ஞாயிறு, 25 நவம்பர், 2018

சுவடுகள் அழிவதில்லை!
---------------------------------------------
ஏ எம் கே!
இந்தியப் புரட்சியின் வரலாறு இப்படி ஒரு
மகத்தான மானுடரைப் படைத்தளித்து உள்ளது.

தமிழ்நாட்டில் புரட்சியின் மூல ஊற்றாய்
மாபெரும் நக்சல்பாரி இயக்கத்தைக் 
கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பியாய்
மண் பயனுற வாழ்ந்து மறைந்த
மகத்தான மாமனிதர்
தோழர் ஏ எம் கே! 

அரை நூற்றாண்டு காலத் தலைமறைவு
வாழ்க்கையின் ஊடே இந்தியப் புரட்சிக்குப்
பாதை சமைத்து  யுகத்தின் மீது சுவடு பதித்த
மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்
தோழர் ஏ எம் கே!

மகத்தான
மார்க்சிய லெனினிய சிந்தனையாளராய் 
மார்க்சிய மூல ஆசான்களின் வரிசையில்
அடுத்து அமரும் அருகதை வாய்ந்தவர் 
தோழர் ஏ எம் கே!

வலது இடது திரிபுகளையும்
கலைப்புவாதத்தையும்
காலமெல்லாம் எதிர்த்துச் சமர் புரிந்து
மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைக் காத்த
மாபெரும் சமரன் எங்கள்
தோழர் ஏ எம் கே!

வசந்தத்தின் இடிமுழக்கம் வெடித்த காலத்தில்
புரட்சியை நேசிக்கும்
பல்லாயிரக் கணக்கான இளைஞர்களால்
வேறு எவருடைய  திருநாமமும்
இவ்வளவு ஆவேசத்துடன்
சுவீகரிக்கப் பட்டதில்லை
ஏ எம் கேயின் திருநாமம் தவிர!

போய்வா வீர நாயகனே!
இந்தியப்  புரட்சியின் நீண்ட பயணத்தில்
உன் பாதம் பதிந்த
சுவடுகள் அழிவதில்லை!
அவை என்றென்றும் எமக்கு ஆதர்சமாய்
புரட்சியை வென்றெடுங்கள் என்று
எங்கள் செவிகளில் ஓதிக்கொண்டே இருக்கும்!
********************************************************  
   






      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக