திங்கள், 29 செப்டம்பர், 2014

சங்கர மடத்தில் கோலாகலம்!
குதூகலம்!!கொண்டாட்டம்!!
ஒரே ஆனந்த லஹரி!!!
------------------------------------------ 
" பகவான் கண்ணைத் தொறந்துட்டார் !
தண்டனை கெடைக்கணும்னு நெனச்சோம்,
கெடச்சுடுத்தூ! " 
** "இதுதான் பெரியவா சொன்னது. பெங்களூர் 
தீர்ப்பைப் பத்தி பெரியவாளொட அபிப்பிராயம் 
இதுதான்" என்றார் மடத்து அன்பர்.
** மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்.
மடத்தில் இருந்த அத்தனை பேருக்கும் 
சந்தோசம்! சாதாரண சந்தோசம் அல்ல.
ஆனந்த லஹரி! லஹரி என்றால் வெள்ளம்.
**
நெய் வழியும் சக்கரைப் பொங்கலை 
வருவோர் போவோர் எல்லோருக்கும் 
கை நிறைய வழங்கி கொண்டு இருந்தார்கள் 
மடத்து ஊழியர்கள். ரோட்டில் போய்க்கொண்டு 
இருந்தவர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக 
மடத்துக்கு உள்ளே இழுத்துக் கொண்டு வந்து 
வாயில் ஊட்டாத குறையாக சக்கரைப் பொங்கலை 
கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்!
**
அவரவர் சித்தம், அவரவர் சந்தோசம் 
என்றார் ஒரு மூத்த பிராமணர் முகமும்
மனசும் நிறைந்த சந்தோஷத்துடன். லோகமே 
சந்தோஷப் படுதோன்னோ என்றார் இன்னொரு 
பிராமணர். மடத்தில் உள்ள சுவர், தூண், தட்டுமுட்டுச் 
சாமான் உட்பட எல்லாம் சிரித்தன; சந்தோஷத்தில் 
மிதந்தன. 
************************************************* 
பின்குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு மடத்தில் நிகழ்ந்தது 
இது. இந்தப் பதிவைப் படிப்போர் தாங்களாகவே 
இடஞ்சுட்டிப் பொருள் விளங்கிக் கொள்வார்கள் என்று 
நம்புகிறேன்.
------------------------------------------------------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக