செவ்வாய், 14 ஜனவரி, 2025

"திண்ணிலை  மருப்பின் ஆடு தலையாக 
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல்  மண்டிலம்"
என்கிறது நெடுநல்வாடை. தமிழ் மரபில் 
பன்னிரு ராசிகள் உண்டு.

தமிழ் மரபில் 12 ராசிகள் இல்லை என்றும்
சமஸ்கிருதத்தில்தான் உண்டு என்றும் 
கூறுவது நகைப்புக்கு இடமானது.

மேஷம் ரிஷபம் என்று தொடரும் ராசிகள் 
தமிழில் மேழம், விடை என்று செல்லும்..
தமிழில் உள்ள மேழம்  என்ற சொல்லை 
சமஸ்கிருதம் எடுத்தாள்கிறது; தவறில்லை.
விடை என்றால் காளை. தோடுடைய செவியன்\
விடையேறி ஓர் தூவெண் மதிசூடி ........

மேஷம் ரிஷபம் என்பதை தமிழர்கள் அட்டியின்றி 
ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்  சம்ஸ்கிருத 
எதிர்ப்பு எதுவும் இல்லாமலே.  இந்த நிலைமைக்கு 
எவரும் குந்தகம் விளைவிக்க வேண்டாம்.

குந்தகம் விளைவித்தால் சமஸ்கிருதம் தீவைத்துக் 
கொளுத்தப்படும். சம்ஸ்கிருத அபிமானிகள் 
இன்னலுக்கு ஆளாவார்கள்.
    .  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக