ஞாயிறு, 25 ஜனவரி, 2015

இணைப்பு-2:
---------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
CPM கட்சி பெற்ற வாக்குகள், தொகுதிவாரியாக:
-------------------------------------------------------------------------- 
1. கன்னியாகுமரி      35284 
2. கோவை                    34197
3. மதுரை                       30126
4. வடசென்னை          23751 
5. தஞ்சை                       23215
6. விருதுநகர்                20157
7. திண்டுக்கல்              19455
8. விழுப்புரம் தனி       17408
9. திருச்சி                         17039

குறிப்பு-1: மேற்கூறிய ஒன்பது இடங்களில்
போட்டியிட்ட CPM கட்சி, அத்தனை இடங்களிலும் 
தோற்றது. டெப்பாசிட் இழந்தது.
குறிப்பு-2: போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் 
மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றது 
திருச்சி தொகுதியில்.இங்கு நோட்டாவுக்கு 
விழுந்த வாக்குகள்: 22848. CPMக்கு நோட்டாவை 
விட 5000 வாக்குகள் குறைவு.

****************************************************88888 



   
இணைப்பு:1
-------------------- 
2014 ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தல்:
கட்சிகள் பெற்ற வாக்குகளும் சதவீதமும்:
மாநிலம்: தமிழ்நாடு 
-------------------------------------------------------------------
கட்சி           வாக்குகள்          சதவீதம் 
 --------          ------------------       ----------------  
அதிமுக    1,74,87,733                44.3

திமுக          92,56,923                 23.4 

தேமுதிக   20,19,796                  5.1

பாமக          17,69,970                  4.5

மதிமுக      14,16,035                  3.6

CPI                   2,15,455                  0.5

CPM                 2,06,904                  0.5

******************************************************* 
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்
சனவரி 25
----------------------------------------------------------------------
ஆதிக்க இந்தியை எதிர்த்து
நீதிக்குப் போராடி மாண்டோர்
நினைவுக்கு நமது அஞ்சலி!

முதலாம் மொழிப்போரில் (1937) சிறை நண்ணி
உயிர்நீத்த தோழர் தாளமுத்து, தோழர் நடராசன்
ஆகிய இருவருக்கும்,
இரண்டாம் மொழிப்போரில் (1965)  உயிர் நீத்த
எண்ணற்ற தியாகிகளுக்கும் வீர வணக்கம்!

அலுவல் போனால் போகட்டும்
பிற சலுகை போனால் போகட்டும்
தலைமுறை கோடி கண்ட  
என் தமிழ் விடுதலை ஆகட்டும்.
      ---பாவேந்தர்-----

**********************************************************8

சனி, 24 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் மார்க்சிஸ்ட் போட்டி!
-------------------------------------------------------------------------- 
அதிமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து,
அதிமுகவுக்கு எதிராக, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பைக் 
கட்டமைத்து விடக்கூடாது என்ற சீர்குலைவு 
நோக்கத்துடன் ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் போட்டி இடுகிறது.

இதன் மூலம், ஜெயலலிதாவைத் திருப்திப் படுத்தி 
விட்டோம் என்ற மனநிறைவை மார்க்சிஸ்ட் கட்சி 
பெற்று விட்டது.
***********************************************************    
குருமூர்த்தி அய்யரும் தயாநிதி மாறனும்!
---------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------- 

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீராவேசம் 
தெரிகிறது குருமூர்த்தி அய்யரிடம்! தம் வீட்டின், 
மன்னிக்கவும், ஆத்தின் வரவேற்பறையில் இருந்த 
வண்ணம் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குகிறார் 
அய்யர். வரவேற்பறைச் சுவர்களை சங்கரராமன் கொலை 
புகழ் ஜெயேந்திரரின் திருவுருவப் படம் அலங்கரிக்கிறது.
ஜெயேந்திரரின் திருவுருவப் படத்தைத் தரிசித்த கண்கள்,
அடுத்து ஆட்டோ சங்கரின் படத்தைத் தேடுகின்றன. ஒருவேளை 
புழக்கடையில் இருக்கக் கூடும், சூத்திரன் என்பதால்!

ஜெயேந்திரர், ஆட்டோ சங்கர் இருவரையும் ஒரே 
வினையால் அணையும் பெயரால் சுட்டலாம். வினையால் 
அணையும் பெயர் என்றால், செய்த செய்கையால் ஏற்படும் பெயர் 
என்று பொருள். மேலும் விளக்கம் பெற விரும்புவோர், எட்டாம் 
வகுப்பு தமிழ் இலக்கணப் புத்தகத்தை நாடலாம்.

எனினும் இவ்விருவருக்கும் ஒரு வேறுபாடும் உண்டு. 
முன்னவருக்கு "பிரம்ம  ஹத்தி" தோஷம் உண்டு.
பின்னவருக்கு தோஷம் எதுவும் கிடையாது. சூத்திர ஹத்தி 
ஒரு தோஷம் இல்லையே, மனு சாஸ்திரப்படி!

( சமஸ்கிருதம் தெரியாத சூத்திர அபிஷ்டுகளுக்காக ஒரு விளக்கம்:
 பிரம்ம ஹத்தி என்றால் பிராமணனைக் கொல்வது என்று 
பொருள். சூத்திர ஹத்தி என்றால், சூத்திரனைக் கொல்வது 
என்று பொருள்.)

 கி.பி 2007இல் சன் டிவி அலுவலகத்தில் நிறுவப்பட்ட,
கள்ளத்தனமான  ஒரு தொலைபேசி இணைப்பகத்தைத் 
தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட அய்யர், உடனேயே 
அதுபற்றி எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. நான்கு ஆண்டு காலத் 
தத்துவ விசாரத்தின் பின், கி.பி 2011இல் திருவாய் மலர்ந்து 
அருளுகிறார். அவரது அருள்வாக்கை தினமணி வைத்தியநாத 
அய்யர் பிரசுரிக்கிறார். 

CBI என்பது அரசு எந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி
(AN INSEPERABLE PART OF THE STATE MACHINERY) என்கிற 
மார்க்சிய பாலபாடத்தை அறிந்தவர்களுக்கு, CBI என்றும் 
என்றென்றும் ஆளுவோரின் கைக்கருவிதான் என்பது புரியும்.
எனவே தயாநிதி மாறன் மீதான CBIயின் பாய்ச்சல், மாறன் 
சகோதரர்களைச் சிறையில் தள்ளுவது என்ற அற்ப 
நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதும் புரியும்.

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்துக்குப் 
பெருஞ்சவாலாக இருப்பது பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களே. கண்டிப்பாக மார்க்சியம் அல்ல. அது தமிழ் 
மண்ணில் வேர் பிடிக்கவில்லை.  பெரியாரிய, திராவிட இயல் 
சித்தாந்தங்களை இன்றும் நடைமுறைப் படுத்தும் இயக்கமாக 
இருப்பது திமுகதான் ( இவர்கள் நடைமுறைப் படுத்துவதில் 
ஆயிரம் குறைகள் இருந்தபோதிலும் ).

திமுகவின் பலவீனங்களும் தவறுகளும் இன்று மேலோங்கி 
நிற்கின்றன. என்றாலும், இக்காரணம் பற்றி திமுகவை ஏற்க 
மறுக்கும் எவரும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்தை ஆதரிக்கப் 
போவதில்லை. மாறாக, திமுகவைவிட ஆயிரம் மடங்கு 
தீவிரத்துடன் ஆர்.எஸ்.எஸ் ஐ எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள்.

சுருங்கக் கூறின், தத்துவார்த்த அரங்கில், (IDEOLOGICAL FRONT )
பெரியாரியத்தை வெற்றி கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்  தமிழ் 
மண்ணில் காலூன்றவே முடியாது என்பதுதான் நிதரிசனம்.
இந்தப் புரிதலுக்கு வந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் 
( குருமூர்த்தி, துக்ளக் சோ போன்றோர்) திமுகவை 
வீழ்த்துவதன் மூலம் பெரியாரியத்தைக் கடப்பது  என்கிற ஓரம்சத் திட்டத்துடன் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த ஓரங்க நாடகத்தின் முதல் காட்சிதான் ( OPENING SCENE )
சன் டி.வி அதிகாரிகளின் கைதும் சிறையும். 

மாறன் சகோதரர்கள் சிறை செல்வார்களா என்றால், அதற்கான 
வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இவர்களைக் கைது செய்து  
சிறைக்கு அனுப்புவதை விட, வழக்கை ஆண்டுக் கணக்கில் 
இழுத்தடித்து, வழக்கு சார்ந்த ஊழல் விவகாரங்களைப் 
பிரச்சாரம் செய்வதன் மூலம், திமுகவுக்கு அவப்பெயர் 
ஏற்படுத்துவது ஒன்றே ஆர்.எஸ்.எஸ்.சின் குறிக்கோள்.
தேவையான அளவு பிரச்சார மதிப்பு (PROPAGANDA VALUE )
கிட்டி விடுமேயானால், இவர்களைச் சிறைக்கு அனுப்புவதில் 
ஆர்.எஸ்.எஸ் ஆர்வம் காட்டாது.

இக்கட்டுரை மாறனுக்கு வக்காலத்து வாங்குவதற்காக 
எழுதப் பட்டது அல்ல. மாறன் குழுமம் உங்களுடைய 
அல்லது என்னுடைய வக்காலத்தை நம்பி இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான கலாநிதி மாறனை 
இந்திய முதலாளித்துவம் காப்பாற்றும். யார் ஆண்டாலும், 
இந்தியாவின் மத்திய அரசு என்பது பெருமுதலாளிகளின் 
அரசே. "அரசாங்கம் என்பது முதலாளிகளின் காரியக் 
கமிட்டியே " என்னும் மார்க்சிய போதனையை இங்கு 
நினைவு கூரவும்.

நிலைமை கைமீறிப் போகுமானால், சன்  குழுமம்
ஆர்.எஸ்.எஸ்சில் சங்கமம் ஆகவும் தயங்காது என்று 
நாம் கூறும் உண்மை சிந்தனைக் குள்ளர்களின் மண்டையில் 
வேண்டுமானால் ஏறாமல் இருக்கலாம். ஆனால் அது 
புறக்கணிக்க முடியாத உண்மை.

எனவே, இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்சின் 
கை ஓங்கி விடாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் புரட்சியாளர்களின் 
பிறழ முடியாத கடமை.

******************************************************************88888   
  
   



             




    

    


இடதுசாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை!
--------------------------------------------------------- 
எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஐக் குறை சொல்வதே 
இடதுசாரிகளுக்கு வழக்கமாகப் போய்விட்டது.
தா.பாண்டியனுக்கோ ஜி.ராமகிருஷ்ணனுக்கோ 
மலச்சிக்கல் வந்தாலும், அதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் 
காரணம் என்று சொல்வார்கள் போலும் இடதுசாரிகள்.
இப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தருண் விஜய் போன்ற இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ் 
அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட்டுப் பேசுவதா?
இடதுசாரிகளின் மயக்கத்தைத் தெளிவித்திட,
"தருண் விஜய் ஒரு இடதுசாரியே! தத்துவார்த்த ஆய்வில் முடிவு"
என்ற வீரை. பி. இளஞ்சேட்சென்னியின் கட்டுரை 
இன்று மாலை வெளியிடப்படும்.
படிப்பதற்கு முந்துங்கள்!

**************************************************************   

தருண் விஜய்  ஒரு இடதுசாரியே!
தத்துவார்த்த ஆய்வில் முடிவு!
------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------  .
தருண் விஜய் ஒரு தீவிர இடதுசாரி என்றார் தோளர்.
எனக்கு லேசாக மயக்கம் வருவது போல இருந்தது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் பேசும்
வள்ளுவரை ஏற்றுக் கொள்கிற  தருண் விஜய்யை
வலதுசாரி என்று கணிப்பது தத்துவார்த்தப் பிழை
ஆகிவிடும் என்று பதறினார்  தோளர்.
-------------------------------------------------------------------------------------------------
அவர் ஆர்.எஸ்.எஸ்காரர் ஆயிற்றே .... என்று நான் இழுத்தேன்.
அப்படி அல்ல,  கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் 
பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற தோளர்  
"MISTRUST THE OBVIOUS" என்பதுதானே அறிவியல் என்றார்.
உடனே, உயிரோடுதான்  இருக்கிறேனா நான்  என்று எனக்கு ஓர்
சந்தேகம் வர, நான் என் தொடையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------
அது உங்கள் கருத்து, அவ்வளவுதானே என்று உரையாடலைத்
கத்தரிக்க முயன்றேன் நான்.
இது கருத்தே அல்ல,  கருத்து என்றால்  வெறும் OPINION;
ஆனால் நான் சொல்வது ஆய்வுமுடிவு, FINDINGS  என்றார் தோளர்.
கள  ஆய்வு, புல ஆய்வு, தத்துவார்த்த ஆய்வு,
சான்றாதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு,
என்று பல்வேறு ஆய்வுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போய்  என்னை பிரமிப்பில் ஆழ்த்தினார் தோளர். இவ்வாறு 
பல ஆய்வுகளின் இறுதியில் நாங்கள் வந்தடைந்த முடிவுதான் 
தருண் விஜய் இடதுசாரி என்பது என்று விளக்கினார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் சாதாரண ஜனங்களுக்குப் புரியாது; 
INTELECTUALSக்குத் தான் புரியும், அதனால்தான் உங்களிடம் 
சொல்கிறேன் என்ற தோளர் போகிற போக்கில் எனக்கு ஒரு 
அறிவுஜீவிப் பட்டத்தையும் வழங்கினார்.
ஒப்புக் கொள்வதைத் தவிர எனாக்கு வேறு வழி இல்லாமல்
போய்விட்டது.யோசித்துப் பார்க்கிறபோது, சிவப்பு நிறத்தில் 
தருண் விஜய் குல்லாயும் ஸ்வெட்டரும் அணிந்திருப்பதாக 
லேசாக ஒரு தோற்றம் தெரிந்தது.
-------------------------------------------------------------------------------------------------------
நான் பலவீனம் அடைந்து விட்டதைத் உணர்ந்து  கொண்ட
தோளர் கைவசம் உள்ள மிச்சம் மீதி  அஸ்திரங்களையும்
பிரயோகிக்கத் தொடங்கினார்.
பக்கத்தில் உள்ள ஒரு இளைஞரை, மன்னிக்கவும், வாலிபரை
சுட்டிக்காட்டி இவரைப் போன்ற வாலிபர்கள்தான் கள ஆய்வுக்கு
முழுப்பொறுப்பு எடுத்துக் கொண்டவர்கள் என்று சிலாகித்தார்.
சே குவேரா படம் போட்ட பனியன் அணிந்திருந்த அந்த
வாலிபர் பரவசம் அடையத் தொடங்கினார்.அவர் சாதாரண 
வாலிபர் அல்ல என்றும்  வாலிபர் சங்கத்தில் இன்ன பொறுப்பு 
வகிப்பவர் என்றும் தோளர் தெளிவுபடுத்தினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
வாலிபம் என்ற சொல் எனக்கு உவப்பானதாக இல்லை.
வாலிப விருந்து போன்ற தலைப்பிலான பாலியல் ஏடுகள்,
வாலிப வயோதிக அன்பர்களே என்ற  லேகிய  வைத்தியர்களின்
கூக்குரல்கள் ஆகியவை  நினைவில் ஓடின.  எனவே, 
"வாலிபர் என்ற சொல்லுக்கு ஒரு நீல நிறம் இருக்கிறதே, தோளர், 
அதனால் இளைஞர்   சங்கம் என்று பெயர் வைக்கலாமே" என்று 
கூறினேன். "கண்மூடித் தனமான சமஸ்கிருத எதிர்ப்பு நமக்குக் 
கிடையாது என்று  என் வாயை  அடைத்தார்  தோளர்.
----------------------------------------------------------------------------------------------------------
(குறிப்பு; இங்கு நீல நிறம் என்பது இயற்பியலில் வரும், 
450-500 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட நிறத்தைக் குறிக்காது )
இப்போது தன்  முறை என்று உணர்ந்த, உடனிருந்த
ஜிப்பா ஜோல்னாப்பை சகிதம் காட்சி அளித்த அடுத்த தோளர்
பேச ஆரம்பித்தார். அவர் த.மு.சி.ப.ச அமைப்பில் முக்கியப்
பொறுப்பு வகிப்பவர் என்று அறிமுகம் செய்தார் தோளர்.
----------------------------------------------------------------------------------------------------
த.மு.சி.ப.ச ............. என்று நான் தயங்குவதை உணர்ந்த தோளர்
தமிழ்நாடு முற்போக்குச் சிந்தனாவாதிகள் மற்றும் படைப்பாளிகள் 
சங்கம் என்று விளக்கினார்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் யார் யார் இடதுசாரிகள்  என்று
பட்டியல் போட்டிருக்கிறோம் என்றார் த மு.சி.ப.ச தோளர்.
சொல்லிக் கொண்டே தன ஜோல்னாப்பையில் இருந்து ஒரு
சிவப்பு அட்டை போட்ட நோட்டுப் புத்தகத்தை  மிகுந்த
பவ்யத்துடன் எடுக்க ஆரம்பித்தார். சீனத்தில் கலாச்சாரப்
புரட்சியின்போது, மாவோவின் RED BOOK ஐ செங்காவலர்கள்
இப்படிதானே பவ்யத்துடன் எடுத்தார்கள் என்று நான்
நினைத்துக் கொண்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் படிக்கலாம், புதிதாக ஆரம்பிக்கப் பட்ட எங்கள்
இணைய தளத்திலும் இதை வெளியிடப் போகிறோம் என்று
கூறிக்கொண்டே நோட்டை என்னிடம் நீட்டினார்.
அதில் பெருமாள் முருகன் பெயர் தடித்த எழுத்தில்
இருப்பதைக் கண்டேன்.
மாதொருபாகன் நாவல் எழுதிய பெருமாள் முருகனா என்று
நிச்சயப் படுத்திக் கொள்ள விரும்பினேன் நான். ஆம், அவரேதான், 
ஒரு பெருமாள் முருகன்தானே இருக்கிறார் என்றார் தோளர்,           .
-----------------------------------------------------------------------------------------------------------
"அவர் பின்நவீனத்துவவாதி ஆயிற்றே" என்றேன் நான்.
அப்படியெல்லாம்  SECTARIAN ஆகப் பார்க்கக் கூடாது என்று
கண்டித்தார் தோளர்.
இதைத் தொடர்ந்ந்து கருத்துரிமை பற்றியும், அதைப் பாதுகாக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் சுருக்கமாக ஒரு
லெக்ச்சர் கொடுத்தார் தோளர். ஆர்.எஸ்.எஸ்காரனை
விட்டு வைக்கக் கூடாது என்றும் முத்தாய்ப்பு வைத்தார்.
-------------------------------------------------------------------------------------------------
மோடி அரசு ஆர்.எஸ்.எஸ் அரசுதானே, தோளர் என்று 
வினவினேன். ஆமோதித்தார் தோளர்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள்
நீட்டித்து இருக்கிறதே மோடி அரசு, இதவும் கருத்துரிமை
மீதான தாக்குதல்தானே தோளர், அதை ஏன் நீங்கள்  
எதிர்க்கவில்லை என்றேன் நான்.
----------------------------------------------------------------------------------------------------
கமிட்டிக் கூட்டம் இருக்குது, அவசரமாப் போணும்,
இன்னொரு முறை டீட்டெயிலாப் பேசலாம் என்று
சொல்லிக்கொண்டே வேகமாக இடத்தைக் காலி செய்தனர் 
தோளர்கள்
உரையாடலில் கலந்துகொள்ளாமல், மொத்த உரையாடலையும்
கேட்டுக் கொண்டிருந்த அந்த உணவகத்து அன்பர் காறித்
துப்பினார்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1: 
-------------------- 
பார்ப்பனீய விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதையே 
தம் எழுத்துப் பணியாகக் கொண்டிருந்த ஜெயகாந்தனை 
கம்யூனிஸ்ட் என்று மகுடம் சூடினர் போலிகள்.
இன்று, பின்நவீனத்துவ மற்றும் பாலியல் வக்கிர எழுத்தாளர் 
பெருமாள் முருகனை இடதுசாரி என்று போற்றுகின்றனர் 
போலிகள். நாளை இப்போலிகள் தருண் விஜயையும் 
இடதுசாரி என்று கூறக்கூடும். இதில் கற்பனை எதுவும் இல்லை.
IF THE DATA WERE EXTRAPOLATED, ONE WILL ARRIVE AT THIS
CONCLUSION!
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-2:
-------------------- 
 இங்கு "தோளர்" என்று எழுதியதில் எழுத்துப் பிழை 
எதுவும் இல்லை. போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு "தோழர்"  
என்ற அடைமொழி பொருத்தமற்றது என்பது எங்கள் 
நிலைப்பாடு.
----------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-3;
--------------------- 
"MISTRUST THE OBVIOUS" என்பது குற்றவியல் மற்றும் குற்றப்
புலனாய்வுப் புலத்தில் புழங்கும் ஒரு தொழில்நுட்பச் சொல்.
(TECHNICAL TERM ). பிரத்தியட்சமாகப் பார்க்கும் எதையும் 
நம்பாதே என்று இதற்குப் பொருள்.   

**************************************************************** .







    .

 .