சனி, 29 ஏப்ரல், 2017

மறுபிறவி,
மரணத்திற்குப் பின் வாழ்க்கை
என்பதெல்லாம் பொய்!
இறந்தவுடன் எல்லாம் முடிந்து விடும்!
இதுவே அறிவியல்!

வாழும்போது உயிர்!
இறந்தபின் பிணம்!
பிணம் என்றால் உயிரற்ற பொருள்
(inanimate object). மண் மலை கரி போன்ற ஒரு உயிரற்ற
பொருளே பிணம்.  மறுபிறவி என்பதெல்லாம் கிடையாது.


நிரோத் எதற்கு? குழந்தை பிறப்பதை தவிர்க்கத்தான்!
தம்பதியர்  வேண்டும்போது குழந்தை பெற்றுக்
கொள்கின்றனர். அது போல நவீன மருத்துவ
வசதிகள் காரணமாக, மரணம் பலகாலம் தள்ளிப்
போடப் படுகிறது.

பேய் பிசாசு
செய்வினை பில்லி சூனியம்
ஜாதகம் ஜோசியம்
அனைத்தும் பொய்!
மோசடி! பித்தலாட்டம்!

கிரஹ பலம் ஏமி
கிரஹ பலம் ஏமி
ஸ்ரீ ராமானு க்ரஹ பலமே பலமு.
இது ஒரு தியாகராஜ கீர்த்தனையின் பல்லவி.
நிற்க. தியாகய்யர் போன்ற மகத்தான ராம பக்தரே 
கிரஹ பலம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை; எல்லாம்
ஸ்ரீ ராமனின் அனுக்ரஹம் மட்டும்தான் என்று
சொல்கிறார். இதன் பொருள் சோதிடம் என்பது
இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கது என்பதே.
மேலும் "சோதிடந்தனை இகழ்" என்கிறார் பாரதியார்
தமது ஆத்திசூடியில்.  





சொர்க்கம் நரகம்
எதுவும் இல்லை.
அவை இருக்கும் இடத்தை
காட்ட  முடியுமா?
சவாலுக்கு பதில் உண்டா? சவால்!

மறு சுழற்சி என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டே
இருக்கும் ஒன்று. இதன் அபத்தமானதும்
அசாத்தியமானதுமான திரிபுதான் மறுபிறப்பு.
அது வெறுமனே நம்பிக்கை சார்ந்த விஷயம்.
அதில் உண்மை கிடையாது. Faith has no logic.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் மனசுக்குள்
இருக்கின்றன என்றால் அதன் பொருள் சொர்க்கம்,
நரகம் என்பவை இல்லை என்பதுதான். அவற்றுக்கு
ஒரு பௌதிக இருப்பு (physical existence) உண்டா என்பதுதான்
கேள்வி. இல்லை என்பது அறிவியலின் பதில்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக