திங்கள், 29 செப்டம்பர், 2014

மகிழ்ச்சிக் கடலில் மலைச்சாமி!
--------------------------------------------------- 
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமி 
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார்.
ஏன், என்ன காரணம்?
**
வெளிமாநிலத்தின் மிக முக்கியமான சட்ட நிபுணர்களைக் 
கலந்து ஆலோசித்து இருக்கிறார். தண்டனை உறுதி என்று 
எல்லோரும் அடித்துச் சொல்லி இருக்கிறார்களாம்.
விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்,
தண்டனைக் குறைப்பு என்பதற்கும் கூட துளியும் 
சாத்தியமில்லை என்றார்களாம் சட்ட நிபுணர்கள்.
** 
மதுரையில் இருந்து கருப்பு நிற வெள்ளாடுகள் கொண்டு 
வரப்பட்டு, நெய்யில் வெந்த மட்டன் பிரியாணி விருந்து 
அவர் வீட்டில் இன்று. அவர் வீட்டு வாசலில் கால் வைத்தவர் 
எவரும் மட்டன் பிரியாணி சாப்பிடாமல் வெளியே போக 
முடியாது. வேண்டாம் என்றாலும் வாயில் ஊட்டி விடுகிறார்கள் 
என்றார் அங்கு போய்விட்டு வந்த ஒரு நண்பர்.  
**
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே,
பச்சைக் கிளிகள் தோளோடு, 
பாட்டுக் குயிலோ மடியோடு,
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை,
என்று பாடிக் கொண்டு இருக்கிறாராம் மலைச்சாமி.
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக