புதன், 13 மே, 2020

(2) வசுமித்ர எந்த நேரமும் கொலை செய்யப் படலாம்!
தொடரின் (அம்பேத்கர்/அவமதிப்பு/வசுமித்ர) 2ஆம் கட்டுரை!
----------------------------------------------------------------------------------
"அவதூறாக எழுதி விட்டாராம் வசுமித்ர! கேஸ் போட்டு
விட்டார்கள்" என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தபோது
மார்க்சைப் பற்றியோ, லெனினைப் பற்றியோ பக்குவம்
இல்லாமல் ஏதோ உளறி, மாட்டிக் கொண்டு விட்டார்
வசுமித்ர என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

கொஞ்ச நேரத்திலேயே அப்படி இல்லை என்று தெரிய
வந்தது. மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரையோ (மார்க்ஸ்,
எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ), இந்தியாவின்
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் (CPI, CPM,CPI ML)
எவரையுமோ வசுமித்ர குறிப்பிடவில்லை என்று
தெரிய வந்தது.

தலைவர்கள் என்றால் இரண்டே இரண்டு வகைதான்!
1. கம்யூனிஸ்ட் தலைவர்கள்                                         
(அதாவது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள்).
2. பூர்ஷ்வா  தலைவர்கள்
அதாவது ஆளும் வர்க்கத் தலைவர்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்களை வசுமித்ர அவதூறு
செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகி விட்டதால்,
ஆளும் வர்க்கத் தலைவர்களைத்தான் அவர் அவதூறு
செய்திருக்க வேண்டும். இதுதான் தவிர்க்க இயலாத தர்க்கம்.
(வசுமித்ர அவதூறு செய்தார் என்பது purely for the sake of argument)
எனவே எவரோ ஒரு ஆளும் வர்க்கத் தலைவரை அவதூறு
செய்து விட்டதாக வசுமித்ர மீது Libel suit போடப்பட்டிருக்க
வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் Libel suit அல்ல, SC-ST வன்கொடுமைத் தடுப்புச்
சட்டமே வசுமித்ரவுக்கு எதிராகப் பிரயோகிக்கப் பட்டு
விட்டது என்றும், அம்பேத்கருக்கு வசுமித்ர வன்கொடுமை
இழைத்து விட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுவிட்டது என்றும்
அறிந்தோம்; அதிர்ந்தோம்.

வன்கொடுமைச் சட்டத்திற்குப் பதில், வசுமித்ர மீது
மார்க்சிஸ்ட் கட்சியானது அவதூறு வழக்கு (Libel suit)
தொடுத்திருக்கலாம். இது உலகியல் முறைமையோடு
பொருந்தி நிற்கும். இதை சமூகம் ஏற்கும். இதில்
abnormality எதுவும் இல்லை என்று பொதுச் சமூகம் அறியும்.

ஆனால் உலகியலை ஏற்க மறுத்து, அவதூறு வழக்கின்
இடத்தில் வன்கொடுமைச் சட்டத்தை வைக்கிறது
மார்க்சிஸ்ட் கட்சி. துலாபாரத்தில் 5 கிராம் எடை
வைத்தால் போதும் என்கிற இடத்தில், 5 மெட்ரிக் டன்
எடையை வைப்பது போன்றது இது.

வன்கொடுமைச் சட்டத்தால் மட்டுமே வசுமித்ர
இழைத்தாகக் கூறப்படும் தவறுக்குத் தீர்வு காண முடியும்
என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதவில்லை என்பதை
நானறிவேன். இங்கு அம்பேத்கரோ வன்கொடுமையோ
மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பிரச்சினை அல்ல. பிரச்சினை
வசுமித்ர என்கிற தனிநபர்தான். வன்கொடுமைச்
சட்டத்தில் வழக்கு என்பதெல்லாம் தனி மனித வன்மத்தின்
வெளிப்பாடுதான்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
(குறள்: 637, அதிகாரம்: அமைச்சு).

செயல்களைச் செய்வதற்கான புதுப்புது வழிமுறைகளை
நூலறிவால்  ஒருவன் பெற்றிருந்தாலும், உலகத்து
மாந்தரின் இயற்கை நியதி என்ன என்பதை அறிந்து,
அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
(வீரை பி இளஞ்சேட்சென்னி உரை).

"The punishment should commensurate with the gravity of the offence"
என்பது சட்டத்தின் ஒரு முக்கிய அம்சம். மார்க்சிஸ்ட்
கட்சியின் வழக்கறிஞர்கள் இந்த அம்சத்தைத்
தங்களின் தலைமைக்கு எடுத்துச் சொல்வார்கள்
என்று நம்புகிறேன். சிவப்பு விளக்கு எரியும்போது
சாலையைக் கடந்தவன்  பாரிய குற்றத்தை இழைத்து
விட்டான் என்று கருதி அவனுக்கு ஆயுள் தண்டனை
வழங்க முடியாது.

அம்பேத்கர் மீதான மார்க்சிஸ்ட் கட்சியின் அபரிமிதமான
மரியாதை போலித்தனமானது. இந்தியாவில் உள்ள
கட்சிகளிலேயே அம்பேத்கரை அதிகபட்சமாக இழிவு
படுத்தும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான். பட்டியல்
இனத்தவரின் பிரதிநித்துவம் ஒவ்வொரு இடத்திலும்
இருக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின்
நோக்கம்.

முறைப்படி மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடுகளை
நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பிடம்
பெறும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால் இதுவரை
நடந்த மாநாடுகளில், மத்தியக் கமிட்டியிலோ பொலிட்
பீரோவிலோ ஒரு பட்டியல் இனத்தவருக்குக் கூட இடம்
கொடுக்காத மார்க்சிஸ்ட் கட்சியை விட, அம்பேத்கருக்கு
வன்கொடுமையை யார் இழைத்து விட முடியும்?

பங்காரு லட்சுமணன், டாக்டர் கிருபாநிதி என்று கட்சித்
தலைமையிலும், ராம்நாத் கோவிந்த் என்று அரசுத்
தலைமையிலும் இந்துத்துவ பார்ப்பனீய சங்கிகளான
பாஜக கட்சியினரே பட்டியல் சாதியினருக்குப் பிரதிநித்துவம் கொடுக்கும்போது, இன்னும் எத்தனை
காலம்தான், பட்டியல் இனத்தவரை மார்க்சிஸ்ட் கட்சி
ஏமாற்றும்?

1) வசுமித்ர எழுதிய அந்த ஒற்றை வாக்கியம்
அம்பேத்கருக்கு வன்கொடுமை இழைக்கிறதா?
 .........................அல்லது...........................
2) 1920ல் ரஷ்யாவின் தாஷ்கண்டில் தொடங்கப்பட்டு,
நூறாண்டு வரலாற்றைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி
இதுவரை ஒரே ஒரு தலித்துக்குக் கூட மத்தியக்
கமிட்டித் தலைமையில் இடமளிக்காமல் மொத்த
தலித்துகளுக்கும் வன்கொடுமை இழைக்கிறதா?
*********************************************************
முக்கிய குறிப்பு:
வசுமித்ர எந்த நேரமும் மார்க்சிஸ்ட் குண்டர்களால்
கொலை செய்யப் படலாம் என்று கருதுகிறேன்.
இதற்கான நிகழ்தகவு = 0.65 என்று கணக்கிட்டுள்ளேன்.

இதுவே கேரளவாக இருந்தால், இந்நேரத்துக்குள்
வசுமித்ர கொலை செய்யப்பட்டு இருப்பார்.
தமிழ்நாடாக இருப்பதால் வசுமித்ர உயிருடன்
இருக்கிறார்.

தனக்கு விடுக்கப் பட்ட கொலை மிரட்டல் குறித்து
மெத்தனம் காட்டாமல், போலீஸ் கமிஷனரை நேரில்
சந்தித்து புகார் அளிப்பதே அறிவுடைமை என்று வசுமித்ர
உணரா வேண்டும். எதிரி சட்டப்படி காய் நகர்த்தும்போது
நாமும் சட்டப்படி நடந்து, நமக்குரிய பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும். இது குறித்த தகுந்த IQ
உடையவர்களை வசுமித்ர கலந்தாலோசிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
தொடரும்
-------------------------------------------------------------------------------------
கட்டுரை ஆக்கம்:
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
****************************************************   

                       (வசுமித்ர அவதூறு செய்தார் என்பது purely for the sake of argument)

         





பெ மணியரசன் அறிக்கை!
--------------------------------------------
கொளத்தூர் மணியும், சுப.வீ.யும்
பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?
- பெ. மணியரசன் அடுக்கடுக்கான கேள்விகள்
------------------------------------
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த “வரனே அவசியமுண்டே” என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் வைத்து அழைத்தது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்று, தமிழின உணர்வாளர்கள் வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே ஏராளமான மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகளைக் கேரளத் திரைப்பட இயக்குநர்களும் கதை ஆசிரியர்களும் கதாநாயகர்களும் திட்டமிட்டுச் சேர்த்துள்ளார்கள் என்பதை எழுத்தாளர் சாம்ராஜ் உட்பட பலர் வரிசையாகப் பட்டியலிட்டார்கள்.
தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான இனச் சிக்கலாகப் பேசப்பட்ட – இந்த விவாதம், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், தி.மு.க.விற்கும் இடையிலான சிக்கலாக மாறிப் போனது ஏன்?
தி.மு.க. தரப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கலைஞர் கருணாநிதி மட்டும் தலைவரல்லர், தமிழின அழிப்பு வெறியர்களான இராசபட்சே, கோத்தபய கூடத் தலைவர்கள்தாம் போல – என்று கருதும் அளவிற்கு, பிரபாகரன் மீது மிகமிகக் கொச்சையான, குரூரமான, வன்மமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
தி.மு.க. தரப்பினர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து இழிவாகவும், கீழ்த்தரமாகவும் வலைத்தளங்களில் பரப்பிய அவதூறுகளை கண்டிப்பதற்கு மாறாக, அதை இப்போது தேவையில்லை என்று சாதாரணப்படுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி. பேராசிரியர் சுப.வீ. விடுத்த இரண்டாவது அறிக்கையில் (11.05.2020) மேற்படி இழிவுகள் மற்றும் அவதூறுகளுக்கு பின்னால் உள்ள ஞாயங்களை எடுத்துக் கூறுகிறார். விடுதலைப் புலிகள் மீது இராசபட்சே கும்பல் என்னென்ன குற்றச்சாட்டுகள் சொன்னதோ, அவை அனைத்தையும் தி.மு.க. தரப்பினர் அடுக்கினார்கள்.
- முதல் முதலாக 1983இல் சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதால்தான் சிங்களர்கள் 1983 சூலை படுகொலை நிகழ்ச்சிகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
- முசுலிம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள், வெளியேற்றினார்கள்.
- சிறீ சபாரத்தினத்தையும் டெலோ போராளிகளையும் கொன்றார்கள்.
- ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவையும் அவருடன் இருந்தோரையும் கொன்றார்கள்.
இன்னும், இன்னும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீதும் குறிப்பாகப் பிரபாகரன் மீதும் தி.மு.க. தரப்பினர் சுமத்தினார்கள்.
சிங்களப் படையாட்கள் 13 பேரை ஈழத்தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதைக் குற்றமாகச் சொல்கிறார்கள்! ஏன் புலிகள் அவர்களைக் கொன்றார்கள்?
1956லிருந்து தமிழீழத் தமிழர்களை சிங்களப் படையாட்களும் காவல்துறையினரும் தொடர்ந்து சுட்டுக் கொன்றார்கள். தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொண்டு பின் சுட்டுக் கொன்றார்கள்.
இவற்றையெல்லாம் மக்கள் திரள் போராட்டம் நடத்திய தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களும், அமிர்தலிங்கம் அவர்களும் பட்டியலிட்டுள்ளார்கள்.
தமிழர்களின் சனநாயக உரிமைகளை மட்டுமின்றி, மனித உரிமைகளையும் பறித்த சிங்களக் காடையர்களையும் சிங்களப் படையாட்களையும் எதிர்கொள்வதற்காக தம்பி பிரபாகரன் அவர்களுக்கு முன்பாகவே தமிழர் தற்காப்பு ஆயுதக் குழுக்கள் உருவாயின. ஆயுதப் போராளி பொன். சிவக்குமரன் சிங்களப் படையாட்களிடம் பிடிபட்டபோது, நச்சுக் குப்பி கடித்து உயிரீகம் செய்தார். எதிரியிடம் சிக்கினால் நச்சுக் குப்பி கடித்து சாக வேண்டும் என்ற போர் முறை கூட தம்பி பிரபாகரனுக்கு முன்பாக ஈழத்தமிழர்களிடம் உருவானதுதான்!
டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் என்ற ஈழத்தமிழர் படை அமைப்புகள் எதற்காக உருவாயின? தமிழர்களை அழிக்கும் சிங்கள இராணுவத்தையும் காவல் துறையினரையும் எதிர்த்துக் கொல்வதற்குத்தானே!
தமிழீழப் பகுதியில் தமிழர்களைத் தாக்கிய சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றது என்ன குற்றம்?
“அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு” என்று முழங்கிவிட்டு, தில்லி ஏகாதிபத்தியத்தின் திராவிட முகமையாக மாறிப் போன தி.மு.க. போல் புலிகள் செயல்படாதது குற்றமா?
தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி என்று முழங்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றும் உரிமையை நான்தான் வாங்கினேன் என்று மார்தட்டியது போன்ற கருணாநிதியின் சற்சூத்திர “சாதனைப் பட்டியல்” புலிகளிடம் இல்லைதான்!
இந்திரா காந்தி ஆட்சி, இந்தியாவில் தமிழீழ ஆயுதப் படை அணிகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தபோதே, அந்த அமைப்புகளைத் தனது கையடக்கக் குழுக்களாக வைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. இந்திய அரசு விரும்பும் அளவிற்கு மட்டும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைப்புகளாக அவை செயல்பட வேண்டும் என்பதே இந்திரா காந்தியின் திட்டம். சில அமைப்புகள் அவ்வாறு இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டன.
இந்திய அரசுக்கு மட்டுமின்றி, தி.மு.க.விற்கும் வேண்டிய அமைப்பாக டெலோ மாறிப் போனது. இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் கட்டுப்படாத ஈழ விடுதலை அமைப்பாக செயல்பட்டது புலிகள் அமைப்பு!
இந்தியப் பயிற்சிக்குப் பின் நாடு திரும்பிய டெலோ படையினர் பல தடவை புலிகளைத் தாக்கினர்; படுகொலை செய்தனர். விடுதலைப்புலிகள் முகாம் ஒன்றைத் தாக்கிப் புலி வீரர்கள் பலரைக் கொன்றார்கள். இதற்கான எதிர்வினையாகத்தான் விடுதலைப்புலிகள் டெலோவின் தலைமை முகாமைத் தாக்கி அழித்தனர்.
தி.மு.க. தரப்பினர், “பிரபாகரன் படையினர் டெலோவைத் தாக்கி அழித்தார்கள்; அதன் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொன்றார்கள்” என்று ஒருபக்க நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டுவது நேர்மையா?
அமைதிப்படை என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக - ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் படையை ஏவினார் இராசீவ் காந்தி! இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இந்தியப் படை கொன்றது. சிங்களப் படையாட்கள் செய்ததைப் போலவே இந்தியப் படையாட்கள் ஈழத்தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப். இந்தியப் படையை வரவேற்றது. இந்தியப் படைக்குத் துணையாகச் செயல்பட்டது. விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டி, அவர்களை இந்தியப் படையாட்கள் சுட்டுக் கொல்ல உதவியது. இதற்கு எதிர்வினையாக சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். முகாமைத் தாக்கி, அதன் தலைவர் பத்மநாபா உள்ளிட்டோரை புலிகள் கொன்றார்கள்.
இந்த வரலாறெல்லாம் என்னைவிடத் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்குக் கூடுதலாகத் தெரியும்; துல்லியமாகத் தெரியும்! பல கருத்தரங்குகளில் பொதுக்கூட்டங்களில் இவற்றையெல்லாம் விலாவாரியாகப் பேசியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்குத் தம் சொந்த ஊரில் - சொந்த நிலத்தில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்தவர் தோழர் கொளத்தூர் மணி! பல உதவிகள் செய்தவர். அதற்காகப் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அதிகம் சிறை சென்றிருப்பார் என நினைக்கிறேன்.
2008 நவம்பர் மாதம் சிங்களப் படை மிகக் கடுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வானத்திலிருந்து கொத்துக் குண்டுகள் போட்டுக் கொல்கிறது. புலிகளும் பொது மக்களும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள்.
இதைக் கண்டித்து ஈரோட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) பொதுக்கூட்டம் போட்டது. அதில் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி மற்றும் நான் மூவரும் பேசினோம். மூன்று பேரையும் கோவை நடுவண் சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி! இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறைகளில்தாம் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம்! 32 நாட்கள் மட்டுமே! பிணையில் வெளி வந்தோம்! மற்றொரு வழக்கில், பல மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தவர் தோழர் மணி!
அத்தனையையும் பொக்கென்று போட்டு உடைத்து விட்டார் தோழர் கொளத்தூர் மணி.
பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர் மட்டும் அல்லர்; ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அடையாளம்! சேர சோழ பாண்டியர் வீரம் பற்றி நாம் பேசுவது ஆரியப் புராணக்கதைகளைப் போன்றதன்று! தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் என்பதற்குச் சமகாலச் சான்று பிரபாகரன் - புலிப்படைப் போராளிகள் - தமிழீழத் தமிழர்கள்!
அப்படிப்பட்ட பிரபாகரனை, மலையாளத் திரைப்படத்தில் நாயோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியதை ஆதரித்துத் தமிழ்நாட்டுத் தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் எழுதியதையும், இவர்கள் கட்டுக்கதைகளை கற்பித்துக் கொண்டு பிரபாகரனை இழிவுபடுத்தியதையும் ஒற்றை வரியில் கண்டிக்கத் தோழர் கொளத்தூர் மணிக்கு மனம் பாயவில்லை!
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பாரும் (தமிழ்த்தேசியத் தரப்பினரும், தி.மு.க. தரப்பினரும்) தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி, இரு தரப்பையும் சமப்படுத்துகிறார் தோழர் மணி.
பிரபாகரனால்தான் ஈழத்தமிழர்கள் அழிந்தார்கள், பிரபாகரன் ஒரு வன்முறை அராஜகவாதி என்று தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் அவதூறு செய்தது தோழர் மணியின் மனத்தில் வலியை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே தோழர் மணி வர்ணித்து வந்த கருணாநிதியின் இனத்துரோகங்களை இப்போது, தமிழின இளைஞர்கள் வரிசைப்படுத்தும்போது அவருக்கு வலிக்கிறது. திராவிடப் பாசம், தமிழினத்திற்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறதோ?
திராவிடப் பாசம் மட்டுமல்ல, புதிதாகப் பாரதப் பாசமும் தோழர் மணியைப் பற்றிக் கொண்டுவிட்டது!
“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது, இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது - என்பது ஒரு காரணம்”.
“பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரையும், பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சரையும், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியாகச் செல்ல இருந்த முன்னாள் சுவீடன் பிரதமரையும் உள்ளே நுழைய மறுத்து இலங்கை அரசு போரை நடத்தியது” என்றும் தோழர் மணி கூறுகிறார்.
மேற்கத்திய வல்லரசுகள் நடத்தும் இப்போரில் மேற்கத்திய நாடுகள் அனுப்பிய வெளியுறவு அமைச்சர்களை இலங்கை அரசால் எப்படித் தடுக்க முடியும்? தோழர் மணியின் தருக்கத்தில் தன் முரண்பாடு ஏன்? யாருடைய பின்பலத்தில் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட குட்டித் தீவான இலங்கைக்கு இத்துணிச்சல் வந்தது? இந்தியா தந்த துணிச்சல்!
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் மீது தமிழ் ஈழத்தின் மீது தனிப்பட்ட பகை உணர்ச்சி ஏதுமில்லை! இந்நாடுகளின் இராணுவக் கூட்டணியில் சிங்கள இலங்கை இல்லை! இலங்கை இரண்டாகப் பிரியாமல் தடுக்கும் தனி அக்கறை மேற்கத்திய நாடுகளுக்கு இல்லை.
இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில், இந்தியத் துணைக் கண்டத்தில் சீன ஆதிக்கத்தைத் தடுக்கும் தேவை மேற்கத்திய வல்லரசுகளுக்கு உண்டு. அதற்கு இந்தியாவின் துணையை அவை நாடுகின்றன.
ஆரிய அதிகாரத் தலைமையில் உள்ள இந்தியா தமிழினத்தைத் தனது வரலாற்றுப் பகை இனமாகப் பார்க்கிறது. இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி இல்லை என்றாலும், தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூடுதலான இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு!
சங்க காலத்திலிருந்து ஆரியத்தை எதிர்த்து வருபவர்கள் தமிழர்கள்; சமற்கிருதத்தைத் தேவமொழி என்று ஏற்காதவர்கள். ஆன்மிகத்திலும் இருபதாம் நூற்றாண்டு அரசியலிலும் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு விடுதலை கோரியவர்கள். இப்பொழுதும அனைத்திந்தியக்கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. எனவே, தமிழர்களைப் பகைவர்கள் போல் பார்ப்பதும், பழிவாங்குவதும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வழக்கம்!
ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகவே வெளிநாட்டுக் கொள்கை இருக்கும். இந்தியாவில் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்திருப்போர், அண்டை நாட்டில் தமிழர்கள் தனிநாடு கோருவதை ஆதரிப்பார்களா? அதிலும், “ஆரிய இனத்தைச்” சேர்ந்த சிங்களர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்கள் தனி ஈழம் அமைப்பதை ஏற்பார்களா?
நான் ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலேயே எழுதியதைத் திரும்பச் சொல்கிறேன்: “ஒரு வேளை சிங்களர்கள் தனி ஈழத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்திய ஆளும் வர்க்கம் தனி ஈழத்தை ஏற்காது!”.
இந்திய அரசுதான் மேற்கத்திய நாடுகள் உட்பட பல அயல்நாடுகளிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்களர்களின் போருக்கு ஆதரவு திரட்டித் தந்தது. இந்திய அரசின் வற்புறுத்தலால் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகள் ஈழ விடுதலைப் போரை எதிர்த்தன.
தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு போர் நகர்வையும் இந்திய அரசின் அறிவுரையோடும் ஒப்புதலோடும்தான் சிங்கள அரசு முன்னெடுத்தது.
2008-இல் சிங்கள அரசு தொடங்கிய இறுதிப் போர்க்கு முன்பாக 2008 மார்ச்சு மாதம் இலங்கைப் படைத்தளபதி சரத் பொன்சேகா புதுதில்லி வந்து, அமைதி உடன்படிக்கையை மீறி போர் தொடங்குவதற்கு இந்திய அரசிடம் ஒப்புதலும் உதவியும் பெற்றுச் சென்றார். அப்போது பொன்சேகா மூன்று கோரிக்கைகளை இந்திய அரசிடம் வைத்தார்.
1. வரும் சூன் மாதம் (2008) விடுதலைப்புலிகள் வசம் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற போர் தொடுக்கப் போகிறோம்.
2. அப்போரில் இலங்கைக் கப்பற்படைக்கு – இந்தியா கடல்வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்க வேண்டும்.
3. ஒருவேளை, ஆனையிறவில் இலங்கைப் படை தோற்றதைப் போல் இதில் தோற்றால் – புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டால் உயிர்ச்சேதம் இல்லாமல் எங்கள் படையினரை இந்தியா மீட்டுத் தர வேண்டும்.
கமுக்க உடன்படிக்கையில் வெளியே கசிந்த செய்திகள் இவை! அப்போதே எங்களின் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் (2008) இதழ் ஆசிரியவுரையில் மேற்படி மூன்று கூறுகளையும் வெளியிட்டோம்.
இறுதிப் போரில் ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். அவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால், உலக நாடுகள் தலையிடும் சூழல் உருவாகும். அப்படி ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பையும் இந்தியா ஏற்க வேண்டும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கோரினர். அதற்கு ஒப்புக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளை வரச்சொல்லி – அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வர் செயலலிதாவையும் சந்தித்து வேண்டுகோள் வைக்க ஏற்பாடு செய்தனர்.
2008 சூன் – சூலையில் பெரும் போரைத் தொடுத்தது சிங்கள அரசு. வான் கொத்துக் குண்டு வீச்சில் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கலைஞரோ, செயலலிதாவோ பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று கூறி சிங்கள அரசு நடத்தும் போரை ஞாயப்படுத்தினார் செயலலிதா.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின. “ஆனந்த விகடன்” இதழ் அப்போது தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகளை ஆதரிப்போர், தனி ஈழத்தை ஆதரிப்போர், பிரபாகரனை ஆதரிப்போர் என்று பல வினாக்களைக் கேட்டுக் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள், 06.08.2008 நாளிட்ட “ஆனந்த விகடன்” இதழில் வந்தன. அதில், தனி ஈழத்தை ஆதரிப்போர் 55.44 விழுக்காட்டினர் என்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறோம் என்று கூறியவர்கள் 54.25 விழுக்காட்டினர்.
விடுதலைப்புலிகளை தி.மு.க. இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியோர், 22.71 விழுக்காட்டினர். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று கூறியோர் 47.48 விழுக்காட்டினர். இப்போது போலவே பட்டும் படாமலேயே தி.மு.க. இருக்கலாம் என்று கூறியோர் 29.79 விழுக்காட்டினர்.
இராசீவ் காந்தி கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்குப் போதிய ஆதரவில்லை என்று கூறியவர்களின் கணிப்பு பொய் ஆனது. கருணாநிதி, செயலலிதா, காங்கிரசார் எல்லோர்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அவர்களுக்கு அடுத்த பேரிடி “தினமணி” இதழிலிருந்து வந்து விழுந்தது.
“விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் ஒன்றா?” என்ற வினாவைக் கேட்டு “தினமணி” கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்கு, “ஆம்” என்று விடையளித்தோர் 72.58 விழுக்காட்டினர்.
அதன்பிறகே, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கோர வேண்டும் என்று வலியுறுத்தி காந்தியடிகள் பிறந்த நாளான 02.10.2008 அன்று சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருநாள் உண்ணாப் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்தது. மிகப்பெரிய போராட்டமாக நடந்தது. மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.
கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தமிழ்நாட்டில் கணிசமான “வாக்குச்சந்தை” இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். புதிய ஒப்பனைகளுடன் புதிய நாடகங்கள் அரங்கேற்றத் தொடங்கினர்.
முதலமைச்சர் கருணாநிதி 06.10.2008 அன்று மயிலை மாங்கொல்லையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, “இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றால், அதற்குப் பிறகு நாங்கள் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்” என்று முழங்கினார்.
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்திய அரசு இலங்கையிடம் போர் நிறுத்தம் கோரவில்லை என்றால், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.
கெடு முடிவதற்கு முதல்நாள் மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 26.10.2008 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். “பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது; தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள்” என்று கலைஞர் வீட்டுவாசலில் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டதும் பிரணாப் விடையளித்ததும் வருமாறு :
கேள்வி 1 : இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் கோர ஒப்புக் கொண்டீர்களா?
பிரணாப் : நாங்கள் போர் நிறுத்தம் கோர மாட்டோம் (We are not for Ceasefire).
கேள்வி 2 : இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமா?
பிரணாப் : இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இராணுவக் கருவிகள் சில கொடுத்துள்ளோம்.
கேள்வி 3 : இலங்கைப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்படுமா?
பிரணாப் : இந்தியாவில் பலநாட்டுப் படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். இலங்கைப் படை வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். இது எப்போதும் உள்ள வழமையான நடவடிக்கைதான்!
பிரணாப் முகர்ஜியின் வாக்குறுதியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டத்தைக் கைவிட்டோம் என்று அறிவித்தார் கருணாநிதி. “எனது நம்பிக்கை வீண் போகவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன” என்றார் கருணாநிதி!
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து முடித்தபின் இலங்கைக் குடியரசுத் தலைவர் இலங்கை நாடாளுமன்றத்தில், “நாம் இந்தியாவுக்கான போரைத்தான் நடத்தினோம்” என்று அறிவித்தார். அதற்கு எந்த மறுப்பும் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் சொல்லவில்லை, ஆளுங்கட்சித் தலைவி சோனியா காந்தியும் சொல்லவில்லை!
தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்தப் போர் இந்தியா நடத்தியதா? மேற்கத்திய நாடுகள் நடத்தியதா? கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகங்களை மறந்துவிட வேண்டுமா?
போர் நடத்திய அறுவர் குழு
---------------------------------------------
இலங்கை அரசு நடத்திய ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழு அடிக்கடி விவாதித்து வழிநடத்தியது. அதில் மூன்று இலங்கையர், மூன்று பேர் இந்தியர்!
சிங்களத் தரப்பில் 1. கோத்தபய இராசபட்சே (இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளர்), 2. பசில் இராசபட்சே (நாடாளுமன்ற உறுப்பினர்), 3. லலித் வீரதுங்க (குடியரசுத் தலைவரின் செயலாளர்).
இந்திய அரசுத் தரப்பில்,
1. எம்.கே. நாராயணன் (இந்தியப் பாதுகாப்புத்துறையின் மதியுரைஞர் – மலையாளி).
2. சிவசங்கர மேனன் (வெளியுறவுத்துறை செயலாளர் – மலையாளி).
3. விஜய் சிங் (பாதுகாப்புத்துறை செயலாளர் – இந்திக்காரர்).
இச்செய்தி ஏற்கெனவே ஊடகங்களில் வெளியானதுதான். கோத்தபய இராசபட்சே இந்தியன் டிஃபென்ஸ் ரிவ்வியூ (Indian Defence Review) என்ற இதழுக்கு அளித்த செவ்வியிலும் இந்த அறுவர் குழு இலங்கையின் போர் நடவடிக்கைகளை நிர்வகித்தது பற்றிக் கூறியுள்ளார்.
அந்த செவ்வியில் கருணாநிதியின் போர் நிறுத்த உண்ணாப் போராட்ட நாடகத்தையும் அம்பலப்படுத்திவிட்டார் கோத்தபய! (கோத்தபய இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர்).
2009 ஏப்ரல் 24ஆம் நாள் விடியும் நேரத்தில், மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதி திடீர் உண்ணாப் போராட்டம் தொடங்கினார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது கோரிக்கை!
உணர்ச்சி வசப்பட்டு திடீரென்று உண்ணாப் போராட்டம் நடத்துகிறார் என்ற அதிர்ச்சிச் செய்தி! ஆனால், இந்த நாடகம் முதல் நாளான ஏப்ரல் 23ஆம் நாள் மாலையே இந்திய அரசுக்குத் தெரிந்தது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் தன்னை அவசரமாகத் தொலைப்பேசியில் அழைத்து இச்செய்தியைக் கூறியதாக கோத்தபய மேற்படி செவ்வியில் கூறியுள்ளார். மறுநாள் கருணாநிதியின் உண்ணாப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில், “தாக்குதல்கள் நிறுத்தப்படும்” என்று போலி அறிக்கை வெளியிடுவதற்கான தயாரிப்பில் அப்போதே இறங்கிவிட்டோம் என்கிறார் கோத்தபய!
சிவசங்கர மேனன் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு Choices : Inside the Making of Indian Foreign Policy (வாய்ப்புகள் : இந்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தின் உட்புறம்).
போரின் இறுதி நாட்களில் நார்வேயும், அமெரிக்காவும் புலித்தலைமைகளை வான் வழியே அழைத்துச் சென்று காப்பாற்றி, போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின. ஆனால், அதில் சிங்கள, இந்திய அரசியல்வாதிகளுக்கு உடன்பாடில்லை என்று சிவசங்கர மேனன் குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். ஆனால், இச்செய்தி போரின் இறுதிக் கட்டத்திலும் போர் முடிந்த பின்னும் பரவலாகப் பேசப்பட்ட செய்திதான்!
தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்திய அரசுதான் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை நடத்திய போரை இயக்கியது என்பதற்கு இந்தச் சான்றுகள் போதுமல்லவா!
கருணாநிதியின் துரோகத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இனப்பகை இந்திய அரசையும் அல்லவா பாதுகாக்கிறீர்கள்!
உங்கள் திராவிடக் கொள்கை மீதும், பெரியாரியத்தின் மீதும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு இருந்தது. அனைத்தையும் தகர்த்து விட்டீர்கள் தோழரே!
இந்தியா நினைத்தாலும் இலங்கை நடத்திய போரை நிறுத்தி இருக்க முடியாது என்று கூறி, ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை போனதை மறைக்க விரும்புகிறீர்களே!
கருணாநிதி வஞ்சகமாக நாடகமாடாமல் இலங்கைப் போர் நிறுத்தத்தை வலியுறுத்திப் போராடியிருந்தால், தனிப்பெரும்பான்மை இல்லாத மன்மோகன் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால், ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காங்கிரசு அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இருக்கும் என்று நான் கருதவில்லை. ஈழத்தமிழர்களுக்காக – நாடகமாடாமல் உண்மையிலேயே கருணாநிதி பதவி விலகியிருந்தாலும், காங்கிரசுக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும் மன்மோகன் ஆட்சி வீழ்ந்துவிடாமல் இந்தி மண்டலக் கட்சிகள் பாதுகாத்திருக்கும். தமிழர்களுக்காக காங்கிரசு ஆட்சி வீழ்வதை, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியோ, மாயாவதியின் பகுசன் சமாஜ் கட்சியோ மற்றும் சில கட்சிகளோ விரும்பி இருக்க மாட்டா! தங்கள் ஆதரவைக் கொடுத்திருப்பார்கள்!
கலைஞர் கருணாநிதி மன்மோகன் சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டு, தாமும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அன்றைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி மக்கள் பக்கம் நின்ற ஒரு போராளியாகக் காட்சியளித்திருப்பார்.
ஆனால், கருணாநிதி தமிழீழத்தை – ஈழத்தமிழர்களை ஆதரிப்பதுபோல் நாடகமாடி ஏமாற்றினார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
தோழர் கொளத்தூர் மணி இன்னொரு ஆபத்தான தத்துவம் சொல்கிறார். “பத்தாண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லை” என்கிறார்.
பதினோராண்டுகள் கழிந்து போய்விட்டன என்றுகூறி, ஈழத்தமிழர்கள் கருணாவை ஏற்றுக் கொள்வார்களா? இன்னொன்று, ஈழத்தமிழர் இனம் அழிக்கப்பட்டதை, விடுதலைப் போர் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு வீழ்த்தப்பட்டதை – அந்த இன அழிப்பிற்கு மறைமுகமாகத் துணைபோனவர்களை பத்தோடு பதினொன்றாக மறந்துவிட தோழர் மணி அவர்களால் முடிகிறது என்பதை நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று அதை மறந்து விடலாமா? திராவிடத் தத்துவத்தின்படி மறந்து விடலாம்! மறந்துவிட்டுத்தானே, திராவிடத் தளபதி கருணாநிதி பா.ச.க.வுடன் 1999-இல் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க.வினரை உட்கார வைத்தார்!
1965 – இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் 400க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்ற காங்கிரசுக்குத்தானே கருணாநிதி 1969 முதல் ஆதரவு தந்தார். 1971 பொதுத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்!
இந்தப் பாதையெல்லாம் திராவிடத் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த பாதைதான்!
வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோது, அவனை ஆதரித்தார்! அவன் 1947 ஆகத்து 15இல் விடைபெற்ற போது அது துக்க நாள் என்றார் பெரியார். சில ஆண்டுகள் காங்கிரசு எதிர்ப்பு. பின்னர் 1954லிருந்து காங்கிரசு ஆதரவு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டே தமிழ்நாடு விடுதலை பற்றியும் அவ்வப்போது பேசிய அந்நாளையக் கலைஞர் அவர்! தி.மு.க. ஒழிப்புதான் முதல் வேலை என்று 1949லிருந்து 1967 பிப்ரவரி வரை செயல்பட்ட பெரியார் இப்படிப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாத பண்பாட்டிற்குத் தானே அடித்தளம் அமைத்தார்!
1970களின் தொடக்கத்தில் தந்தை செல்வா அவர்கள், சென்னையில் பெரியாரை சந்தித்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரியபோது, “நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்” என்று விடை கூறி, ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்தவர் பெரியார்.
வரலாற்றில், ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலையடைய காலனி நாடுகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தில், ஒரு காலனி நாடு இன்னொரு காலனி நாட்டை ஆதரிப்பதுதான் வலிமையாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல், ஒதுங்கிக் கொள்வதற்காக – தந்திரமாக ஓர் அடிமை இன்னொரு அடிமையின் விடுதலையை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு ஆதரவு தர மறுத்துள்ளார்.
கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள். பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும் அவர்களைத் திராவிடத் தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
பிரபாகரன் என்ற படிமம் தமிழ்த்தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது! எனவே, பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.
இதோ சுப.வீ. அவர்களுடைய ஒப்புதல் கூற்று : “புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப்பட்டது”. (சுப.வீ. அறிக்கை, 11.05.2020).
“மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தோழர் கொளத்தூர் மணி தனது கட்டுரையில் கூறுகிறார்.
பா.ச.க. பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான கொள்கைத் திட்டம் – வேலைத் திட்டம் எதையாவது தி.மு.க. வெளியிட்டிருக்கிறதா? பீகாரின் பிராமண பிரசாந்த் கிசோர் ஏற்கெனவே மோடிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர். இப்போது மு.க. ஸ்டாலினுக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார். பிரசாந்த் கிசோர் கலைத்திட்டத்தில் (Curriculam) பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள் இல்லையே! எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை இதுவரை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. கடைபிடிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார் என்பதற்காக, காங்கிரசோடு தொடர்பை துண்டித்துக் கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்நேரத்தில், பா.ச.க. ஆட்சிக்கு எதிராக சோனியா காந்தி புதுதில்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை (14.01.2020) தி.மு.க. புறக்கணித்தது. இதுதான் பா.ச.க. எதிர்ப்புக் கூட்டணியா?
காங்கிரசைக் கைவிட்டு பா.ச.க.வோடு தி.மு.க. கூட்டணி சேராது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? கருணாநிதி அவர்களே 1999லிருந்து ஐந்தாண்டுகள் பா.ச.க. கூட்டணியில்தானே இருந்தார்! எதிரும் புதிருமானவர்கள் காலப்போக்கில் சேர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இதே கட்டுரையில் தோழர் மணி கூறுகிறார். அவர் வாதப்படி தி.மு.க. பா.ச.க.வோடு சேர்ந்தாலும் பெரிய தவறு ஒன்றுமில்லை!
தோழர் கொளத்தூர் மணி கட்சி பா.ச.க. மதவாத பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து, அதை பரிசீலித்து ஏற்குமாறு மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்துவதை பாசிச எதிர்ப்பு உத்தியின் கீழ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தோழர் மணி பரிந்துரைப்பது முற்றிலும் முரண்பாடானது!
தோழர் கொளத்தூர் மணி – பேராசிரியர் சுப.வீ. ஆகிய இருவரும் ஈழவிடுதலைக்காக மிகக்கடுமையாகப் போராடியவர்கள்! மிக அதிகமாக ஈகம் செய்தவர்கள்! என்ன செய்வது? அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர்களை இனத்துரோக முகாமுக்குள் கொண்டு போய் சேர்த்துவிட்டது!
“நேற்று ஒருவன் புரட்சியாளனாக இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் புரட்சியாளனாக இருக்கிறான் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நடைமுறையில் இன்றும் புரட்சியாளனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும்” – மா சே துங்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, 9841949462

திங்கள், 11 மே, 2020

(1) வசுமித்ர அம்பேத்கரை அவமதித்தாரா?
--------------------------------------------------------------
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரயோகம்!
---------------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன்பு
மகத்தான கின்னஸ் சாதனை ஒன்றைப் புரிந்திருக்கிறது.
வேறொரு முகாமைச் சேர்ந்த சக மார்க்சியர் ஒருவர் மீது
அவர் எழுதிய ஒரு கருத்துக்காக, தமிழக வரலாற்றில்
முன்னுதாரணம் இல்லாத அளவில், SC-ST வங்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு
செய்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

தேனி மாவட்டம் கோடங்கிப் பட்டியைச் சேர்ந்தவரும்
வடிவேல் முருகன் என்ற இயற்பெயர்கொண்டவரும்
சென்னையில் வசித்து வருபவருமான வசுமித்ர என்பவர்
மீதுதான் SC-ST வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வசுமித்ர மீது வழக்குத்
தொடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் திரள்
அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப்
பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ்
அவர்கள்.

SC-ST வங்கொடுமைத் தடுப்புச் சட்டம் (திருத்தச் சட்டம் 2018)
உட்பிரிவுகள் 3(1) t, u, v (அதாவது 3 (1) (t), 3 (1) (u), 3 (1) (v)
ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு
மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ் தமது புகார்
மனுவில் கூறியுள்ளார். எனினும் புகாரில் கூறப்பட்ட
குற்றச்சாட்டுகள் எந்தெந்த சட்டப் பிரிவுகளின்கீழ்
வரும் என்பதை காவல் துறையே முடிவு செய்யும் என்பதை
காவல்துறை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளை
நன்கு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

திரு கே சாமுவேல் ராஜ் அவர்கள் தமது சொந்த ஹோதாவில்,
அதாவது தான் ஒரு தனிநபர் என்ற முறையில்,
வடிவேல் முருகன் என்ற வசுமித்ர மீது வங்கொடுமைச்
சட்டத்தில் புகார் கொடுத்திருந்தால், அது பற்றி தமிழ்ச்
சமூகம் கவலை கொள்ளப் போவதில்லை.

1) வடிவேல் முருகன்
2) கே சாமுவேல் ராஜ்
என்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான பூசல்
என்பதாக மட்டும் அது பார்க்கப்படும். ஆனால் திரு
கே சாமுவேல் ராஜ் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி
என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அமைப்பு சார்பாக
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுக்கிறார்.

இதன் மூலம் வசுமித்ர என்ற ஒற்றைத் தனிநபருக்கு
எதிராக நூறாண்டு வரலாறு கொண்ட கம்யூனிஸ்ட்
கட்சியை (CPM) எதிர்த் தரப்பில் நிறுத்துகின்றனர்
மார்க்சிஸ்டுகள். Shamelessly disproportionate என்று இதைத்தான்
ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
(Shamelessly disproportionate = வெட்கங்கெட்ட விதத்தில்
பொருத்தமின்மை)
இந்த நிலையில் தராசின் தட்டுக்களோ தராசின் முள்ளோ
ஒருபோதும் சரியாக இருக்கப் போவதில்லை.

வசுமித்ர என்ற ஒற்றைத் தனிநபருக்குத் தகுந்த பதில்
கொடுக்குமாறு கட்சி அணிகளில் எவரையேனும் மார்க்சிஸ்ட்
கட்சி பணிக்கலாம். ஒரு ஸ்டேட் கமிட்டி மெம்பரையோ
அல்லது சென்ட்ரல் கமிட்டி மெம்பரையோ அழைத்து
அவரிடம் இந்த வேலையை ஒப்படைக்கலாம்.  மாறாக,
கட்சி மொத்தத்தையும் வசுமித்ர என்ற தனிநபருக்கு
எதிராக நிறுத்துவதன் மூலம், கட்சியின் பிம்பம் சேதாரம்
அடைகிறது.

இடஞ்சுட்டிப் பொருள் விளக்கினால்,
"புத்தரது ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும்
அம்பேத்கரது அறிவு சார்ந்த பௌத்தத்தை நீங்கள்
பேசுவதில்லை"
என்ற வாக்கியம்தான் வங்கொடுமையை இழைத்துள்ளது
என்கிறார் மதிப்புக்குரிய திரு கே சாமுவேல் ராஜ் அவர்கள்.
தமது முகநூல் பதிவில் வசுமித்ர இந்த வாக்கியத்தை
எழுதி உள்ளார். (எந்தத் தேதியில் எந்த நேரத்தில் வசுமித்ர
இந்தப் பதிவை எழுதினார் என்ற விவரத்தை திரு
கே சாமுவேல் ராஜ் அவர்கள் தமது புகாரில்
தெரிவிக்கவில்லை).

இந்த ஒற்றை வாக்கியத்தை எழுதியதன் மூலம், வசுமித்ர
டாக்டர் அம்பேத்கருக்கு வன்கொடுமையை இழைத்து
விட்டார் என்கிறார் திரு கே சாமுவேல் ராஜ். இதை
அறிவுடைய எவரும் ஏற்கப் போவதில்லை. டாக்டர்
அம்பேத்கர் அவ்வளவு எளிதில் நொறுங்கிப் போகக்
கூடியவர் அல்லர். அவருக்கு யாரும் வங்கொடுமை
இழைத்து விட முடியாது. வசுமித்ரவும் பீமனோ
அனுமனோ அல்லர்.

ஒரு ஒற்றை வாக்கியத்தைக் கொண்டு வல்லமை வாய்ந்த
அம்பேத்கரை வசுமித்ர வீழ்த்தி விட்டார் என்று திரு
கே சாமுவேல் ராஜ் சொல்வதைக் கேட்பவர்கள் அனைவரும்
கைகொட்டிச் சிரிப்பார்கள். இன்னும் நூறாண்டு கழிந்தாலும்,
டாக்டர் அம்பேத்கரை ஒரே ஒரு ஒற்றை வாக்கியத்தில்
அடித்து வீழ்த்தக் கூடிய பலசாலி எவரும் பிறக்கப்
போவதில்லை. டாக்டர் அம்பேத்கரை மெலிந்தவராகவும்
பலவீனமானவராகவும் மதிப்பிடும் யார் எவரும்
அம்பேத்கரின் தரப்பில் நின்று வாதிடும் அருகதையை
இழக்கிறார்கள்.

வசுமித்ர கூறிய விஷயம் புத்த மதத்தைப் பற்றியது.
புத்த மதம் பற்றி, புத்தர் பற்றி டாக்டர் அம்பேத்கர்
சொன்ன விஷயத்தைப் பற்றியது. மதம் என்றாலே
கருத்துமுதல்வாதம் ஆகும். பொருள்முதல்வாதிகளாகிய மார்க்சிஸ்டுகளுக்கு கருத்துமுதல்வாத புத்த மதம் பற்றி
சிலாகித்துப் பேச வேண்டிய தேவை என்ன?

புத்தர் யார்? ஒரு மதத்தை நிறுவிய மதத் தலைவர்.
அதாவது புத்தர் ஒரு கருத்துமுதல்வாதத் தலைவர்.
அவரைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம்
பௌத்தப்பேரினவாத ராஜபக்சேவுக்கு இருக்கலாம்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்க வேண்டிய
அவசியம் என்ன?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாக்டர் சென்னா
ரெட்டி ஆளுநராக இருந்தார். ஜெயலலிதா மீது
ஊழல் வழக்குத் தொடுப்பதற்கு இவர் அனுமதி வழங்கி
இருந்தார். இதனால் ஆத்திரமுற்ற ஜெயலலிதா
சென்னா ரெட்டி மீது பாலியல் புகார் கூறினார். சென்னா
ரெட்டி தம் கையைப் பிடித்து இழுத்ததாக ஜெயலலிதா
கூறினார்.

சென்னா ரெட்டி பக்கவாதம் வந்து, கை கால் விழுந்து
விட்டவர். அவரால் யாரையும் கையைப் பிடித்து
இழுக்க முடியாது. இது ஊரறிந்த விஷயம். என்றாலும்
ஜெயலலிதா அவர் மீது புகார் கொடுத்து வரலாறு
படைத்தார். இதன் மூலம், பாலியல் கொடுமை எதுவும்
நிகழாவிடினும், எந்த ஒரு பெண்ணும் எந்த
ஒரு ஆண் மீதும் பாலியல் புகார் கொடுக்கலாம்
என்று ஒரு தேற்றத்தை (theorem) உருவாக்கினார்
ஜெயலலிதா.

ஜெயலலிதா போலவே மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு
தேற்றத்தை உருவாக்கி உள்ளது.வங்கொடுமை எதுவும் 
நிகழாவிடினும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த எவர் ஒருவரும்
அந்த இனத்தைச் சேராத எவர் ஒருவர் மீதும் வங்கொடுமைத்
தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி புகார் கொடுக்கலாம்.
இதுதான் அத்தேற்றம்.

நல்ல வேளையாக கோட்சே மகாத்மா காந்தியை
1948லேயே சுட்டுக் கொன்று விட்டான். மகாத்மா
இப்போது உயிருடன் இருக்க நேர்ந்தால், அவர் மீதும்
வங்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மார்க்சிஸ்ட்
கட்சியின் சாமுவேல் ராஜன்கள் புகார் கொடுத்திருப்பார்கள்.

திரு சாமுவேல் ராஜன், வசுமித்ர ஆகிய இருதரப்பு
ஆவணங்களையும் (available on record) மிகுந்த  கவனத்துடன்
பரிசீலித்த பிறகு,
"புத்தரது ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும்
அம்பேத்கரது அறிவு சார்ந்த பௌத்தம்"
என்ற ஒற்றை வாக்கியம் மாபெரும் வங்கொடுமையை
நிகழ்த்தி விட்டது என்று கருதுவது கோமாளித்தனம் என்ற
முடிவுக்குத்தான் வர வேண்டி உள்ளது. நீதிமன்றத்தில்
இத்தகைய குட்டி முதலாளித்துவ சிறுபிள்ளைத்தனங்கள்
நிற்காது.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவரது தம்மமும்"
என்ற நூலில் இருந்தே அம்பேத்கரின் கருத்துக்களை
எடுத்தாண்டுள்ளார் வசுமித்ர. மேற்கூறிய சர்ச்சைக்குரிய
வாக்கியம் வசுமித்ரவின் சொந்தக் கருத்தல்ல. இதற்கு
வலுவான ஆதாரம் வசுமித்ரவிடம் உள்ளது.
(பார்க்க: டாக்டர் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும்).
அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படிக்காத எவர்
ஒருவராலும் எனது கட்டுரைத் தொடரைப் புரிந்து கொள்ள
இயலாது.

தெருமுனைக் கூட்டத்தில் பேசுவது போல, நீதிமன்றத்தில்
வழக்கறிஞரால் வாதிட இயலாது. அது காலரிக்கு வாசிக்கும்
இடமல்ல. சட்ட ரீதியாகப் பரிசீலிக்கும் பொழுது, இந்த
வழக்கு மிகவும் பலவீனமாக இருப்பது எந்த ஒரு சாதாரண வழக்கறிஞருக்கும் தெரியும். அவர்களில் எவரேனும் ஒருவர்
மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சொல்லியிருக்கக் கூடும்.
எனவே வசுமித்ர போன்ற விடாக்கொண்டன்களுக்கு
இந்த வழக்கு வெறும் nuisance value மட்டுமே உடைய
விஷயமாக இழிந்து விடும்.
--------------------------------------------------------------------------------
தொடரும்
------------------------------------------------------------------------------
கட்டுரை ஆக்கம்:
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
******************************************** 





சனி, 9 மே, 2020

வேலூர் கிறிஸ்துவ மருத்துவமனையை (CMC)
இழுத்து மூடி சீல் வை!
கொரோனா நோயாளி இறந்த பிறகும்
உடலைக் கொடுக்க மறுத்து ரூ 20 லட்சம் கேட்கும்
மருத்துவமனை டீனை கைது செய்!
தினகரன் ஏடு அம்பலப் படுத்துகிறது!
------------------------------------------------------------------
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி!
இறந்து போன பெண்ணுக்கு ரூ 20 லட்சம்
கேட்கிற அநியாயம்!
எலுமிச்சம் பழம் விற்றுப் பிழைக்கும் சிறு வியாபாரியின்
மனைவியே இந்தப் பெண்!
எங்கிருந்து அந்தக் குடும்பம் ரூ 20 லட்சம் கொடுக்கும்?
பிணத்தைக் கொடுக்க மறுப்பது நியாயம் அல்ல.
-------------------------------------------------------------------------------

செத்துப்போன அந்த அம்மாவின் புருஷன்
தெருத் தெருவாய் எலுமிச்சம் பழம் விற்றுச்
சம்பாதிக்கிற ஒரு ஆள்.
அவர் ரூ 20 லட்சத்துக்கு எங்கே போவார்?


தகவல் ஆதாரம்: தினகரன் ஏடு.


தினகரன் ஏடு அம்பலப் படுத்துகிறது!
------------------------------------------------------------


கா சதாசிவம்

CMC டீன் அவர்களே,
எலுமிச்சம் பழம் விற்றுப் பிழைக்கிறவன்
எப்படி ஐயா உமக்கு ரூ 20 லட்சம் தருவான்?
அதுவும் குணப்படுத்த இயலாமல் பிணத்தை
ஒப்படைக்கும்போது, அதற்கு எங்கிருந்து ரூ 20 லட்சம்
வரும்? யாருடைய தாலியை அறுத்து அந்த
எலுமிச்சம் பழ வியாபாரி ரூ 20 லட்சம் திரட்டுவான்?

டீன் அவர்களே, நீ பணம் கேட்க வேண்டியது
அரசாங்கத்திடம். நீ பில் அனுப்ப வேண்டியது
அரசாங்கத்திற்கு. ஒழுங்காக நடந்து கொள்.


கொரோனா நோயாளிகளுக்கு அரசாங்கம்தான்
பொறுப்பு. இது வேலூர் CMCக்கும் நன்கு தெரியும்.
ஏழை எளிய மக்களை மதமாற்றம் நோக்கத்துடன்
இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அங்கிருந்து
வரும் செய்திகள் சொல்லுகின்றன.


ராமகுமார் ராஜாராம் தக்கு


இந்த நோயாளி கொரோனா நோயாளி. அவர் தாமே
சுயமாக, தன சொந்த ஹோதாவில், சொந்த அந்தஸ்தில்
CMCயில் வந்து அட்மிட் ஆகவில்லை. அவரை அங்கு
அட்மிட் செய்தது தமிழக அரசின் மருத்துவத் துறை.
எனவே CMC டீன் தமிழக அரசுக்குத்தான் பில்லை
அனுப்ப வேண்டும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும், எலுமிச்சம் பழம்
விற்பவரிடம் இருந்து ரூ 20 லட்சம் பெயராது என்று
டீனுக்குத் தெரியாதா! அப்படியானால் உண்மை
என்ன? மதமாற்ற நோக்கம் என்று அனுபவப்
பட்டவர்கள் சொல்வதுதானே உண்மை!




    






 





மதிப்புக்குரிய பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள்
இவ்வளவு தூரம் முன்வந்து, அனைவரையும் பகைத்து
இந்த விஷயங்களைச் சொல்வது எனக்கு அதிர்ச்சியைத்
தருகிறது.  (மொத்த மற்றும் சில்லறை வியாபாரம்)


ஓ இதுதான் சூட்சுமமா? இப்படி இருக்கக்கூடும்
என்று நினைத்தேன்.


PSTM 50 சதம் கொண்டு வந்தால், நீதிமன்றங்கள்    தமிழன் அருள்
அது செல்லாது என்று தீர்ப்பளித்து விடும்.
தற்போதைய PSTM 20 சதம் என்பதே நல்லது.


பேப்பரில் போட்டு இருக்கிறார்களே சார்.
பொய்யான செய்தியாக இருந்தால் வேலூர்
CMC நிர்வாகம் பேப்பர்காரனை ஒரு வழி
செய்து விடுமே. பொய்யான செய்தியை
வேண்டுமென்றே அப்படி யாராவது உருவாக்கி
இருந்தால், அவர்கள் சிறைக்குப் போக நேரிடுமே.

இந்தச் செய்தி தினகரன் ஏட்டில் வெளிவந்தது என்று
ஒரு வரி எழுதி இருக்கலாமே! அப்படி எழுதாமல்
விட்டதால் எவ்வளவு நஷ்டம் என்று புரிந்து கொள்க.
















கொரோனாவும் ஆரோக்கிய சேதுவும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஆரோக்கிய சேது என்பது ஓர் App. கணினியோடு பரிச்சயம்
உள்ளவர்கள் App பற்றி அறிவார்கள். கணினிப் பரிச்சயம்
என்பது இளைஞர்களின் ஏரியா. (Unless the context otherwise requires,
இங்கு இளைஞர்கள் என்பது இளம்பெண்களையும் குறிக்கும்).

Apeல் இருந்து வந்த மனிதன் App பற்றியும் அறிந்துகொள்ள
வேண்டும். App என்பது ஒரு குறிப்பிட்ட வேலையைச்
செய்து முடிக்க (கணினி வழியில் செய்து முடிக்க)
பயன்படும் ஒரு கருவி என்று புரிந்து கொள்க.

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்,
அந் நோயாளிக்கு ஒரு இஞ்சக்சன் போட விரும்புகிறார்.
மருந்துக் கடையில் போய் டாக்டர் எழுதிக் கொடுத்த
ஊசி மருந்தை வாங்கி வந்தாயிற்று. இப்போது ஊசி
போட வேண்டும். அதற்கு என்ன வேண்டும்?

ஒரு சிரிஞ்சு வேண்டும். சிரிஞ்சு இல்லாமல் ஊசி போட
முடியுமா? இந்த சிரிஞ்சைப் போன்றதுதான் App.
ஆக App என்பது ஒரு கருவி. அது ஒரு குறிப்பிட்ட
வேலையை மட்டும் செய்யும். அவ்வளவுதான்.

இப்போது App என்றால் என்னவென்று தோராயமாகவேனும்
உங்களுக்குத் புரிந்திருக்கும். அப்படியானால்
ஆரோக்கிய சேது என்னும் App என்ன வேலை செய்யும்?
அது ஒரு டிராக்கர். Tracker என்ற ஆங்கிலச் சொல்லுக்குப்
பொருள் புரிந்தால் மட்டுமே மேற்கொண்டு நகர முடியும்.
இப்போது ஆங்கிலப் பாடம் நடத்த நேரம் கிடையாது;
விருப்பமும் கிடையாது.

ஒரு இளம் பெண் 12B பேருந்தில் ஏறி விட்டாள். பேருந்து
நிறுத்தத்தில் நாய் மாதிரிக்கு காத்துக் கிடந்த
அந்த விடலைப் பையனும் உடனே அதே 12Bயில் ஏறி
விட்டான். அவள் சுடுகாட்டில் இறங்கினாலும் இவனும்
அங்கேயே இறங்கி அந்தப் பெண்ணை முற்றிலுமாக
follow பண்ணுவான். இதுதான் டிராக்கிங். இந்தப்
பையன் ஒரு டிராக்கர்.

அப்படியானால் ஆரோக்கிய சேது யாரைப்
பின்தொடர்கிறது? அது கொரோனா வைரஸை,
கொரோனா நோயாளிகளைப் பின்தொடர்கிறது.
ஆரோக்கிய சேதுவின் பெயரே COVID-19 Tracker
என்பதுதான்.

ஏன் இந்த App? இதன் வேலை என்ன? இந்தியாவில்
மூன்றாம் கட்ட கொரோனா பரவல் ஏற்படும்
முன்னரே, அதாவது சமூகப் பரவல் ஏற்படும்
முன்னரே, சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டு
ஆரோக்கிய சேது கொண்டு வரப்படுகிறது.

ஆரோக்கிய சேது App எல்லா மொபைல் போனிலும்
வேலை செய்யாது. ஸ்மார்ட் போனில் மட்டுமே வேலை
செய்யும். (Tablet, Lap, PC ஆகியவற்றில் வேலை செய்யும்).
GPS, Bluetooth  ஸ்மார்ட் போனில் மட்டுமே ஆரோக்கிய
சேது வேலை செய்யும்.

ஆரோக்கிய சேதுவில் இணைவது நாட்டு மக்களுக்கு
கட்டாயம் அல்ல. அரசு ஊழியர்களுக்கு மட்டும்
கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.    

இந்திய மக்கள் தொகை 130 கோடி. இதில் ஆரோக்கிய
சேதுவை வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?
ஒரு கோடி இருக்குமா? இல்லை. ஒரு கோடியை இன்னும்
எட்டவில்லை என்கிறது அரசின் புள்ளி விவரம்.
வெறும் 70 லட்சம் பேர் மட்டுமே ஆரோக்கிய சேதுவை
வைத்துள்ளனர். 
              
50 கோடிப்பேர் இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்து
இருக்கிறார்கள் என்கிறது ஏற்கத்தக்க ஒரு புள்ளி
விவரம். 130 கோடியில், திசுக்கள் சிறு குழந்தைகள்,
படிப்பறிவற்றவர்கள் ஆகியோரைக் கழித்து விட்டுப்
பார்த்தல், மிச்சமுள்ள 100 கோடிப்பேரில் 50 கோடிப்பேர்
ஸ்மார்ட் போன் வைத்து இருக்கிறார்கள். அதாவது
இந்தியர்களில் இரண்டு பேரில் ஒருவரிடம் ஸ்மார்ட்
போன் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் ஆரோக்கிய சேது Appஐ
வைத்திருப்பவர்கள்  ஒரு கோடி கூட இல்லை.
வெறும் 70 லட்சம்தான். இதில் மிகுதியும் அரசு
ஊழியர்கள்.

ஆரோக்கிய சேது App என்னவெல்லாம் செய்கிறது?
கொரோனா குறித்த அரசின் செய்திகள், தகவல்கள்
அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்கிறது.
இந்தியாவில் பேசப்படும் அனைத்து மாநில
மொழிகளிலும் சொல்கிறது. அரசின் அறிவிப்புகள்
உடனுக்குடன் தெரிய வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ஆரோக்கிய சேது
Appஉடன் மோட்டார் பைக்கில் கோடம்பாக்கம் செல்ல
இருக்கிறேன். கோடம்பாக்கம் கொரோனா
நோய்த்தொற்று அதிகமுள்ள இடம் என்ற cautionஐ
ஆரோக்கிய சேது எனக்கு அளிக்கும். நான்
கோடம்பாக்கம் செல்வதைத் தவிர்த்து விடுவேன்.

நான் எங்கெல்லாம் செல்கிறேன், எந்த ரோட்டில்
சென்று திரும்புகிறேன் என்கிற அனைத்தும் GPS
மூலமாக ஆரோக்கிய சேதுவுக்குத் தெரியும்.
அப்படித் தெரிந்தால்தான்  அது நான் செல்லக்கூடாத
இடத்தைச் சுட்டிக்காட்டி என்னை caution செய்ய இயலும்.
(caution என்பதற்கு எச்சரிக்கை என்றும் App என்பதற்கு  செயலி என்றும் மொழிபெயர்ப்பவனுக்கு இங்கு இடமில்லை.
அவன் எங்காவது தண்டவாளத்தில் சரக்கு ரயில்
வரும்போது தலை கொடுத்து முக்தி அடையவும்).

நோயாளிகளின் எண்ணிக்கை உட்பட எல்லாத்
தகவல்களையும் ஆரோக்கிய சேது சொல்கிறது.
இது ஒரு குறிப்பிட்ட தேவைக்கானது. அந்தத் தேவையை
இது செவ்வனே நிறைவேற்றுகிறது. சமூகப் பரவல்
என்னும் மூன்றாம் கட்டத்துக்கு கொரோனா வந்து
விடக்கூடாது என்பதற்காகவே ஆரோக்கிய சேது
என்னும் டிராக்கர் கொண்டு வரப்பட்டது. அது ஒரு
டிராக்கர் என்பதை உணர வேண்டும்.

எந்தத் தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், அறிவியல்
பின்னணியும் இல்லாமல், ஆரோக்கிய சேது என்னுடைய
ரகசியங்களைப் பறித்து விடுகிறது என்று உளறுவது
முழுமுட்டாள்தனம்.

ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது, அவரிடம்
நமது நோய் குறித்த விவரங்களை ஒளிவு மறைவின்றிச்
சொல்லுவது போல, ஆரோக்கிய சேதுவிடம் அதற்குத்
தேவையான விவரங்களைத் தருகிறோம். இதில்
ரகசியம் பறிபோகிறது என்ற பேச்சு அபத்தமானது.

130 கோடி மக்கள்தொகை உள்ள ஒரு நாட்டில்,
50 கோடிப்பேர் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒரு நாட்டில்,
இதுவரை வெறும் 70 லட்சம் பேர் மட்டுமே ஆரோக்கிய
சேதுவில் இணைந்துள்ளனர் எனும்போது, இதனால்
என்ன தீமை விளைந்து விட முடியும்? பதில்
சொல்லுங்கள் லும்பன்களே!
******************************************************  




  .

 
  

                

வெள்ளி, 8 மே, 2020

ஆரோக்கிய சேது ஆப் குறித்து!
இதில் ரகசியம் பறிபோகிறதா?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதுவதுதான்
சுலபமானது. தமிழில் எழுதுவது மிகவும் கஷ்டமானது.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். App என்பதற்கு
செயலி என்று மொழிபெயர்க்கும் யாரும் இங்கு 
வர வேண்டாம். வந்தால் முதுகுத் தொலியை உரித்து
விடுவேன்/

ஏற்கனவே Processor என்ற சொல்லுக்கு செயலி என்ற சொல்
கொண்டு வரப்பட்டு இன்று அது பெரு வழக்காகவும்
ஆன பின்னால், App க்கும் செயலியைப் போடு
என்கிறவனை கொலை செய்யாமல் விடுவது தப்பாகப்
போய்விடும்.

பிரான்சு நாட்டில் ஒருவன். அவன் பெயர் ராபர்ட் பாப்டிஸ்ட்
(Robert Baptiste).  (படிக்க: ஆங்கில இந்து ஏடு The Hindu dtd May 7, 2020))
இவன் தீவிர கிறிஸ்துவ மத விசுவாசி. இவன் தன்னை
ஒரு ethical hacker என்று சொல்லிக் கொள்கிறான்.
 
இவன் ஆரோக்கிய சேது குறித்து மிகவும் பொத்தாம்
பொதுவாக சில உரிமை மீறல்களைச் சொன்னான்.
ஆரோக்கிய சேதுவின் source codeஐ வெளியிட வேண்டும்
என்றும் கூறினான்.

இந்தியாவில் யாரும் எதுவும் கூறவில்லை. பிரான்சு
நாட்டுக்காரனான இவனுக்கு source codeஐ வெளியிட
வேண்டுமாம்.

நமது நோய்கள் பற்றிய குறிப்பாக கொரோனா சார்ந்த
தகவல்களை இந்த ஆப் பெற்றுக் கொள்கிறது என்கிறான்
புழுவினும் இழிந்த ராபர்ட் பாப்டிஸ்ட். அதற்குத்தானேடா
இந்த ஆப். ஆரோக்கிய சேது என்பது கொரோனா வைரஸ்
குறித்த ஆப்.

பைத்தியம் பிடித்த மூதேவிகள் இந்தியாவில்தான்
அதிகம் என்று பார்த்தால், பிரான்சு நாட்டில்
இருந்தும் கோட்டிக்காரப் பயல்கள் இந்திய விவகாரங்களில்
தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முட்டாளுக்கு
source code வேண்டுமாம்!

மேற்குறிப்பிட்ட ஆங்கில இந்து ஏட்டின் செய்தியைப்
படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*****************************************************   
பின்குறிப்பு:
சேது என்ற சொல் நெல்லை மாவட்டத்தில் மிகவும்
பிரபலமான சொல். நெல்லையில் பலருக்கும் சேது
என்ற பெயர் இருக்கும். வீரவநல்லூரில் எங்கள் தெருவில்
சேது என்ற பெயரில் பலர் உண்டு. கம்ப ராமயாணத்தில்
சேது பந்தனப் படலம் என்று ஒரு படலம் உண்டு.
அதில் ஏதேனும் ஒரு பாடலை வாசகர்களால் சொல்ல
இயலுமா?
**********************************************************  

மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு
எஞ்சுறக் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணையில்
தஞ்சமென் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
(யுத்த காண்டம், சேது பந்தனப் படலம்)
(சேது= பாலம்; பந்தனம் = கட்டுதல்) 

எவ்வளவு அற்புதமான இடத்தில் கம்பர் தம்மை
ஆதரித்த புரவலர் சடையப்ப வள்ளலை உயர்த்தி
வைத்துள்ளார் என்பதை இப்பாடலில் காணலாம்.







 
   

புதன், 6 மே, 2020

ஆரோக்கிய சேது செயலி!
----------------------------------------
செயலியை தரவிறக்கம் செய்து கொண்டீர்களா? அதில் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டீர்களா? அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் உண்மையான விடையளித்திருக்கிறீர்களா? அதில் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒருமுறையேனும் சுயபரிசோதனை செய்து கொண்டு அதில் வரும் அறிவுரையை கடைப்பிடியுங்கள்.
சுயபரிசோதனை செய்து கொண்ட பின் ஒவ்வொரு முறையும் செயலியை ஓபன் செய்யும் போது 500 மீ, 1, 2, 5 மற்றும் 10 கிமீ சுற்றளவில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரிய வரும்.......
1. எத்தனை பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.
2. எத்தனை பேர் இதில் சுயபரிசோதனை அந்த நிமிடம் வரை செய்திருக்கிறார்கள்.
3. அதில் எத்தனை பேர், கொடுத்த தகவலின் அடிப்படையில் கொரோனா தொடர்பான சந்தேக அறிகுறிகளோடு இருக்கிறார்கள்.
4. அதில் எத்தனை பேர் தாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
5. இந்த சூழலில் நாம் கொடுத்த தகவல் அடிப்படையில் நாம் செய்ய வேண்டியது என்ன....
போன்ற விபரங்கள் தெரிய வருகிறது. இவற்றின் அடிப்படையில் பத்து கிமீ சுற்றளவில் நமக்கு பாதிப்பு அப்போதைக்கு இல்லை என்று தெரியவரும் போது கொஞ்சம் 
நிம்மதியாகத்தான் இருக்கிறது.
வெளியே செல்லும் போது கூட்டம் இருக்கும் இடத்தில் இந்த செயலியை திறந்து மேற்கொண்ட விபரங்கள் தெரிந்து எச்சரிக்கை அடையலாம்.
என்ன......எல்லோரும் இந்த செயலியை உபயோகிப்பது அனைவருக்கும் மிகவும் நல்லது. எல்லாவற்றையும் விட நம் உடல்நலம் குறித்து அவ்வப்போது நாம் அப்டேட் செய்யும் பதில்கள் உண்மையானதாக இருப்பது மிக மிக மிகவும் முக்கியம்.
***************************************************************************8888