சனி, 1 ஏப்ரல், 2017

இந்தியாவிலேயே
மின்னணு வாக்களிக்கும் எந்திரத்தை
குறைகூறாத ஒரே கட்சி
திமுக மட்டுமே! கலைஞர் வாழ்க!

1) 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும்
திமுக தோற்றது. என்றாலும் இதற்குக் காரணம்
EVM எந்திரங்கள் என்று திமுக கூறவில்லை!

2) அண்மையில் 2016 சட்டமன்றத் தேர்தலிலும்
திமுக தோற்றது; ஆட்சி அமைக்க முடியவில்லை.
என்றாலும் கலைஞரோ தளபதியோ  EVM
எந்திரங்களைக் குறை கூறவில்லை.

3) அதற்கு முன்பு 2011 சட்டமன்றத் தேர்தலிலும்
திமுக தோற்றது. என்றாலும் EVM எந்திரங்களைக்
குறை கூறவில்லை.

4) திமுக அறிவியலை எதிர்க்கும் பிற்போக்கு
கட்சி அல்ல.

திமுகவின் நேர்மை!
---------------------------------------
தொடர்ந்து 2011 முதல் 2016 வரை எல்லாத் தேர்தல்களிலும்
தோல்வி அடைந்த நிலையிலும், தங்களின் தோல்விக்குக்
காரணம் மின்னணு எந்திரங்கள்தான் என்று திமுக
ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு சராசரி திமுக
மேடைப்பேச்சாளர் கூட அப்படி ஒரு குற்றச்சாட்டை
முன்வைத்தது இல்லை. இதுதான் உண்மை. இது
மட்டுமே உண்மை.

தேர்தல் தோல்வி!
மாயாவதி முலாயம் கட்சிகள்
பாஜகவுடன் போட்டி!
இந்துத்துவத்தை மேற்கொள்கின்றன. ஏற்றன

இதன் மூலம் ஒட்டு மொத்த உ.பி.யும்
இந்துத்துவ அரசியலை ஏற்றுக்கொண்டு
கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.

மொத்தத் தமிழ்நாட்டிலும்
திராவிட அரசியல்!
மொத்த உபியிலும்
இந்துத்துவ அரசியல்!
இதுவே இன்றைய உபி!

என் மகன் அகிலேஷைப்போல இந்த வாழ்க்கையில்
என்னை யாரும் அவமானப் படுத்தியது இல்லை!
முலாயம் புலம்பல்!


தேர்தல் தோல்விக்குப் பின், அகிலேஷின் சமாஜவாதி
கட்சியும், மாயாவதியின் பகுஜன் கட்சியும் பாஜவுக்குப்
போட்டியாக இந்துத்துவ அரசியலைக் கையில்
எடுத்துள்ளன.

தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாய் இருந்து கொண்டு
இருக்கிறார்கள். உபி என்பது வெறும் வடஇந்திய
மாநிலம் அல்ல. மாறாக இந்தியாவின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் இடத்தை உபி வகிக்கிறது. உபி
அரசியலைப் பற்றி எம்மைத் தவிர வேறு எவரும்
பேசுவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை
ஓட்டும் முட்டாள்களாக தமிழர்கள்!

மகாத்மா காந்தி படுகொலை என்பது ஒரு வரலாற்று
நிகழ்வு. இதில் அனுமானங்களுக்கு இடமில்லை.
ஆதாரங்களுக்கு மட்டுமே இடம் உண்டு."எந்த வழக்கிலும்
இவ்வளவு விரைவாக போலீஸ் FIRஐ எழுதாது"
என்பதெல்லாம் வெறும் வறட்டு அனுமானம். இதற்கு
என்ன ஆதாரம்? காந்தி கொலை 1948 இல். அன்றைய
காலத்தில் காவல் துரையின் வேலைப் பண்பாடு
(work culture) வேறு. அதை இன்றைய வேலைப்பண்பாட்டை
வைத்துக் கொண்டு நிர்ணயிக்க முடியாது. காந்தி கொலை
பற்றிய FIR எப்போது எழுதப்பட்டு இருக்கும் என்று
தாங்கள் கூற வருகிறீர்கள்? 1950இலா? இதன் மூலம்
தாங்கள் உணர்த்த விரும்புவது என்ன? எத்தகைய
குறிக்கோளும் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய்
புளித்ததோ என்று எதையாவது சொல்வதா?

மிஸ்டர் பூவண்ணன்,
உங்களின் வறட்டு அனுமானத்துக்குள் சிறைப்பட்டுக்
கொண்டு அதில் இருந்து வெளியேற மறுக்கிறீர்கள்.
உங்களின் கருத்தை (FIR உடனடியாக எழுதப்பட்டிருக்க
வாய்ப்பில்லை) நிரூபிக்க முயற்சி செய்யாமல், அதை
அனாதையாகச் செத்துப்போக விடுகிறீர்கள். எழுதப்பட்ட
FIRஐ ஏற்க இயலாது என்று கூறும் தாங்கள், எப்போதுதான்
FIR எழுதப்பட்டது என்று சொல்ல முன்வர வேண்டும்.
அதை நிரூபிக்க வேண்டும். மற்றப்படி, கோட்ஸே ஏன்
காந்தியைக் கொன்றார் என்பது பற்றி கோட்ஸேயே
வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அது
கொலையாளியின் வாக்குமூலம். எனவே மூன்றாம்
மனிதனின் வாக்குமூலம் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை
குத்திக் கொண்டிருந்தாரா இல்லையா என்ற ஒரு
விஷயத்தில் மட்டுமே எனக்கு அக்கறை. அதில்
தங்களால் ஏதாவது வெளிச்சம் பாய்ச்ச முடியுமானால்
 நல்லது. பயனில்சொல் பாராட்டுதலால் என்ன பயன்
விளையும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக