செவ்வாய், 8 செப்டம்பர், 2020

Sin 90, cos 90 விகிதங்கள் எப்படி மதிப்பைப்
பெறுகின்றன என்பது 10,11 வகுப்புகளின்
கணக்குப் பாடம். இதைப் புரிந்து படித்துத்தான்
12ஆம் வகுப்பு, பின் B.Sc, பின் M.Sc என்று
தேற முடியும். மனப்பாடக் கல்வி, கிளிப்பிள்ளைக்
கல்வி என்பதெல்லாம் கணிதத்தில் செல்லுபடி
ஆகாது. கொஞ்சமேனும் subject புரிந்தால்தான்
M.Sc வரை செல்ல முடியும். 

அடுத்து, நீங்கள் குறிப்பிடும் நபர் திரிகனாமெட்ரியை
நன்கு அறிந்திருக்கக் கூடும். ஆனால் சொல்லிக்
கொடுக்கத் தெரியாதவராக இருக்கக் கூடும்.

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
விரித்து உரையா தார்.
இத்திருக்குறளின் பொருளை அறியவும். 

நன்னூல் ஆசிரியர்களுக்கு இலக்கணம் வகுக்கிறது.
அது போல மாணவர்களுக்கும் இலக்கணம் வகுக்கிறது.
சிறந்த ஆசிரியர்கள், மோசமான ஆசிரியர்கள்
என்று வகை பிரித்துச் சொல்கிறது.
அதே போல மாணவர்களையும் தலை மாணாக்கன்,
இடை மாணாக்கன், கடை மாணாக்கன் என்று வகை
பிரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக