புதன், 2 செப்டம்பர், 2020

makkal yuththakkuzhuvil


மக்கள் யுத்தக்குழுவில் இருக்கும் வரை
மார்க்சிய லெனினியவாதியாகத்தான் இருந்தார்.
ஈழப் போராளிக் குழுக்களைப் பார்த்து,
தேசியஇன விடுதலையே பிரதானமானது
என்ற குட்டி முதலாளியச்  சேற்றுக்குள் வீழ்ந்தார்.

உடன் இருந்தவர்களைக் கொண்டு ஏற்கனவே
இதற்கு முன்பு சிறு அளவில் சில வங்கிக் கொள்ளைகளை
நடத்தி இருந்தார். பணம் கைநிறையக்
கிடைத்ததும் சிந்தனை மாற்றம் அடைந்தது.
சொகுசு வாழக்கையில் தஞ்சம் அடைய நேரிட்டது.
மக்கள் யுத்தக் குழு தியாகத்தையும் அர்ப்பணிப்பையும்
கோரியது. சொந்தமாக ஆரம்பித்த தனிக்கட்சி
சொகுசைத் தந்தது. விளைவு பெருத்த சீரழிவு.
  

ஜல்கான் மாவட்ட

1986 டிசம்பரில் அரசியல் சட்ட எரிப்பு என்பதற்காக
திமுகவின் 10 MLAகள் பி ஹெச் பாண்டியனால்
தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதவி இழந்தனர்.
இதற்கும் தமிழரசனுக்கும் தொடர்பில்லை. திமுக
அதிமுக போன்ற கட்சிகளின் பூசல்களை தமிழரசன்
ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. தமிழரசன்
அந்த அளவுக்கு இழிந்தவர் அல்லர்.

மார்க்சியம் பயங்கரவாதச் செயல்களை ஒருபோதும்
ஏற்பதில்லை. தமிழரசனின் அரியலூர் ரயில் கவிழ்ப்பு
என்பது குட்டி முதலாளிய பயங்கரவாத நடவடிக்கை. அது
ஒருபோதும் மார்க்சியச் செயல்பாடு ஆகாது.

அப்படியானால் கோவை குண்டு வெடிப்பு நடத்தி பலரைக்
கொன்ற அல்உம்மா பாட்சாவும் சரி, மும்பையில்
குண்டு வெடிப்பு நிகழ்த்தி விட்டு வெளிநாட்டுக்கு
ஓடிவிட்ட தாவூத் இப்ராஹிமும் புரட்சியாளர்கள்
என்று ஆகி விடும். தாவூத் இப்ராஹிமை புரட்சியாளர்
என்று மார்க்சியம் ஏற்பதில்லை.


தங்களின் இரண்டாவது பத்தி முற்றிலும் அபத்தம்.
CPM புரட்ச்சியை நடத்தும் என்றால், தாராளமாக எவர்
ஒருவரும் அங்கு சென்று சேரலாம். சபரீசனிடம்
கோடி கோடியாக வாங்கி புரட்சி நடத்துவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக