சனி, 9 டிசம்பர், 2023

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்பிக்களை 
பதவிநீக்கம் செய்தது இந்திய நாடாளுமன்றம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு! ஆண்டு 2005.
UPA-I எனப்படும் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு
இருந்தது. மன்மோகன் சிங் பிரதமர். அப்போது 
Cobrapost என்னும் இணையப் பத்திரிக்கை ஒரு 
sting operationஐ நடத்தியது. அதில் 11 எம்பிக்கள் 
மாட்டினார்கள். 10 பேர் மக்களவை எம்பிக்கள்; 
ஒருவர் ராஜ்யசபா எம்பி.

இந்த 11 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட 
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.
இவர்கள் லஞ்சம் வாங்கியதும் பிடிபட்டதும் 2005 
டிசம்பரில்தான். இக்காட்சிகள் ஒரு தனியார் டிவியில் 
காட்டப்பட்டன. இதன் மூலம் நாடு முழுதும் 
இந்த எம்பிக்கள் அசிங்கப்பட்டுப் போனார்கள்.

இந்த எம்பிக்கள் காங்கிரஸ், பாஜக, மாயாவதியின் 
பகுஜன், லல்லு யாதவ்வின் ஆர் ஜே டி ஆகிய 
கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 11 பேரையும்
இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது (expelled).

காங்கிரசின் ராம் சேவக் சிங், பாஜகவின் சுரேஷ் 
சண்டெல், பகுஜன் கட்சியின் ராஜா ராம்பால்,
லாலு கடசியான ஆர் ஜே டியின் மனோஜ் குமார் 
ஆகியோர் மாட்டிக்கொண்டு பதவி இழந்த 
எம்பிக்களில் சிலர்.   .

லஞ்சம் வாங்கிய மக்களவை எம்பிக்கள் 10 பேரையும்
பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அன்றைய அவை 
முன்னவர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் கொண்டு 
வந்தார். தீர்மானம் நிறைவேறியது.

இதே போல, லஞ்சம் வாங்கிய அந்த ஒரு ராஜ்யசபை
எம்பியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை 
பிரதமரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் 
மன்மோகன் சிங் ராஜ்யசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிறைவேறியது. இவ்வாறு லஞ்சம் வாங்கிய 
11 எம்பிக்களையும் இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் 
செய்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு 
நடைபெற்றபோது மக்களவையின் சபாநாயகராக 
இருந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி.

இக்காலக் கட்டத்தில் (2005-2007) இந்தியாவின் துணை 
ஜனாதிபதியாக இருந்து ராஜ்ய சபாவை நடத்தும் 
பொறுப்பில் இருந்தவர் அன்றைய துணை ஜனாதிபதியான 
பைரோன் சிங் ஷெகாவத் அவர்கள்.  

அதே போல, இதே காலக்கட்டத்தில் (2005-2007) ராஜ்யசபாவின் 
துணைத் தலைவராக (deputy chairman of the Rajya Sabha)     
இருந்து அவையை நடத்தியவர் காங்கிரசின் 
கே ரகுமான் கான். இது அனைத்தும் வரலாறு.

History repeats itself because men repeat their mistakes என்றார் 
மேனாட்டு அறிஞர் ஆஸ்கார் ஒயில்டு. 2005ல் இந்திய 
நாடாளுமன்றத்தின் 11 எம்பிக்கள் செய்த தவறை,
18 ஆண்டுகள் கழித்து, 2023ல் திரிணமூல் கட்சியின்
பெண் எம்பி மெதுவா மொய்த்ரா வெட்கமின்றிச் 
செய்திருக்கிறார். மாட்டிக் கொண்டார். டிசம்பர் 2023ல்
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் 
இவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

மெஹுவா மொய்த்ரா எப்படி மாட்டிக் கொண்டார்?
இதுவரை அம்பலப் படுத்தியது யார்? ஏதேனும் 
sting operation நடந்ததா என்றால் அதெல்லாம் இல்லை 
என்பதே பதில். பின் எப்படி மாட்டிக் கொண்டார்?
எப்படி வசமாகச் சிக்கிக் கொண்டார்?

இவரை அம்பலப் படுத்தியவர் இவரின் பாலுறவுப் 
பங்காளியே! மெஹுவா மொய்த்ரா ஒரு பின்நவீனத்துவப் 
பெண்மணி. இவர் எழுத்தாளர் அருந்ததி ராயைப் 
பின்பற்றி வாழ்ந்து வருபவர். திருமணம், குடும்பம் 
ஆகியவற்றை பின்நவீனத்துவம் வேம்பென 
வெறுக்கிறது. எனவே அருந்ததி றாயைப் போன்றே 
பலருடனும் பாலுறவை முன்னிறுத்தி living together
முறையில் வாழ்ந்து வருபவர் மெஹுவா மொய்த்ரா.

இவருக்கும் இவரின் பாலுறவுப் பங்காளிக்கும் இடையே 
பூசலும் சண்டையும் ஏற்பட்டன. நாளாக ஆக சண்டை 
முற்றியது. இவரின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்த 
இவரின் பாலுறவுப் பங்காளி இவரை அம்பலப் படுத்தி 
விட்டார். மெஹுவா மொய்த்ரா முற்றிலுமாக அம்பலப் 
பட்டுப் போய்விட்டார். காமவெறி அவரின் அரசியல் 
வாழ்க்கையைக் காவு கொண்டு விட்டது.

தற்போது காங்கிரசின் மூத்த தலைவரான ஒரு 
உமனைசருடன் இவருக்கு பாலியல் ரீதியிலான உறவு 
இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடியுறைந் தற்று.
****************************************************    
  
  .  

      

வெள்ளி, 8 டிசம்பர், 2023

 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு?
பாஜகவா, காங்கிரசா, ஆட்சி அமைக்கும் கட்சி எது?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
அரசியல் ஆய்வுக் கட்டுரை! 
---------------------------------------------------------
அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை 
ஆராய்வோம். இதில் மிசோரம் மாநிலத்தை நாம் கணக்கில் 
கொள்ள வேண்டாம். மிசோரம் மாநிலத்தின் மொத்த 
மக்கள்தொகை பத்து லட்சமே. முற்றிலும் பழங்குடிகள் 
Scheduled Tribe) நிறைந்த மாநிலம் அது. அங்குள்ள இரு 
மாநிலக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து 
கொண்டிருக்கும் மாநிலம் அது. மொத்தமுள்ள 40 சட்டமன்ற 
இடங்களில் பாஜக இரண்டு இடங்களையும், காங்கிரஸ் 
ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு இந்த மாநிலத்தில் இவ்வளவுதான்.

மீதி நான்கு மாநில முடிவுகளையும் (மபி, ராஜஸ்தான்,
சட்டிஸ்கர், தெலுங்கானா) ஆராய்ந்தால் 2024 தேர்தலின் 
போக்கு எப்படி இருக்கும் என்று தெரியும். இந்த நான்கில்   
மூன்று வட இந்திய மாநிலங்கள். தெலுங்கானா 
தென்னிந்திய மாநிலம்.

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் பலவும் 
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் 
என்றே எழுதின. மபி, ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கே 
வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்புகள் 
தெரிவித்தன. இந்தக் கருத்துக் கணிப்புகள் 
அனைத்துமே அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் 
(George Soros)  என்பவரின் பணத்தில் நடத்தப பட்டவை.

ஜார்ஜ் சோரஸ் மோடி எதிர்ப்பாளர். எனவே பாஜகவுக்கு 
எதிராகவே கருத்துக் கணிப்புகள் அமைந்தன. இதில் 
மிகப்பெரிய இழிவு என்னவென்றால், எக்சிட் போல்கள் 
(Exit polls) கூட ஜார்ஜ் சோரசின் காசுக்கு விலை 
போனவையாகவே இருந்தன. தேர்தல் முடிவுகளைத் 
துல்லியமாகக் கணிக்க உதவுபவை எக்சிட் போல்கள்.

48 மணி நேர ஆயுள் மட்டுமே உடைய இந்த எக்சிட் 
போல்கள் உண்மையைப்பிரதிபலிக்க வேண்டும். 
ஆனால் சோர்சின் விருப்பத்தைப் பிரதிபலித்தன
எக்சிட் போல்கள். இவ்வாறு தவறான எக்சிட் போல்களை 
வெளியிட்ட நிறுவனங்களை ஓராண்டு காலமேனும் 
கருத்துக் கணிப்பு வெளியிட இயலாதவாறு தடை 
விதிக்க வேண்டும். இதைத் தேத்தல் ஆணையம் 
செய்ய வேண்டும்.  

மத்தியப் பிரதேசம்!
------------------------------
மபியில் கடும் போட்டி நிலவும் என்றும், தொங்கு 
சட்டமன்றம் அமையும் என்றும் உளறினார்கள் 
விலைபோன கருத்துக் கணிப்புக் கிரிமினல்கள். 
ஆனால் மபியில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு 
பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 

மபியில் மொத்தமுள்ள 230 இடங்களில் 163 இடங்களில் 
பாஜக வென்றுள்ளது.154 இடங்களில் வென்றால் 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும். பாஜக 
மூன்றில் இரண்டையும் தாண்டி 9 இடங்களை அதிகம் 
பெற்றுள்ளது. இது 70 சதவீதத்தையும் விட அதிகம்.

மபி 2023  சட்டமன்றம் மொத்த இடம் =230.
பாஜக = 163. (வாக்கு சதவீதம் = 48.55) 
காங் = 66. (வாக்கு சதவீதம் = 40.40)
இடங்களைப் பொறுத்து காங்கிரசை விட பாஜக
97 இடங்கள் அதிகம். வாக்குகளைப் பொறுத்து
பாஜக காங்கிரசை விட 8.15 சதவீதம் அதிகம்.

மூன்று இந்தி மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் 
என்று யாரையும் பாஜக அறிவிக்கவில்லை. சிவராஜ் 
சிங் சவுஹான் (மபி), வசுந்தரா ராஜ சிந்தியா (ராஜஸ்தான்),
ராமன் சிங் (சட்டிஸ்கர்) ஆகிய முன்னாள் முதல்வர்கள் 
முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப் படவில்லை.
மோடிக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக
கேட்டுக்கொண்டது. அதை அப்படியே ஏற்றுக்கொண்ட 
மக்கள் மோடிக்காகவே மூன்று மாநிலங்களிலும் 
வாக்களித்தனர்.

ராஜஸ்தான்!
--------------------
ராஜஸ்தானில் மொத்த இடங்கள் 199. பெரும்பான்மைக்கு 
100 இடங்கள் வேண்டும். பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 69 இடங்களை 
மட்டுமே பெற்றுள்ளது.

பாஜக = 115 இடம் (வாக்கு சதவீதம் = 41.69)
காங்கிரஸ் = 69 இடம் (வாக்கு சதவீதம் = 39.53)
பாஜக காங்கிரசை விட 46 இடங்கள் அதிகம்.
வாக்குகளைப் பொறுத்து பாஜக காங்கிரசை விட 
2.16 சதவீதம் அதிகம்.

ராஜஸ்தானில் பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
ஆட்சி மாறுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு 
வரும்போதெல்லாம் அது சொந்த பலத்தில் போதிய 
இடங்களைப்  பெறாமல் சுயேச்சைகள் சிறிய கட்சிகளுடன் 
கூட்டுச் சேர்த்தே ஆட்சி செய்துள்ளது. ஆனால் பாஜக 
ஆடசி அமைக்கும்போதெல்லாம், தனது சொந்த பலத்தில் 
பெரும்பான்மையை விட அதிக இடங்களைப் பெற்றே 
ஆட்சி அமைக்கிறது.
  
2008 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி
அமைக்கும்போது, காங்கிரஸ் பெற்ற இடங்கள் 96 மட்டுமே.
காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அப்போது பாஜக 78 இடங்களைப் பெற்று எதிர்க்கடசியாக 
இருந்தது.

ஆனால் 2013ல் பாஜக வென்று ஆட்சி அமைக்கும்போது
பாஜக பெற்ற இடங்கள் 163. Simple majority, Two third majority,
Three fourth majority என்பன அனைத்தையும் தாண்டி 
81 சதவீதப் பெரும்பான்மையை பாஜக பெற்றது.
அப்போது காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் 
சுருங்கிக் கொண்டது.

கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது 
காங்கிரஸ் பெற்ற இடங்கள் சரியாக 100 மட்டுமே.
அப்போது பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தது.
தற்போது 2023ல் பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது.காங்கிரசோ 69 இடங்களில் 
தன்னைச்சுருக்கிக் கொண்டது.

சட்டிஸ்கர்!
----------------
சட்டிஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸிடம் 
இருந்த ஆட்சியை பாஜக பறித்து விட்டது. சட்டிஸ்கரில்  
மொத்த இடங்கள் 90. பெரும்பான்மை பெறுவதற்கு 
46 இடங்கள் வேண்டும். பாஜக 54 இடங்களைப் பெற்று
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களோடு சுருங்கிக் 
கொண்டது.

பாஜகவின் வாக்கு சதவீதம் = 46.27.
காங்கிரசின் வாக்கு சதவீதம் =  42.23.
பாஜக காங்கிரசை விட 4.04 சதவீதம் வாக்குகள் அதிகம்.
காங்கிரசை விட 19 இடங்கள் அதிகம்.

தெலுங்கானா!
--------------------
இறுதியாக தெலங்கானாவைப் பார்ப்போம். தென்னிந்திய 
மாநிலங்களில் கர்நாடகம் தவிர பிற இடங்களில் 
பாஜகவுக்கு செல்வாக்கு மிகவும் குறைவு. பாண்டிச்சேரி 
யூனியன் பிரதேசத்தில் பாஜக மற்றும் மாநிலக் கட்சியின் 
கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறையாக 
ஆட்சியில் இருந்த BRS கட்சியிடம் இருந்து காங்கிரஸ் 
ஆட்சியைப் பறித்திருக்கிறது. தெலுங்கானாவில் 
மொத்த இடங்கள் = 119. பெரும்பான்மைக்குத் தேவை 
60 இடங்கள். காங்கிரஸ் 64 இடங்களைப்  பெற்று
ஆட்சி அமைக்கிறது. BRS கட்சி 39 இடங்களைப் பெற்று
எதிர்க்கடசியாக அமர்கிறது. ஓவாய்சியின் மஜ்லிஸ் 
கட்சி 7 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரசின் வாக்கு சதவீதம் = 39.40 ஆகும்.
BRS கட்சியின் வாக்கு சதவீதம் =  37.35 ஆகும்.
ஆட்சியை இழந்த BRS கட்சிக்கும், ஆட்சியைப்
பிடித்த காங்கிரசுக்கும் இடையிலான வாக்கு 
வித்தியாசம் வெறும் 2.05 சதவீதம்தான்.  
பாஜக இங்கு 8 இடங்களைப் பெற்றுள்ளது. பெற்றுள்ள 
வாக்கு சதவீதம் = 13.90 ஆகும். ஏழு இடங்களைப் பெற்றுள்ள 
மஜ்லிஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2.22 மட்டுமே.   

மேலே பகுத்தாய்ந்த மூன்று வட இந்திய மாநிலங்களிலும் 
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதைய நிலைமையே 
நீடிக்கும்.
மபியில் மக்களவை இடங்கள் = 29.
ராஜஸ்தானில் மக்களவை இடங்கள் =  25.
சட்டிஸ்கரில் மக்களவை இடங்கள் = 11.
தெலுங்கானாவில் மக்களவை இடங்கள் = 17. 

2024 தேர்தலில் பாஜகவுக்கு மபியில் 24; ராஜஸ்தானில் 20;
சட்டிஸ்கரில் 8;ஆக மூன்றிலும் சேர்த்து 52 இடங்கள் 
பாஜகவுக்கு கிடைக்கும். 50 இடங்களை பாஜக 
பெறுவது உறுதி. 

தெலுங்கானாவில் BRS கட்சியுடன் 
கூட்டணி அமைந்தால் (அமைய வாய்ப்பு அதிகம்)
இங்கு பாஜக+ BRS கூட்டணி 10 இடங்களையேனும் 
பெறும்.     
    
ஆகவே, எப்படிப் பார்த்தாலும் காங்கிரசுக்கு இந்த நான்கு 
மாநிலங்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதாக 
ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இந்த நான்கு 
மாநிலங்களிலும் உள்ள மொத்த மக்களவை இடங்கள் = 82.
இந்த 82ல் பாஜக 60 இடங்களையும் காங்கிரசும் பிற 
கட்சிகளும் சேர்ந்து 22 இடங்களையும் பெறும்.

அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் 
நடப்பதற்கு முன்னாள் உள்ள நிலைமை இது.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்து விட்டால் வட 
மாநில இடங்களில் 90 சதவீதம் இடங்களை பாஜக 
பிடிடித்து விடும் என்கிறார்கள் வட இந்திய அரசியல் 
விமர்சகர்கள்.
---------------------------------------------------------------------
தொடரும்....
காங்கிரஸ் தோற்பதும் பாஜக வெற்றி பெறுவதும் ஏன்? என்ற பகுதி 
அடுத்த கட்டுரையாக வெளிவரும்.
*********************************************
 


   




    

  
 
  

     
சட்டிஸ்கரில் CPI பெற்ற வாக்கு 0.39 சதவீதம்.
CPM  0.04 சதவீதம். நோட்டா 1.26 சதவீதம்.  
போலி கம்யூனிஸ்டுகளின் கருமாதி எப்போது?

மத்தியப் பிரதேஷில் CPI பெற்ற வாக்கு 0.03%
CPM = 0.01% நோட்டா = 0.98% போலி கம்யூனிஸ்ட் 
CPI, CPM கட்சிகளை கலைக்கும்படி மக்கள் போராட்டம்.  

மெய்யான உண்மையான கம்யூனிசத்தை 
முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியாது.
அவர்களால் CPI, CPMபோன்ற போலிக் 
கம்யூனிஸ்டுகளை மட்டுமே ஒழிக்க முடியும்.

போலிகள் ஒழிவது நல்லதுதான். போலிகள் 
ஒழிந்தால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி
தையெடுக்க முடியும்.      தலையெடுக்க 

CPI ML (லிபரேஷன்) கட்சி தெலுங்கானாவில் 
பெற்ற வாக்கு 0.00 சதவீதம். 0.00% என்பது 
கின்னஸ் சாதனை! கட்சியைக் கலைங்கடா 
போலி நக்சல்பாரி நாய்களே!    

ராஜஸ்தான்: CPI பெற்ற வாக்கு= 0.04%.
CPM = 0.95%.நோட்டா = 0.96%.
தெலுங்கானாவில் CPI = 0.34%. CPM = 0.22%.
நோட்டா = 0.73%.


கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதற்காக   
திரிணமூல் பெண் எம்பி மெகுவா மொய்த்ராவின் 
எம்பி பதவியைப் பறிக்க மக்களவையில் தீர்மானம்!

நோட்டா நிரந்தரமாக இருக்கும். அதற்கு அழிவு 
கிடையாது. முதலாளித்துவக் கட்சிகளையும் 
போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏற்றுக் 
கொள்ளாத மக்கள் இருக்கும்வரை நோட்டா இருக்கும்.
போலிக் கம்யூனிஸ்டுகள் அயோக்கியர்கள்.
கேடு கெட்டவர்கள். அவர்கள் அழிக்கப் படுகிறார்கள்.
தெலுங்கானா தேர்தலில் போட்டியிட்ட CPIML (லிபரேஷன்)
என்னும் போலி நக்சல்பாரி கடசி 0.00% வாக்கு 
வாங்கி உள்ளது. வாங்கிய வாக்கு 0.00%.

MAPIYIL DAAMO THOUKUTHIYIL AAM ATHMI


மபி: தாமோ தொகுதியில் ஆம் ஆத்மி 
வேட்பாளராக ஒரு பேரழகி போட்டியிட்டார்.
இணையத்தில் இவரின் FOLLOWERS 1.2 மில்லியன்.
வாங்கிய ஒட்டு வெறும் 1800! 

ப் போட்டியிட்ட ஒரு பேரழகியின் இணைய followers 

   
      


 

சனி, 2 டிசம்பர், 2023

 Continuing their unwavering commitment to saving lives, the government is actively engaged in ongoing rescue operations at the Silkyara Tunnel in Uttarkashi, where 41 workers remain trapped. The 2 km section of the tunnel, with completed concrete work ensuring the safety of the workers, is the focus of the rescue efforts.

Various government agencies are working tirelessly on each assigned specific tasks to ensure the safe evacuation of the workers. National and International experts are present at site to advice on the rescue operation. The government maintains constant communication to boost the morale of those trapped.

Key Updates on Rescue Operations:

1.         NHIDCL Lifeline Efforts:

  • Freshly cooked food and fresh fruits are being inserted inside the tunnel at regular intervals using the 2nd life line (150 mm dia.) service.
  • Video communication has been established by SDRF with standard workforce and direct line communication has been established by NDRF

2.       Horizontal Boring by NHIDCL

  • Auger drilling started at 0045 Hrs on 22.11.2023 was halted due to metallic object (Lattice girder rib) being encountered in front of the pipe and the pipe could not be inserted further. Cutting of Metallic object (Lattice Girder rib) using Gas cutters was resorted to and completed at 0230 hrs on 23.11.2023. Pushing of 9th pipe was restarted and reached an additional 1.8 meter distance. Minor vibration was noted, so Auger was pushed slightly back to re-assess the force to be applied. Obstructions were observed.
  • A bend part of forepole (pipe) from tunnel lining was struck in the auger assembly which led to vibrations.
  • Strengthening of platform for auger machine was carried out using accelerating agent for rapid hardening of concrete completed followed by anchoring and bolting of the platform.
  • Pushing of 10th Pipe( 4.7 m length) started at 1625 hrs on 24.11.2023 and a length of 2.2 m was inserted upto 1750 hrs on 24.11.2023 resulting in total inserted length of 46.9 m.
  • During pushing of 10th pipe, further obstruction was observed and pushing of pipe had to stop.
  • Thereafter, pulling back of auger was initiated and completed on 0300 hrs dated 27.11.2023. Total cutting length 46.90m has been achieved.
  • After visual inspection by welders it is found that the cutter of augur has been entangled with lattice girder bars which damaged the 1.5m of length of 800mm passage pipe. Further, cutting of these lattice bars is under progress.
  • After clearance of 800mm rescue pipe from all the obstruction including stuck-up augurs, manual drift procedure will be applied to clear the last few meters to access the other side.
  • Erection of False Ribs from face of tunnel towards tunnel exit on Silkyara side to protect the Operational area (Ch. 194.50 to Ch. 184.50)-Erection of Ribs started at 1950 hrs on 25.11.023. Total 8 number of Ribs erection completed at the time of reporting.

3.   Vertical Drilling (1.0m dia) for Rescue by SJVNL:

  • Drilling Machineries arrived at site.
  • Platform for launching of drilling machine has been completed.
  • Marking of drilling point over the tunnel has been finalized at Ch. 300 L/S after discussion with GSI, RVNL & ONGC.
  • Main machine reached at Drilling site. Drilling rig of machine transported from tunnel portal to drilling site. Drilling started at 1205 hrs on 26.11.2023 and at the time of reporting 30.80m has been achieved.

4.   Horizontal Drilling from Barkot Side by THDCL:

  • THDC has initiated the construction of a rescue tunnel from the Barkot end.
  • Sixth blast taken at 0615 hrs at 27.11.2023.
  • Total executed length of drift is 12m.
  • Fabrication work of 18 number of ribs has been completed.

5.   Perpendicular-Horizontal Drilling by RVNL:

  • Equipments for micro tunneling required for horizontal drilling to rescue labourers has reached site from Nashik and Delhi.
  • The work of making platform is under progress.

6.  Vertical Drilling (8 inches dia) by RVNL at Silkyara end:

  • Access road of 1150 meter has been completed by BRO and handed over to RVNL. Machine for drilling towed to location by BRO.
  • Electric Connection has been provided to RVNL.
  • Platform for vertical drilling has been completed.
  • Drilling started at 0400 hours on 26.11.2023 and 72 meter completed.

7.   Vertical Drilling (24 inches dia) Toward Barkot End by ONGC

  • ONGC drilling team visited the site on 20.11.2023.
  • Air Drilling Rig from Indore has reached site.
  • All the associated material of Air Hammer Drilling Rig mobilized by ONGC are in standby at Rishikesh as the road and location for placement of Rig for drilling are being prepared by BRO.

8.   Drift Tunnel by Manual-Semi Mechanized Method by Joint Team of THDCL /Army/Coal India and NHIDCL:

  • Drift design completed( 1.2m X 1.5m sections)
  • Material available at site.
  • Fabrication started on 21.11.2023 by Army welders.
  • 22 numbers of frames have been fabricated and completed.

9.   Road Cutting and Supportive Work by BRO:

  • BRO has completed construction of approach road for vertical drilling by SJVNL and RVNL.
  • BRO is also building approach road for ONGC with geological surveys conducted by ONGC1050 meters of approach road has been constructed so far out of 5000 meters.

Background:

On 12th November 2023, a collapse occurred in the under-construction tunnel from Silkyara to Barkot due to debris falling in a 60-meter stretch on the Silkyara side. Immediate mobilization of resources by the State and Central Governments ensued to rescue the 41 trapped labours.

Initially opting for a 900 mm pipe through the debris, safety concerns led to the exploration of multiple rescue options simultaneously. The area of entrapment, measuring 8.5 meters in height and 2 kilometres in length, is the built-up portion of the tunnel, offering safety to the labours  with available electricity and water supply.

Five agencies—ONGC, SJVNL, RVNL, NHIDCL, and THDCL—have been assigned specific responsibilities, working collaboratively with occasional task adjustments for operational efficiency.

Note: The timelines provided are subject to change due

வெள்ளி, 1 டிசம்பர், 2023

 வெள்ளாளங்குளம் கல்வி வள்ளல் 
எம் ஜே பாண்டியன் அவர்களின்
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும்!
----------------------------------------------------------
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் 
சுரண்டை, சேர்ந்தமரம் ஊர்களுக்கு அருகில் உள்ள 
சிற்றூர் வெள்ளாளங்குளம் ஆகும்.

1960களில் இவ்வூரில் முதன் முதலாக ஓர் 
உயர்நிலைப்பள்ளி கொண்டு வரப்பட்டது.
அதற்காகப் பாடுபட்டு அச்சிற்றூரில் 
பள்ளியைக் கொண்டு வந்தவர் அவ்வூரின்
ஊராட்சி மன்றத் தலைவரான சடையப்பத் தேவர் 
எனப்படும் திரு எம் ஜே பாண்டியன் அவர்கள்.

எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டியிருந்த 
நிலையில் இருந்த ஊர்ப் பிள்ளைகள் இன்று பெரிய 
படிப்புப் படித்து உயர் அதிகாரிகளாய்ச் 
சமூகத்திற்குச் சிறப்புச் சேர்க்கின்றனர்.

கல்விக்கு வழி சமைத்த எம் ஜே பாண்டியன் 
அவர்களை நன்றியுடன் நினைவுகூரும் வண்ணம் 
தற்போது வெள்ளாளங்குளத்தில் அவருடைய 
நூற்றாண்டு விழாவும் சிலை திறப்பும் நடக்கிறது. 

இந்த விழா சிறப்புற இப்பள்ளியின் முன்னாள் மாணவனாகிய 
நான் வாழ்த்துகிறேன். 
எம் ஜே பாண்டியன் அவர்களின் புகழ் ஓங்குக!


இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர்!
---------------------------------------------------------------
என்னுடைய தந்தையார் திரு மு பிச்சாண்டி எம் ஏ பி டி அவர்கள் வெள்ளாங்குளம் பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் 
பொறுப்பேற்றுப் பணியாற்றினார்கள். அர்ப்பணிப்புடன் 
பணியாற்றினார்கள். அவர்கள் அப்பள்ளியில் 
பணியாற்றிய காலத்தில், தமிழக அரசு அவர்களுக்கு 
நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

வெள்ளாளங்குளம் மட்டுமின்றி அருகிலுள்ள 
பல சிற்றூர்களையும் இப்பள்ளி அரவணைத்தது.


இந்த விழாவில் முதல் ஆளாகப் பங்கேற்க வேண்டியவன்
நான். உடல்நலக்குறைவு காரணமாக டயாலிசிஸ் செய்து 
கொண்டு இருப்பதால் தற்போது என்னால் பயணத்தை 
மேற்கொள்ள இயலவில்லை. வீரவநல்லூரில் இருந்து 
என் தம்பிமார்கள் இவ்விழாவில் பங்கேற்றுச் 
சிறப்பிக்கின்றனர்.

மதிப்புக்குரிய எம் ஜே பாண்டியன் அவர்களை 
நான் நன்கறிவேன். அவரின் திசை நோக்கி 
வணங்கி மகிழ்கிறேன்.
என்னுடைய வணக்கமும் நன்றியும்
எம் ஜே பாண்டியன் அவர்களைச் சென்றடையும் 
என்ற நம்பிக்கையுடன் இந்த விழாவில் 
நான் மானஸீகமாகப் பங்கேற்கிறேன்.

எம் ஜே பாண்டியன் புகழ் ஓங்குக!
********************************************            
சுரங்கத்தினுள் 17 நாள் சிக்கித் தவித்த 
தொழிலாளர்கள் மீட்கப்பட்டது எப்படி?
--------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------

வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்-அடி 
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
.........மகாகவி பாரதி.

உத்தரகாண்ட் மாநிலம் மலையும் மலைசார்ந்த இடமும்
ஆகும். கடந்த நவம்பர் 12 அதிகாலை ஐந்தரை மணிக்கு 
இம்மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த   
சில்கியாரா சுரங்கம் (silkyara tunnel) இடிந்து விழுந்தது. 
வெளியேறும் வழி அடைத்துக் கொண்டதால் அங்கு 
பணியாற்றிய 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள்ளேயே 
சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் கழித்து  நவம்பர் 28, 2023ல் 
அவர்கள் அனைவரும் துளி சேதாரமும் இன்றி பத்திரமாக 
மீட்கப் பட்டனர். 

நவம்பர் 28 இரவு 8 மணியளவில் மீட்கப்பட்ட 41 பேரில் 
முதலில் வந்த சிலரை ஏற்றிக்கொண்டு சில்கியாரா 
சுரங்கப்பாதையின் வாசலில் இருந்து  ஒரு ஆம்புலன்ஸ்  
விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டுச் சென்றது. 
இத்தொழிலாளர்களின் மீட்பு சர்வதேச ஏடுகளின் 
தலைப்புச் செய்தியானது.


ரூ ஒரு லட்சம் உதவித்தொகை!
------------------------------------------------
உத்தரகாண்ட் மாநில அரசும் மத்திய அரசும் உச்ச அளவு 
ஒருங்கிணைப்புடன் செயலாற்றின. தொடர்புடைய பேரிடர் 
மீட்பு அமைப்புகள் (NDRF and SDRF) அதிகபட்ச அர்ப்பணிப்புடன்  
தம் கடமையைச் செய்தன. மீட்புக்குழுவானது பல்வேறு 
ஏஜன்சிகளின் ஒருங்கிணைப்பாகும் (multi agency rescue team) 
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தினமும் 
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு தேவையான அனைத்து 
உதவிகளையும் செய்து வந்தார். மீட்புப் பணிகளின் நிலவரம் 
குறித்து பாரதப் பிரதமர் தொடர்ச்சியாக அறிந்து கொண்டும் 
அக்கறை காட்டியம் வந்தார். மீட்கப்பட்ட 41 பேருக்கும் 
தலைக்கு ரூ ஒரு லட்சம் உதவித்தொகையை உத்தரகாண்ட் 
முதல்வர் வழங்கினார்.

சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோர் 41 தொழிலாளர்கள்.
அதிர்ஷ்டவசமாக இவர்களில் பெண்கள் குழந்தைகள் 
முதியோர் என்று எவருமே இல்லை. அனைவருமே 
இளவயதினர்தாம்!.  


உணவு அனுப்புவதில் வெற்றி!
----------------------------------------------
தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட தேதி நவம்பர் 12. எட்டு நாட்களாக 
மீட்புக் குழுவினரால் இவர்களை அணுக இயலவில்லை.
ஒன்பதாம் நாளன்று, நவம்பர் 20ல், சுரங்கத்தினுள் தொழிலாளர்கள்  
சிக்கிக் கொண்ட இடத்திற்கு ஒரு நீண்ட குழாயை
அனுப்புவதில் மீட்புக் குழுவினர் வெற்றி அடைந்தனர்.
மீட்புப் பணியின் உருப்படியான முதல் வெற்றியாகும் இது.
அரையடி விட்டமுள்ள அந்தக் குழாயின் வழியாக 
சிக்கித் தவிப்போருக்கான உணவை மீட்புக் குழுவினர் 
வெற்றிகரமாக அனுப்பினர். சூடான ரவை கிச்சடி அனுப்பப் பட்டது.

அகன்ற வாய் உடைய உருளை வடிவ பாட்டில்களில் 
கிச்சடி அடைக்கப்பட்டு சிக்குண்ட தொழிலாளர்களை 
குழாய் வழியே சென்றடைந்தது. கூடவே ஆப்பிள், வாழை,
தண்ணீர், மருந்து ஆகியனவும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு 
இணங்க அனுப்பப் பட்டன. முன்னதாக ஒரு குழாய் மூலம் 
ஆக்சிஜன் அனுப்பப் பட்டது.   

தொலைதொடர்பு முயற்சியில் BSNL!
------------------------------------------------------- 
சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 
பேசுவதற்காக சில்கியாரா சுரங்கப்பாதையினுள் நிலவழித் 
தொலைதொடர்பை (wired Landline connectivity) ஏற்படுத்தும் 
பெரும் பொறுப்பு BSNL நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
பொறுப்பை ஏற்றுக்கொண்ட BSNL,  நவம்பர் 25ல் வயர்களைப் 
பொருத்தும் பணியில் ஈடுபட்டது. எனினும் இப்பணி தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளானது. 

தொழிலாளர்கள் 41 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
உபி, பீகார், மேற்கு வங்கம், அசாம், ஜார்க்கண்டு, உத்தரகாண்ட்,
ஒடிஷா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  

மீட்கப்பட்ட 41 பேரில் ஒருவரான விஷால் குமார் என்பவர் 
மீட்கப்பட்ட உடன் செய்தியாளர்களுக்கு அளித்த 
பேட்டியில் ஐந்து அல்லது பத்து நாட்களுக்குள் தாங்கள் மீட்கப்பட்டு 
விடுவோம் என்று நம்பியதாகத் தெரிவித்தார். 17 நாட்களாகி 
விடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் 
நாளின் பெரும்பகுதி நேரத்தை தூங்கிக் கொண்டும் 
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் கழித்ததாகத் தெரிவித்தார்.
தமது பேச்சில் ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் தங்களுக்குக் 
கிடைத்துக் கொண்டிருந்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் 
விஷால் குமார்.

சுரங்கப்பாதையில் மண்சரிவு!
------------------------------------------------ 
சில்கியாரா சுரங்கப்பாதை மண்சரிவு (Silkyara tunnel collapse)  
என்று அழைக்கப்படும் இவ்விபத்து உண்மையில் நிலக்கரிச் 
சுரங்கம், இரும்புச் சுரங்கம் போன்ற சுரங்கங்களில் 
ஏற்படும் விபத்து போன்றதல்ல. நிலக்கரி, இரும்புச் சுரங்கங்கள் 
அதிக ஆழம் தோண்டப் படுபவை. தென்னாப்பிரிக்காவில் 
சில நிலக்கரிச் சுரங்கங்கள் 4 கிமீ ஆழம் தோண்டப்பட்டவை.
ஆனால் சில்கியாரா சுரங்கப்பாதையானது சாலை அமைப்புத் 
தொடர்பான ஒரு சுரங்கப் பாதை (tunnel and not a mine) ஆகும்.
இது ஆழமாகத் தோண்டப் படுவதற்கான எந்தத் 
தேவையும் இல்லாத ஒன்று.

மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் என்னும் மூன்று 
கூறுகளால் ஆனவை நவீன நெடுஞ்சாலைகள். சாலைகளின் 
பிரிக்க முடியாத பகுதிகளாக ஆகிவிட்ட சுரங்கப் பாதைகள்
பொதுவாக 15 அடி, 20 அடி என்று மேம்போக்கான ஆழம் உடையவை.
தேவையை ஒட்டி அதிகபட்சமாக 30 அடி ஆழத்திற்கு மேல் இச்சுரங்கப் பாதைகளின் உயரம் பொதுவாக அமைவதில்லை.  

உத்தரகாண்ட் மாநிலத்தில் "சார் தம் தேசிய நெடுஞ்சாலைத் 
திட்டம்" (Char Dham National Highway Project) என்னும் சாலை அமைப்புத் 
திட்டம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 
(இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 10,500 கோடி) 2016ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் மொத்த 
நீளம் 889 கிமீ ஆகும். கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி 
ஆகிய நான்கு கோவில் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையை   
அமைப்பதே "சார் தம்" திட்டம் ஆகும். சார் தம் என்ற இந்திச் சொல் 
நான்கு ஸ்தலங்கள் என்று பொருள்பட்டு மேற்கூறிய நான்கு 
கோவில் நகரங்களைக் குறிக்கும்.

உச்சநீதிமன்றம் அனுமதி!
---------------------------------------
இந்திய மாநிலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம்  
பெற்றுள்ள மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். 2022ஆம் ஆண்டில் மட்டும் 
ஐந்து கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்டிற்கு வருகை 
புரிந்துள்ளனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து 
கோடியில், அரைக்கோடிப்பேர்  கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி  ஆகிய கோவில் நகரங்களுக்கு பக்திச் சுற்றுலா வந்தவர்கள்.
சுற்றுலா வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், பக்தர்களுக்கு 
வசதி செய்து தரும் நோக்கிலும் மக்களின் தேவை சார்ந்து 
"சார் தம்" தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  

திட்ட வேலைகள் ஆரம்பித்ததுமே இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் 
பாதிக்கப்படும் என்று புகார்கள் எழுந்தன. பலர் நீதிமன்றங்களில் 
வழக்குத் தொடுத்தனர். வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 
இத்திட்டத்தைச் செயல்படுத்த அனுமதித்தது.  அதே நேரத்தில்,
இச்சாலை அமைப்பின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் 
கண்காணிக்க உச்சநீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை 
(oversight committee) அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் 
ஏ கே சிக்ரி (Justice A K Sikri) அக்குழுவின் தலைவர் ஆவார். 

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புடனே  திட்டம்  தொடர்ந்தது.
"சார் தம்"  திட்டப்படியான மொத்தமுள்ள 889 கிமீ நீள சாலையில் 
578.6 கிமீ தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு விட்டதாக நீதியரசர் 
சிக்ரி குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. 

சுரங்கத்தினுள் சிக்கிய 41 பேர்!
-------------------------------------------------
விபத்து நிகழ்ந்த சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையானது 
(Silkyara-Burkot Tunnel) 4.5 கிமீ நீளம், 13 மீட்டர் அகலம், 9 மீட்டர் உயரம் 
என்னும் அளவுகளைக் கொண்டது. இச்சாலை அமைப்பதில் 
முக்காலே அரைக்கால் பாகம் வேலை முடிந்துவிட்ட நிலையில்,
அதாவது 4 கிமீ நீளத்திற்கான சாலை அமைக்கப்பட்டுவிட்ட 
நிலையில், வேலையின் இறுதிக் கட்டத்தில், இன்னும் 500 மீட்டர்   
நீளத்திற்கான சாலை மட்டுமே எஞ்சியுள்ளது என்ற 
நிலையில் விபத்து நிகழ்ந்து வெளியேறும் பாதை அடைபட்டு 
விட்டது. விபத்து நிகழ்ந்த இடம்  சில்க்யாராவில் இருந்து  200 மீட்டர் தொலைவில் உள்ளது.

நவம்பர் 12 அதிகாலை 5.30 மணிக்கு மண்சரிவு நிகழ்ந்து 
55 மீட்டர் நீளத்திற்கு வெளியேற்றப் பாதையை கான்கிரீட்
மூடிவிட்டது. 41 தொழிலாளர்களும் சுரங்கத்தினுள் 
சிக்கிக் கொண்டனர். எனினும் இதில் நமது அதிர்ஷ்டம் 
என்னவெனில், தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட பகுதி 
மின்சார வசதி படைத்ததும், ஆக்சிஜன் வழங்கும் குழாய்களின் 
இருப்பும் உடைய 2 கிமீ நீளமான நன்கு கட்டி முடிக்கப்பட்ட 
பகுதியாகும். இங்கு தண்ணீர் இருந்தது. இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை அளித்தது.  எனவே சிக்குண்ட ஆரம்ப நாட்களில் தொழிலாளர்களுக்கு இன்னல்கள் பெரிதாக எழவில்லை. 

ஆனால் மீட்புப் பணியின் காலம் நீட்டிக்க நீட்டிக்க  
ஆக்சிஜன் சப்ளை குறைந்து கொண்டே செல்லும்
அபாயம் இருந்தது. இருப்பினும் நிலைமை முற்றிலும் மோசமாவதற்குள் 
மீட்புப் பணியில் ஒரு பெரிய முன்னேற்றம் ஒன்பதாம் நாளன்று 
ஏற்பட்டது. சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டோருக்கு 
உணவு அனுப்புவதில் மீட்புக்குழு அன்றுதான் வெற்றி அடைந்தது.  
சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், 
ஆக்சிஜன் ஆகியவை வேண்டிய அளவு குழாய் மூலம் அனுப்பப் 
பட்டன. இதைத் தொடர்ந்து சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட 
அனைவருக்கும் தாங்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவது 
உறுதி என்ற நம்பிக்கை பிறந்தது.


உயரமே இங்கு விதியானது!
-------------------------------------------
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலைச் சரிவில் அமைந்த உயரமான 
மாநிலம். இங்குள்ள இடங்களும் ஊர்களும் உயரமானவை.
அதாவது கடல் மட்டத்திற்கு மேல் (above MSL = Mean Sea Level) 
சராசரியாக 2 கிமீ உயரம் உடைய ஊர்களைக் கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இம்மாநிலத்தின் அதிகபட்ச உயரம் 
(maximum elevation) ஏழரை கிமீ (துல்லியமாக 7442 மீட்டர்)..

தமிழ்நாடு போன்று மிகப்பெரிதும் சமதளமான 
மாநிலம் அல்ல உத்தரகாண்ட். சென்னை, தூத்துக்குடி, 
கடலூர் போன்று கடல்மட்டத்தை விடச் சிறிதளவே உயர்ந்திருக்கும் நிலப்பரப்பைக் கொண்டதல்ல உத்தரகாண்ட். இங்கு எதைத்
தொட்டாலும் எங்கு தொட்டாலும் எப்படித் தொட்டாலும் 
உயரம்தான்; அதுவும் கிலோமீட்டர் கணக்கில்தான். எனவே 
இம்மாநிலத்தின் சுரங்கப்பாதை முதல் மேம்பாலம் வரையிலான 
கட்டுமானம் அனைத்திலும் இமயமலையின் அதிஉயரப் 
புவியியலானது மிகவும் சக்தி வாய்ந்த தாக்கத்தைச் செலுத்தி 
வருகிறது. எனவே தமிழ்நாடு போன்ற சமதள மாநிலங்களின் 
கட்டுமான நடைமுறைகள் உத்தரகாண்டில் பொருந்தாது.

தவிர்த்திருக்கக்கூடிய விபத்து!
-------------------------------------------------
ஐதராபாத்தைச் சேர்ந்த நவயுகா பொறியியல் நிறுவனம் 
(Navayugha Engineering Company Limited) என்னும் நிறுவனமே 
சில்கியாரா சுரங்கப்பாதைக்குப்  பொறுப்பேற்று 
கட்டுமானத்தை மேற்கொண்டு வந்தது. நடைபெற்ற விபத்து 
தவிர்த்திருக்கக் கூடிய விபத்தே தவிர மனித முயற்சிக்கு 
அப்பாற்பட்ட ஒன்றல்ல.  இமயமலையின் புவியியலை 
நன்கறிந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சுரங்கப் 
பாதையின் கட்டுமானம் நடந்திருக்கும்பட்சத்தில், இந்த 
விபத்துக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். 

இந்த விபத்தை அடுத்து, மாநிலத்தில் நடைபெறும் 
அனைத்து சுரங்கப்பாதைகளின் கட்டுமானமும் 
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும்வண்ணம் 
உரிய விதத்தில் பரிசீலிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும் 
என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 
அறிவித்துள்ளார். விபத்துக்கள் மீண்டும் தொடரக்கூடாது 
என்ற மாநில அரசின் அக்கறையை முதல்வர் வெளிப்படுத்தி 
உள்ளார். இது மிகப் பெரிதும் வரவேற்கக்கூடிய முடிவாகும். 
இதை நூறு சதம் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீட்புப் பணிகள்:
------------------------- 
நவம்பர் 12 தீபாவளியன்று அதிகாலை 5.30 மணிக்கு, கட்டப்பட்டு வரும் சில்கியாரா-பர்கோட்  சுரங்கப்பாதையில் சில்கியாரா முனையில் 
60 மீட்டர் நீளத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கத்தில் இருந்து 
வெளியேறும் பாதையை (exit) இம்மண்சரிவு மூடிவிட்டது.  இதனுள் 
41 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சிக்கிக்கொண்ட பகுதி 
(area of entrapment) 2 கிமீ நீளமும் 8.5 மீட்டர் உயரமும் உடைய கான்கிரீட் 
போட்டு நன்கு கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதையின் 
(built up portion of the tunnel) பகுதியாகும். அங்கு மின்சாரமும் தண்ணீரும்  
இருந்தன. 
 
முதல் வேலையாக மண்சரிவை அகற்ற மீட்புக் குழு முடிவு செய்தது. 
இதற்காக ஜேசிபி எந்திரங்கள் (JCB machines) பயன்படுத்தப்பட்டன. 
இடிபாடுகளைத் துளைத்து அவற்றின் ஊடாக 90 செமீ விட்டம் 
உடைய ஒரு குழாயை (900 mm pipe) நுழைப்பதற்கு திட்டமிடப்  
பட்டது. ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை. 

அடுத்ததாக ராட்சச எந்திரங்களைப் பயன்படுத்தி மணல்குவியலை  
அறுத்துத் துளையிட்டு உயிர் காக்கும் குழாய்களை (lifeline pipes)  உள்ளே அனுப்பும் முயற்சி தொடங்கியது. இதில் பயன்பட்ட பல்வேறு 
எந்திரங்கள் பழுதடைந்து விட்டன. அமெரிக்க எந்திரமான ஆகர் எந்திரம் (Augur machine)  மட்டும் பழுதடையாமல் தொடர்ந்து கிடைமட்டமாகத் துளையிட்டது (horizontal drilling). தொடர்ந்து 4.7 மீட்டர் நீளமுள்ள 
10ஆவது உயிர் காக்கும் குழாய் உள்செலுத்தப் பட்டது. 24.11.2023 மாலை 
5.50 மணியளவில் இக்குழாய் 2.2 மீட்டர் நீளத்திற்கு உள்செலுத்தப்பட்டது.
இதன் மூலம் உள்செலுத்தப்பட்ட மொத்த நீளம் 46.9 மீட்டர் ஆனது.
60 மீட்டர் நீளத்துக்கு அடைத்துக் கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் 
நீளம் வரை அடைந்தாயிற்று. தொடர்ந்து சில தடங்கல்கள் தோன்றி  அமெரிக்காவின் ஆகர் எந்திரமும் பழுதடைந்தது.

தொடர்ந்து செங்குத்தாகத் துளையிடும் பணி (vertical drilling)
தொடங்கியது. ஒரு மீட்டர் விட்டமுள்ள (1.0 m dia) குழாயை 
உள்ளே செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 26.11.2023 பகல் 
12.05 மணிக்குத் தொடங்கிய துளையிடும் பணி 30.80 மீட்டர் நீளத்திற்கு  
குழாயை உள்ளே செலுத்தியது.

தொடர்ந்து சுரங்கப்பாதையின் பர்கோட் முனையில் (Barkot side)
இருந்து கிடைமட்டமாகத் துளையிடுதலும் (horizonal drilling),
அடுத்து செங்குத்தான கிடைமட்டத் துளையிடுதலும்  
(perpendicular horizontal drilling) மேற்கொள்ளப் பட்டன.  
இவ்வாறு தேவைக்கேற்ப மாறி மாறி வெவ்வேறு அளவு விட்டத்துடன்
சில்கியாரா முனையில் இருந்தும் பர்கோட் முனையில் 
இருந்தும் செங்குத்தாகத் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப் 
பட்டன. இப்பணிகளில் மற்றவர்களுடன் இந்திய ராணுவத்தின் படைவீரர்களும் அதிகாரிகளும் செயலூக்கம் மிக்க பங்காற்றினர்.          
(தகவல் ஆதாரம்: நெடுஞசாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் 
துறை அமைச்சகத்தின் செய்தியாளர்களுக்கான வெளியீடு:
Uttarkashi Tunnel Rescue Operation Media brief, Ministry of Road transport and 
Highways).  

மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தில், 60 மீட்டர் நீளத்துக்கு 
அடைத்துக்கொண்ட இடிபாடுகளில் 47 மீட்டர் நீளம் வரை
முன்னேற முடிந்தபோதிலும், சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் 
கொண்டோரை அடைவது  கடினமாக இருந்தது. இந்நிலையில் 
எலிவளைச் சுரங்கத் தொழில்நுட்பம் (Rat hole mining) எனப்படும் 
மற்றுமொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மீட்புக்குழு 
முடிவு செய்தது. அதன்படி டெல்லி, ஜான்சி ஆகிய ஊர்களில் 
இருந்து எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

எலிவளைச் சுரங்கம் என்பது மிகவும் குறுகலாகத் தோண்டப்படும் 
ஒரு சுரங்கம் ஆகும். ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவு விட்டத்துடன்
ஒருவர் சுரங்கத்தைத் தோண்டிக்கொண்டே செல்வார். தோண்டப்பட்ட மண்ணை ஒருவர் டிராலியில் அள்ளுவார். மூன்றாமவர் டிராலியை
அப்புறப் படுத்துவார். மிகப்பெரிய எந்திரங்களோ நவீனமான 
கருவிகளோ தேவையின்றி, மரபான எளிய கருவிகளைக் கொண்டு 
(மண்வெட்டி போன்றவை) மனித முயற்சியால் தோண்டப்படும் 
சுரங்கமே எலிவளைச் சுரங்கம் ஆகும்.

மாபெரும் நவீன எந்திரங்களைப் பயன்படுத்துவதில் தடங்கல்கள் 
ஏற்பட்டுவிட்ட நிலையில், மனித முயற்சியால் எலிவளைச் 
சுரங்கத் தொழிலாளர்கள் இடிபாடுகளின் ஊடே வழி ஏற்படுத்திக் 
கொண்டு சென்று மீட்புக் குழாய்களைப் பொருத்தினர்.
சிக்குண்ட 41 பேரும் இருந்த இடத்தை எலிவளை சுரங்கப் 
பணியாளர்கள் விரைவிலேயே அடைந்து விட்டனர். பொருத்தப்பட்ட 
குழாய்களின் வழியே அவர்கள் அனைவரும் நவம்பர் 28 மாலை 
ஏழு மணியளவில் வெளியே வரத் தொடங்கினர். 41 பேரையும் 
மீட்டெடுத்த எலிவளைச் சுரங்கப் பணியாளர்கள் கதாநாயகர்களாகப் போற்றப் பட்டனர். 17 நாள் அவலம் முடிவுக்கு வந்தது.

தேசிய சர்வதேச சுரங்க நிபுணர்கள் பலர் மீட்புக்குழுவிற்கு 
ஆலோசனை வழங்கினர்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத்துறை 
நிபுணர் பேராசிரியர் ஆர்னால்டு டிக்ஸ் (Prof Arnold Dix, underground 
tunnelling expert) சில்கியாரா களத்திற்கு வந்து மீட்புப் பணிகளை 
வழிநடத்தினார். சிக்குண்ட தொழிலாளர்கள் அனைவரையும் 
பாதுகாப்பாக மீட்டுத் தருவதாக அவர்களின் குடும்பத்தாருக்கு 
உறுதி அளித்திருந்தார் பேராசிரியர் டிப்ஸ். தாம் உறுதியளித்தபடியே 
அனைவரையும் மீட்டெடுத்த மீட்பர் ஆனார் ஆர்னால்டு டிக்ஸ்.   

41 பேரும் துளி சேதமின்றி முழுமையாகவும் பாதுகாப்பாகவும்
மீட்கப்பட்டது அறிவியலின் வெற்றி மட்டுமின்றி, மகத்துவம் மிக்க 
மானுடமுயற்சிகளின் உச்சபட்ச சாதனையும் ஆகும்.
******************************************************  
  

   

   

   
 

 
      






   
  




        


     
   
   





        



 




 
திரு பத்ம சிவ அசோகன் கவனத்திற்கு.
------------------------------------------------------------  
1) உபரி மதிப்பு என்பது மார்க்சியப் பொருளாதாரத்தின்
உயிர்நாடியான கருத்து. அது பற்றி ஒரு இழவும் 
தெரியாத நீங்கள், உங்களை எல்லாம் தெரிந்த 
ஏகாமபரமாகக் கருதிக் கொண்டு சுயஇன்பம் 
அனுபவிக்க இது இடம் அல்ல. நீங்கள் இப்படி 
நடந்து கொள்வது தொடர்ந்தால் உங்களை 
பிளாக்  செய்ய நேரிடும்.

2) பேதை கழாஅக்கால் பள்ளியுள்  வைத்தற்று 
என்பார் வள்ளுவர். உங்களின் இச்செயல் அது 
போன்றது.   
--------------------------------------------------------
65 vayathu aanavarkalukku

65 vayathu aanavarkalukku 

65 வயது ஆனவர்களுக்கான அறிவுரை!
--------------------------------------------------------------

(படித்ததில் பயனுள்ள ஒரு செய்தி!)


ஒரு இலக்கியப் படைப்பில் ஒரு செய்தி (message)
சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது 
நவீனத்துவ இலக்கியக் கொள்கை. இங்கு 
செய்தி என்பது படிப்பினை என்று பொருள்படும்.
மார்க்சிய இலக்கியங்கள் அனைத்தும் செய்தி 
(message) சொல்பவை. 

பின்நவீனத்துவம் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை.
ஒரு இலக்கியப் படைப்பில் எந்த ஒரு செய்தியும் 
சொல்லப்படத் தேவையில்லை என்பது 
பின்நவீனத்துவ இலக்கியக் கொள்கை.

எனது அபித குஜாம்பாள் கவிதையில் 
செய்தி (message) எதுவும் சொல்லப்படவில்லை.
கவிதையில் நாலு வரி எழுத ஆரம்பித்ததுமே 
ஏதேனும் ஒரு செய்தியை நோக்கி நமது 
எழுத்து குவியும். அவ்வாறு குவியும்போது,
அதைத்தடுத்து, செய்தி சொல்லப்பட்டு விடாமல் 
கவிதையை யாக்க வேண்டும். அப்படிச் 
செய்தால்தான் பின்நவீனத்துவக் கவிதையை 
யாக்க முடியும்.   அவ்வாறு யாக்கப்பட்ட 
பின்நவீனத்துவக் கவிதையே இது.