வியாழன், 15 செப்டம்பர், 2022

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை!
------------------------------------------------------
பள்ளி நிர்வாகம் மாணவியின் தாயாருடன் 
பேசவே இல்லை என்று சொன்ன முழுப்பொய் 
கிழிந்து தொங்குகிறது!

இது மிகவும் முக்கியமான புகைப்படம்!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது 
ஜூலை 13, 2022 காலை.

அன்று இரவே (ஜுலை 13) மாணவியின் தாயார் 
செல்வி பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசினார்.
மாணவி தரப்பில் மொத்தம் 9 பேர் பேச்சுவார்த்தையில் 
பங்கேற்றனர்.

தனக்கு ரூ 1 கோடி பணம் தர வேண்டும் என்று 
மாணவியின் தாயார் கோரினார். பலமுறை 
பேரம் பேசிய பின்னர் ரூ 25 லட்சத்திற்கு குறைய 
மாட்டோம் என்கிறார் மாணவியின் தாயார்.

மாணவி தற்கொலை செய்துதான் உயிரிழந்தார் 
என்பது தெரிந்த நிலையில் இந்த பேரம் 
நடைபெற்றது. மாணவியின் தாயார் ரூ 25 லட்சத்தில் 
பிடிவாதமாக நிற்க, பள்ளியின் தரப்பில் ரூ 5 லட்சம் 
என்று கறார் காட்டினர். இதனால் பேச்சு 
வார்த்தை முறிந்தது.

அந்தப் பேச்சு வார்த்தையின் படம்தான் இது.
மாணவியின் தாயார் பேசிய அனைத்தும் 
பதிவாகி இருக்கிறது. மாணவி இறந்த 13ஆம் தேதி 
மட்டுமல்ல, அதற்கு முன்பும் பின்பும் பணவியின் 
தாயார் பேசியது, பள்ளி நிர்வாகத்தை பலரும் 
பணம் கேட்டு மிரட்டியது ஆகிய அனைத்தும் 
ஒளிப்பதிவு  ஆகி உள்ளது. எனவே குற்றவாளிகள் 
யாரும் தப்ப முடியாது.
************************************************** 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக