புதன், 1 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும்?
சோதிடர்கள் கணிப்பு!!
---------------------------------------------------------------------------- 
என் நண்பர் ஒருவர் BSNL இல் உதவிப்  பொறியாளராய் 
இருக்கிறார். அவர் சோதிடப் பித்தர். ஜெயலலிதா பக்தர்.

ஜெயலலிதாவுக்கு இதுவரை  ஜாமீன் கிடைக்காதலால் 
சோர்ந்து போன அவர் ஒரு சோதிடரிடம் போனார்.
ஜோதிட பூஷணம் , ஜோதிட கலா ரத்னம் ஆகிய 
பட்டங்களைச் சூட்டிக் கொண்டிருக்கும் அந்த 
சோதிடர் கடலங்குடி சரஸ்வதி வகையறா ஆவார்.

அந்த சோதிடர், "ஜாமீன் கிடைக்க இன்னும் 
ஒரு மண்டலம் ஆகும்" என்றார். ஒரு மண்டலம் 
என்பது 40 நாட்கள் என்றும் அவர் கூறினார்.

இன்னொரு நண்பர் இன்னொரு சோதிடரிடம் போனார்.
ஜெயலலிதா அடைக்கப் பட்டிருக்கும் சிறையின் 
நம்பர் 7402 என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை 
அலசி ஆராய்ந்து , "வேறு சிறைக்குப் போனால்தான் 
ஜாமீன் கிடைக்கும் என்றும் இந்த 7402 என்ற நம்பர்
மிகவும் மோசமானது என்றும், தன்னிடம் வந்தவர்களை 
சுலபத்தில் விடாது என்றும் கூறினார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் குறித்த சோதிடர்களின் 
கணிப்பு இவ்வாறாக இருக்கிறது என்று 
சோதிடம் பார்த்த அன்பர்கள் நம்மிடம் 
தெரிவித்தனர்.

நாம் சோதிடத்தை நம்பவில்லை; ஏற்றுக் 
கொள்ளவில்லை.

ஆனால் ஜெயலலிதாவும் சரி, அவரது பக்தர்களான 
BSNL உதவிப் பொறியாளரான அன்பர்களும் சரி 
சோதிடப் பித்தர்கள் ஆயிற்றே. அவர்கள் நம்பத்தானே
வேண்டும்.

**********************************************************           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக