வியாழன், 22 நவம்பர், 2018

வெல்ல முடியாததா சாதி?
-------------------------------------------
1980களில் இந்தியாவின் தத்துவ அரங்கில் நுழைந்து
தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்நவீனத்துவம்
சாதி வெல்லற்கரியது என்ற கருத்தை முன்வைத்தது.
பின்நவீனத்துவத்தின் இந்தக் கருத்து குட்டி முதலாளியச்
சிந்தனையாளர்களை மட்டுமின்றி மார்க்சிய லெனினிய
நக்சல்பாரி சிந்தனையாளர்களும் பாதித்தது.

இவ்வாறு தன் மெய்யான வலிமையை விட ஆயிரம்
மடங்கு வலிமை மிக்க ராட்சசத் தன்மை வாய்ந்த
ஒன்றாக, வெல்லற்கரிய ஒன்றாக சாதியைக் கற்பித்தது
பின்நவீனத்துவம். இந்திய மக்களின் மீது பின்நவீனத்துவம்
தொடுத்த உளவியல் தாக்குதல் இது.  அனேகமாக இதற்கு இரையாகதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக