செவ்வாய், 25 அக்டோபர், 2022

முறியடிக்கப்பட்ட அத்வைதம்!
அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அறிவியலுக்கு எதிரானது! 
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அத்வைதத்தின் 
ஜீவனான வாக்கியம். நானே பிரம்மம் என்று 
பொருள். இது உலகின் மிகப்பெரிய தவறான 
வாக்கியம்.  

நீயும் பிரம்மம்; நானும் பிரம்மம்;
ஒவ்வொருவரும் பிரம்மம் என்பதைப் போல
அபத்தம் இவ்வுலகில் எதுவும் இல்லை. இது 
அறிவியலுக்கு எதிரானது. அன்றாட வாழ்க்கையில் 
ஒவ்வொருவரும் உணரும் பிரத்தியட்ச 
உண்மைக்கு எதிரானது.

குழந்தையைக் கற்பழிக்கிறான் ஒரு கயவன்.
குழந்தையும் பிரம்மம்; அதைக் கற்பழித்த கயவனும் 
பிரம்மம் என்கிறது அத்வைதம். இது அறிவுக்கு 
எதிரானது. இருவரும் பிரம்மமாக இருப்பது
ஒருபோதும் சாத்தியமற்றது.

முட்ட வரும் காளைமாடும் அதன் எதிரில் 
நிற்பவனும் இருவருமே பிரம்மம் என்பது 
நகைப்புக்கு உரியது. 

கரமைதுனம் செய்து சுயஇன்பம் அனுபவிக்கிறான் 
ஒரு விடலை. தனது சுயஇன்பத்தின்போது, 
நயன்தாராவுடனோ திரிஷாவுடனோ உடலுறவு 
கொள்வதாக நினைத்துக் கொண்டு  
சுயஇன்பம் அனுபவிப்பான். அதுபோன்ற 
நினைப்புதான் அஹம் ப்ரம்மாஸ்மி என்பது.

ஆதிசங்கரரின் அத்வைதம் தத்துவக் களத்தில் 
முறியடிக்கப்பட்ட ஒரு கருத்துமுதல்வாதத் தத்துவம்.
ஆதிசங்கரர் மறைந்து சில நூற்றாண்டுகளுக்குப்
பின்னர், ஐரோப்பாவில் பெர்க்லி பாதிரியார் 
என்பவர் இதே அத்வைதக் கருத்துமுதலவாதத்தை 
முன்மொழிந்தார். பொருள்முதல்வாத ஞானிகளால் 
அது சுக்குநூறாக அடித்து நொறுக்கப் பட்டது.

அயன் ராண்டு என்று ஒரு ரஷ்யப் பெண்மணி.
இவர் அமெரிக்காவில் குடியேறிய ஓர் அமெரிக்கப் 
பிரஜை. இவர் சிறந்த ஆங்கில நாவலாசிரியை.
அத்தோடு objectivism என்னும் ஒரு தத்துவத்தை
உலகிற்கு அளித்தவர். அத்வைதக் கோட்பாடுகள் 
அனைத்தையும் தூள்தூளாய் நொறுக்கியவர் இந்த 
அயன் ராண்டு. (objectivism = புறவயவாதம்; இது 
ஒரு பொருள்முதல்வாதத் தத்துவம்)       

சில ஆண்டுகளுக்கு முன், "அத்வைதம்: ஒரு மார்க்சியப் 
பார்வை" என்ற ஒரு சிறுநூலை எழுதினேன்.
அச்சடித்த அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.
மறுபதிப்புக் கொண்டுவர விரும்பவில்லை. ஏனெனில் 
இங்கு அத்வைதமே என்னவென்று ஒருவருக்கும் 
தெரியவில்லை. 
**********************************************************



Please avoid such outbursts 
in the name of comments. பரம்பரை 
பரம்பரையாக ஆசிரியம் எங்கள் 
குலத்தொழில். கடைந்தெடுத்த 
முட்டாள் கூட என்னிடம் வந்த பின் 
கணக்கைக் கற்றுக் கொண்டு விடுவான்.    

என்னுடைய தந்தையார் மறைந்த திரு 
மு பிச்சாண்டி M.A,B.T அவர்கள் 
தென்மாவட்டங்களில் மிகவும் பிரபலமான 
ஆசிரியர். பாவூர்ச்சத்திரத்தில் 1960களில் 
பணியாற்றியவர். மாநில நல்லாசிரியர் 
விருது பெற்றவர். மேனிலைப்பள்ளித் 
தலைமையாசிரியராக இருந்தவர்.    

ஒரு IQ testக்கும் ஒரு கற்பிக்கும் சோதனைக்கும் 
என்னை நான் உட்படுத்திக் கொள்ளத் தயார்.
என்னுடைய கற்பிக்கும் திறனையும், அதற்கு 
மூலமாக உள்ள அறிவுத் திறனையும் நான் 
நிரூபிக்கத் தயாராக உள்ளேன். எனக்கு 
சலுகையோ இடஒதுக்கீடோ சமூகத்தின் 
கருணையோ என்றுமே தேவைப் பட்டதில்லை. 
My merit will speak for me.  

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப- நரைமுடித்துச் 
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை 
கல்லாமல் பாகம் படும்.

இந்தப் பாடலின் பொருளை நீங்கள் 
இன்றில்லாவிடினும் நாளை அறிந்து கொள்ள 
நீங்கள் வணங்கும் கடவுள் துணைநிற்கட்டும்.   

 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக