புதன், 20 ஆகஸ்ட், 2014

 ஊருடன் பைக்கின் வேருடன் கெடும்!
சீமானுக்கும், கத்தி-புலிப்பார்வை திரைப்படங்களின்
தயாரிப்பாளர்களுக்கும்  எச்சரிக்கை!
----------------------------------------------------------------------------------
நடிகர் விஜய் நடிக்கும் கத்தி என்ற திரைப்படம் 
ராஜபக்சேயின் உறவினரால் தயாரிக்கப்பட்டது.
இது ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்துகிறது.
இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றங்களில் இருந்து 
ராஜபக்சேவைக் காப்பற்றும் நோக்கத்துடன் எடுக்கப் பட்டது.
இது போன்றதே புலிப்பார்வை என்ற திரைப்படமும்.
ராஜபக்சேவின் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 
சிறுவன் பாலச்சந்திரனை குழந்தைப்  போராளியாகச்
சித்தரித்து அதன் மூலம் அச்சிறுவனின் படுகொலையை 
நியாயப் படுத்துகிற படம் புலிப்பார்வை 

இவ்விரு படங்களுக்கும் தமிழகம் முழுவதும் பெரும்
எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவ்விரு படங்களையும் ஆதரித்து 
ராஜபக்சேவுக்கு முட்டுக்கொடுக்கும் துரோகி சீமானுக்கும் 
பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று, ஆகஸ்ட் 19, 2014 அன்று, 65 தமிழ் அமைப்புகள் 
ஒன்று கூடி இவ்விரு திரைப்படங்களுக்கும் கடும் 
எதிர்ப்பைத் தெரிவித்தன.செய்தியாளர் சந்திப்பு நடத்தப் பட்டது.
கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் 
தலைமையில் கூடிய 65 அமைப்புகளில் சிலவற்றை இங்கு 
குறிப்பிடுகிறோம்.
1) தனியரசு, சட்டப் பேரவை உறுப்பினர்
2) பேராசிரியர் ஜவஹரில்லா, ம.ம.க
3)விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக வன்னி அரசு
4)தியாகு 
5)கூடங்குளம் உதயகுமார் 
6)பெரியார் தி.க 

எட்டுக்கோடித் தமிழர்களைப் பகைத்துக் கொண்டு 
கத்தி, புலிப்பார்வை  ஆகிய இரண்டு திரைப்படங்களையும் 
யாரும் தமிழ் நாட்டில் திரையிட்டு விட முடியாது.
உலகின் எந்தப் பகுதியிலும் இவ்விரு படங்களையும்
தமிழர்களின் எதிர்ப்பை மீறி யாரும் வெளியிட்டு விட முடியாது.

தமிழ் இன எதிர்ப்பை மையமாகக் கொண்டு 
எடுக்கப்பட்ட இவ்விரு படங்களையும் ஆதரித்து 
நிற்பதன் மூலம் சீமான் ஒரு துரோகி என்பது 
அம்பலப்பட்டு விட்டது.

எட்டுக்கோடித் தமிழர்களையும் பகைத்துக் கொண்டு 
நிற்கும் சீமானே, ஊருடன் பைக்கின் வேருடன் கெடும் 
என்று எச்சரிக்கிறோம்.

************************************************************




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக