திங்கள், 12 நவம்பர், 2018

பித்துக்குளி மார்க்சிஸ்ட் தீக்கதிர் குமரேசனின்
பிதற்றல் மார்க்சியம் ஆகாது!
---------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் அல்லாதவர்களையம் கட்சியில் சேர்த்து,
பொறுப்பு வழங்கி அழகு பார்ப்பது என்ற கொள்கை
முடிவை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கிறது என்பது
அனைவரும் அறிந்ததே. அந்த வகையில்
Non Marxist quotaவில் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்க்கப்
பட்டவர் தீக்கதிர் குமரேசன்.

தன்னை எவரும் மார்க்சிஸ்ட் என்று நினைத்து
விடுவார்களோ என்று அஞ்சுபவர் தீக்கதிர் குமரேசன்.
எனவே தான் மார்க்சிஸ்ட் அல்ல என்று சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம் நிருபிப்பவர் குமரேசன்.

தற்போது அப்படி நிரூபித்துள்ளார் அவர். தான்
பங்கேற்றுள்ள ஒரு வாட்சப் குழுவில் குட்டி
முதலாளித்துவத் தன்மை வாய்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளார் குமரேசன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்று ஒரு விவாதத்தை
எழுப்பி, சாதி என்பது பொருள்முதல்வாதமே
என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் குமரேசன். அவருக்கு
மிகுந்த மனநிறைவைக் கொடுத்த விவாதம் இது.
இனி ஒரு பயலும் தன்னை மார்க்சிஸ்ட் என்று
கருத முடியாது என்று பரம திருப்தியில் இருக்கிறார்
மனுஷன்.

சாதி என்பது பொருள்முதல்வாதமா அல்லது
கருத்துமுதல்வாதமா என்ற கேள்வியே அடிப்படையில்
தவறானது. மிகுந்த அபத்தமானது.

தண்ணீர் என்பது முக்கோண வடிவமா அல்லது
சதுர வடிவமா என்பது போன்ற அபத்தம் இது.
சாதி என்பது ஒரு கருத்தியல் கட்டுமானம். அதாவது
சமூகக் கட்டுமானம் (social structure). சாதிக்கு எவ்விதமான
பௌதிக இருப்பும் கிடையாது (No physical existence).

சென்னை அண்ணாசாலையில் 14 மாடி எல் ஐ சி
கட்டிடம் உள்ளது. இது ஒரு பௌதிகக் கட்டுமானம்.
இதற்கு ஒரு பௌதிக இருப்பு (physical existence)  உண்டு,
இதை போன்றதல்ல சாதி என்னும் கட்டுமானம்.
அது மனித சிந்தனையில் மட்டுமே இருக்கும் ஒன்று.

சாதி என்பது ஒரு பொருள் என்றால், அதாவது
பொருளாயுதத் தன்மை உடைய பொருள் என்றால்,
சாதியை ஒருபோதும் அழிக்க முடியாது. ஏனெனில்
பொருளின் அழியாமை விதி (Law of conservation of mass)
பற்றிக் கூறும் அறிவியல் பொருளை ஒருபோதும்
அழிக்க முடியாது என்று கூறுகிறது.

அப்படியானால், சாதியை ஒருபோதும் ஒழிக்க
முடியாது என்று சொல்ல வருகிறாரா குமரேசன்?
அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகலாமே!
பொருள்முதல்வாதம் என்று சொல்லி சுற்றி
வளைத்து மூக்கைத் தொடுவானேன்?

ஒரு சிந்தனாரீதியான கட்டுமானத்தை, பௌதிக ரீதியான
கட்டுமானம் என்று பிறழ உணர்வது எப்பேர்ப்பட்ட
அபத்தம்? தீக்கதிர்  பத்திரிக்கை ஆசிரியரின்
மார்க்சியப் புரிதல் இப்படித்தான் இருக்குமெனில்
மார்க்சிஸ்ட் கட்சியை யார்தான் காப்பாற்ற முடியும்?

கடவுள் இல்லை என்று ஏன் கூறுகிறோம்? கடவுளுக்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை (God does not exist physically)
என்பதால்தானே! அதைப் போன்றதுதானே சாதியும்.
சாதிக்கு ஏது பௌதிக இருப்பு? ஏதேனும் ஒன்றை
பொருள் என்று வரையறுத்தால், அதற்கு ஒரு
நிலையிடம் (position) இருக்க வேண்டும். நிறை (mass)
உள்ளிட்ட பொருளின் பண்புகளில் பலவற்றை அது  
கொண்டிருக்க வேண்டும். மிக நுண்ணிய
எலக்ட்ரானுக்குக் கூட பிரபஞ்ச வெளியில் (space)     
ஒரு நிலையிடம் உண்டு.

கடவுளுக்கு பௌதிக இருப்பு இல்லை என்பதால்
கடவுள் என்பது கருத்தியல் கட்டுமானம் என்று சரியான
முடிவுக்கு வரும் குமரேசன், அதே தர்க்கம் சாதிக்கும் 
பொருந்தும் என்று உணர மறுக்கிறார். கடவுளைப்  போலவே சாதிக்கும் பௌதிக இருப்பு இல்லை என்பதால்,
சாதியும் கருத்தியல் வகைமையில்தானே வரும்!
ஆனால் குமரேசனோ "தலைக்கு ஒரு சீயக்காய்,
தாடிக்கு ஒரு சீயக்காய்" என்பதுபோல் தர்க்கப்
பொருத்தமற்று வாதம் செய்கிறார்.

சாதி இந்தப் பிரபஞ்சத்தில் எந்த இடத்தில்  இருக்கிறது?
அதன் நிலையிடம் (position) என்ன? குமரேசன் சொல்வாரா?
ஒரு கருத்தியல் கட்டுமானத்தை பொருள் என்று
நாக்கூசாமல் சொல்வது எப்பேர்ப்பட்ட தற்குறித்தனம்? 
படுகோமாளித்தனமாக ஒரு கருத்தைச்
சொல்லுகிறோமே, ஊரார் கைகொட்டிச் சிரிக்க
மாட்டார்களா என்ற ஓர்மை கூட இல்லாமல்,
சாதி என்பது பொருள்முதல்வாதம்
என்கிறாரே குமரேசன்!             

தீக்கதிரையும் குமரேசனையும் அவர் வணங்கும்
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!
*****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக