செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

எல் ஐ சியை விற்க முடியாது!
நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவதை விட
மாற்றுப் பொருளாதாரத்தை முன்மொழிய வேண்டும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
திருப்பதி வெங்கடாசலபதியை பணக்காரக்
கடவுள் என்று சொல்லுவார்கள். அது போல
எல்ஐசி இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரப்
பொதுத்துறை நிறுவனம். அதை யாராலும் விற்க
இயலாது. விற்றாலும் யாராலும் வாங்க முடியாது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது
வாழைக்காய் கத்தரிக்காய் விற்பது போன்றதல்ல.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேட் வங்கி 99 சதம்
அரசுப் பங்குகளைக் கொண்டிருந்தது. தற்போது
61.23 சதம் அரசுப் பங்குகளைக் கொண்டு,
அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில்
சுமார் 38 சதம் பங்குகள் விற்கப் பட்டுள்ளது.

ONGC இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம்.
நவரத்னா அந்தஸ்துக்குரிய பொதுத்துறை நிறுவனம்.
இது தற்போது 81 சதம் அரசுப் பங்குகளைக் கொண்டு
அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கிறது. மீதிப் பங்குகள்
விற்கப் பட்டு விட்டன.

இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல இயலும்.
ONGCயின் பங்குகளை விற்க அரசு முனைந்தபோது
வாங்க நாதியில்லை. ஏனெனில் தனியார்
முதலாளிகளிடம் ONGCயின் பங்குகளை வாங்கப்
பணமில்லை. எனவே எல்ஐசி நிறுவனம் முன்வந்து
சுமார் 8 சதம் அளவுள்ள பங்குகளை வாங்கியது.

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை
முற்றிலுமாக மார்ச்சு மாதத்தில் விற்க அரசு
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யார் வாங்கப்
போகிறார் என்று தெரியவில்லை.

வக்கற்ற முதலாளிகள்!
---------------------------------------
அனைவரும் இந்த உண்மையை மனதில் பதிக்க
வேண்டும்.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை
நிறுவனங்களை தங்கத் தாம்பாளத்தில் வைத்து
விற்க அரசு முனைந்தாலும், அதை வாங்கும் சக்தி
இந்தியாவின் பெரு முதலாளிகளுக்கு இல்லை.
அம்பானி, அதானி. டாட்டா, பிர்லா என்று எந்தவொரு
தனியார் முதலாளியும் இந்தியாவின் பொதுத்துறை
நிறுவனங்களை வாங்க வக்கற்றவர்களே!
1995 முதல் நாளது தேதி வரையிலான 25 ஆண்டு கால
வரலாறு இந்த உண்மையைத் தாங்கி நிற்கிறது.

இந்த நிமிடம் வரை எல்ஐசி 100 சதம் அரசுப் பங்குகளைக்
கொண்டுள்ளது. எவ்வளவு சதம் பங்குகளை அரசு
விற்கப் போகிறது என்று அறிவிக்கப் படவில்லை.
ஆனால் நடப்பாண்டில் பங்கு விற்பனை இலக்கில்
பெரும்பகுதி எல்ஐசி பங்குகளை விற்பதன் மூலம்
பெற இயலும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மும்பை டெல்லி ஆகிய இரு நகரங்களில் மட்டும்
செயல்படும் MTNL என்னும் பொதுத்துறை
நிறுவனத்தில் 57 சதம் மட்டுமே அரசின் பங்காக
(57 percent stock) உள்ளது. தற்போது இந்நிறுவனம்
BSNL உடன் இணைக்கப் படுகிறது.

மேலே கூறிய நிறுவனங்களில் அரசின் பங்கு
பின்வருமாறு உள்ளது:-
1) MTNL = 57 சதம்
2) ONGC = 81 சதம்
3) SBI = 61,23 சதம்
4) LIC = 100 சதம்

பங்கு விற்பனைக்குப்பின், LICயில் அரசின் பங்குகள்
95 சதம் அல்லது 96 சதம் இருக்கக் கூடும்.

ஆக, என்ன நடக்கப் போகிறது என்றால், எல்ஐசியின்
பங்குகள் சிறிதளவுக்கு விற்கப்பட உள்ளன. மற்றப்படி
எல்ஐசியை விற்கப் போகிறார்கள் என்பதோ எல்ஐசியை
தனியார்மயம் ஆக்கப் போகிறார்கள் என்பது
உண்மையல்ல.

LPG பொருளாதாரம் என்றால் என்ன?
---------------------------------------------------------
1995 முதல் நாளது தேதி வரையிலான இந்தியப்
பொருளாதாரக் கட்டுமானத்தில், பொதுத்துறை
நிறுவங்களின் பங்கு விற்பனை ஒரு தவிர்க்க
இயலாத அம்சமாக இருந்து வருகிறது.

இந்த உலகமய, தனியார்மய, தாராளமயப்
பொருளாதாரத்தில் பங்கு விற்பனை என்பது
எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.
இந்தப் பொருளாதாரத்தின் பண்பு அது.

நடக்க இருக்கும் எல்ஐசியின் பங்கு விற்பனை என்பது
ஒரு நிகழ்வு (event) மட்டுமே. இந்த நிகழ்வானது ஒட்டு
மொத்த இந்திய பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத
பகுதி ஆகும்.

எனவே பங்கு விற்பனை கூடாது என்று எவ்வளவுதான்
கூச்சலிட்டாலும் பங்கு விற்பனை நடந்து கொண்டுதான்
இருக்கும். ஸ்டேட் வங்கியின் சுமார் 38 சதம் பங்குகள்
விற்கப் பட்டபோது இந்திய இடதுசாரிகள் நடத்திய புரட்சி
என்ன? ஒரு ரோமமும் இல்லை என்பதுதானே உண்மை!

ONGCயில் 19 சதம் பங்குகள் விற்கப்பட்ட போது
இந்தியாவில் நடந்த புரட்சி என்ன? இடதுசாரிகள்
ஏற்படுத்திய பூகம்பம் என்ன?

ஒரு நிகழ்வுக்கு மட்டும் எதிர்வினை ஆற்றுவதால்
என்ன பயனும் விளையாது. பங்கு விற்பனை என்பது
ஒரு நிகழ்வு. கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா,
ஒன்றிரண்டு நாள் வேலைநிறுத்தம் ஆகியவற்றால்
ஒரு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்ற முடியும்.
இந்த எதிர்வினைகளால் பங்கு விற்பனையைத்
தடுத்து நிறுத்த முடியாது.

மாற்றுப் பொருளாதாரம் எங்கே?
-----------------------------------------------------
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின்
தனியார்மய தாராளமய உலகமயப்
பொருளாதாரத்துக்குப் பதிலாக, அதற்கு முற்றிலும்
எதிரான ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை (alternate economy)
முன்வைக்க வேண்டும். அதன் மீது மக்களின்
ஆதரவைத் திரட்ட வேண்டும். மக்களைத் திரட்டிப்
போராட வேண்டும்.

இதைச் செய்யாமல் வெறுமனே அவ்வப்போது ஏற்படுகிற
நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவதால் எப்பயனும்
விளையாது.

ஆனால் இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் எதுவும்
LPG பொருளாதாரத்துக்கு எதிராக எந்த ஒரு
மாற்றுப் பொருளாதாரத்தையும் முன்வைக்கவில்லை.

கட்சிவாரியாகப் பரிசீலிக்கலாம்.
1) CPI: இக்கடசி ஏற்கனவே சித்தாந்த ரீதியாக
திவாலான கட்சி. இவர்களிடம் போய் மாற்றுப்
பொருளாதாரம் என்ன என்று கேட்பவன் மனச்சாட்சியே
இல்லாதவன்.

2) CPM: இவர்கள் எந்தவொரு மாற்றையும்
முன்வைக்கவில்லை. தற்போதைய LPG பொருளாதாரமே
சரியானது என்று கருதுகிறார்கள். ஆனால் அதை
வெளிப்படையாகச் சொல்லாமல், கபடத் தனமாக
நிகழ்வுகளின் மீது பலவீனமான எதிர்வினை
ஆற்றிக் கொண்டு மக்களையும் கட்சி அணிகளையும்
ஏமாற்றி வருகிறார்கள்.

3) மாவோயிஸ்டுகளைப் பொறுத்தமட்டில் அவர்களின்
அஜெண்டாவில் மாற்றுப் பொருளாதாரம்
என்பதற்கெல்லாம் இடமில்லை. மேலும் அவர்களின்
நடைமுறையும் (practice) அதற்கு அனுமதிப்பதில்லை.

4) பல்வேறு குழுக்களாகச் சிதறிக் கிடைக்கும்
ML குழுக்களில் எந்த ஒரு குழுவுக்கும் மாற்றுப்
பொருளாதாரம் குறித்து எந்தவொரு புரிதலும்
இல்லை. இதெல்லாம் அவர்களின் சிந்தனையின்
வரம்பைத் தாண்டிய விஷயங்கள்.

என்னால் கட்சி வாரியாக, குழு வாரியாக பட்டியல்
இட முடியும். இக்குழுக்களின் மிகப்பெரும் சித்தாந்த
"ஆளுமைகள்"(??) அனைவரையும் நான் நன்கறிவேன்.

இதுதான் மாற்றுப் பொருளாதாரம் என்று நாம் சொன்னால்
குட்டி முதலாளித்துவ அறியாமை, அகந்தை காரணமாக
நாம் சொல்வதை இந்தத் தற்குறியும் ஏற்க
மாட்டார்கள். அப்படி ஏற்காதவர்கள் சரித்திரத்தின்
தாழ்வாரங்களில் சருகாய் உலர்ந்து போவார்கள்.

ஆக, இறுதிக்கும்  இறுதியான பரிசீலனையில்
இது மட்டுமே தீர்வு!
ஒட்டு மொத்தமான ஒருங்கிணைத்த அணுகுமுறை
(integrated approach) இல்லாமல், ஒவ்வொரு நிகழ்வின்போதும்
அதற்கு மட்டுமான எதிர்வினை ஆற்றுவதால் எந்தப்
பயனும் விளையாது.

LPG பொருளாதாரத்துக்கு மாற்றாக, ஒரு மாற்றுப்
பொருளாதாரத்தை முன்வைக்காமல் LPG
பொருளாதாரத்தை வீழ்த்த முடியாது.
***********************************************     .
       

     

     

திங்கள், 3 பிப்ரவரி, 2020

திமுகவின் தேர்தல் வியூக நிபுணர்
பிரசாந்த் கிஷோரின் IQ என்ன?
(இது ஒரு அகாடமிக் கட்டுரை! அரசியல் கட்டுரை அல்ல)
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அண்மைக்கால இந்திய வரலாற்றில், நாட்டிலேயே
உச்ச பட்ச IQ உடையவர்களாக மூவர் இருந்தனர்.
1) கணித மேதை ராமானுஜன்
2) நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன்
3) சதுரங்க நிபுணர் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்து
அறிவித்தது நியூட்டன் அறிவியல் மன்றமே.
இதை அறிவியல் ஒளி ஏட்டில் வெளிவந்த ஒரு
கட்டுரையிலும் பதிவு செய்திருக்கிறேன்.

அரசியல்வாதிகள்தான் நாட்டை ஆள்கிறார்கள் என்று
நாம் அறிவோம். ஆனால் நாட்டை ஆள்வதற்குத்
தேவையான IQ அரசியல்வாதிகளிடம் கிடையாது.
எனவே அவர்கள் பெயரில்  IQ > 100 உடைய
அதிகார வர்க்கத்தினர் உண்மையில் நாட்டை
ஆள்கிறார்கள்.
     
எனினும் விதிவிலக்காக சில அரசியல்வாதிகள்
பிரமிக்கத்தக்க IQ  உடையவர்களாக இருக்கின்றனர்.
சுதந்திர போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி,
நேத்தாஜி, ராஜாஜி, வல்லப பாய் படேல், டாக்டர்
அம்பேத்கார், ஜவஹர்லால் நேரு ஆகியோர்
அதிகபட்ச IQ பெற்றுத் திகழ்ந்தனர். இவர்களில்
குறைவான IQ உடையவர் நேரு ஆவார்.
இவர்களோடு ஒரே வரிசையில் வைக்கத் தக்க
அளவுக்கு முகமது அலி ஜின்னாவின் IQ இல்லை.

சமகால அரசியலில் இந்தியாவின் நாடாளுமன்ற
அரசியல் தலைவர்களில் அதீத IQஉடன் முதலிடத்தில்
இருப்பவர்கள் மூவர்.
1) பிரகாஷ் காரத் (IQ = 121)
2) சீதாராம் யெச்சூரி (IQ = 121)
3) ப சிதம்பரம் (IQ = 120.8).

சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல் போன்ற
காங்கிரஸ் தலைவர்கள் IQ மதிப்பீட்டில் அடுத்த
அடுக்கில் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக IQ
கொண்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில்தான்
உள்ளனர்.

பாஜகவில் IQ அதிகமுள்ள தலைவர்கள் விரல் விட்டு
எண்ணத்தக்க நிலையிலேயே உள்ளனர். காங்கிரசுக்கு
இணையாக இந்த விஷயத்தில் பாஜகவைக் கருத
முடியாது.

பாஜகவிலும் IQ மிக அதிகமான மோகன் பாரிக்கர்,
அருண் ஜெட்லி ஆகியோர் இருந்தனர். ஆனால்
அவர்கள் இறந்து விட்டனர்.

காங்கிரஸ் பாஜகவைத் தாண்டி அரவிந்த் கெஜ்ரிவால்,
யோகேந்திர யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்க
IQ உடன் உள்ளனர்.

அரசியல் தலைவர்களைத் தாண்டி, தொழில்நுட்ப
வல்லுனர்களும் பெரும் IQ உடன் இன்றும் இந்தியாவில்
உள்ளனர். இவர்களும் பெரிதும் காங்கிரஸ் சார்பான
அறிஞர்களே. இவர்களில் குறிப்பிடத்தக்க இரண்டு
பேரை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

1) தகவல் தொழில்நுட்ப மேதையான சாம் பித்ரோடா,
2) ஆதார் அட்டையின் தந்தையான நந்தன் நிலக்கேணி
ஆகியோர் பிரமிக்கத்தக்க IQ (> 121) உடையவர்கள்.

இந்த இடத்தில் வாசகர்கள் ஓர் உண்மையை உணர்ந்து
கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளால் ஒருபோதும்
ஒரு விஞ்ஞானியின் அல்லது தொழில்நுட்ப அறிஞரின்
IQவை எட்ட முடியாது. ப சிதம்பரத்தால் ஒருபோதும்
சாம் பித்ரோடாவின் IQவை எட்ட முடியாது.

இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளில் அதிக IQ
உடையவராக ஜெயலலிதாவும் குறைந்த IQ
உடையவர்களாக  ராப்ரி தேவி, பாலபாரதி (CPM)
ஆகியோரும் திகழ்கின்றனர். மறைந்த சுஷ்மா
ஸ்வராஜ் அம்மையார் 100.4 IQ உடையவர்.

தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றிலேயே மிகக்
குறைந்த IQஉடன் அமைச்சராக இருந்தவர்
நம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் அவர்களே.
இவரின் IQ ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட
குழந்தைகளின் IQவை விடக் குறைவு.

ஆக, இதுவரை சொன்னது அனைத்தும் இக்கட்டுரையின்
பீடிகையே. என்ன செய்ய? இவ்வளவு நீண்ட பீடிகை
இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே சொல்ல வந்த
விஷயத்தைச் சொன்னால், எத்தனை பேருக்குப்
புரியும்? சரி, இப்போது பிரசாந்த் கிஷோரின் IQவுக்கு
வருவோம்.

பிரசாந்த் கிஷோர் அதிகமான IQ உடையவர் என்று
நினைத்திருந்தால், அந்த நினைப்பை உதறுங்கள்.
அவர் சராசரிக்குச் சற்றுக் கூடுதலான IQ உடையவர்
அவர்; அவ்வளவுதான்.

அவரின் IQ அதிகபட்சமாக 103.6 உள்ளது. இது மிகவும்
தாராளமாகப் போட்ட கணக்கு. பிரசாந்த் கிஷோர்
என்பவர் அறிவியல் அறிஞரோ தொழில்நுட்ப
மேதையோ அல்லர். தேர்தல் வியூகங்களை
வகுத்துத் தருபவர்.

தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பேரளவிலான
IQ தேவைப் படுவதில்லை. தமிழக அரசியலில்
கலைஞர் கருணாநிதி, தனிக்கட்சி நடத்திய
திருநாவுக்கரசர், சைதை துரைசாமி, கே கே எஸ் எஸ் ஆர்
ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாகத் தேர்தல்
வியூகம் வகுத்து வெற்றி கண்ட சாதனையாளர்கள்.
இவர்களில் எவர் ஒருவரின் IQவும் 102ஐத் தாண்டாது.

இதன் மூலம் தேர்தல் வியூகம் வகுக்க பெரிய பெரிய
IQ தேவைப்படாது என்பது நிரூபிக்கப் படுகிறது.

மேலும் திரு பிரசாந்த் கிஷோர் ஒரு செபாலாஜிஸ்ட்டும்
அல்லர். (Psephologist = தேர்தல் கணிப்பியல் நிபுணர்)
இந்த இடத்தில் இந்தியாவின் முதல் செபாலஜிஸ்ட்டான
பிரணாய் ராய் அவர்களை நினைவு கூர வேண்டும்.
தற்போதைய ND TVயின் அதிபர் இவர். இவரின்
IQ = 108 ஆகும்.

செபாலஜிஸ்ட் பிரணாய் ராயின் IQ 108 என்பதால்,
எல்லா செபாலஜிஸ்ட்களுக்கும் IQ 108 இருக்கும் என்று
கருதி விடக்கூடாது  குறிப்பாக நமது லயோலா
கல்லூரியின் Pseudo Psephologists சிறப்புக்குரியவர்கள்.
அவர்கள் 94க்கும் கீழான IQவை வைத்துக் கொண்டு
எடுத்த முடிவுக்கு ஏற்ப தேர்தலைக் கணிப்பவர்கள்.

ஆக, பிரசாந்த் கிஷோர் என்பவர் சராசரிக்குச்
சற்றே கூடுதலான IQ உடையவர். அவ்வளவுதான்.
இவர் மலையைப் புரட்டுவாரா மாட்டாரா என்பது
2021ல் தெரிந்து விடும்.

எனினும் திமுக பிரசாந்த் கிஷோரைக் கண்டு
பிரமிக்கிறது. வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிறது.
காரணம் என்னவெனில், திமுகவைப் பொறுத்த
மட்டில், பிரசாந்த் கிஷோரின் 103.6 IQ என்பது மகாப்
பெரிய IQ ஆகும். திமுகவிலேயே யாருக்கும் இந்த
IQ கிடையாது. ஆனானப்பட்ட சபரீசனே 101.8ல்தான்
உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்னும்போது,
பிரசாந்த் கிஷோரின் IQவைக் கண்டு திமுக தலைவர்      
கைகால் உதறிப் போனதில் வியப்பில்லை.
***************************************************  



ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்
நாட்பட்ட மலச்சிக்கலும்!
பட்ஜெட் 2020 பற்றிய பகுப்பாய்வுக் கட்டுரை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் அனைவரும்
நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் குறித்து
மயிர் பிளக்கும் விவாதத்தில் இறங்கி விட்டார்கள்.

இந்தியாவுக்கான பட்ஜெட் 2045ஆம் ஆண்டு வரையிலும்
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த உண்மை
மேற்படி உதிர்ந்த ரோமங்களுக்குத் தெரியாது..
ஆம், 1995 முதல் 2045 வரையிலான 50 ஆண்டுகளின்
பட்ஜெட் ஏற்கனவே போடப்பட்டு விட்டது.

1995 என்ன கணக்கு? இந்திய பொருளாதாரத்தின்
வரலாற்றை கிமு கிபி என்று பிரித்தால், 1995க்கு
முன், 1995க்குப் பின் என்று பிரிக்க வேண்டும்.

1995ல்தான் முதன் முதலாக இந்தியப் பொருளாதாரம்
திசை மாறியது. அதுவரை பயணம் செய்த திசைக்கு
நேர் எதிரான திசையில் இந்தியப் பொருளாதாரம்
பயணித்தது.

1995 ஜனவரி 1ஆம் தேதியன்று இந்தியா WTOவில்
உறுப்பினராகச் சேர்ந்தது. LPG கொள்கைகள்
செயல்பாட்டுக்கு வந்தன. இறக்குமதி மீதான
கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு
இந்தியச் சந்தையை அந்நிய நாட்டுப் பொருட்கள்
ஆக்கிரமித்தன.

அப்போது (1995 மற்றும் 1996) ஒரு பட்ஜெட் போட்டார்
டாக்டர் மன்மோகன் சிங். அதுதான் மூல பட்ஜெட்.
அதாவது இன்னும் 50  பட்ஜெட்டுகளுக்கான மூல
ஃ பார்முலா அது. அதில் காலத்துக்கேற்றபடி தேவையான
மதிப்புகளைப் பிரதியிட்டால் போதும் (substituting the values).
அந்தந்த ஆண்டுக்குத் தேவையான பட்ஜெட் கிடைத்து
விடும்.

இதை ஒரு ஃபார்முலா மூலம் விளக்கலாம்தான்.
ஆனால் அப்படி விளக்கினால் IQ < 91 உள்ளவர்களால்
படித்துப் புரிந்து கொள்ள முடியாது. அது என்ன
IQ 91? அதற்கு கீழ் போனால், ஆட்டிசம் என்று
கொள்ளலாம் என்கிறார் எனது நண்பரான ஒரு
சைக்கியாட்ரிஸ்ட். 

எனவேதான் எனது முந்தைய கட்டுரையில்,
ஆண்டுதோறும் நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பிப்பதை
தினசரி மலம் கழிப்பதுடன் ஒப்பிட்டு எழுதினேன்.
மனித குல வரலாற்றிலேயே பட்ஜெட் சமர்ப்பிப்பதை
மலம் கழிப்பதுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரே ஆள்
நான்தான். இப்படி ஒப்பிட்டு எழுத அறிவாற்றலுடன்
துணிச்சலும் வேண்டும். என்றாலும் தமிழ்நாட்டின்
போலி இடதுசாரிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஆட்டிச இடதுசாரிகள்!
---------------------------------
Adjective qualifies the noun! இந்திய இடதுசாரிகளுக்குப்
பொருத்தமான ஒரு adjective எதுவென்றால் ஆட்டிசம்தான்.
நாடாளுமன்ற இடதுசாரிகள் மற்றும் நாடாளுமன்றப்
பாதையை ஏற்காத இடதுசாரிகள் என சகல தரப்பு
இடதுசாரிகளுக்கும் பொருத்தமான adjective
ஆட்டிசம்தான். எனவே ஆட்டிச இடதுசாரிகள் என்ற
சொல்லாட்சியை தமிழ்ச் சமூகத்திற்கு வழங்குகிறேன்.

ஆடு + இசம் = ஆட்டிசம் என்று யாரும் கருதி விடக்
கூடாது. இங்கு ஆட்டிசம் (autism) என்பது ஆங்கிலச் சொல்.
ஆட்டிசம் குறித்து நன்கறிந்திட, தக்க
சைக்கியாட்ரிஸ்டுகளை நாடவும். எனினும்
ஆட்டிச இடதுசாரிகள் என்றால் ஆட்டு மூளை
இடதுசாரிகள் என்று அனைவரும் புரிந்து கொள்ளவும்.

எலும்பு கவ்வுவதில் முற்போக்கு!
----------------------------------------------
1995ல் LPG கொள்கைகளும் உலகமயப்பட்ட
ஏகாதிபத்திய சார்புப் பொருளாதாரக் கொள்கைகளும்
இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது,
ஆட்டிச இடதுசாரிகள் மூச்சுத் திணறிப் போனார்கள்.
அவர்களுக்குத் தலையும் புரியவில்லை; வாலும்
புரியவில்லை. இந்தப் புதிய சூழலை ஆதரிப்பதா
எதிர்ப்பதா, எப்படி எதிர் கொள்வது என்று ஒரு இழவும்
புரியவில்லை. புதிய பொருளாதாரத்தை
எதிர்கொள்வதற்கான எந்தவொரு ப்ளூ பிரிண்ட்டையும்
அவர்கள் தயாரிக்கவில்லை; இன்று வரை தயாரிக்க
இயல்வும் இல்லை.

எனவே ஆட்டிச இடதுசாரிகளின் மலச்சிக்கலுக்கு
கால் நூற்றாண்டு கால (1995-2020) துர்நாற்ற வரலாறு
உண்டு.

ஆட்டிச இடதுசாரிகள் யாருக்குச் சேவை செய்கிறார்கள்?
குரோனி முதலாளித்துவ, லஞ்ச ஊழல் பெருச்சாளிகளான
ராஜாத்தி அம்மாள், ஜகத் ரட்சகன், பாரிவேந்தர்,
கேடி பிரதர்ஸ், ஆண்டிமுத்து ராசா ஆகியோரைப்
பல்லக்கில் வைத்துச் சுமப்பதே நமது ஆட்டிச
இடதுசாரிகளின் புரட்சிப்பணி! இதற்கான எலும்புகளை
மு க ஸ்டாலின் அவ்வப்போது இவர்களை நோக்கி
வீசுவதும், இவர்கள் அதை லாவகமாய் வாயில்
கவ்விக் கொள்வதும் முற்போக்கான கலை
வடிவம் என்கிறது குட்டி முதலாளித்துவ தமுஎகச.

பட்ஜெட் என்றால் தனியார்மயம்தான்!
-----------------------------------------------------------
1995 முதல் நாளது தேதி வரை இந்தியாவில் எல்லா
பட்ஜெட்டும் தனியார்மய பட்ஜெட்டே. தனியார்மயம்
இல்லாத ஒரு பட்ஜெட்டை யாராவது காட்ட முடியுமா?

பட்ஜெட் என்பது அரசின் கொள்கையின் பிரதிபலிப்பு!
தனியார்மயம்தான் அரசின் கொலை என்று ஆன
பின்னால், யார் பட்ஜெட் போட்டாலும் அதில்
தனியார்மயம் இருக்கும். எனவே எல் ஐ சி
தனியார்மயம் ஆகிறதாமே என்பதில் எந்தச்
செய்தி மதிப்பும் இல்லை (No news value at all).

ஏதேனும் ஒன்று தனியார்மயம் ஆகாமல் இருந்தால்
அதுதான் செய்தி! (உதாரணம் BSNL).

ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்!
-----------------------------------------------------------
பூர்ஷ்வா பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்!
இந்தியாவின் புதிய பொருளாதாரத்தின் தந்தை
டாக்டர் மன்மோகன் சிங். அதன் சிற்பிகள் நரசிம்மராவ்,
ப சிதம்பரம் ஆகியோர். தாராளமயம் வந்த பிறகுதான்
ராஜாத்தி அம்மாள் போன்ற புழுவினும் இழிந்த
தற்குறிகளால் பொருளாதார நிபுணராக முடிந்தது.
சொத்து சேர்க்க முடிந்தது; வெளிநாடுகளில் சொத்து
வாங்கிக் குவிக்க முடிந்தது. புதுப்பணக்காரர்கள் என்ற
புதிய வர்க்கம் இந்தியாவில் உருவானது. 

கழுதை காமம் கத்தித் தீரும்!
--------------------------------------------
கழுதைகளுக்கு காம உணர்வு மிகுந்த உடனே 
அவை காள் காள் என்று கத்தத் தொடங்கும்.
கத்திக் கத்தி, தொண்டை வறண்டு, சக்தியெல்லாம் 
கத்துவதிலேயே செலவழிந்து கடைசியில் 
கழுதைகளின் காமம் அடங்கி விடும். இதையே 
கழுதை காமம் கத்தித் தீரும் என்ற பழமொழி
உணர்த்தும்.

நமது ஆட்டிச இடதுசாரிகளும் ஒவ்வொரு பட்ஜெட்
வந்ததுமே சில நாட்கள் கத்திப்பின்னர் அடங்கி 
விடுவார்கள். இதை கடந்த 25 ஆண்டுகளாக 
இந்த நாடு பார்த்து வருகிறது.

ஆக, பட்ஜெட் சமர்ப்பிப்பதும் மலம் கழிப்பதும் சமம் 
என்று நான் சொன்னது சரிதான் என்று இங்கு 
நிரூபித்து இருக்கிறேன். மறுக்க முடியுமா?
*********************************************************      



 
       
   

   


  



  

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

BSNL நிறுவனத்தை யாரும் விழுங்கவில்லை.
யாரும் விழுங்கவும் இயலாது. தனியார்
நிறுவனங்கள் (ஏர்டெல், ஜியோ போன்றவை)
திட்டமிட்டு BSNLக்கு எதிராக, இழிந்த பொய்களைத்
திட்டமிட்டுப் பரப்புகின்றன. தங்களைப்
போன்றவர்கள் முகநூலில் BSNLக்கு எதிராகவும்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எழுதி
வருகிறீர்கள்.

BSNLல் பல்லாயிரம் கோடிரூபாய் செலவில்
புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப் பட்டு
வருகிறது. BSNL  மறுமலர்ச்சிப் பாதையில்
பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
4G service roll outக்கான பணிகள் அதிதீவிரமாக
கொண்டிருக்கிறன. ஊழியர்கள் VRSல் செல்வது
என்பது புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.

லட்சக் கணக்கான BSNL தொழிலாளர்களும்
அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட CPI, CPM
தொழிற்சங்கங்களும் இந்தப் புத்தாக்கத் திட்டத்தை
வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளன.

BSNL என்பது முற்றிலும் அறிவியல் தொழில்நுட்பம்
சார்ந்த ஒரு நிறுவனம். குறைந்தபட்சமான அறிவியல்
தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே
BSNL குறித்துப் புரிந்து கொள்ள முடியும். எனவே
அருள்கூர்ந்து BSNL க்கு எதிரான கருத்துக்களைப்
பரப்புவதை உடனே நிறுத்தவும்.
                
ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்
நாட்பட்ட மலச்சிக்கலும்!
(பட்ஜெட் 2020 பகுப்பாய்வுக் கட்டுரை)
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
அந்த நாள் ஓர் இனிய நாள்! அதுதான் 1995ஆம் ஆண்டின்
ஜனவரி முதல் நாள் (01.01.1995). ஏறக்குறைய கால்
நூற்றாண்டு காலம் ஆன பின்னும் அந்த நாள்தான்
இன்றும் இந்தியாவின் பட்ஜெட்டுகளில் ஆதிக்கம்
செலுத்தி வருகிறது.

அந்த நாளில்தான் இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில்
இணைந்தது. நரசிம்ம ராவ் பிரதமராகவும், பிரணாப்
முகர்ஜி வணிகத் துறை அமைச்சராகவும் இருந்தபோது
WTO ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப் பட்டது.
LPG கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்தன.
இறக்குமதிக்கான தடைகள் நீங்கின. அந்நிய நாட்டுப்
பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத்
தொடங்கின.

சுருங்கக் கூறின், இந்தியப் பொருளாதாரம் இதுவரை
பயணம் செய்த திசைக்கு நேர் எதிரான திசையில்
பயணம் செய்யத் தொடங்கியது. 1995க்கு முன்
கிழக்கு திசையில் பயணம் என்றால், 1995க்குப் பின்
மேற்கு திசையை நோக்கிய பயணம்!

அப்போது இந்தியாவின் புதிய பட்ஜெட்டை டாக்டர்
மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து
வந்த அனைத்து பட்ஜெட்டுகளும், இன்றைய
நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் உட்பட , டாக்டர்
மன்மோகன் சிங்கின் புதிய பட்ஜெட்டின் மறுபதிப்புகளே.

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை
1995ல், 1996ல்  டாக்டர் மன்மோகன்சிங் ஏற்கனவே
தாக்கல் செய்து விட்டார். அதில் விட்ட குறை தொட்ட
குறை இருந்ததையும் அடுத்து வந்த ப சிதம்பரம்
நிவர்த்தி செய்து முழுமை ஆக்கி விட்டார்.

ஆக, 1995 முதல் 2045 வரை ஒரே பட்ஜெட்தான்.
ஆண்டுதோறும் மாறி வரும் பட்ஜெட் என்று
யாராவது நினைத்தால் அவர்கள் பரிதாபத்துக்கு
உரியவர்கள்.

1995 முதல் 2045 வரையிலான 50 ஆண்டுகளின்
பட்ஜெட் ஒரே பட்ஜெட்தான். அதே நேரத்தில் 2045ல்
ஏதாவது மாற்றம் வரும் என்று நான் சொல்லத்
தயாராக இல்லை. இங்கு மாற்றம் என்பது
அடிப்படையான மாற்றம் (paradigm shift) என்று
பொருள்படும்.


  . 



    
  

   

சனி, 1 பிப்ரவரி, 2020

தவறான பிரச்சாரங்களைத் தடுப்போம்! எல்ஐசியைக் காப்போம்!
-அறிவுக்கடல்
'எல்ஐசி தனியார்மயமாகிறது' என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது இயல்பானதே.
அரசின் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடியை, மக்கள் சேமிப்பிலிருந்து திரட்டித் தந்துகொண்டிருக்கிற ஒரு மாபெரும் நிறுவனம் அரசின் கையைவிட்டுப் போவது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்பதால் உறுதியான எதிர்ப்புடன் போராடி, தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நடவடிக்கையே.
அதே நேரத்தில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படுகிற, ஏற்படுத்தப்படுகிற அச்சங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன. எல்ஐசியுடன் 23 தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கிற நிலையில், முக்கால் பங்கு(74.71 சதவீதம்) சந்தைப் பங்கினை எல்ஐசி கொண்டிருக்கிறது. அதாவது, தனியார் நிறுவனங்களின் சராசரி சந்தைப் பங்கு வெறும் 1.09 சதவீதம்.
தனியார் அனுமதிக்கப்பட்ட பிற துறைகள் அனைத்திலும் ஒரு சில ஆண்டுகளிலேயே, சந்தையின் மிகப்பெரிய பங்கினை கைப்பற்றிவிட்ட தனியார், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும், 20 ஆண்டுகளாக முயற்சித்தும் ஒரு சதவீதத்தைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது என்பதே, எல்ஐசியின் நம்பகத்தன்மைக்கு சான்று. அப்படியான நம்பகத்தன்மைகொண்ட நிறுவனத்துடன் போராட முடியாத நிலையில், அந்நிறுவனத்தை பலவீனப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இயல்பே.
அத்தகைய ஒரு முயற்சியே, சில நாட்களுக்கு முன் பரபரப்பையூட்டிய, எல்ஐசியின் வராக்கடன் பற்றிய செய்தியாகும். இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவுவதை, பெரு முதலாளிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பல துறைகளும் அதனால் ஆட்குறைப்பு செய்வதையும் அன்றாடம் செய்திகளில் காண முடிகிறது. அப்படியான வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு, அவற்றுக்கு நிதியுதவி அளித்திருக்கிற வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிலும் வராக்கடனாக வெளிப்பட்டிருக்கிறது. எனவே, வராக் கடனுக்குக் காரணம் இந்த அரசு கடைப்பிடித்துக்கொண்டிருக்கிற பொருளாதாரக் கொள்கைகளே.
அப்படியான வராக் கடனைக்கூட, வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களின் வராக்கடனுடன் ஒப்பிட்டால், மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது ஒருபுறம். மறுபுறம், எல்ஐசி நிர்வகிக்கும் ரூ.31 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால், சுமார் ரூ.30 ஆயிரம் கோடி என்பது, சதவீத அடிப்படையிலேயே மிகமிகக் குறைவு என்பதும் புரியும். ஆனாலும், ஏதோ எல்ஐசியே திவாலாகிவிடப் போவதுபோன்ற பதட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதைப் போன்றதொரு நடவடிக்கையே, தற்போது, எல்ஐசி தனியார்மயமாக்கப்பட்டு, 40 கோடி மக்களின் பணமும் பறிபோய்விடும் என்ற பிரச்சாரமும்.
இப்பிரச்சாரத்தைச் செய்வதன்மூலம், அதைச் செய்பவர்களே ஒரு செய்தியை ஒப்புக்கொள்கிறார்கள். அது, தனியாரிடம் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்காது என்பதுதான்.
அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.
எல்ஐசியின் ஒரு குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்று, பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு முயற்சிக்கிறது என்பதுதான் உண்மை. வெறும் ரூ.100 கோடி முதலீட்டைச் செய்த அரசிற்கு, லாபத்தில் பங்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.2610 கோடியைத் தருகிற ஒரு நிறுவனத்தை விற்பது, பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக, மாதம் மூவாயிரம் ரூபாய்க்குப் பால் கறக்கும், கறவை மாட்டை விற்பதுபோன்ற புத்திசாலித்தனமாகும்.
ஆனால், மாட்டை விற்றதும், மாடு வாங்கியவரிடம் சென்று விடுவதைப் போல, எல்ஐசியின் நிர்வாகம் மாறிவிடப்போவதில்லை. விற்கப்பட்ட பங்குகளுக்கான லாபப் பங்கையும், மக்களின் சேமிப்பிலிருந்து கிடைக்கும் நிதியையும் அரசு இழக்கப் போகிறது என்பது, அனைத்துப் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே. அதனால், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகிற இழப்பு, பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின்மீது விழுந்த அடியாக, 134 கோடி மக்களின்மீதும் விழப்போகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்காக, 40 கோடிப் பாலிசிதாரர்களின் நிதியும் காணாமல் போய்விடுமா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக, டிசம்பர் 2019 நிலவரப்படி, ஸ்டேட் வங்கியின் 42.32 சதவீதப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் 57.68 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிற அரசுதான் இன்றும் அதன் உரிமையாளர். பங்கு விற்பனைக்குப்பின் ஸ்டேட் வங்கியில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால், எல்ஐசிக்குப் பாதிப்பே இல்லையா, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? பாதிப்பு இல்லை என்று சொல்லவில்லை. பாதிப்பு எவ்வளவு, யாருக்கு என்பதெல்லாம்தான் மறைக்கப்பட்ட உண்மைகள்.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துவதால், இந்தியாவின் பொதுமக்களுக்குத்தான் முதல் பாதிப்பு. பாலிசிதாரராகப் பார்த்தால், தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாகம் சென்றால், அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டால், தவறான நிர்வாகத்தால் இழப்பு ஏற்படலாம். 1994இல் முதல் பங்கு விற்பனை செய்யப்பட்ட ஸ்டேட் வங்கியின் 40 சதவீதப் பங்குகளை விற்க கால் நூற்றாண்டு ஆகியுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஏற்கெனவே அரசு விற்பதாக அறிவித்திருக்கிற பல நிறுவனங்களை விற்காமல், சரியாகச் சொன்னால் விற்க முடியாமல் இருப்பதற்குக் காரணமே வாங்குமளவுக்கு சந்தையில் நிதிப்புழக்கம் இல்லாததுதான். சிறிய நிறுவனங்களுக்கே அதுதான் நிலை என்னும்போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை வாங்க நிதி வேண்டுமல்லவா?
அரசின் மற்ற நிறுவனங்களை விற்றபோது, எல்ஐசிதான் கணிசமான பங்குகளை வாங்கி உதவியது. அதாவது, எல்ஐசியிம் மட்டும்தான் அவ்வளவு நிதியிருந்தது. அப்படிப்பட்ட எல்ஐசியை வாங்க? அதனால், எல்ஐசியின் பங்குகளை விற்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், பண்ட பாத்திரங்களை விற்கும் குடிகாரனைப் போல இந்த அரசு, எதை விற்றாவது, அடிமாட்டு விலைக்கு விற்றாவது பற்றாக்குறையைச் சரிசெய்யவேண்டிய மிகமோசமான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதால், எப்படியாவது விற்க முயற்சி செய்யும் என்பதுதான் உண்மை. அந்த விற்பனை உடனடியாக எல்ஐசி வாடிக்கையாளர்களைப் பாதிக்கப் போவதில்லை.
ஆனால், 64 ஆண்டுகளில் எல்ஐசி ஒருமுறைகூடப் பயன்படுத்தியிராத, அரசு உத்தரவாதம் இல்லாமற்போகும். எல்ஐசிக்கு அரசு உத்தரவாதம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்படும். லாபத்தில் நிறுவனத்தின் உரிமையாளருக்கும், பாலிசிதாரருக்கும் வழங்கும் பங்கின் விகிதம் மாறுவதால், பின்னாளில் போனஸ் குறைக்கப்படலாம். இவற்றின்மூலம் அரசு உதவ முயற்சிப்பது தனியார் நிறுவனங்களுக்கே.
தனியார் முதலாளிகளிடம் நிதி வாங்கி, ஆட்சியைப் பிடித்தபின், அவர்களுக்காக, அரசின் நிறுவனங்களுக்கே கேடு விளைவிப்பதைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளினால், இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்படும் பாதிப்புகளைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு பறிபோய்விடும் என்பதான தப்புப் பிரச்சாரத்தைத்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
இவற்றை மட்டும் எதிர்ப்போம்!
கோபுரங்கள் சாய்வதில்லை!
மறுமலர்ச்சிப் பாதையில் BSNLன் பீடுநடை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
ஜனவரி 31, 2020 அன்று BSNL மற்றும் MTNL ஆகிய
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களில் VRS மூலம்
ஒரு லட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலேயே
BSNL  நலிவுறத் தொடங்கி இருந்தது. Incipient sickness என்பது
அன்றே 2010ல்தொடங்கி இருந்தது.
(Incipient sickness = ஆரம்ப நிலையிலான நலிவுறுதல்)

BSNL குறித்து ஆராய, சாம் பித்ரோடா தலைமையில்
டாக்டர் மன்மோகன் சிங் 2012ல் ஒரு குழுவை அமைத்தார்.
BSNLன் inflated population கண்டு அதிர்ந்து போன
சாம் பித்ரோடா, அன்று இருந்த மூன்று லட்சம்
ஊழியர்கள் என்ற எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேரைக்
குறைக்க வேண்டும் என்றும் அதற்கு VRS வழங்க
வேண்டும் என்றும்  பரிந்துரைத்தார். இதற்கு ஆகும்
செலவு ரூ 12,000 கோடி என்றும் கணக்கிட்டு இருந்தார்
சாம் பித்ரோடா.

ஆனால் டாக்டர் மன்மோகன்சிங்கின் அரசு VRSக்குத்
தேவையான நிதியை BSNLக்கு வழங்க முன்வரவில்லை.
அமைச்சர் கபில் சிபலும் கண்டு கொள்ளவில்லை. எனவே
VRS திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அன்று சாம் பித்ரோடா குழு என்ன அறிக்கை அளித்ததோ
அதே அறிக்கையைத்தான் இன்று ஐஐஎம் அகமதாபாத்
நிபுணர் குழுவும் அளித்துள்ளது. ஆனால் அன்று
மன்மோகன்சிங் அரசு தர மறுத்த நிதியை இன்று
மோடி அரசு  (ரூ 30,000 கோடி) தருகிறது.

புத்தாக்கத் திட்டம் (Revival plan)
-----------------------------------------------
VRS என்பது தனித்த ஒரு திட்டம் அல்ல. மாறாக ஒட்டு மொத்த
BSNLன் புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.
புத்தாக்கத்  திட்டம் பின்வருமாறு:-

அ) VRS திட்டத்தின் Ex Gratia வழங்கும் செலவு = ரூ 17,169 கோடி.
ஆ) Pensionary benefits preponed வழங்கும் செலவு = ரூ 12,768 கோடி.
இ) 4G அலைக்கற்றை BSNLக்கு = ரூ 14,115 கோடி
ஈ) 4G அலைக்கற்றை MTNLக்கு = ரூ 6295 கோடி
உ) அலைக்கற்றைக்கான GST வரி = ரூ 3674 கோடி.
ஊ) BSNL, MTNLக்கு மேலும் வழங்கும் நிதி = ரூ 15,000 கோடி.

இந்த ரூ 15,000 கோடியை உறுதிப் பத்திரங்கள் மூலமாக
(Sovereign guarantee bonds) மத்திய அரசு வழங்கும்.
மேற்கூறிய அ), ஆ), உ) ஆகிய மூன்று இனங்களுக்கும்
ரூ 33,611 கோடி நிதியை அரசு நேரடியாக வழங்கும்.

இ) மற்றும் ஈ) இனங்களுக்கு முறையே Equity infusion
மூலமும், preference shares மூலமும் மத்திய அரசு
நிதி வழங்கும்.

களையெடுப்புக்குப் பதில் தங்கக் கைகுலுக்கல்!
----------------------------------------------------------------------------
ஒருவேளை அ) BSNLஐ மூடி விடுவது என்றோ அல்லது
ஆ) ஆட்குறைப்புச் செய்து முதல் கட்டமாக 50,000 பேரை
வெளியேற்றுவது  என்றோ மோடி அரசு முடிவெடுத்து
இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ) மூடுவது என்றால், OFFICIAL LIQUIDATOR வந்திருப்பார்.
அவர் BSNLஐ இழுத்து மூடி, எல்லோரையும் வெளியேற்றி,
இருக்கும் சொத்துக்களைக் கணக்கெடுத்து அரசிடம்
கொடுத்திருப்பார். அப்போது எல்லோரும்
Liquidator பற்றியே பேசிக் கொண்டிருப்போம். Liquidator
என்ற புதிய சொல் BSNLல் பேசுபொருள் ஆகியிருக்கும்.

ஆ) ஆட்குறைப்புச் செய்வது என்றால், அதை CRS
எனப்படும் கட்டாய ஒய்வு மூலமே செய்ய முடியும்.
இது ஒரு   மாபெரும் களையெடுப்பாக (Great purge)
இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக மனக்கசப்புக்கு
இடமில்லாமல் VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் மூலம்
வீட்டுக்குச் செல்கிறார்கள் BSNL ஊழியர்கள்.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
-----------------------------------------------------
ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரி 152 சத DAவுடன்
VRS 2019ல் செல்கிறார். அவர் Ex Gratiaவாக மட்டும்
ஓராண்டுக்கு ரூ 9 லட்சம் பெறுகிறார். இந்த அதிகாரியின்
வயது 55 என்றால், 60 வயது வரையிலான ஐந்தாண்டு
காலத்திற்கு  அவர் Ex Gratiaவாக ரூ 45 லட்சம் பெறுவார்.
அத்துடன் மாதந்தோறும் Basic Pensionஆக ரூ 50,400 பெறுவார்.
கிராச்சுட்டி commutation போன்றவை பின்னர் கிடைக்கும்.
இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை!

இந்த உதாரணம் புரிந்ததா? புரிந்திருக்காது.
60 வயதில் இயற்கையாக ஒய்வு பெற வேண்டிய ஒரு
அதிகாரி, 55 வயதில் VRS மூலம் ஒய்வு பெறுகிறார்.
60 வயது வரை வேலை பார்த்தால்,
அதாவது (5 x 12 = 60) இன்னும் 6 மாதங்கள் வேலை
பார்த்தால், அவருக்கு என்ன சம்பளம்
கிடைத்திருக்குமோ, அந்தத் தொகையை ExGraita
என்னும் கருணைத் தொகையின் மூலம் அரசு
ஈடு செய்கிறது. அந்தத் தொகைதான் மேலே கூறிய
45 லட்சம். இது  உதாரணம் மட்டுமே. அவரவரின்
சம்பளத்தைப் பொறுத்து 60 லட்சம், 80 லட்சம்
என்ற அளவில் தொகை உயர்ந்து கொண்டே செல்லும்.

இது போக, 60 வயதில் கிடைக்க வேண்டிய பென்சன்
ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே கிடைக்கிறது.
அதாவது இந்த உதாரணத்தில் சொல்லப்பட்ட
அதிகாரி ரூ 45 லட்சத்தை இரண்டு தவணைகளில்
பெறுவார். மாதாந்திர பென்ஷனாக ரூ 50,400
பெப்ரவரி 2020 முதல் பெறுவார்.

ஊழியர்களுக்கு இணையாக DGM, DE போன்ற
அதிகாரிகளும் VRSல் செல்கின்றனர். உண்மையில்
ஊழியர்களை விட அதிகாரிகள்தான் அதிக
எண்ணிக்கையில் (in terms of percentage) VRSல்
சென்றுள்ளனர்.

தனியார் நிறுவனக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை!
---------------------------------------------------------------------------------
BSNLன் VRS என்பது புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.
இது எவ்விதத்திலும் கட்டாய ஒய்வு அல்ல. BSNLன்
தொழிற்சங்கங்களும் ஊழியர்களும் இந்த VRSஐயும்
புத்தாக்கத் திட்டத்தையும் முழுமனதுடன் ஏற்றுக்
கொண்டுள்ளனர். 
           
ஆனால் தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகளாகச்
செயல்படும், புழுவினும் இழிந்த குட்டி முதலாளியத்
தற்குறிகளும் ஊடக வேசிப்பயல்களும் BSNL
அழிந்து விட்டது என்றும் BSNLஐ விற்று விட்டார்கள்
என்றும் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று
எச்சரிக்கிறோம்.
******************************************************







தற்போது நடப்பது BSNLன் தொழில்நுட்ப 
சொத்துக்களின் விற்பனை.கட்டிடங்கள் போன்ற 
சொத்துக்கள் வேறு. OFC வலைப்பின்னல் 
போன்ற சொத்துக்கள் வேறு.

BSNL ல் 68,000 கோபுரங்கள் உள்ளன.இவற்றில்  
13,000 கோபுரங்களை தனியார் நிறுவனங்களுக்கு 
BSNL வாடகைக்கு விடுகிறது. இதன் மூலம் 
ஆண்டொன்றுக்கு ரூ 1000 கோடி வருவாய் 
ஈட்டுகிறது BSNL

மேலும் கண்ணடி இழை கேபிள்களில் (OFC)
பயன்படுத்தப்படாத பகுதியை வாடகைக்கு 
விடுகிறது BSNL. இதன் மூலம் ஆண்டு வருவாய் 
ரூ 400 கோடியை BSNL ஈட்டுகிறது. மேற்கூறிய 
நடவடிக்கைகள் அனைத்தும் ASSET MONETISATION    
ஆகும். விற்பனை மட்டுமே MONETISATION என்று 
பொருள்கொள்ளக் கூடாது.