வியாழன், 2 அக்டோபர், 2014

பாலு  ஜுவல்லரியை  நினைவு இருக்கிறதா?
-------------------------------------------------------------------------- 
பாலு ஜுவல்லரி என்பது 1990களில் 
சென்னையில் பிரபலமாக விளங்கிய நகைக்கடை.
1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக 
முதல்வராக இருந்த காலம் அது.

வளர்ப்பு மகன் திருமணத்திற்காக 
பாலு ஜுவல்லரியில் இருந்து 
40 கோடி ரூபாய்க்கு தங்கம் 
வாங்கப்  பட்டது. பணம் தரப்படவில்லை.

அன்றைக்கு 40 கோடி என்பது இன்றைய 
மதிப்பில் எவ்வளவு என்று பார்க்க இரண்டு 
விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
1) தங்கத்தின் அதீத விலை ஏற்றம் 
2) இன்றைய பண வீக்கம் இதன்படி பார்த்தால், 
அன்று 40 கோடி ரூபாய் தங்கம் என்பது இன்று 
4000 கோடிக்குச் சமம்.

பணத்தைக் கேட்டுப் பார்த்த பாலு ஜுவல்லரி 
உரிமையாளர் கடுமையாக மிரட்டப் பட்டார். 
பணம் சிறிதும் கிடைக்க வழி இல்லாத நிலையில் 
தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனார்.
(Driven to suicide).

பாலு ஜுவல்லரிக்காக தினசரிகளில் 
அன்று வந்த விளம்பரம் (1991-96)
கவித்துவமாக இருந்தது. கவிஞர் வைரமுத்து 
விளம்பர வாசகங்களை எழுதி இருந்தார்.

"பொன்னில் நால்வகை என்பார்கள்.
ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாந்தரூபம் 
ஆகிய நால்வகை. ஐந்தாவதாக ஒரு பொன் 
இருந்தால், அதற்கு பாலு என்று பெயர் 
வைக்கலாம்."

ஆனால், பாலு போய்ச் சேர்ந்து விட்டார். 
இயற்கையாக அல்ல; அநியாயமாக.
கொன்றது யார்? அந்தக் குற்றவாளிகள் 
தப்பிக்கலாமா ? 

***********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக