சனி, 7 செப்டம்பர், 2013

மக்கள் கருத்தே மகேசன் கருத்து !
---------------------------------------------------  
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன் புணர்ச்சி ( கற்பழிப் பு ) வழக்கில் 
கொடுங்குற்றவாளியான   ஒரு கயவன், இளங்குற்றவாளி (juvenile delinquent )
என்ற போர்வையில் 3 ஆண்டு சிறை என்ற சிராய்ப்புடன் தப்பி விட்டான். 
காவல் துறை அதிகாரிகள் இவன் போன்ற கயவர்களை  என்கவுண்டரில் 
கொல்ல   வேண்டும் என்று பொது மக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர் .
நல்ல கருத்து! வரவேற்கத் தக்க கருத்து .

global warming

carbon di oxide in atmosphere
--------------------------------  
the concentration of carbon di oxide in the atmosphere of earth
has reached the dangerous mark of 400 ppm ( part per million)
during the month of may 2013 ( exactly on may 9).

the safer limit is only 350 ppm.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

சனி, 14 ஜூலை, 2012

சனி, 4 பிப்ரவரி, 2012

கழுதை காமம் கத்தித் தீரும்!

ஸார்த்தர்
அல்தூசர்
ஃபூக்கோ
காஃப்கா
காமு
வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள்.

உதட்டுக் கங்குகளின் புகை
30 X 20 அரங்கை மூழ்கடிக்கிறது.

பிரகடனங்களின் ஓசை
100 டெசிபெல்லை எட்டுகிறது.

மேல் தாவணி துறந்த
அரிவை தெரிவைகளின்
மயிர் சிரைத்த
அல்குல்கள் வளர்கின்றன
கதையாடலின் உச்சத்தில்.

ஜட்டி அணிந்த மற்றும் அணிந்திராத
எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டுகள்
வழித்தெறிந்த சுக்கிலம்
குறுந்தொலைவில் நடந்து செல்லும்
ஒரு சர்ரியலிச ஓவியனின்
தூரிகையை நனைக்கிறது.

ரூபம் கொண்ட கூரை முகில்களின்
அட்சதை உதிரிப்பில்
குறிப்பான் - குறிப்பீடு
லிங்கமும் காயடிப்பும்
ஆசிரியனுக்குக் கருமாதி
இன்ன பிற.

விவாதத்தைத் தொடங்கி வைத்த கடவுள்
அமர்வு முடியுமுன்னே
இறந்து விடுகிறார்.

தரைச் சிதறலில்
பிளந்த மயிர்கள்
சொல் மீது வழுக்கி விழுந்த அர்த்தங்கள்
மற்றும்
எல்லையின்மையின் எல்லையின்மைகள்
சுப மங்களம்

--------------------------------------------------------------------------------------

தோடுடைய செவியன்களின் மெய்த்தேட்டம்

மார்க்சியம்
லெனினியம்
பெரியாரியம்
தலித்தியம்
பின் நவீனத்துவம்
முன் புராதனத்துவம்
அங்காடிப் பேழைகளில்.

போங்கடா மயரான்களா
என்று ஆரோகணிக்கின்றான்
நுகர்வியப் புரவி மீது
ஒற்றைக் கடுக்கன் அணிந்த
காண்ட்டம்ப்ரரி டமில் யூத்
தொடர்கின்றன மேலும் புரவிகள்.

--------------------------------------------------------------------------------------

கொடுப்பினை

கடக்கும் ஒவ்வொரு முறையும்
பூ வாங்கக் கூறுகிறாள்
அந்த இளம் பூக்காரி
விலைக் குறைவை உணர்த்தி
வற்புறுத்துகிறாள்
சூட்டுவதற்குக் கூந்தல்
இல்லாத துயரை
அவளிடம் எப்படிச் சொல்வேன்?

--------------------------------------------------------------------------------------

புலனடக்கம்


ஓசைகளும் உறைந்து விடும்
ஒரு பனிக்காலப் பின்னிரவில்
தொலைதூர நகரத்தின் விடுதி அறையில்
துணை பிரிந்த தனிமை வெடவெடக்க
விரகம் கொப்பளிக்கும் என் தேகம்
துயிலைத் துரத்தும்.

அல்குல்கள் வாடகைக்கு விடப்படும்
இடம் சேரும் வினைத்திட்பத்துடன்
தாழ் திறக்கையில்
தாள்கள் படபடத்துக்
கவனம் கலைக்கும்
மகாத்மா காந்தியின்
‘On Continence'.

--------------------------------------------------------------------------------------

மதமாற்றம்

பாளையங்கோட்டைச் சிறையில்
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கும்
ஆயுள் கைதி ஆறுமுகச்சாமி
இளைப்பாறுதல் வேண்டி
வேலூர்ச் சிறைக்கு
மாறி விட்டான்
ஆமென்.

--------------------------------------------------------------------------------------

சிற்றில் சிதைத்தல்

என் கரம் பற்றி நடக்கிறாய்
கடைத்தெரு வெங்கும்.

உரிமையுடன் கடிந்து கொள்கிறாய்.
அவ்வப்போது என் தோளில்
உன் பூங்கரம் பதிக்கிறாய்.

கட்டளை இடுகிறாய்
கொத்தடிமையாய்
உனக்குச் சேவகம் செய்வதில்
பெருமிதம் பொங்குகிறாய்.

பிச்சிப்பூ இரண்டு முகம்
வாங்க எத்தனிக்கையில்
பைத்தியமா உங்களுக்கு
ஒரு முழம் போதும் என்கிறாய்.

கச்சு
விளிம்புகளில் வெளித்தெரிவதை உணர்ந்து
ரவிக்கையைக் கீழே இழுத்து விடுமாறு
கிட்டத்தில் வந்து கிசுகிசுக்கிறாய்.

பிற ஆடவரின்
பொறாமை என் மீது படர
தூக்கலான அந்நியோந்நியத்துடன்
தொழிற்படுகிறாய்.

இவ்வளவு கொடுத்து வைத்தவனா நான்!
வியக்கிறேன்.

ஒரு மின்னல் பொழுதில்
குரூரமான யதார்த்தம்
யாவற்றையும் துடைத்தெறியக்
கனவு கலைகிறேன்.

--------------------------------------------------------------------------------------

வெள்ளி, 20 ஜனவரி, 2012

வழுவமைதி

பிம்பங்கள் திரையிட்டு மறைக்கும்
என் அந்தரங்கத்துள்
உன் தொடுகை குறித்த வேட்கை
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

ஜலதரங்கம் வெட்க
நடத்தலின் பொற்கணங்களில்
உன் கொலுசுகள் சிந்திய மகரந்தம்
என் உயிரின்
வறண்ட பாத்திகளில்
வசந்தத்தைத் துளிர்விக்கிறது.

நிசப்தத்தை ஆராதிக்கும்
பின் ஜாமப் பொழுதுகளில்
உன்னை அடையப் பெறாத
இழப்பின் பிரும்மாண்டம்
மலையாய்க் கனக்கிறது.

தோழி
நம்மிடையே முகிழ்த்திருக்கும் உறவு
சாத்திரத்தை மீறிய தென்று
ஏன் கலங்குகிறாய்?

போஜராஜனின் கைத்தலம் பற்றிய மீரா
கண்ணனிடம் தன்னை இழந்ததில்
அத்துமீறல் எதையும்
அறிவிக்கவில்லை சாத்திரம்.

நித்திய கல்யாணியாய்
பொழுதும் புதுப்பிக்கும் சமூகத்தின்
பரிணாமத்தில் தெறிக்கும் விழுமியங்கள்
துளிர்விடும் புதுமைக்கு
வாழ்வுரிமை வழங்கும்

ஆதலினால் தோழி, தேர்ச்சிகொள்
ஊமை வெயில் விலகட்டும்.


--------------------------------------------------------------------------------------

யாப்பென மொழிப யாப்பறி புலவர்

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------

அந்திமத்தின் வீழ்படிவு


இரண்டாம் ஜாமத்தின்
அமைதி கிழிபட
யாரும் வாகனம் ஒட்டவில்லை.

அகாலத்தில்
சாலையில் நடந்து செல்லும்
அந்நியனின் கரம் குலுக்கி
வோட்கா வாசனையுடன்
யாரும் நாக்குழறவில்லை.

பூட்டிய பள்ளியுள்
கம்ப ரசம் பரீட்சிக்கும்
கடவுள் தம்பதியரின்
தரிசனம் கோரி
வாசலில் யாரும்
வரிசை பூணவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டை
வாழவைக்கும் அபத்தங்கள்
தமிழ்ப் புத்தாண்டை அண்டவில்லை.

களத்திர ஸ்தானத்தில்
முருகனுக்கு இருவர் போல
தமிழனுக்கும் புத்தாண்டு இரண்டு.

எனினும் தமிழனின் சேவல்கள்
சித்திரையில் கூவுவதில்லை
தையிலும்

உற்பத்திப் பிரும்மாண்டத்தின்
கடிகார முள்ளாய்ச் சனவரியும்
பெருங்காயம் எஞ்சிய
அந்திமத்தின் வீழ்படிவாய்ச் சித்திரையும்

எனில்
கொள்ளுவதும் தள்ளுவதும் சரியே.

--------------------------------------------------------------------------------------

மயிலாப்பூர் மாமியின் மனோ வியாகுலங்கள்

திரட்டுப்பால் கிளறும்போது
அடி பிடித்து விடுவது

மெதுவாகவே
ஸ்கூட்டர் ஓட்டும் அத்திம்பேரால்
கல்லூரிப் பேருந்தை
அடிக்கடி மைத்ரேயி தவற விடுவது

ரங்கோலிப் போட்டியில்
மாட்டுப் பெண்ணின் கோலம்
ஒசத்தியாக இருந்தும்
நடுவராக வந்த
ஸ்டேட் வங்கி மேலாளர்
முதலிடம் தராமல் போனது

நேரலை நிகழ்ச்சியில்
பெப்சி உமாவுடன் பேசுகையில்
இணைப்பு அறுந்து விடுவது

பக்கத்து ஃபிளாட்டின்
மூடிய கதவையும் மீறிக்
கசியும் கருவாட்டு நாற்றம்
மாமாவின்
காயத்ரி உச்சாடனத்தின் மீது படர்வது

மயிலாப்பூர்க் கடைகளில்
அஜீரண மாத்திரையும் சிரப்பும்
சரிவரக் கிடைக்காமல் இருப்பது

மொத்தக் குலத்தின்
உச்சத் துயர்களாய்ப்
பட்டிய லிடுகிறாள் மாமி

ஒரு மின்னல் தெறிப்பில்
இரோம் ஷர்மிளா
என் நியூரான்களில் ஒளிர
அரிசினத்துடன் தீர்மானிக்கிறேன்
மாமியின் துயர்களுக்கு முடிவுகட்ட
மாமியை வன்புணர்வதன் மூலம்.

--------------------------------------------------------------------------------------