செவ்வாய், 14 மார்ச், 2023

2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கு!
ஆ ராசா கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 
வழங்கிய தண்டனை!
-----------------------------------------------------------------------
2ஜி ஊழல் வழக்கில் ஆராசா கனிமொழி உள்ளிட்டோர் 
விதித்தல் ஆயினர். இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு 
செய்தது. மேல்முறையீட்டு வழக்கு டெல்லி 
உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் உரிய நேரத்தில் 
CBI, ED அமைப்புகளின் கேள்விகளுக்கு தங்களின் 
பதில்களை வழங்காமல் இருந்தமைக்காக 
ஆ ராசா கனிமொழி உள்ளிட்ட எதிரிகள் டெல்லிப் 
பகுதியில் 15,000 மரக்கன்றுகளை நட வேண்டும் 
என்று டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது. 
2019 பெப்ரவரி 6ல் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.   

2019 பெப்ரவரிக்கு அப்புறம் இன்று 4 ஆண்டுகள் கழிந்து 
விட்டன. இன்றும்கூட ஆ ராசாவும் கனிமொழியும் 
நாளொன்றுக்கு ஒரு தந்திரத்தைக் கையாண்டு 
வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர்.
இந்தியாவின் நீதி பரிபாலனம் இந்த லட்சணத்தில் 
இருக்கிறது.

ஆதாரம்: 
The Indian Express e paper dtd Feb 7, 2019.
மற்றும் ஆங்கில இந்து ஏடு 
மற்றும் பல்வேறு ஆங்கில நாளிதழ்கள்.
***************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக