திங்கள், 7 அக்டோபர், 2013

rasheed masood jailed

குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் யோக்கியதை!

-----------------------------------------------------   

ரசீத் மசூது! 
அண்மையில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை 
பெற்றவர். புது தில்லி திஹார் சிறையில் 
கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்
இவர் நாட்டிலேயே முதல் முதலில் 
எம்.பி பதவியை இழக்கப் போகிறார். 
( உபயம்: குற்றவாளி சட்ட மன்ற நாடாளுமன்ற 
பதவிகளில் தொடரக் கூடாது என்ற 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு )

இவர் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் 
பதவிக்குப் போட்டி இட்டவர். ஹமீத் அன்சாரி 
காங்கிரஸ் சார்பிலும், நஜ்மா ஹெப்துல்லா 
பாஜக சார்பிலும் போட்டி இட்ட போது   ,
மூன்றாவது அணி சார்பில், இவர் போட்டியிட்டுத் 
தோற்றார். இவர் பெற்ற வாக்குகள் 75 மட்டுமே.
சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் 
மூன்றாவது அணி சார்பாக 
இவரை நிறுத்தி இருந்தன.

உயர்ந்த பதவிக்குப் போட்டி இட்ட இவர் 
தற்போது திஹார் சிறையில்!

ஓம் பிரகாஷ் சவுதாலா , லாலு பிரசாத் யாதவ் 
வரிசையில் இவர் தண்டிக்கப் பட்ட
மூன்றாவது குற்றவாளி!

அடுத்து கம்பி எண்ணுபவர் 
தமிழ் நாட்டில் இருந்தா?

***********************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக