புதன், 6 ஆகஸ்ட், 2014


பிருஷ்டமும் உண்டுகொல்!
---------------------------------------------------- 

வீரை. பி. இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------  
தோழி!

ஒளி விலகும் அந்தியில்
புலால் நாறும்
கடற்கரையின் மணற்பரப்பில்
நீயும் நானும்
ஒரு தீவிர விவாதத்தில்.

கருமமே கண்ணாக
உனது தேற்றங்களை
நிரல்பட நீ மொழிகிறாய்.

சில நியூட்டன்கள் விசையைச் செலுத்தி
உப்பங்காற்று
உன் முந்தானையை விலக்க
அபினிக் கனிகளின் புலப்பாட்டில்
நான் கிளர்ச்சியுறுகிறேன்.

உன் கறுப்பு நிறக் கச்சின்
வார் வழியே
வாத்சாயனர் வந்திறங்க
மறைகிறார்கள்
ஐன்ஸ்டினும் ஹெய்சன்பெர்க்கும்.

உன் பிருஷ்டத்தில் கைவைத்து
ஒட்டியிருக்கும் மணல் துகளைத்
தட்டிவிட
வேட்கை கொள்கிறேன்.

என்னை
ஒரு கனவானாக அங்கீகரித்து
ஆடை திருத்தாத
உன் அமைதியின் உந்துதலால்
மனதை மடைமாற்றி
ஒரு லேசர் கற்றை போல்
பாடு பொருளில்
கவனம் குவிகிறேன்.

என்றாலும்
என் மனவலிமைக்கு
நேர்ந்த பங்கம் குறித்து
நாணவில்லை நான்.

ஒவ்வொரு மார்புக்கும்
ஒரு பிருஷ்டம்
உண்டு என்பதால்.
----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக