வெள்ளி, 1 டிசம்பர், 2023

திரு பத்ம சிவ அசோகன் கவனத்திற்கு.
------------------------------------------------------------  
1) உபரி மதிப்பு என்பது மார்க்சியப் பொருளாதாரத்தின்
உயிர்நாடியான கருத்து. அது பற்றி ஒரு இழவும் 
தெரியாத நீங்கள், உங்களை எல்லாம் தெரிந்த 
ஏகாமபரமாகக் கருதிக் கொண்டு சுயஇன்பம் 
அனுபவிக்க இது இடம் அல்ல. நீங்கள் இப்படி 
நடந்து கொள்வது தொடர்ந்தால் உங்களை 
பிளாக்  செய்ய நேரிடும்.

2) பேதை கழாஅக்கால் பள்ளியுள்  வைத்தற்று 
என்பார் வள்ளுவர். உங்களின் இச்செயல் அது 
போன்றது.   
--------------------------------------------------------
65 vayathu aanavarkalukku

65 vayathu aanavarkalukku 

65 வயது ஆனவர்களுக்கான அறிவுரை!
--------------------------------------------------------------

(படித்ததில் பயனுள்ள ஒரு செய்தி!)


ஒரு இலக்கியப் படைப்பில் ஒரு செய்தி (message)
சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது 
நவீனத்துவ இலக்கியக் கொள்கை. இங்கு 
செய்தி என்பது படிப்பினை என்று பொருள்படும்.
மார்க்சிய இலக்கியங்கள் அனைத்தும் செய்தி 
(message) சொல்பவை. 

பின்நவீனத்துவம் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை.
ஒரு இலக்கியப் படைப்பில் எந்த ஒரு செய்தியும் 
சொல்லப்படத் தேவையில்லை என்பது 
பின்நவீனத்துவ இலக்கியக் கொள்கை.

எனது அபித குஜாம்பாள் கவிதையில் 
செய்தி (message) எதுவும் சொல்லப்படவில்லை.
கவிதையில் நாலு வரி எழுத ஆரம்பித்ததுமே 
ஏதேனும் ஒரு செய்தியை நோக்கி நமது 
எழுத்து குவியும். அவ்வாறு குவியும்போது,
அதைத்தடுத்து, செய்தி சொல்லப்பட்டு விடாமல் 
கவிதையை யாக்க வேண்டும். அப்படிச் 
செய்தால்தான் பின்நவீனத்துவக் கவிதையை 
யாக்க முடியும்.   அவ்வாறு யாக்கப்பட்ட 
பின்நவீனத்துவக் கவிதையே இது. 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக