திங்கள், 26 நவம்பர், 2018

முல்லையும் பூத்தியோ!
------------------------------------------
இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க்  கடந்த
கோதண்ட ராமன் மறைந்த பின்னால்
முல்லையும் பூத்தியோ தண்டமிழ் நாட்டே. 

மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்
தோழர் ஏ எம் கே மறைந்தார்! எனினும்
புரட்சியாளர் நெஞ்சங்களில் வாழ்கிறார்!
விண்ணதிரும் வீரவணக்க முழக்கங்களுடன்
இந்தியப் புரட்சியின் நாயகனுக்கு
விடை கொடுப்போம்!
***************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக