வேகவேகமாக விரிவடையும் பிரபஞ்சம்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது
என்ற உண்மையை எட்வின் ஹப்பிள் 1929ஆம்
ஆண்டிலேயே கண்டு பிடித்து உலகிற்குச்
சொன்னார். ஹப்பிளின் கண்டுபிடிப்பை ஏற்று
ஐன்ஸ்டின் தமது நிலைத்த பிரபஞ்சம் (static universe)
என்ற உண்மையை எட்வின் ஹப்பிள் 1929ஆம்
ஆண்டிலேயே கண்டு பிடித்து உலகிற்குச்
சொன்னார். ஹப்பிளின் கண்டுபிடிப்பை ஏற்று
ஐன்ஸ்டின் தமது நிலைத்த பிரபஞ்சம் (static universe)
என்ற கருத்தை மாற்றிக் கொண்டார்.
விரிவடையும் பிரபஞ்சம் (expanding universe)
என்றுதான் ஹப்பிள் கூறினார்.பின்னர்
வேகமாக விரிவடையும் பிரபஞ்சம் (accelerating universe)
என்று கண்டுபிடிக்கப் பட்டது. இதை நிரூபித்த மூன்று
விஞ்ஞானிகளுக்கு 2011ஆம் ஆண்டிற்கான நோபல்
பரிசு வழங்கப் பட்டது.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது போன
நூற்றாண்டின் கதை. மொத்தப் பிரபஞ்சமும்
அதிவேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது
என்பதுதான் தற்கால உண்மை.
-----------------------------------------------------------
இதுதான் பிரபஞ்சத்தின் உள்ளடக்கம்.
Dark maatterம் dark energyயம் சேர்ந்து
95 சதவீதமாக உள்ளது. இது அறியப்படாத
பிரபஞ்சம் என்று வழங்கப் படுகிறது.
அப்படியானால் அறியப்பட்ட பிரபஞ்சம் என்பது
5 சதவீதம் மட்டுமே. இது observable universe
என்று அழைக்கப் படுகிறது.
இதன் பொருள்: பிரபஞ்சத்தில் நாம் அறிந்து
வைத்திருப்பது 5 சதவீதம் மட்டுமே. மீதியுள்ள
95 சதவீத பிரபஞ்சம் பற்றி நமக்குத் தெரியாது.
-----------------------------------------------------------------------------
பிரபஞ்சம் எப்படி விரிவடைகிறது?
------------------------------------------------------
வெயில் நேரங்களில் ரயில் தண்டவாளங்கள்
விரிவடையும். அவை விரிவடைவதற்கு இடம்
வேண்டும். அதற்காகவே தண்டவாளங்களுக்கு
இடையில் இடைவெளி ஏற்படுத்தி இருப்பார்கள்.
அந்த இடைவெளி தருகின்ற இடத்தில் தண்டவாளம்
விரிவடையும். இதை நாம் நன்கறிவோம்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது தண்டவாளம்
விரிவடவதைப் போல் அல்ல. தண்டவாளம்
விரிவடைவதற்கு அதன் வெளிப்புறத்தில்
(external space) இடம் தரப்பட்டுள்ளது. ஆனால்
பிரபஞ்சம் விரிவடைவதற்கு இடமளிக்கும்
எந்த விதமான வெளிப்புற இடமும் (external space)
கிடையாது.
எனவே பிரபஞ்சம் தனக்குள்ளேயே விரிவடைந்து
கொள்கிறது (The universe expands by itself) .அனைத்து
விரிவைடைதலும் பிரபஞ்சத்திற்கு உள்ளேயே
நடைபெறுகிறது.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதன் பொருள்
என்ன? தொலைதூர காலக்சிகள் நமது பால்வீதி
(Milky Way) காலக்சியில் இருந்து வேகமாக விலகிச்
செல்கின்றன என்பதுதான் பிரபஞ்ச விரிவடைதல்.
அதாவது நமது காலக்சிக்கும் தொலைதூர
காலக்சிகளுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துக்
கொண்டே செல்வதுதான் பிரபஞ்சம் விரிவடைதல்
எனப்படுகிறது.
தொலைதூர காலக்சிகள்தான் விலகிச்
செல்லுமா? நமக்கு அருகில் உள்ள காலக்சிகள்
விலகிச் செல்லாதா என்ற கேள்வி இங்கு
எழுகிறது. இதற்கான பதில் இதுதான்:
தொலைதூர காலக்சிகள் மட்டுமே விலகிச்
செல்லும்; நமது காலக்சிக்கு அருகில் உள்ள
காலக்சிகள் விலகிச் செல்லாது. ஏன்?
நமக்கு அருகில் உள்ள காலக்சிகள் ஈர்ப்பு
(gravity) காரணமாக நம்முடைய காலக்சியுடன்
கட்டுண்டு கிடக்கும். எனவே அவற்றால்
விலகிச் செல்ல இயலாது.
ஆனால் தொலைதூர காலக்சிகளுக்கும் நமது
காலக்சிக்கும் இடையில் எவ்விதமான ஈர்ப்பும்
(gravity) இல்லை. ஈர்ப்பு இல்லாததால் அவை
நம்முடைய காலக்சியுடன் கட்டுண்டு
கிடப்பதில்லை. எனவே
அவை தம் இஷ்டம் போல் விலகிச் செல்லும்.
அன்று ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Space Telescope)
மூலம் அறிந்து கொண்டதை விட, இன்று
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி (James Webb Space Telescope)
மூலம் பிரபஞ்சம் விரிவடைவதை ஆழமாகவும்
துல்லியமாகவும் அரிது கொள்கிறோம்.
நமது சூரியக் குடும்பத்தில் சனி கிரகம் உள்ளது.
சனிக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்
சற்றுத் தோராயமாக ஒன்றரை பில்லியன்
கிலோ மீட்டர். அதாவது 150 கோடி கிலோமீட்டர்.
(1 billion = 100 crore).
பிரபஞ்சம் விரிவடைவதால் இந்த தூரம்
மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறதா?
இல்லை. ஏனெனில் நமது சூரியக் குடும்பத்தில்
உள்ள கோள்களும் சூரியனும் ஈர்ப்பினால்
(gravity) கட்டுண்டு கிடப்பவை. எனவே அவை
விலகிச் செல்லாது.
**********************************
இஙகம்ப்லேட். அச்சுரசி டு பெ வெரிஃபித்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக