திங்கள், 15 நவம்பர், 2021

 நவம்பர் 14 யாருடைய பிறந்த நாள்?

ஏன் அதைக் கொண்டாடவேண்டும்?

டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின் 

பிறந்த நாளே நவம்பர் 14.

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

நீரழிவு நோய்க்கு மருந்தாகும் இன்சுலினைக் 

கண்டுபிடித்த டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின்

பிறந்த நாள்தான் நவம்பர் 14.


டாக்டர் பான்டிங்கின் பிறந்த நாளை ஆண்டுதோறும் 

உலக நீரழிவு நாளாகக் கொண்டாட வேண்டும் 

என்று ஐநா சபை முடிவு செய்தது. அதன்படி 

நவம்பர் 14 உலக நீரழிவு நாளாகக் கொண்டாடப் 

பட்டு வருகிறது.


1923ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு 

மருந்தியல் துறையில் (PHYSIOLOGY AND MEDICINE)

இருவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டது.

1. டாக்டர் பிரடெரிக் பான்டிங் 

(Dr Frederick Grant Banting)

2. டாக்டர் ஜான் மேக்லியாட் 

( Dr John James Rickard Macleod)

ஆகிய இருவரும் பரிசைச் சமாகப் பகிர்ந்து 

கொண்டனர்.

பரிசு எதற்காக வழங்கப் பட்டது?

இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. 

இவர்கள் இருவரும் நீரழிவு நோய்க்கு 

மருந்தாகப் பயன்படும் இன்சுலினைக் 

கண்டு பிடித்தனர்.

"The Nobel prize in physiology or medicine 1923 

was jointly awarded for the discovery of insulin" 

என்று Nobel prize citation குறிப்பிடுகிறது.

இன்சுலினைக் கண்டு பிடித்து உலகிற்கு 

வழங்கி கோடானுகோடி உயிர்களைக் 

காப்பாற்றிய 

டாக்டர் பிரடெரிக் பான்டிங்

டாக்டர் ஜான் மேக்லியாட்

ஆகிய இருவருக்கும் தலை வணங்குவோம்!

--------------------------------------------------------

பின்குறிப்பு:

-----------------

இன்சுலினைக் கண்டு பிடித்தமைக்காக

இரண்டு பேருக்கு 1923ஆம்

ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

பெனிசிலினைக் கண்டு பிடித்த மூவருக்கு

1945ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு

வழங்கப் பட்டது.

இன்சுலின்......... 1923.

பெனிசிலின்,,,,,,1945.

இன்சுலினையும் பென்சிலினையும் வாசகர்கள் 

குழப்பிக் கொள்ளக் கூடாது.

**************************************************   


தன்னுடைய கண்டுபிடிப்பான இன்சுலின்  

எல்லாருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் 

என்பதற்காக வெறும் ஒரு டாலருக்கு 

கனடாவின் டொரோண்டா பல்கலைக்கு 

கொடுத்தவர் டாக்டர் பாண்டிங்.

 


மார்க்சையும் லெனினையும் வச்சுக்கிட்டு

என்ன மயிரைப் புடுங்க முடியும்?

கூத்தாடி சூர்யாதான் சூப்பர் முற்போக்கு

என்கிறான் நம்மூர் போலி நக்சல்பாரி.

  


மகாராஷ்டிராவில் 26 மாவோயிஸ்டுகளை 

என்கவுண்டரில் படுகொலை செய்த 

உத்தவ தாக்கரேயின் போலீசை 

கண்டிக்க மாட்டான் போலி நக்சல்பாரி.


=====================================

கோவை சிறுமியின் மரணத்திற்கு காரணமான 

பாலியல் குற்றவாளி மிதுன் சக்கரவர்த்தியும் 

அவனோடு தகாத உறவு வைத்திருந்த 

பள்ளித் தலைமையாசிரியை மீரா ஜாக்சனும் 

தற்போது போக்ஸோ சட்டத்தில் கைதாகி உள்ளனர்.


என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு 


நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு 

மாலெ இயக்கத்தில் செயல்பட்டதால் 

நான் இழந்த கணக்கற்ற விஷயங்களில் 

சதுரங்கமும் ஒன்று.


சராசரித்தனமான ஈடுபாட்டுடன் விளையாடி 

இருந்தாலே குறைந்தபட்சம் National A வரை 

நான் போயிருப்பேன். கல்லூரியில் 

படித்தபோது எங்கள் கல்லூரியில் 

நானும் நடராசன் என்ற மாணவரும் 

மட்டுமே சதுரங்கம் ஆடுபவர்கள்.

இருவருமே physics major. 

அது பாபி பிஷர் காலம்.


ஆனால் நான் ஈடுபாடு கொள்ளவே இல்லை.

அகில இந்திய அளவிலான மேட்ச்சுகளில் 

முறையாகப் பங்கேற்று முறையாக

ஆடிஇருந்தால், எங்கள் துறையில்  

(TELECOM) அகில இந்திய அளவில்

பிரகாசித்து இருக்க முடியும். அகில 

இந்திய ரேங்க் இருந்தால் National A, 

National B லெவலுக்குச் செல்வது எளிது.


பணிஓய்வு பெறும் முன்பு கடைசி 

மூன்று நாலு ஆண்டுகளில் எங்கள் 

கோட்டத்தில் சதுரங்கப் போட்டிக்கு 

நடுவராக (Arbiter) இருந்தேன். 

எப்போதுமே round robin முறையில்தான் 

போட்டிகளை நடத்துவேன்.


Round Robin முறை பற்றித் 

தெரிந்தவர்களுக்கு மிகவும் நியாயமான 

சமத்துவ முறை அதுதான் என்று தெரியும். 

Elimination முறையை நான் கையாண்டதே 

இல்லை.


நான் என்னை ஒரு உலக சாலஞ்சராக 

கற்பனை கூடச் செய்து கொள்ள முடியாது.

அதற்கான ஆட்டத்திறனுக்கு வெகுபாதளத்தில்

நான் உட்கார்ந்து இருக்கிறேன்.


அடுத்த பிறவியில் (பிறவி இருந்தால்)

சாலஞ்சராகவும் சாம்பியனாகவும் ஆவேன்.

இந்தப் பின்னூட்டத்தை எழுதுவதற்கு முன் 

ஒரு மினி chess game இணையத்தில் 

ஆடினேன். எழுதும்போது என் 

கண்களைக் கண்ணீர் நிறைக்கிறது. 

           

இன்சுலினைக் கண்டுபிடித்த 

டாக்டர் பான்டிங் (Dr Banting) காப்புரிமை 

கோரவில்லை. வெறும் 1 டாலருக்கு கனடா 

பல்கலைக்கு வழங்கினார்.         


இன்சுலின் பற்றிய டாக்டர் பாண்டிங் பற்றிய 

என்னுடைய குறுங் கட்டுரை இதே முகநூலில் 

உள்ளது. அதைப்  படியுங்கள். 


இல்லை, நண்பரே. ஆனந்தின் 

championship chess career சில ஆண்டுகளுக்கு 

முன்பே முடிவுற்று விட்டது. மாக்னஸ் 

கார்ல்சனை  எதிர்த்து விளையாட 

அதாவது challengerஐ நிர்ணயிக்கும் போட்டி 

நடைபெற்றது. candidates tournament

எனப்படும் அதில் பங்கேற்றார். அது ஒரு 

double round robin போட்டி. துரதிருஷ்ட 

வசமாக ஆனந்த் அதில் தோற்று விட்டார்.

எனவே அவர் சாலஞ்சராக முடியவில்லை.

இத்தோடு அவரின் championship career

முடிந்து விட்டது.


உலக சாம்பியன் போட்டி என்பது இரண்டே 

இரண்டு பேருக்கு இடையில் மட்டும் 

நடக்கும் போட்டி ஆகும். அதாவது நடப்பு 

சாம்பியனுக்கும் சாலஞ்சருக்கும் இடையே 

மட்டும்தான் நடைபெறும். எனவே துபாய் 

போட்டியில் ஆனந்த் இல்லை. 


உலக சாம்பியன் பதவியை 

கார்ல்சன் தக்க வைத்துக் கொள்வதற்கே 

நிகழ்தகவு அதிகம்.

முதல் இடத்தில் உள்ள கார்ல்சனும் 

5ஆம் இடத்தில் உள்ள நெப்போவும் 

மோதட்டும். விளைவைப் பார்ப்போம்.   

    


சரஸ்வதி காலக்சி பற்றி நாலைந்து 

வாக்கியங்கள் எழுதுக. 

முதல் வாக்கியம்: இது இந்திய 

விஞ்ஞானிகளால் கண்டறியப் பட்டது.



போட்டித் தேர்வு எழுதுவோர், IAS தேர்வு 

எழுதுவோர் இக்கேள்விக்கான பதிலை 

அறிந்திருக்க வேண்டும்.

 


இவர் 1923ஆம் ஆண்டுக்கான 

நோபல் பரிசு பெற்றார்.

எந்தத் துறையில் இவருக்கு 

நோபல் பரிசு வழங்கப்பட்டது?

விடை தருக.  

 


உண்மைதான். 1000 ரூபாயை 

கவரில் வைத்துக் கொடுத்தால்தான் 

ஊடகத்தில் செய்தி போடுவான்.

கிருஷ்ணம்மாள் கவர் கொடுப்பாரா? 

கொடுக்க மாட்டாரே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக