வெள்ளி, 8 மே, 2020

ஆரோக்கிய சேது ஆப் குறித்து!
இதில் ரகசியம் பறிபோகிறதா?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதுவதுதான்
சுலபமானது. தமிழில் எழுதுவது மிகவும் கஷ்டமானது.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். App என்பதற்கு
செயலி என்று மொழிபெயர்க்கும் யாரும் இங்கு 
வர வேண்டாம். வந்தால் முதுகுத் தொலியை உரித்து
விடுவேன்/

ஏற்கனவே Processor என்ற சொல்லுக்கு செயலி என்ற சொல்
கொண்டு வரப்பட்டு இன்று அது பெரு வழக்காகவும்
ஆன பின்னால், App க்கும் செயலியைப் போடு
என்கிறவனை கொலை செய்யாமல் விடுவது தப்பாகப்
போய்விடும்.

பிரான்சு நாட்டில் ஒருவன். அவன் பெயர் ராபர்ட் பாப்டிஸ்ட்
(Robert Baptiste).  (படிக்க: ஆங்கில இந்து ஏடு The Hindu dtd May 7, 2020))
இவன் தீவிர கிறிஸ்துவ மத விசுவாசி. இவன் தன்னை
ஒரு ethical hacker என்று சொல்லிக் கொள்கிறான்.
 
இவன் ஆரோக்கிய சேது குறித்து மிகவும் பொத்தாம்
பொதுவாக சில உரிமை மீறல்களைச் சொன்னான்.
ஆரோக்கிய சேதுவின் source codeஐ வெளியிட வேண்டும்
என்றும் கூறினான்.

இந்தியாவில் யாரும் எதுவும் கூறவில்லை. பிரான்சு
நாட்டுக்காரனான இவனுக்கு source codeஐ வெளியிட
வேண்டுமாம்.

நமது நோய்கள் பற்றிய குறிப்பாக கொரோனா சார்ந்த
தகவல்களை இந்த ஆப் பெற்றுக் கொள்கிறது என்கிறான்
புழுவினும் இழிந்த ராபர்ட் பாப்டிஸ்ட். அதற்குத்தானேடா
இந்த ஆப். ஆரோக்கிய சேது என்பது கொரோனா வைரஸ்
குறித்த ஆப்.

பைத்தியம் பிடித்த மூதேவிகள் இந்தியாவில்தான்
அதிகம் என்று பார்த்தால், பிரான்சு நாட்டில்
இருந்தும் கோட்டிக்காரப் பயல்கள் இந்திய விவகாரங்களில்
தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முட்டாளுக்கு
source code வேண்டுமாம்!

மேற்குறிப்பிட்ட ஆங்கில இந்து ஏட்டின் செய்தியைப்
படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*****************************************************   
பின்குறிப்பு:
சேது என்ற சொல் நெல்லை மாவட்டத்தில் மிகவும்
பிரபலமான சொல். நெல்லையில் பலருக்கும் சேது
என்ற பெயர் இருக்கும். வீரவநல்லூரில் எங்கள் தெருவில்
சேது என்ற பெயரில் பலர் உண்டு. கம்ப ராமயாணத்தில்
சேது பந்தனப் படலம் என்று ஒரு படலம் உண்டு.
அதில் ஏதேனும் ஒரு பாடலை வாசகர்களால் சொல்ல
இயலுமா?
**********************************************************  

மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு
எஞ்சுறக் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணையில்
தஞ்சமென் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
(யுத்த காண்டம், சேது பந்தனப் படலம்)
(சேது= பாலம்; பந்தனம் = கட்டுதல்) 

எவ்வளவு அற்புதமான இடத்தில் கம்பர் தம்மை
ஆதரித்த புரவலர் சடையப்ப வள்ளலை உயர்த்தி
வைத்துள்ளார் என்பதை இப்பாடலில் காணலாம்.







 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக