புதன், 26 ஏப்ரல், 2017

120 ஆண்டுகளுக்கு முன்பு 1897இல் ஹெச் ஜி வெல்ஸ்
இந்த நாவலை எழுதினார். அறிவியல் புனைவு
(science fiction) என்ற சொல்லே அப்போது உலக இலக்கிய
அரங்கில் உருவாகி இருக்கவில்லை. மாறாக
science romance என்றுதான் அறிவியல் புனைவுகள்
அழைக்கப் பட்டன. The invisible man has visible retinas என்ற
assumption மீதுதான் புனைவு கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பதிவு தங்களைப் போன்ற ஓரிருவரைத்
தவிர எவராலும் சீந்தப் படவில்லை. சமூகம்
அந்த நிலையில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான
பேரைச் சென்றடையக்கூடும் இந்தப் பதிவு,
ஓரிருவரையேனும் இந்த நாவலைப் படிக்கத்
தூண்டக் கூடும் என்ற எண்ணமே இப்பதிவை
எழுதத் தூண்டியது. தங்களின் பின்னூட்டங்கள்
எமது நோக்கத்திற்கு வலு சேர்த்துள்ளன. பார்ப்போம்,
எவரேனும் வெல்சின் நாவலைப் படிக்கட்டும்.

போற்றுதலுக்கு உரியவர் ராமானுஜன். பெருங்கணித
மேதை. கணிதமேதை ஆய்லருடன் ஒப்பிடப்
படுபவர். எனினும் ஆய்லரையும் விஞ்சியவர்.
பை என்னும் எண்ணின் மதிப்பை பல கோடி
தசம இலக்கங்களுக்கு கண்டறிவதில் ராமானுஜனின்
கோட்பாடுகளே பயன்பட்டன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக