செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

புலனடக்கம்

--------------------------------------------- 
வீரை. பி. இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------
ஓசைகளும் உறைந்து விடும்
ஒரு பனிக்காலப் பின்னிரவில்
தொலைதூர நகரத்தின் விடுதி அறையில்
துணை பிரிந்த தனிமை வெடவெடக்க
விரகம் கொப்பளிக்கும் என் தேகம்
துயிலைத் துரத்தும்.

அல்குல்கள் வாடகைக்கு விடப்படும்
இடம் சேரும் வினைத்திட்பத்துடன்
தாழ் திறக்கையில்
தாள்கள் படபடத்துக்
கவனம் கலைக்கும்
மகாத்மா காந்தியின்
‘On Continence'.


*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக