்தகவைக் கணக்கிட்டதில் non zero probability
கிடைத்தது. எனவே கடவுள் வருகிறார் என்பது
உறுதியாகி விட்டது.

போர்க்கால அடிப்படையில் கடவுளை வரவேற்க
ஆயத்தமானேன்.கடவுள் வருகிறார் என்றால் அவரை
ஒரு யூக்ளிட்டின் வெளியில் (Euclidean space) எதிர்பார்ப்பது
பொதுமக்களின் நடைமுறை. ரிலேட்டிவிட்டி தியரியை
ஓரளவு படித்தவர்கள் ஒரு மின்கோவ்ஸ்கி வெளியில்
(Minkowski space) கடவுளை எதிர்பார்ப்பர். மூன்று
பரிமாணங்களுடன் காலமும் சேர்ந்த நாற்பரிமாண
வெளியே மின்கோவ்ஸ்கி வெளி.

இழைக்கொள்கையாளர்கள் (string theorists) கடவுளை
ஒரு கலாபி யாவ் வெளியில் (Calabi Yau space) எதிர்பார்க்கக்
கூடும். இவ்வெளி பத்துப் பரிமாணங்களைக் கொண்டது.

நான் இந்த வெளிகள் எல்லாவற்றையும் ஒதுக்கி
விட்டு, ஹில்பெர்ட் வெளியை (Hilbert space)
தேர்ந்தெடுத்தேன். அதிலும் வரம்பற்ற பரிமாணங்களைக்
கொண்ட (infinite dimensional) ஹில்பெர்ட் வெளியைத்
தேர்ந்து, அங்கிருந்து கொண்டு கடவுளின் வருகையை
எதிர்நோக்கி இருந்தேன்.

ஹில்பெர்ட் வெளியின் சௌகரியம் என்னவெனில்,
கடவுள் எந்த வழியில் வந்தாலும் என் பார்வையில்
இருந்து தப்பிக்க முடியாது என்பதே.

காத்திருந்தேன் கடவுளின் வருகைக்காக. நேரம் ஆகிக்
கொண்டே இருந்தது. கடவுள் வரக்காணோம். மதிய
உணவை ஹில்பெர்ட் வெளியில் வைத்தே உட்கொண்டேன்.
தொடர்ந்து சலிப்பே இல்லாமல் கடவுளுக்காகக்
காத்திருந்தேன். நேரம் பறந்தது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் காந்தி சிலை
அருகில் ஒரு யூக்ளிட்டின் வெளியில் (Euclidean space)
இசக்கிமுத்து அண்ணாச்சி காத்திருந்தார். நொடிக்கொரு
தரம் என்னிடம் கடவுள் வந்து விட்டாரா என்று விசாரித்துக்
கொண்டிருந்தார்.   

மாலை, இரவு, நள்ளிரவு என்று நேரம் பறந்து
கொண்டிருந்தது.இசக்கிமுத்து அண்ணாச்சி
பொறுமையை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்தார்.
இறுதியில் விடிந்தும் விட்டது.
என்றாலும் கடவுள் வரவில்லை. இருந்தால்தானே வருவதற்கு!
*****************************************************************
மின்கோவ்ஸ்கி வெளி, கலாபி-யாவ் வெளி
பற்றியெல்லாம் அறிந்து கொள்ள இக்கட்டுரையாசிரியர்
எழுதிய "இழைக்கொள்கை" (string theory) என்ற
கட்டுரையைப் படிக்கவும். அறிவியல் ஒளி இதழில்
பிரசுரமானது. அறிவியல் ஒளி இதழ் கடைகளில்
கிடைக்காது. சந்தா செலுத்திப் பெறுங்கள்.

அறிவியல் ஒளி படிக்காதவர்கள் நாகரிகம் அடைந்த
குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள். Don't be scientifically
illiterate person.
  

குவான்டம் தியரியில் மிகவும் புகழ் பெற்றது
ஷ்ராடிங்கரின் பூனை. இப்பொருள் குறித்து தமிழில்
எழுதப்பட்ட முதல் கட்டுரை அநேகமாக இக்கட்டுரையாக
இருக்கக் கூடும். படியுங்கள்.






         



 
          

1 கருத்து:

  1. இழைக்கொள்கை நூல், மற்றும் அறிவியல் ஒளி இதழ் சந்தா பற்றி மேலும் தகவல் பெற விழைகிறேன்.

    பதிலளிநீக்கு