திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!!!---------------------------------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------
முழுசாக ஆறு  ஆண்டுகள் முடிந்து விட்டன.
2009, மே 17. இந்தக் கொலைகார நாளை
மறக்க முடியுமா?
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த அந்தக் கொடூரமான
படுகொலைகள் மானுட வரலாற்றில் இதுவரை
நடந்தது இல்லை.

**
வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு
சிங்கள ராணுவத்திடம் சரண் அடைவதற்காக

புலித்தலைவர்கள் நடேசன் தலைமையில் சென்றனர்.
நடேசன், பூலித்தேவன் இவர்களைத்  தொடர்ந்து
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரனும்
சென்றார். சரண் அடைந்த 300 புலித்தலைவர்களையும்
கோத்தபாய ராஜபக்ஷேவின் உத்தரவின்பேரில்
சரத் பொன்சேகாவின் ராணுவம் படுகொலை செய்தது.
**
மாவீரன் பிரபாகரன் படுகொலை செய்யப் பட்டார். 

அவர் வீர மரணம் அடைந்த  அந்த நாள் மே 17, 2009.
ஆனால், பிழைப்புவாதிகளான, போலி தமிழ்தேசியவாதிகள்
பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று
பொய் சொல்லிப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


1) நெடுமாறன்
2) வைகோ
3) சீமான்
4) கொளத்தூர் மணி
5) கோவை ராமகிருஷ்ணன்
6) திருமுருகன் காந்தி


இன்ன பிற போலிகள் மறைந்த மாவீரர் பிரபாகரனுக்கு
அஞ்சலி செலுத்துவது இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார் 

என்று பொய் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
**
சிங்கள அரசும் இந்திய அரசும் பிரபாகரன் இறந்து
விட்டார் என்று சொல்வதை நாம் ஏற்கவில்லை.
இந்தியா-இலங்கை தவிர்த்த சர்வதேசப்
பத்திரிகையாளர்கள், சேனல்-4 போன்ற சுயேச்சையான
பத்திரிகையாளர்கள், விக்கிலீக்ஸ் அமைப்புடன் தொடர்பு
உடைய சுதந்திரமான பத்திரிகையாளர்கள் ஆகிய
அனைவரும் பிரபாகரன் இறந்து விட்டதை அசைக்க
முடியாத ஆதாரத்துடன் உறுதி செய்து இருக்கிறார்கள்.

**
திருமாவளவன் உறுதி செய்கிறார்!
-------------------------------------------------------------
"நடேசன், பூலித்தேவனுடன் பிரபாகரனும் சரண் அடைந்தார்,
அதன் பின்னரே கொல்லப்பட்டார் " என்று தீவிரமான புலி 
ஆதரவாளரான ஒரு நண்பர் கூறியதாக ஒரு தகவலை 
தோழர் தொல் திருமாவளவன் ஜூனியர் விகடன் ஏட்டுக்கு 
அளித்த பெட்டியில் கூறி இருக்கிறார். 
(ஜூ.வி, டிசம்பர் 27, 2009)
**       
யதார்த்தத்தை, உண்மையை ஏற்றுக் கொள்வோம்.
ஈழ விடுதலைப் போரை மீண்டும் முன்னெடுப்போம்.
மாவீரர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.


****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக