ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஜெயாவுக்கு தண்டனை கிடைக்க 
ஏ.ஆர். ரகுமான், கங்கை அமரன் 
சாட்சியங்களே காரணம்!
---------------------------------------------------- 
 சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு 
நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை 
விதிக்கப் பட்டு உள்ளது. அசைக்க முடியாத 
சாட்சியங்கள் மற்றும் சான்றாதாரங்களின்  
அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப் 
பட்டு உள்ளது.

கங்கை அமரனின் சாட்சியம்,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சாட்சியம்,
மறைந்த இசை மேதை மாண்டலின்  
சீனிவாசனின்  சாட்சியம் ஆகியவை 
தண்டனை வழங்குவதில் முக்கியப் பங்கு 
வகித்துள்ளன. நீதியரசர் குன் ஹா தமது 
தீர்ப்பில் இதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி 
உள்ளார். 
கங்கை அமரனின் பைய்யனூர் பங்களாவை  
மிரட்டி எழுதி வாங்கியது, வளர்ப்பு மகன் 
திருமணத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 
மாண்டலின் சீனிவாசன் ஆகியோரின் 
இசைக் கச்சேரியை காசு கொடுக்காமல் 
ஏற்பாடு செய்தது ஆகிய உண்மைகளைத் 
தங்களின் வாக்கு மூலத்தில் நீதிமன்றத்தில் 
தெளிவாகக் கூறி உள்ளனர் மேற்கூறிய மூவரும்.

ஜெய மீதான குற்றம் நிரூபிக்கப்பட 
இவர்களின் சாட்சியம் உதவியாக இருந்தது 
என்பது உண்மையே! மிரட்டல் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு 
அஞ்சாமல் சாட்சியம் அளித்த கங்கை அமரன், ஏ.ஆர். ரகுமான் 
ஆகியோரை மக்கள் பாராட்டுகிறார்கள். 

தகவல் ஆதாரம்:
-------------------------------- 
TIMES OF INDIA ஆங்கில நாளேடு, 04.10.2014

**************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக