செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஒரு புத்தகத்தைப் படித்து விட்டுத்தான் கருத்துச்
சொல்ல வேண்டும் என்று முன்நிபந்தனை விதிப்பது
கருத்தியல் வன்முறையாகும். படிக்காமலேயே
கருத்துச் சொல்வதுதான் தமிழ்நாட்டின் மரபாகவும்
நடைமுறையாகவும் இருக்கிறது. திருவள்ளுவர்
காலத்திலேயே, படிக்காமல் கருத்துச் சொல்லும்
ஆட்கள் இருந்து இருக்கிறார்கள்.
**
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல் 
என்ற குறளில் அவர்களை அம்பலப் படுத்துகிறார்
வள்ளுவர். இதிலிருந்து படிக்காமலேயே கருத்துச்
சொல்வதுதான் தமிழ்ச் சமூகத்தின் மரபு மற்றும்
நடைமுறை என்பது நிரூபிக்கப் படுகிறது.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக