புதன், 22 மார்ச், 2023

 அறிவியல் எந்த வர்க்கத்தின் சேவகனும் அல்ல!
----------------------------------------------------------------------
அறிவியல் எல்லா வர்க்கங்களுக்கும் பயன்படும்.
ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டுமே 
அறிவியல் பயன்படும் என்பதாக இல்லை.

அரசு பொது மருத்துவமனைகளில் குப்பனுக்கும் 
சுப்பனுக்கும் பைபாஸ் சர்ஜரி நாளும் செய்யப் 
படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக 
பிரசவம் பார்க்கப் படுகிறது. அறிவியல் எல்லா 
வர்க்கத்தினருக்கும் பயன்படுகிறது.

அதே நேரத்தில் பணக்காரர் என்பதற்காக 
சசிகலா கணவர் நடராசனின் உயிரை 
நீட்டிக்க இயலவில்லை. மாற்று சிறுநீரகம் 
பொருத்தியும் பயனில்லை. கோடீஸ்வரர் 
எஸ் பி பாலசுப்பிரமணியனை (பாடகர்)
கொரோனாவில் இருந்து காப்பாற்ற 
முடியவில்லை.

அறிவியல் பணக்கார வர்க்கத்திற்கு மட்டுமே 
சேவை செய்யும் என்பது உண்மையல்ல.
அறிவியல் பாரபட்சமற்றது. வர்க்கச் 
சார்பற்றது. எல்லா வர்க்கமும் அறிவியலைப் 
பயன்படுத்தும். அதே நேரத்தில் அறிவியல் 
எந்த வர்க்கத்தின் சேவகனும் அல்ல.
=======================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக