வெள்ளி, 18 அக்டோபர், 2024

 EVM மீது காங்கிரசின் பொய்யான புகார்கள்!
ஹரியானா தேர்தலில் தோற்ற காங்கிரசின் புலம்பல்!
---------------------------------------------------------------------------------------
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்டோபர்
2024ல் வெளியாயின. பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் 
தக்க வைத்துக் கொண்டது.  பாஜகவுக்கு இது ஹாட்-டிரிக்
வெற்றி ஆகும்.2014, 2019, 2024 ஆகிய மூன்று 
தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 
வருகிறது பாஜக.   

ஹரியானா தேர்தல் முடிவ்கள :
மொத்த இடம் = 90
பாஜக =48
காங்கிரஸ் = 37
லோக்தளம் = 3
பிறர் =2.


     

வியாழன், 17 அக்டோபர், 2024

பாட்டரிகளின் அறிவியல்!
பகுதி-.1
--------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
மின்சாரம் பற்றி நன்கறிந்தவர்களுக்கு மின்சாரம் 
பற்றிய ஒரு பேருண்மை தெரிந்திருக்கும். மின்சாரத்தை 
சேமித்து வைக்க முடியாது என்பதுதான் அது.

உணவு தானியங்களை டன் டன்னாகசேமிக்கிறோம்.
100 டன் அரிசி, 200 டன் கோதுமை, 100 டன் பருப்பு  
என்று நம்மால் மாதக்கணக்கில் சேமித்து வைக்க 
முடிகிறது.
இது போல 1000 மெகாவாட் மின சாரத்தை, 2000 மெகாவாட்
மின்சாரத்தை  ஒரு மாத காலம் நம்மால் சேமிக்க முடியுமா?
முடியாது. தயாரிக்கப்பட்ட உடனேயே மின்சாரம் 
நுகரப் பட்டுவிட வேண்டும் (immediate consumption 
after production). இது மின்சாரத்தின் பண்பு.

இப்படி நான் சொன்ன உடனேயே புத்திக் கூர்மை உள்ள
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் சமூகத்தை  
அல்லது பிராமண சமூகத்தைச் சேர்ந்த CBSE ஒன்பதாம் 
வகுப்புச் சிறுவன் குறுக்கிட்டு, "மின்சாரத்தைச் 
சேமிக்க முடியும் சார், என் அறிவியல் பாடப் 
புத்தகத்தில் சேமிப்பு மின்கலங்கள் (batteries)   
என்று ஒரு பாடமே இருக்கிறது" என்பான்.

பையன் சொல்வதும் சரிதான். மின்சாரத்தை மிகக் 
குறைந்த அளவில் மட்டுமே சேமிக்க முடியும். அப்படி 
மிகக் குறைந்த அளவில் சேமிக்கப்பட்ட மின்சாரம்தான் 
பாட்டரிகளில் கிடைக்கிறது.

1.5 வோல்ட், 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் 
என்றெல்லாம் பாட்டரிகள் கடைகளில் கிடைக்கின்றன.
ஸ்கூட்டர், கார் வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய 
பாட்டரியை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
சாதாரண சுவர்க் கடிகாரத்தில் பயன்படும் பாட்டரி 
1.5 வோல்ட் பாட்டரி ஆகும்.

1991ல் நிகழ்ந்த ராஜிவ் காந்தி படுகொலையில் 
பெல்ட் வெடிகுண்டை (belt bomb) வெடிக்க வைப்பதற்கு 
பேரறிவாளன் வாங்கிய பாட்டரி 9 வோல்டதான்.
கோல்டன் பவர் 9 V பாட்டரிகள் இரண்டை வாங்கி 
கொலையாளி சிவராசனுக்குக் கொடுத்தார் 
    
9 வோல்ட் பாட்டரியின் மதிப்பு என்ன என்பது 
பேரறிவாளனுக்குத் தெரியும். அவர் Electrical and 
Electronicsல் டிப்ளமா படித்தவர்.  
-----------------------தொடரும்---------------------------
*****************************************************
அடுத்து வருவன:
ஓம் விதி (Ohm's law), Alkaline battery, லிட்மஸ் பரிசோதனை.

     


   .  
    

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கிரேக்கத்தில் ஆயுத பூஜை உண்டு!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
இந்து மதத்தின் பண்டிகைகளை சமூகத்தின் 
உற்பத்தி முறைதான் உருவாக்கியது . பொங்கல், 
தீபாவளி. ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை 
 இந்து மதத் தலைவர்களோ ஆன்மிகவாதிகளோ 
உருவாக்கவில்லை. சமூகத்தின் பொருளுற்பத்தியின் 
விளைவுகளே அவை.

ஆபிரகாமிய மதங்களில்தான் மதத் தலைவர்களால் 
பண்டிகைகள் அனைத்தும் உருவாக்கப் பட்டன.
அவற்றின் உருவாக்கம் செயற்கையானது. மக்கள் மீது 
வலிந்து திணிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்ததாகக்
கூறப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை எந்த 
உற்பத்தி முறை உண்டாக்கியது? உற்பத்தி 
முறையால் அல்ல மதவாதிகளால் உண்டாக்கப் 
பட்டதே கிறிஸ்துமஸ்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்திய புறநாநூற்றுக் 
கால வாள்மங்கலத்தின் தொடர்ச்சிதான் இன்றைய 
ஆயுத பூஜை. பாடாண் திணையின் ஒரு துறையாக 
வாள்மங்கலத்தை வைத்தனர் தமிழ்ப் புலவர்கள்.
பாடாண் திணை வாள்மங்கலம் துறையில் 
அமைந்த ஒரு புறநானூற்றுப் பாடலை இங்கு 
தருகிறேன். அதியமானைப் பற்றி ஒளவையார் 
பாடியது.

  1. இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
    கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
    கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
    பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
    கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
    உண் டாயின் பதம் கொடுத்து,
    இல் லாயின் உடன் உண்ணும்,
    இல்லோர் ஒக்கல் தலைவன்,
    அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே. (புறநானூறு 96)

 
 மேல்நாட்டினரிடமும் ஆயுகங்களின் கடவுள் 
உண்டு. ஹெபாஸ்டஸ் (Hephaestus) என்பது 
அவர்களின் ஆயுதங்களுக்கான கடவுள்.
கிரேக்கத்தில் ஏதன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் 
பண்டு தொட்டு ஹெபாஸ்டஸ் வழிபாடும்
பூஜைகளும் உண்டு.

நமது கல்விக் கடவுள் சரஸ்வதி என்பது போல் 
மேல்நாட்டினரின் கல்விக் கடவுள் மினர்வா.
மானுட சமூகம் முழுவதும் பிரதேச வேறுபாடு 
இன்றி கடவுள் நம்பிக்கை, கடவுளர் வழிபாடு 
ஆகிய அனைத்தும் இருந்தன. இவை இல்லாத 
பிரதேசம் இப்பூவுலகில் கிடையாது என்று 
வரலாற்றுப் பொருள்முதல்வாதம  கற்பிக்கிறது..  

ஒய்வு பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் 
அனைவருமே தீவிரமான கிறிஸ்துவ விசுவாசிகள். 
தீவிரமான பைபிள் பிரச்சாரகர்கள். மேலும் 
அமெரிக்காவில் உள்ள மாகாணங்களின் 
 constitutionல் கடவுள் பற்றி பலமுறை 
குறிப்பிடப்பட்டு உள்ளது.

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கடவுள் 
பற்றிய குறிப்பே இல்லை என்பது பெருமைக்கு 
உரியது.   

பிரிட்டிஷ் விசுவாசியும் கல்வி அறிவு 
இல்லாதவருமான  ஈ வே ராமசாமி மேனாட்டினர் 
முற்போக்காளர்கள் என்று கிளப்பி விட்ட 
பொய்களில், மேலைநாட்டில் ஆயுதபூஜை இல்லை 
என்பதும்  ஒன்று  
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தியப் பண்டிகைகளின் உருவாக்கத்தில் இந்திய 
உற்பத்தி முறையின் பங்கு பற்றி இக்கட்டுரை 
பேசுகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாத 
நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

கடவுள் இருக்கிறார் என்ற கருத்துடன் இக்கட்டுரை 
எழுதப்பட்டுள்ளது என்று கருதும் நுனிப்புல்லர்களும்   
சிந்தனைக் குள்ளர்களும் அருகிலுள்ள ரயில் 
நிலையத்திற்குச் சென்று ரயில் வரும்போது 
தலையைக் கொடுக்கவும்.

கடவுள் இல்லை என்பதை அறிவியல் வழியில் 
பலமுறை நியூட்டன் அறிவியல் மன்றம் 
நிரூபித்து உள்ளது.
****************************************************

ஜம்மு காஷ்மீரில் 2024 தேர்தலில் அதிக வாக்குகளைப் 
பெற்ற கட்சி பாஜக. பாஜக வாக்கு சதவீதம் = 25.64.  
ஓமர் அப்துல்லா கட்சி =23.43. பாஜகவை விட 2.21 % 

limit x tends to 0 என்பதற்கும் x = 0  என்பதற்கும் 
உள்ள வேறுபாடு!


  .



     

  
 பேராசிரியர் சாய்பாபா மரணம்!
-----------------------------------------------------
பேராசிரியர் ஜி என் சாய்பாபா (57) ஹைதராபாத் 
நிஜாம் மருத்துவமனையில் சனியன்று (12.10.2024)
மரணம் அடைந்தார்.

இவ்வாண்டு 2024 மார்ச்சில் நாக்பூர் சிறையில் 
இருந்து விடுதலையான சாய்பாபா சுதந்திர 
மனிதராக ஏழு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.

சாய்பாபா மிக மோசமான பாதிப்புடைய மாற்றுத் 
திறனாளி. 24 மணி நேரமும் சக்கர நாற்காலியோடு 
கட்டுண்டு கிடந்தவர் அவர்.   

டெல்லி பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராக 
இருந்த சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு 
கொண்டு செயல்பட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் 
2014ல் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டர். 
கைகான 2014 முதல் விடுதலையான மார்ச் 2024 வரை 
பத்தாண்டுகள் சிறையிலேயே இருந்தார்.

2017ல் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்சிரோலி  செஷன்ஸ் 
நீதிமன்றம் சாய்பாபா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு    
UAPA சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை வழங்கியது. 
2022ல் மும்பை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்த்த 
போதிலும், உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்புக்குத் தடை 
விதித்தது.

தற்போது இரண்டாவது முறையாக மும்பை 
உயர்நீதிமன்றம் மார்ச் 2024ல் அவரை விடுதலை
செய்தது. இத்தீர்ப்பின் மூலம் நாக்பூர் சிறையில் 
இருந்து விடுதலை ஆகி சொந்த மாநிலமான 
தெலுங்கானாவுக்கு வந்து வாழத் தொடங்கினார் 
அவர். ஆனால் பத்தாண்டு சிறை வாழ்க்கை 
அவரின் உடல் நலத்தைத் தின்று விட்டிருந்தது.
இதனால் ஏழே  மாதங்களில் அவரின் வாழ்க்கை 
முடிவுக்கு வந்து விட்டது.

சாயபாபாவின் வாழ்க்கையையும் சரி மரணமும் சரி 
சமூகத்துக்கு ஒரு பெரிய பாடம்.

************************************************* சாய்பாபாவை 
   

 நீரா ராடியாவின்  corporate lobbying (அதிகாரத் 
தரகு) வேலையை  ஒரு குற்றமாக இந்தியச் 
சட்டங்கள் கருதவில்லை.

எனவே ராடியா மீது ஒரு FIRகூடப் 
போடவில்லை. ராடியா -டாட்டாவை விட 
ராடியா-கனிமொழிதான் நிறையப் 
பேசியவர்கள்.

படிப்பறிவற்ற ஆங்கிலம் தெரியாத 
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் 
நீரா ராடியாவுடன் உரையாடிய ஒலி  
நாடாக்களை நான் படித்தவன். லண்டனில் 
படித்து டாக்டர் ஆன பூங்கோதை ஆலடி 
அருணாவின் மொழிபெயர்ப்புடன் ராசாத்தி 
அம்மாள் ராடியாவுடன் உரையாடினார்.     

இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே நாம் 
மிக்கது தெளிவாக இப்படி எழுதி இருக்கிறோம்.
ரத்தன் டாட்டா ஒரு கார்ப்பொரேட் பூர்ஷ்வா>
அவர் எப்போதும் ஒரு பூர்ஷவாவாகவே   
வாழ்ந்து வந்தார். அவர் சோஷலிஸ்ட் அல்ல.
ரத்தன் டாட்டாவை ஒரு சோஷலிஸ்ட்டாகக் 
கருதும் அபத்தத்தை வாசகர்கள்  
கைவிட வேண்டும்.

ஒரு பூர்ஷ்வாவுக்கு எப்படி இவ்வளவு மக்கள் 
செல்வாக்கு ஏற்பட்டது 
என்பதே கட்டுரையின் கேள்வி.

நாம் எழுதியதைப் பாருங்கள்"





வெள்ளி, 11 அக்டோபர், 2024

ரத்தன் டாட்டா பெற்றிருந்த அதீத மக்கள் செல்வாக்கு! 
கம்யூனிஸ்டுகள் நக்சல்பாரிகளிடம் இதற்கு 
விளக்கம் ஏதேனும் உண்டா?
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
ரத்தன் டாட்டா தமது முதிர்ந்த வயதில் (86) மும்பையில் 
காலமானார். அவர் பெரும் மக்கள் செல்வாக்கைப் 
பெற்றிருந்தார். மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 
இன்றைய இளைய தலைமுறை முதல் முந்தைய 
தலையுறையினர் வரை அவருக்கு செல்வாக்கு 
இருந்தது.

இவ்வளவுக்கும் ரத்தன் டாட்டா ஒரு முதலாளி; ஒரு 
பூர்ஷ்வா. நவீனச் சொல்லாடலில் ஒரு கார்ப்பொரேட் 
பூர்ஷ்வா. முதலாய் என்கிற தமது தன்மையை,
பணப்பை அவர் ஒருபோதும் இழக்கவில்லை.
ஒரு பூர்ஷ்வாவாகவே அவர் எப்போதும் வாழ்ந்தார்.  

அமெரிக்காவில் கட்டிடப் பொறியியல் படித்த ரத்தன் 
டாட்டா இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் 
வாழ்ந்தார். 1940களில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 
பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் சந்திர ஜோஷி 
கம்யூனிஸ்டுகள் திருமணம் புரியாமல் வாழ வேண்டும் 
என்ற கட்டுப்பாட்டை விதித்தார். ஆனால் என்ன 
துரதிருஷ்டம்?  தடை விதித்த ஜோஷியே தமது தடையை 
மதிக்காமல் திருமணம் செய்து கொண்டார். சிட்டகாங் 
வீராங்கனை என்று அறியப்பட்ட கல்பனா தத் என்னும் 
சக கம்யூனிஸ்டை மணந்து கொண்டார்.  

ஜோஷிக்கு இருந்த வைராக்கியப் பற்றாக்குறை 
எதுவும் டாட்டாவுக்கு இருக்கவில்லை. எனவே 
till death அவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்.    

ரத்தன் டாட்டா  ஒன்றும் சோஷலிஸ்ட் அல்ல. 
மக்களுக்கு நன்மை செய்யும் இடத்தில் 
அரசு அதிகாரத்துடன் அமைச்சராகவோ 
சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவோ  
அவர் இருக்கவில்லை. சினிமா நடிகரோ கிரிக்கெட் 
வீரராகவோ அவர் இல்லவும் இல்லை.

என்றாலும் இவர்களுக்கு நிகரான மக்கள் செல்வாக்கை 
தமது இறுதிக் காலம் வரை டாட்டா பெற்றிருந்தார்.
இது எப்படி? இதற்கான காரணங்கள் என்ன?

இந்தியாவில் தொழிலதிபர்களுக்கு மக்களிடம் 
செல்வாக்கு இருந்ததில்லை. சிலருக்கு மரியாதை 
கூட இருந்ததில்லை.

1955ல் இறந்து போன, தமிழ்நாட்டைச் சேர்ந்த டிவிஎஸ் 
குழுமத்தின் தலைவராக இருந்த டி வி சுந்தரம் 
ஐயங்காருக்கு அவர் வாழ்ந்தபோதும்  சரி  
மறைந்தபோதும் சரி, இவ்வளவு செல்வாக்கு 
இருந்ததே இல்லை. ரத்தன் டாட்டாவின் செல்வாக்கில் 
ஒரு 10 சதவீதம்கூட டிவிஎஸ் ஐயங்காருக்கு இல்லை.    
   
பிர்லா குழுமத்தின் முதல் தலைவரான ஜி டிபிர்லா 
1985ல் மறைந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மிக 
நெருக்கமானவர். காந்திக்கு வேண்டிய நிதி உதவிகள் 
உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார்.
1983ல்தான் இவர் மறைந்தார். என்றாலும் பரந்துபட்ட 
மக்கள் இவரின் மறைவுக்காக துக்கம் எதுவும்  
அனுசரிக்கவில்லை. அவருக்கு மக்கள் செல்வாக்கும் 
இல்லை.

திருபாய் அம்பானியின் மரணம் நமமில்  பலர் 
நன்கறிந்தது. இன்றைய முகேஷ், அனில் 
அம்பானிகளின் தந்தையான திருபாய் அம்பானி 
2002ல்தான் மறைந்தார். என்றாலும் அவரின் மறைவுக்கு 
பரந்துபட்ட மக்கள் யாரும் துக்கம் அனுசரிக்கவில்லை.

மேற்கூறிய முதலாளிகள் யாருக்கும் இல்லாத 
அளவுக்கு, ரத்தன் டாட்டாவுக்கு அபரிமிதமான 
மக்கள் செல்வாக்கு இருந்தது. அவரின் மரணம் 
மக்களின் மதிப்புக்கு உரிய ஒருவரின் மரணமாகக்  
கொள்ளப்பட்டு மக்களால் இரங்கல் தெரிவிக்கப் 
பட்டது. ரத்தன் டாட்டாவின் வாழ்வும் மரணமும் சரி,
இந்திய மக்களிடம் சக்தி வாய்ந்த தாக்கத்தை 
ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணங்கள் என்ன?  ஒரு பூர்ஷ்வாவான 
ரத்தன் டாட்டா மக்களின் மனத்தில் இடம் இடித்தது எப்படி?
கம்யூனிஸ்டுகளும் நக்சல்பாரிகளும் பதில் கூற 
வேண்டிய கேள்வி இது.

ஆனால் தற்குறிகளாக உள்ள போலி நக்சல்பாரிகள்.
போலி மாவோயிஸ்டுகளால் இதற்குப் பதிலளிக்க 
முடியாது. திமுகவிடம் விலை போய்விட்ட 
CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகளிடம் இதற்குப் 
பதில் கிடையாது.         
********************************************************

ஆராசா நாத்திகர் அல்ல. அவர் ஒரு கிறிஸ்துவர்.
தமது மனைவியின் மரணத்தின்போது, கிறிஸ்துவ 
முறைப்படி சவப்பெட்டியில் சடலத்தை அடைத்த 
பிறகு. சவப்பெட்டியின் அருகே கிறிஸ்துவரான 
ஆ ராசா.  

வியாழன், 10 அக்டோபர், 2024

 ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி ஏன்?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
2024 அக்டோபரில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 
ஆட்சியைத் தக்க வைத்துக் கூடாது. இது 
பாஜகவுக்கு ஹாட் டிரிக் வெற்றி ஆகும். கடந்த 
மூன்று தேர்தல்களாக பாஜக ஹரியானாவில் 
வெற்றி பேரருட் கொண்டே இருக்கிறது.

ஹரியானா சட்ட மன்றத்தில் 90 இடங்கள். 
இதில் 48 இடங்களில் பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் 37 இடங்களுடன் தோல்வியைத் 
தழுவியது. வாக்கு சதவீதம்: பாஜக = 39.94. 
காங்கிரஸ் = 39.09. வாக்கு சதவீதத்தைப் 
பொறுத்து பாஜக காங்கிரசை விட 0.83 சதவீதம் 
மட்டுமே அதிகம். இது ஒரு சதவீதத்திற்கும் குறைவு.
ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் = 1.79. ஆம் ஆத்மீ 
குறித்து பின்னர் பார்ப்போம்.
 
தேர்தலுக்கு முன்பே தாங்கள் வெற்றி பெறுவோம் 
என்ற மிதப்பில் இருந்தது காங்கிரஸ். எக்சிட் போல் 
முடிவுகளும் காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறி 
இருந்தன. இதனால் எல்லாம் காங்கிரஸைக் கையில் 
பிடிக்க முடியவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் முகத்தில் 
கரியைப்  பூசின.காங்கிரசின் தலைக்கனம் 
தாளாமல் அதன் மண்டை வெடித்துச் சிதறியது.

காங்கிரசின் தோல்விக்கு காரணங்கள்:
------------------------------------------------------------ 
கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 
(2014, 2019, 2024) காங்கிரசுக்கு இரண்டு இலக்க
இடங்கள்தான். 543 இடங்களைக் கொண்ட இந்திய 
மக்களவையில் மூன்று இலக்க இடங்களைக் கூட 
காங்கிரசால் பெற இயலவில்லை. 2024 தேர்தலில் 
99 இடங்களை பெற்ற காங்கிரஸ் 99 சதம் 
இடங்களைப் பெற்று விட்ட மமதையுடன் திரிந்தது.

கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் மதிக்கவில்லை. 
கிள்ளுக் கீரையாகவே நடத்தியது. இண்டி கூட்டணியின் 
அங்கமான ஆம் ஆத்மி  கட்சி காங்கிரஸசிடம் 
10 இடங்களைக் கேட்டது. திமிர் பிடித்த காங்கிரஸ் 
தர மறுக்கவே, கெஜ்ரிவால் தனித்துப் போட்டியிட்டார்.

தேர்தலில் ஆம் ஆத்மி  வெற்றி பெறவில்லை. எனினும் 
அக்கட்சி காங்கிரசுக்கு ஒரு spoiler ஆக மாறியது.
1000 ஒட்டு மார்ஜினில் பாஜகவிடம் காங்கிரஸ் 
தோற்ற தொகுதிகளில் எல்லாம் ஆம் ஆத்மி 
ஓட்டைப் பிரித்து காங்கிரசின் தோல்விக்கு வழி 
வகுத்தது.

ஆம்ஆத்மி கட்சிக்கு 10 இடங்களை காங்கிரஸ் 
கொடுத்திருந்தால், இத்தேர்தலில் காங்கிரஸ் 
ஆட்ச்சியைப் பிடித்திருக்கக் கூடும். இல்லாவிடினும் 
பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து   
தொங்கு சட்டமன்றம் என்ற திரிசங்கு நிலையை 
ஏற்படுத்தி இருக்கலாம்.

ஜாட் ஜாதி வெறி பிடித்த காங்கிரசின் பூபேந்தர் சிங் 
ஹோடாவும் கோமாளி ராகுல் காந்தியுமே 
காங்கிரசின் இத்தோல்விக்குப் பொறுப்பு.

தலைமைப் பண்பு உள்ளவராக ராகுல் காந்தியை 
மக்கள் கருதவில்லை. மோடியை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் எதுவும் ராகுலிடம் இல்லை என்பதே 
மக்களின் கருத்தாக இருக்கிறது.

மோடி கடும் உழைப்பாளி. நாளில் 18 மணி நேரம் 
உழைக்கக்கூடியவர் மோடி.ராகுல் காந்தி 
சீமைப்பசு, கோவில் காலை, இளவரசர்; மோடியின் 
உழைப்பில் 5 சதவீதம் கூட ராகுலிடம் கிடையாது.
ஹரியானாவில் போதிய அளவு பிரச்சாரக் 
கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

ஹரியானாவில் ஜாட் சாதியினர் 22 சதவீதம் உள்ளனர்.
மீதி 78 சதவீதம் ஜாட் அல்லாதவர்கள். காங்கிரசின் 
ஹூடா ஜாட் இனத்தவர். தேர்தலில் போட்டியிட 
ஹூடா ஜெட் சமூகத்தினருக்கே அதிக வாய்ப்பு 
அளித்தார்.

காங்கிரசின் ஆட்சி  என்பது முற்பட்ட சாதியான 
ஜாடடுக்களின் ஆதிக்கமே என்று மனம் கசந்த 
78 சதவீதம் உள்ள பிற சாதியினர் காங்கிரசைப்
புறக்கணித்து பாஜகவுக்கு வாய்ப்பளித்தனர்.

பாஜகவின் முதல்வர் நாயப் சிங் சைனி பிற்பட்ட 
வகுப்பைச் சேர்ந்தவர். மனோகர் லால் கட்டார் 
என்ற ஜாட் முதல்வரை ஓராண்டுக்கு முன்பே 
அகற்றி விட்டு பாஜக OBC இனத்தைச் சேர்ந்த 
சைனியை முதல்வர் ஆக்கியது. ஜாட்டுகளையும் 
பகைக்காமல் அதே நேரத்தில் ஜாட் அல்லாத 
78% உள்ள பிற சாதியினரின் அபிமானத்தையும் 
பெற்றிருந்தது பாஜக.இதனால்தான் ஹரியானாவின்  
ஜாட் தொகுதிகளாக அறியப்பட்ட  36 தொகுதிகளில் 
19 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

ஜாட், தலித், முஸ்லலிம் என்ற மூன்று பிரிவினரை
ஒன்றிணைத்து வாக்குகளை பெறலாம் என்ற 
காங்கிரசின் திட்டம் கைகூடவில்லை. ஜாதி 
ஆதிக்கம் நிறைந்த முற்பட்ட வகுப்பினரான 
ஜாட்டுகளும் தலித்துகளும் எப்படி ஓர் அணியில் 
ருக்க முடியும்? ஜாட்-தலித் ஒற்றுமை ஏற்படாத 
நிலையில் முஸ்லிம்களை எப்படி அந்த உருவாகாத 
அணியில் சேர்க்க முடியும்? இதெல்லாம் காங்கிரசின் 
படுதோல்வியை உறுதி செய்த காரணிகள்.

1) தலைமைப் பண்பற்ற உழைக்கத் தயங்குகின்ற 
ராகுல்காந்தியின் பலவீனமான தலைமை 
2) ஜாட் ஜாதி ஆதிக்கத்தை உறுதி செய்யும் 
காங்கிரசை 78% உள்ள ஜாட் அல்லாத பிற 
சாதியினர் ஏற்க மறுத்தது .
3) ஊழல் பெருச்சலையும் ஜாட் ஆதிக்க வெறியனும் 
ஆகிய பூபேந்தர் சிங் ஹூடாவின் ஆடசி மீண்டும் 
வந்து விடக்  கூடாது என்ற ஹரியானா வாக்காளர்களின் 
மனப்பாங்கு.
4) தலித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான 
செல்ஜா குமாரியை காங்கிரஸ் ஒதுக்கியது.
ஹூடா அவரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
அவரும் கடைசி நேரத்தில் மட்டுமே தேர்தல் 
பிரச்ச்சாரத்தில் பங்கேற்றார்.                     
         
மேற்கூறிய காரணிகள் ஹரியானாவில் காங்கிரஸ் 
படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக அமைத்தன.
******************************************************* 

கொண்டது.  பெற்றுக்    கடசியானது   ட்    சாளி   ட் 

போன தேர்தலில் வாங்கிய 10 சி, இந்தத் தேர்தலில் 
வாங்கிய 20 சி. இதெல்லாம் அவரைப் பேச விடுமா?
CPM விலை போன கடசி. வித்த மாட்டுக்கு விலை ஏது?

மமதை   ளை   ஆதரவாளர்   உயர்சாதி       ஐ   இ 

மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவருமான