புதன், 26 அக்டோபர், 2022

திருமதி ராதா தேவர் கவனத்திற்கு,
-------------------------------------------------------
molecule என்பது பொருளின் நுண்ணிய 
பகுதி. பொருட்கள் துகள்களாகவும் 
அணுக்களாகவும் மூலக்கூறுகளாகவும் 
இருக்கின்றன. இது அனைவரும் அறிந்த 
அறிவியல் உண்மையே.

நீங்கள் பிரும்மம் என்பதை molecule
என்கிறீர்கள். அதாவது பிரும்மம் என்பதை 
பொருள் என்கிறீர்கள். மனித குல 
வரலாறு கண்டும் கேட்டும் இராத 
தலைகீழான புரிதல் இது. பிறழ்புரிதலின்
உச்சம் இது.

ஆதிசங்கரின் காதில் இது விழுந்தால் 
அவர் உயிரோடு மீண்டு வந்து உங்களைக் 
கண்டனம் செய்வார். ஏனெனில் பொருளே 
இல்லை என்றும் பொருள் என்பதே ஒரு 
கருத்துத்தான் என்றும் கூறியவர் 
ஆதி சங்கரர்.

பொருள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் 
கருத்தே என்பதுதான் அத்வைதம். இதை 
தத்துவத்தில் அகநிலைக் 
கருத்துமுதல்வாதம் (subjective idealism)
என்கிறார்கள்.  

உலகமம் சரி, இந்தப் பிரபஞ்சமும் சரி  
பைனரியாகவும் இருக்கிறது. அதற்கு மேலும் 
பன்மைத்துவத்துடன் (pluralism) இருக்கிறது.
ஆனால் மொத்த உலகமும் மொத்தப் 
பிரபஞ்சமும் ஏகத்துவமானது (monoism)
என்னும் பிறழ்புரிதலை முன்வைத்தார் 
ஆதிசங்கரர்.  

பொருள் என்றும் கருத்து என்றும் இந்தப் 
பிரபஞ்சம் குறைந்தபட்சம் இரண்டாக 
இருக்கிறது. அப்படி இந்த உலகம் 
இரண்டாக இல்லை என்றும் பொருளே 
கருத்துத்தான் என்றும் ஆதிசங்கர 
கூறினார். அனைத்துமே கருத்து மட்டும்தான் 
என்றும் கருத்தே பிரும்மம் என்றும் 
கூறினார் ஆதிசங்கரர்.

பிரத்தியட்ச தரிசனமாகவே எவர் ஒருவருக்கும் 
ஆதிசங்கர கூறும் இரண்டற்ற நிலை என்பது 
முழுவதும் தவறானது என்று தெரியும்.

அத்வைதம்: ஒரு மார்க்சியப் பார்வை என்ற 
எனது நூலில் இதையெல்லாம் நிரூபித்து 
இருக்கிறேன்.



அத்வைதம் குறித்து எல்லோருடனும் 
விவாதிக்க இயலாது. ஏன்?
----------------------------------------------------- 
அத்வைதம் குறித்த எனது பதிவுகள் science 
மற்றும் academic பதிவுகள் ஆகும். அவை 
அரசியல் பதிவுகள் அல்ல.

அத்வைத ஆதரவு அல்லது எதிர்ப்பை 
பாஜக ஆதரவு அல்லது பாஜக எதிர்ப்பு என்று 
கட்டமைப்பது முழுமூடத்தனம் ஆகும்.
இதுவரை என்னுடைய முகநூல் பதிவுகளில் 
வந்து உரையாடிய விமர்சித்த நண்பர்களில் 
90 சதவீதம் பேர் இதை அரசியல் விஷயமாகக் 
கருதி polemicsல் ஈடுபட்டனர். இது அருவருக்கத் 
தக்கது.

மேலும் மிகுந்த வருத்ததோடு 
சொல்கிறேன்: இந்த உரையாடல் மற்றும் 
விமர்சனத்தில் பங்கேற்ற பலரும் 
mediocre மற்றும் sub mediocre ஆட்கள். 
அவர்களிடம் அறிவுடைமை என்பது 
ஒரு trace லெவலுக்குக் கூட இருக்காது.

இழிவான possessiveness!
--------------------------------------
அத்வைதம் என்பது பாஜவுக்குச் சொந்தம்!
It belongs to BJP. அருவருத்து ஒதுக்கத் தக்க 
மூடத்தனமான POSSESSIVENESS இது.

சாவர்க்கர் பற்றித் தெரியுமா?
---------------------------------------------
Hindu Nationalism என்ற ஒரு கோட்பாட்டை 
உருவாக்கியவர் சாவர்க்கர். பிரிட்டிஷ் 
ஆட்சியை எதிர்த்து அந்தமானில் ஆண்டுக்
கணக்கில் சிறை இருந்தவர். 
       
இவர் கருத்துமுதல்வாதத்தை நன்கு கற்றுத் 
தேர்ந்தவர். அத்வைதம் அறிந்தவர். ஆனால் 
தானறிந்த அத்வைதத்தை ஒதுக்கியவர்.
ஏன் சாவர்க்கர் அத்வைதத்தை ஒதுக்கினார்?

சாவர்க்கர் ஒரு நாத்திகர்; கடவுளை மறுப்பவர்.
அவர் ஒரு பொருள்முதல்வாத நாத்திகர்.
எனவே சாவர்க்கர் கருத்துமுதல்வாத 
அத்வைதத்தை நிராகரித்தவர்.

ஆதிசங்கரர் இயற்றாத நூல்கள்!
--------------------------------------------------
பஜகோவிந்தத்தை ஆதி சங்கரர் இயற்றினார் 
என்பது உண்மையல்ல. பஜ கோவிந்தத்தின்
மொழிநடை காலத்தால் பிந்தியது; எனவே 
இதை ஆதிசங்கரர் இயற்றவில்லை 
என்கிறார்கள் சம்ஸ்கிருத மொழியியல் 
அறிஞர்கள்.

ஜடிலோ முண்டி லுஞ்சித கேஸ 
காஷா யாம்பர பஹுக்ரத வேஷ 
........   ............  ..............  .................

அக்ரே வஹ்னி ப்ருஷ்ட்டே பானு 
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு
கரதல பிச்சஸ் தருதல வாசஸ் 
ததபி ந முஞ்சத் ஆஷா பாஷ 

மேற்கூறிய சுலோகங்களை ஒரு 
உதாரணத்திற்காகத் தந்துள்ளேன்.
இவற்றின் மொழிநடை ஆதிசங்கரின் 
எட்டாம் நூற்றாண்டு கால மொழி நடையுடன் 
முரண்படுகிறது.

சௌந்தர்ய லஹரியும்  ஆதிசங்கரரால் 
எழுதப் பட்டதல்ல. இதுதான் உண்மை.

முக்கிய வேண்டுகோள்!
------------------------------------
1) பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
2) கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
3) இயங்கியல் (dialectics) என்றால் என்ன?
4) உண்மையை அறியும் முறைகள் 
எவை எவை?
5) பெர்க்லி பாதிரியாரின் அகநிலைக் 
கருத்துமுதல்வாதம் என்ன கூறுகிறது?
6) ஆதிசங்கரருக்கும் பெர்க்லி பாதிரியாருக்கும்
ஏன் இமானுவேல் கான்டுக்குமே அயன் ராண்டு 
எப்படி சூடு கொடுக்கிறார்?
7) இமானுவேல் கான்ட்டின் கருத்துமுதல்வாதம் 
என்ன கூறுகிறது?
8) இவற்றோடு maths, physics
ஆகிய பாடங்களில் குறிப்பிடத்தக்க புலமை 
பெற்றவர்களோடு மட்டுமே அத்வைதம் 
குறித்து உரையாட இயலும்.

எல்லோரோடும் உரையாட இயலாது.
உங்களின் மனச்சாட்ச்சியைத் தொட்டுச் 
சொல்லுங்கள். மேலே சொன்ன 8 அம்சங்களில் 
நீங்கள் பெற்றுள்ள அறிவு மெய்யாகவே என்ன?
உங்களின் விடை உங்களுக்கு திருப்தியாக 
இருந்தால் விவாதிக்கலாம்.

அடுத்து முக்கியமான இன்னொரு குறிப்பு.
உரையாடலின்போது வசவுகளைத் தவிர்க்க 
இயலாதவர்களுடன் உரையாட இயலாது.
இன்று ஒரு குட்டி முதலாளியப் பார்ப்பனர் 
உரையாடலின்போது Scheduled Caste மக்களை 
இழிவாகத் திட்டுகிறார். அதற்கான ஆதாரங்கள் 
கிரீன் ஷாட்கள் உள்ளன. அவர் மீது புகார் 
கொடுத்தால் சிறையில் அவர் கம்பி எண்ண நேரும்.
******************************************************  


 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக