வெள்ளி, 15 டிசம்பர், 2017

அத்வைதம் கட்டுரைகள் பகுதி 1 நூல்
--------------------------------------------------------------
1)தமிழ் வாசகச் சூழலில் தத்துவம் பற்றிய புரிதல்
மிக மெலிந்து பலவீனமாக உள்ளது என்பது
புலப்பட்டது. எளிய நிலையில் உள்ள தொடக்க
நிலை வாசகர்களைக் கவரும் விதத்தில் தத்துவ
நூல்கள் எதுவும் தமிழில் இல்லை. எனவே
வாசகர்களைக் குறை கூற .முடியாது
=================================
 யோகம் என்பதில் தத்துவச் செறிவு மிக மிகக்
குறைவு. உண்மையில் யோகம் என்பது பல்வேறு
பயிற்சி முறைகளின் தொகுப்பே. இப்பயிற்சி முறைகள்
குறைந்தது மூவாயிரம் ஆண்டுப் பழமை மிக்கவை.
கவுதம புத்தரே யோகப்பயிற்சிகளை மேற்கொண்டதாக
பல செய்திகள் கூறுகின்றன.

ஆரம்ப கால யோகத்தில் கடவுளுக்கு இடமில்லை.
பின்னாளில் ஆஸ்திகர்களைத் திருப்தி செய்யும்
பொருட்டு யோகத்தில் கடவுள் சேர்க்கப்பட்டார்.
எனினும் கடவுள் மனித அந்தஸ்துக்கு இணையான
ஒரு  அந்தஸ்துடன்தான் மேம்போக்காகச் செருகப்
பட்டார். எனவேதான் யோகம் என்பது மார்க்சிய
தத்துவ ஆசிரியர்களால் பொருள்முதல்வாதப்
பிரிவிலேயே தொடர்ந்து வைக்கப் படுகிறது.
---------------------------------------
3) (18)
ஸ்வர்ணமுகி என்ற நடிகையை தமிழக அரசின்
ஆஸ்தான நர்த்தகியாக (அரசவை நடனப்பெண்)
எம்ஜியார் அறிவித்தது நினைவு இருக்கலாம்.
கவியரசர் கண்ணதாசன் தமிழக அரசவைக்
கவிஞராக இருந்தார்.

இங்கிலாந்திலும் அரசவைக் கவிஞர்கள் உண்டு.
வேர்ட்ஸ்வொர்த். டென்னிசன் ஆகியோர் பிரிட்டிஷ்
அரசவைக் கவிஞர்களாக இருந்தனர். கவிஞர்,
இசைஞர். நர்த்தகி, விதூஷகர் போலவே ஆஸ்தான
மல்லர்களும் உண்டு. (மல்லர் = மற்போர் வீரர்)

சங்கரரின் காலத்தில், பொருள்முதல்வாதத்தின்
ஆஸ்தான மல்லராக சாங்கியம் இருந்தது. இந்தியத்
தத்துவ  ஞானத்தில் முதலில் தோன்றியது சாங்கியமே.
கபிலர் சாங்கியத்தைத் தோற்றுவித்தார் என்று
கூறப்படுகிறது. பௌத்தத்திற்கும் முந்தியது
சாங்கியம் ஆகும். அது மட்டுமல்ல, கருத்து
முதல்வாதத்திற்கும் முந்தியது சாங்கியம்.

வேதங்களுக்கு முந்தியது சாங்கியம் என்பதும்
தன் தத்துவ உள்ளடக்கத்துக்கு  வேதங்களிடம்
இருந்து எக்கடனும் பெறாதது சாங்கியம் என்பதும்
குறிப்பிடத் தக்கது. தீவிரமான கடவுள் மறுப்புத்
தத்துவம் சாங்கியம் என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும்.

அத்வைதம் ஓர் ஒருமைத் தத்துவம் (monism). இதற்கு
மாறாக, சாங்கியம் இருமைத் தத்துவம் (dualism) ஆகும்.
சாங்கியம் கூறுகிறபடி, இந்தப் பிரபஞ்சம் இரண்டு யதார்த்தங்களைக் கொண்டது (two realities). 1. புருஷன்,
2. பிரகிருதி. புருஷன் என்றால் கணவன் என்று
பொருள் கொண்டு விடக்கூடாது. இங்கு புருஷன்
என்பது உணர்வு அல்லது சிந்தனை (consciousness)
என்றும், பிரகிருதி என்பது பருப்பொருள் (matter)
என்றும் பொருள்படும்.

அதாவது எங்கல்ஸ் கூறுகிற இருப்பும் உணர்வும்
(being and consciousness) என்பதே இது. மார்க்சியம் இன்று
கூறுகிற தத்துவத்தின் அன்றைய வடிவம் இது.
மேலும் ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற
முக்குணங்களையும்  கற்பித்தது சாங்கியம்.
இது ஆதிசங்கரரின் நிர்குண பிரம்மம் என்பதற்கு
எதிரானது.

ஆக, தத்துவச் செறிவு மிக்க, தொன்மையான,
பாரம்பரியம் உடைய சாங்கியம் அத்வைதத்திற்கு
பெரும் சவாலாக விளங்கியது.பல்வேறு
பொருள்முதல்வாதப் பிரிவுகளின் தலைவனாகவும்
சாங்கியம் திகழ்ந்தது. எனவே சாங்கியத்தைக்
கண்டு அஞ்சியது அத்வைதம். அதைக் களத்தில்
சந்தித்து  முறியடிக்காமல் அத்வைதம்
வாழ முடியாது என்ற நிலை அன்று இருந்தது.

அத்வைதத்தின் மூல நூல் பிரம்ம சூத்திரம்
என்பதை ஏற்கனவே பார்த்தோம். பிரம்ம
சூத்திரத்தில், சாங்கியத்துக்கு பிரதான
முக்கியத்துவம்  அளித்து, அதை எதிர்த்து
அறுபது சூத்திங்கள் எழுதப்பட்டு உள்ளன.
ஆனால் மீதியுள்ள பிற தத்துவப் பிரிவுகள்
அனைத்தையும் எதிர்த்து எழுதப்பட்டது
கொஞ்சமே.

தத்துவ விவாதத்தில் சாங்கியத்தை எதிர்த்து
முறியடித்து விட்டதாக அத்வைதம் பெருமிதம்
கொண்டது. பொருள்முதல்வாதத்தின் ஆஸ்தான
மல்லரான சாங்கியத்தியே தாங்கள் தோற்கடித்து
விட்டதால், ஏனைய எல்லா மல்லர்களையும்
வீழ்த்தி விட்டதாகவே அர்த்தம் என்றார் ஆதிசங்கரர்.

சாங்கியத்திற்கும் அத்வைதத்திற்கும் நடந்த
இந்த முக்கியமான தத்துவப்போர் குறித்து எந்த
நூலும் தமிழில் இல்லை; எழுதப்படவும் இல்லை.
சாங்கியம் மட்டுமல்ல, பூர்வ மீமாம்சை உள்ளிட்ட
பிற தத்துவப் பிரிவுகளுடன் அத்வைதம் நடத்திய
ஆழமான எந்த விவாதம் பற்றியும் தமிழில் ஒரு
நூலும் இல்லை. எவராலும் எழுதப்படவில்லை.
ஆனால் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் இதற்கான நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

மார்க்சியம் சில தத்துவார்த்த வகைமைகளை
(philosophical categories) கொண்டிருக்கிறது. காரண
காரியப் பொருத்தம் (cause and effect) என்பது அத்தகைய
ஒரு வகைமை. ஆதிசங்கரர் தம் காலத்தில்
காரண காரிய பொருத்தத்தை எதிர்த்தார்.
ஆக, பொருள்முதல்வாதத்தின் எல்லா
அம்சங்களையும்  எதிர்த்தவர் ஆதிசங்கரர்.
அதன் மீது தீராப் பகைமை கொண்டிருந்தவர்
ஆதிசங்கரர். கருத்துமுதல்வாதத்தின் வேறு
எந்தப் பிரிவையும் விட, பொருள்முதல்வாதத்துடன்
ஒரு சிறிதும் இணக்கமின்றி, அதன் ஜென்மப்
பகைவனாக, பரம வைரியாக இருந்தவர்
ஆதிசங்கரர்.

பொருள்முதல்வாதத்தின் வரலாற்றிலேயே,
அதன் மீது, அத்வைதம் போல் வேறு எந்தத்
தத்துவமும் இவ்வளவு பகைமை கொண்டு
இருந்ததில்லை என்பது வரலாறு.
------------------------------------------------------------------------------
4) (17) ராமசாமி இஸ்மாயில் ஆக மாட்டார்!
அத்வைதம் மார்க்சியம் ஆகாது!
--------------------------------------------------
3) ராமசாமி என்பவர் ராமசாமிதான். அவரை
இஸ்மாயில் என்று கூறுவது ஆள்மாறாட்டம்
(impersonation) ஆகும். இதைப்போல, அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவதும்
ஆள்மாறாட்டமே.

4) ஏனெனில் அத்வைதம் ஒரு  பொருள்மறுப்புத்
தத்துவம் ஆகும் (immaterialism)  பொருளை மறுக்கும்
தத்துவத்தை எடுத்துக் கொண்டு, அது பொருளை
முதன்மைப் படுத்தும் தத்துவமான  பொருள்முதல்வாதம்
என்று கூறுவது ஆள்மாறாட்டம் போன்றதுதான்.

5) ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது இமாலயத்
தவறு  ஆகும். ஒன்றின் அடிப்படையையே தகர்க்கும்
பாரிய தவறு ஆகும்.ஒன்றின் தனித்தன்மையையே
அழிக்கும் அடாத செயலாகும்.

6) எனவேதான் மானுட சமூகம் மொத்தத்திலும்
ஒன்றை மற்றொன்றாகக் காட்டுவது தடை செய்யப்
பட்டுள்ளது. சட்டங்கள் அதைத் தடுக்கின்றன.
ஆள் மாறாட்டம், கள்ளக் கையெழுத்து போன்றவை
எல்லாம் (impersonation, forgery etc) குற்றங்கள் என்று
சட்டம் தடுக்கிறது. காரணம் இவை ஒன்றை
மற்றொன்றாகக் காட்டி விஷயங்களின் தனித்
தன்மையை அழிப்பவை.

7) இன்னும் ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.
சீட்டுக் கட்டில் உள்ள இஸ்பேட் ராஜாவை
இஸ்பேட் ராஜா என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரை டயமண்ட் ராஜா என்று சொல்வது
ஆள்மாறாட்டம் ஆகும்.

8) உவமை என்பது உணர்த்த வல்லது; உணர
எளியது. புரிந்து கொள்ளக் கடினமான கருத்தையும்
எளிதாகப் புரிய வைக்க உவமைகள் கையாளப்
படுகின்றன. இது தமிழ் மரபு. போல, போன்ற
ஆகியவை உவம உறுப்புகள். மேற்கூறிய
உவமைகள் மூலம் அத்வைதத்தை
பொருள்முதல்வாதம் என்று கூறுவது
எப்பேர்ப்பட்ட  பித்தலாட்டம் என்று உணரலாம்.

(9) அயன் ராண்டின் தத்துவத்தில் A is A என்ற
கோட்பாடு உண்டு. A என்பது A தான்,
B அல்ல என்பதே இது.  அயன் ராண்டின்
சொற்களில்: "A is  A. facts are facts and things are what
they are". ஒன்றை மற்றொன்றாகக் சுட்டுவதை
இந்த மொத்த உலகிலும் எவரும் ஏற்றுக்
கொள்வதில்லை.

11) தத்துவத்தில் இந்த ஆள்மாறாட்டத்தை
அனுமதிக்க முடியாது.ஒவ்வொரு தத்துவமும்
தனித்தன்மை உடையது. அத்வைதத்தை
பொருள்முதல்வாதமாகக் காட்டுவது
பிறழ்புரிதலை ஏற்படுத்தும். இது தத்துவார்த்த
மோசடி ஆகும்.

12) பிறழ் புரிதலின் அடிப்படையில் எழுந்துள்ள
எதிர்வினைகளில் சொல்லப்பட்ட ஒவ்வொரு
அம்சத்துக்கும் பதில் கூறுவது (point to point rebuttal)
சாத்தியமில்லை.அது தேவையற்றதும் கூட.

(14) எனினும் இதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.
தமிழ்ச் சமூகத்தில் தத்துவக் கல்வி அதன் குழந்தைப் பருவத்தில்தான் இன்னும் இருக்கிறது என்ற
உண்மையையே இது உணர்த்துகிறது.
****************************************************
ப்பகுதி 5 (16) ஆதிசங்கரர் கூறும் பிரம்மம் என்பது
பருப்பொருளா அல்லது கருத்தா?
---------------------------------------------------------------------------
1) "காட்டில் ஒரு மரம் முறிந்து விழும்போது, யாரும்
பார்க்கவில்லை என்றால், முறிந்து விழும் ஓசை
எழுமா?" என்று கேட்டார் பாதிரியார் பெர்க்லி.
(If a tree falls in a forest and no is around to hear it, does it make
a sound?...Bishop George Berkely 1685-1753).

(2) இதே கேள்வியை ஆதிசங்கரரும் கேட்டார் வேறு
வார்த்தைகளில். "யாரும் பார்க்காமல் இருக்கும்போது
ஆகாசம் நீல நிறமாக இருக்குமா?" என்றார் அவர்.

(3) இருவருக்கும் எவ்வளவு அற்புதமான ஒற்றுமை
பாருங்கள்! கருத்துமுதல்வாதத்தின் உச்சம் தொட்ட
கேள்விகள் இவை. தத்துவ அரங்கில் இவ்விரண்டு
கேள்விகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை; பரவலாக
அறியப்பட்டவை. கருத்துமுதல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் மேற்கோள்கள் இவை.

(4) புறவுலகம் இயங்குவது கருத்தின் (சிந்தனையின்)
விதிகளாலேயே என்பதை உணர்த்துவதற்கே
இக்கேள்விகளை ஆதிசங்கரரும் பெர்க்லியும் கேட்டனர்.

(5) புறவுலகம் இயங்குவது ஏதன் விதிகளால்?
சிந்தனையின் விதிகளால் புறவுலகம்
இயங்குகிறதா? அல்லது பருப்பொருளின்
விதிகளால் புறவுலகம் இயங்குகிறதா?

(6) மரம் என்பது ஒரு பருப்பொருள் (matter). அது
நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக
இருப்பது. அதாவது, அங்கு மரம் இல்லை என்று
நாம் நினைத்தாலும் மரம் இருக்கத்தான் செய்யும்.
இல்லையென்று நாம் நினைப்பதால் மரம் இல்லாமல்
போய்விடுவதில்லை. ஏனெனில் மரம் இருப்பது
நமது சிந்தனையைப் பொறுத்தது அல்ல.

(7) மரம் அதன் உள்ளியக்கத்தால் (internal motion)
முறிந்து விழுகிறது. முறிந்து விழும்போது அதிர்வுகள்
ஏற்படுகின்றன. முறிவு  என்பதே அதிர்வுகளின்
தொகுப்புதான். இந்த அதிர்வுகள் காற்றில்
பரவுகின்றன. அதனால் காற்றில் இறுக்கமும் தளர்வும்
ஏற்பட்டு காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. இந்த
அழுத்த வேறுபாடே ஓசை ஆகும்.
(The vibrations cause a variation of pressure in the air making compressions
and rarefactions and thus sound is produced) (compression = இறுக்கம்,
rarefaction = தளர்வு, vibration = அதிர்வு).

(8) ஆக, மரம் எதன் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது? பொருளின் விதிகளுக்கு உட்பட்டு
இயங்குகிறது. சிந்தனையின் விதிகளுக்கு
உட்பட்டு மரம் இயங்குவதில்லை.

(9) பொருளின் விதிகளே பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிக்கின்றன. இதுதான் உண்மை. மாறாக,
சிந்தனையின் விதிகள் பொருளின் இயக்கத்தைத்
தீர்மானிப்பதாக வைத்துக் கொண்டால், என்ன
நடக்க வேண்டும்?

(10) அங்கு மரம் இல்லை என்று நீங்கள் மனதில்
நினைத்தவுடனே, அங்கு மரம் இல்லாமல் போக
வேண்டும். மரம் தீப்பிடித்து எரிகிறது என்று
நீங்கள் நினைத்தவுடன் மரம் தீப்பிடித்து
எரிய வேண்டும். இதெல்லாம் நடக்குமா?
ஒருநாளும் நடக்காது.

11) எனவே, காட்டில் மரம் முறிந்து விழும்போது
யாரும் பார்க்காவிட்டாலும் அங்கு மரம் முறியும்
ஓசை எழும். இது அன்றாட  வாழ்வில் நாம் அனைவரும்
 ஒவ்வொரு கணமும் உணர்கிற விஷயம். இதை
ஏதோ மகத்தான தத்துவச் சிந்தனையாக, பெர்க்லி
பாதிரியார்   கேள்வி எழுப்புகிறார் என்றால், அது
எவ்வளவு பேதைமை!

12)  காட்டில், ஆளரவமே இல்லாத இடத்தில், மிருகங்கள்
வேட்டையாடுவதை  தத்ரூபமாக படம் பிடித்து
சினிமா எடுக்கிறார்களே நேஷனல் ஜியாக்ரபி
சேனலும் டிஸ்கவரி சேனலும். எப்படி? மரத்தின்
உயரமான கிளையில்  காமிராவை வைத்துத்தானே!
யாரும் பார்க்கவில்லை என்பதற்காக, ஓசைகள்
எழாமல் இருக்கின்றனவா?

13) ஆக, பெர்க்லி பாதிரியாரின் தத்துவம் எவ்வளவு
அபத்தம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
அல்லவா! இது போன்ற ஒரு அபத்தத்தைத்தானே
ஆதிசங்கரரும் சொன்னார்.

(14) யாரும் பார்க்காமல் இருந்தாலும் ஆகாயம்
நீல நிறமாகத்தான் இருக்கும்.
ஏனெனில், ஆகாயம் நீல நிறமாக இருப்பது
ஒளிச்சிதறல் (scattering of light) என்னும் நிகழ்வால்.
நீல நிறம் மிகவும் குறைவான அலைநீளம்
உடையது என்பதால், அது மற்ற நிறங்களை விட
அதிகமாகச் சிதறுகிறது. எனவேதான் ஆகாயம்
நீலமாகத் தெரிகிறது.

(15) ஒளிச்சிதறல் என்பது பொருளின் விதி.
சிந்தனையின் விதி அல்ல. ஆகாயம் நீலமாக
இருப்பதன் காரணம் பொருளின் விதியால்தானே
தவிர, சிந்தனையின் விதியால் அல்ல.

(16) எவர் ஒருவரின் ஆத்மாவோ (சிந்தனையோ)
அல்லது பிரம்மமோ பருப்பொருளை இயக்கவில்லை.
இயற்கை, புறவுலகம், பருப்பொருள், உயிர்கள்
என்று இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே
பொருளின் விதிகளால்தான் இயங்குகிறது. இந்த
இயக்கத்தில் கருத்துக்கோ, சிந்தனைக்கோ,
பிரம்மத்துக்கோ, ஆத்மாவுக்கோ தீர்மானிக்கிற
இடமே இல்லை.

(17) கருத்து இருக்கிறது. அதை எவரும் மறுக்கவில்லை.
ஆனால் கருத்து முதன்மையானது அல்ல என்பதே
பொருள்முதல்வாதம். கருத்தின் விதிகளால் இந்தப்
பிரபஞ்சம் இயங்குவதில்லை என்பதே
பொருள்முதல்வாதம். நன்கு கவனிக்கவும்: கருத்தின்
இருப்பை பொருள்முதல்வாதம் மறுக்கவில்லை.
பொருளைப் பார்த்தபின் நம் மனதில் எழும்
பிரதிபலிப்பே கருத்து என்பதுதான் பொருள்முதல்வாதம்.

(18) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது பொருளா,
கருத்தா? அது கருத்துதானே தவிர பொருள் அல்ல.
பொருள் என்றால் அதற்கு ஒரு இருப்பு உண்டு.
பிரம்மம் என்பது பொருள்தான் என்றால், அதன்
இருப்பைச் சுட்ட வேண்டும் அல்லவா? ஆதிசங்கரர்
சுட்டிக் காட்டினாரா? இல்லை. ஏன்? அதற்கு
இருப்பு இல்லை. அது கருத்தே தவிர பொருள் அல்ல.

(19) பிரம்மம் என்பது  குணமற்றது (நிர்குண பிரம்மம்);
உருவமற்றது; வரம்பற்றது என்கிறார் ஆதிசங்கரர்.
அது இருப்பும் அற்றது; அதாவது இல்லாத ஒன்று
என்பதையும் நாம் சேர்த்துக் கூற வேண்டும்.
(Brahman is a non entity).

(20) In Advaita Vedanta, Brahman is without 
attributes and strictly impersonal.It can be 
best described as infinite Consciousness and 
infinite Bliss. It is pure knowledge itself.

(21) பிரம்மத்திற்கு ஆதிசங்கரர் கூறும் மேற்கண்ட
வரையறையின்படி, பிரம்மம் என்பது பொருள் அல்ல;
கருத்தே. குணமற்ற, வடிவமற்ற, வரம்பற்ற உணர்வாக
(பிரக்ஞை) உள்ள , வரம்பற்ற பேரின்பமாக உள்ள, சுத்த
அறிவு என்பதுதான் பிரம்மம் என்றால் அது கருத்தே.
அது பொருள் அல்ல. பிரம்மம் என்பது பொருள்
என்பது பித்தலாட்டம்.

(22) இதனால் பிரம்மம் என்பது கருத்தே என்பதும்,
அத்வைதம் கருத்துமுதல்வாதமே என்பதும் மீண்டும்
நிரூபிக்கப் படுகிறது.
*****************************************************************

தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல்கள் பலவும்
பாடப்புத்தக (text books) வகையிலானவை.
மேலும் அவை யாவும் அத்வைத ஆதரவாளர்களின்
நூல்கள். அத்வைதத்தை விதந்தோதும் நூல்கள்.
ஆனால், அத்வைதம் குறித்த விமர்சனபூர்வமான
(critical outlooks) நூல்களாக அவை இல்லை. அத்வைதம்
பிற தத்துவப் பிரிவுகளுடன் உரையாடிய, வாதித்த,
(polemical debates) வாதங்கள் அடங்கிய நூல்களாக
அவை இல்லை. உதாரணமாக, "நியாய தரிசனம்"
என்னும் தத்துவத்துடன் அத்வைதம் நடத்திய
விவாதம் குறித்த, விளக்கக் குறிப்புகளுடன் கூடிய
(with annotations) நூல்கள் யாவும் தமிழில் இல்லை.
**
தாங்கள் குறிப்பிடும் நூல்கள் யாவும், அத்வைதம்
குறித்த  ஒரு மேம்போக்கான புரிதலை மட்டுமே
தரக் கூடியவை. விமர்சன ரீதியாகவும், பிற
பொருள்முதல்வாதத் தத்துவங்களின் நோக்கில்
இருந்து அத்வைதத்தை விமர்சிக்கும் நூல்கள்
எவையும் தமிழில் இல்லை. எனவே ஆய்வு நோக்கில்
அத்வைதத்தை அணுகுவதற்கு தாங்கள் கூறிய
தமிழ் நூல்கள் எவையும் பயன்படாது.
-------------------------------------------------------------------------
(15) மார்க்சியத்தின் போதாமையை
அத்வைதம் போக்குமா?
---------------------------------------------------------------------
அத்வைதம் இந்தியாவின் ஒளி பொருந்திய தத்துவம்.
அது மார்க்சியத்துக்கு கொடையளிக்க வல்லது.
எனவே அத்வைதத்தின் சிறந்த அம்சங்களை
மார்க்சியம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சுவீகரித்துக் கொள்வதன் மூலமே
மார்க்சியத்தின் போதாமை அகலும்.

அத்வைதம் மார்க்சியத்துக்கு வளம் சேர்க்கும்.
மார்க்சியத்தின் தத்துவ வறுமையை அத்வைதம்
போக்கும். மார்க்சியம் ஒன்றும் சர்வரோக
நிவாரணி அல்ல. எனவே எது தன்னிடம் இல்லையோ,
அல்லது எது தன்னிடம் பற்றாக் குறையாக
உள்ளதோ, அதை அத்வைதத்திடம் இருந்து
மார்க்சியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பெற்றுக் கொள்ள மறுப்பது நியாயமல்ல.

பொருளுக்கே முதன்மை கொடுப்பதால், மார்க்சியத்தில்
ஆன்மா பற்றிய தெளிவு இல்லை. மனம் பற்றிய
மார்க்சியத்தின் புரிதல் குறைபாடு உடையது.
மனத்தின் ஆற்றல் பற்றி மார்க்சியம் குறைத்து
மதிப்பிடுகிறது. இக்குறைகளாலேயே மார்க்சியம்
தத்துவ வலிமை இழந்து நிற்கிறது; பல்வேறு
குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.
இப்படியாக விமர்சனம் தொடர்கிறது.

மேம்போக்காகவும், நுனிப்புல் தன்மையுடனும்
பொறுப்பற்ற முறையிலும் போகிற போக்கில்
எதையாவது சொல்லி விட்டுப் போவது என்ற
தொனியிலுமே இக்கூற்றுகள் உள்ளன.

பித்துக்குளித் தனத்தின் உச்சத்தைத் தொடும்
இத்தகைய அங்கலாய்ப்புகள் தமிழ்ச் சமூகத்தில்
வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பரிசீலிப்பதற்கே அருகதையற்ற, கருத்து என்னும்
அந்தஸ்தையே வழங்க முடியாத முழுமுற்றான
அபத்தம்தான் இது. என்றாலும், காய்தல் உவத்தல்
அகற்றி, இதையும் பரிசீலிப்போம்.

மார்க்சியம் சர்வரோக நிவாரணி இல்லைதான்.
மார்க்சியம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு
தத்துவமும் சர்வரோக நிவாரணி அல்ல.

மார்க்சியத்தின் போதாமையாக இவர்கள் கூறுவன
யாவும் மார்க்சியத்துக்கு மட்டும் உரியன அல்ல.
எல்லா வகையான பொருள்முதல்வாதப்
பிரிவுகளுக்கும் உரியன என்றே பொருள்படும்.
சாங்கியம், நியாயம், பௌத்தம் போன்ற பண்டைய
பொருள்முதல்வாதப் பிரிவுகள் முதல் லுத்விக்
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் வரையிலான
அனைத்துப் பிரிவுகளுக்கும் இவர்கள் கூறும்
"போதாமை" பொருந்தும். எனவே மொத்தப்
பொருள்முதல்வாதத்தின் மீதான தாக்குதல்
என்றே இது பொருள்படும்.

இந்தியாவில் மிகவும் பழமையான பொருள்முதல்
வாதம் என்று கபிலரின் சாங்கியத்தைக் கூறலாம்.
அடுத்து வந்த நியாயம் சாங்கியத்தை விட வலுவான
தர்க்க அடிப்படைகளைக் கொண்டிருந்தது.
பௌத்தமும் சமணமும் பொருள்முதல்வாதமே.
உலகத்தைப் படைத்தவர் கடவுள் என்று பௌத்த
சமண சமயங்கள் கூறவில்லை. ஆத்மா என்பதை
அடியோடு மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம
வாதம்" (theory of no soul) ஆத்மா இல்லை என்று
விளக்குகிறது. அதே நேரத்தில் சமணம் ஆத்மாவை
ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதப்
பிரிவுகளில் முரண்பாடுகள் இருந்தன. எனவே
மார்க்சியத்தின் பொருள்முதல்வாதத்தை
முறணற்றதாக (consistent) உருவாக்கினர்
மார்க்சும் எங்கல்சும். தம் காலத்தின் அறிவியல்
வளர்ச்சியை முழுவதுமாக உட்கிரகித்துக்
கொண்டதே மார்க்சியப் பொருள்முதல்வாதம் ஆகும்.

எனவே மார்க்சியம் தன் மீதான தாக்குதலை
நவீன அறிவியலின் துணைகொண்டு எதிர்த்து
முறியடிக்க வல்லது. ஆனால் அத்வைதம்
அப்படியல்ல. எட்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னரான அறிவியலின் வளர்ச்சியானது
அத்வைதத்தில் பிரதிபலிக்கவில்லை. எனவே
அத்வைதம் ஒரு தேங்கிய குட்டை. அசுரத் தனமான
அறிவியல் வளர்ச்சியில் இருந்து தன்னை
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, அதன்
விளைவாக வழக்கு வீழ்ந்த தத்துவம் அத்வைதம்.
இன்னும் சொல்லப் போனால், அத்வைதம் ஒரு
முன்னாள் தத்துவம். அது நவீன உலகின்
தத்துவம் அல்ல. இதை அனைத்தும் அடுத்தடுத்த
கட்டுரைகளில் நிரூபிக்கப் படும்.

பொருள், கருத்து,ஆத்மா, மனம் ஆகியவை பற்றி
அத்வைதம் கூறுவன யாவும் மெய்யல்ல என்பதை
அடுத்துக் காணலாம். அத்வைதம் கூறும் பிரம்மம்
என்பது எப்பேர்ப்பட்ட பித்தலாட்டம் என்பதையும்
அடுத்துக் காண்போம்.
------------------------------------------------------------------------------------------
done (14) கிடக்கிற வேலை கிடக்கட்டும்,
கிழவியைத் தூக்கி மணையில் வை!
மார்க்ஸ் மண்டன மிசுரர் அல்ல!
--------------------------------------------------------------------------
1) தலைவாசலில் அத்வைதம் நின்று கொண்டு
இருக்கிறது; அது மார்க்சியத்துக்கு பேராபத்து
என்று சிலர் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

2) கிழடு தட்டிப்போய், எழுந்து நடக்கக்கூடத்
தெம்பில்லாமல் போய், படுத்த படுக்கையாக
மியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்
பட்டிருக்கும் அத்வைதம் மார்க்சியத்தை சவாலுக்கு
அழைக்கிறது என்பதெல்லாம் புலன்களின்
தீட்சண்யத்தை இழந்து நிற்கும் சிலரின் மனப்
பிராந்தியே தவிர உண்மை அல்ல.

3) மார்க்சியம் நடைமுறையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் ஒரு தத்துவம் (It is a philosophy in practice).
ஆனால் அத்வைதமோ வரலாற்றில் மட்டுமே
வாழுகிற தத்துவம். இரண்டுக்கும் பாரதூரமான
வேறுபாடு உண்டு. அதாவது உயிருள்ள மனிதனுக்கும்
செத்த சவத்துக்கும் உள்ள வேறுபாடு.

4) காரல் மார்க்ஸ் உபரி மதிப்புக் கோட்பாட்டை
(Theory of surplus value) உருவாக்கினார். இதற்கு எதிராக
ஆதிசங்கரர் என்ன கோட்பாட்டை உருவாக்கினார்?
ஆதிசங்கரரின் எந்தெந்தக் கோட்பாடுகள் மார்க்சின்
மூலதனம் நூலைச் சவாலுக்கு அழைக்கின்றன?

5) சிறிதும் நாணம் இல்லாமலும், எந்த விதமான
குற்ற உணர்வும் இல்லாமலும் மார்க்சியம்
அத்வைதத்தால் ஆபத்துக்கு உள்ளாகி நிற்கிறது
என்று கூறுவதா?

6) சமகால உலகைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும்
இல்லாமல், மார்க்சியம் தீர்வு கண்டே ஆக வேண்டிய
சமகாலப் பிரச்சினைகள் பற்றிய எந்தப் புரிதலும்
இல்லாமல், அத்வைதப் பூச்சாண்டி காட்டிக் கொண்டு
திரிவது வெட்கங்கெட்ட செய்கை அல்லவா?

7) கிடக்கிற வேலை கிடக்கட்டும், கிழவியைத்
தூக்கி மணையில் வை  என்பது போல,
அத்வைதம்தான் உடனடி கவனத்திற்கான ஒரே
பிரச்சினை என்பதா?

8) மார்க்சியம் என்பது ஒரு ஏகே 47 துப்பாக்கி.
அத்வைதம் என்பது எட்டாம் நூற்றாண்டின்
துருப்பிடித்த வாள். இரண்டும் சமமாகி விடுமா?
ஆதிசங்கரரால் வீழ்த்தப் படுவதற்கு மார்க்ஸ்
என்ன மண்டன மிசுரரா?

9) பொருள்முதல்வாதம் 2500 ஆண்டுத் தொன்மை
மிக்கது. மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு
முன்பே உலகெங்கும் பொருள்முதல்வாதம்
தத்துவங்களின் அரசனாக இருந்தது. காலந்தோறும்
அது வளர்ந்து கொண்டே இருந்தது. மார்க்ஸ்
முன்வைத்த பொருள்முதல்வாதம் அக்கால
அறிவியலின் சாரத்தை உட்கிரகித்துக் கொண்ட
பொருள்முதல்வாதம்.நியூட்டனின் இயற்பியலை
முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்ட, நன்கு
வளர்ச்சியடைந்த பொருள்முதல்வாதம். இந்த
உண்மையை ஏற்க மறுப்போர் ஏங்கல்ஸின்
டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலைப் படிக்கவும்.

10) ஆனால் அத்வைதமோ எட்டாம் நூற்றாண்டின்
கால எல்லைக்குள் முடங்கிப்போய், காலந்தோறும்
வளர்ச்சி அடையாமல், நவீன அறிவியலை
உள்வாங்காமல், தேங்கிய குட்டையாக
ஆகிப்போன தத்துவம். காய்ந்து கருவாடாகிப்
போன ஒரு தத்துவம். எனவே மார்க்சியத்துக்கு
எதிராகக் களம் இறங்குவதற்கு அத்வைதத்திடம்
என்ன இருக்கிறது?

11) அத்வைதத்தின் அச்சு அசலான ஐரோப்பியப்
பதிப்பு பெர்க்லி பாதிரியாரின் "பொருள் மறுப்புத்
தத்துவம் (IMMATERIALISM). இவ்விரண்டும் அகநிலைக்
கருத்துமுதல்வாதமே. இவ்விரண்டையுமே தமது
புறவயவாதம் (OBJECTIVISM) என்ற தத்துவத்தால்
அடித்து நொறுக்கித் தூள் தூள் ஆக்கினார்
இருபதாம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்
அயன் ராண்ட்.              

12) இந்தியாவின் கோடிக்கணக்கான
தொழிலாளர்கள் நடுவே, உழைக்கும் பெண்கள்
நடுவே,விவசாயிகள் நடுவே அத்வைதத்திற்கு
எவ்விதமான அறிமுகமோ செல்வாக்கோ கிடையாது.

13) அத்வைதம் சிறுபான்மையினரான மேட்டுக்குடிகளின்
தத்துவம் (elite philosophy). அது ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம். உயர்குடிப் பெண்களின் லேடீஸ் கிளப்
தத்துவம். பட்டுச் சேலைக்கு மேல் ஒட்டியாணம்
அணிபவர்களின் தத்துவம். அவர்கள் அதை
ஆராதிக்கட்டும். நாம் சென்று தடுத்தாட்கொள்ள
வேண்டியதில்லை.

13) அத்வைதம்தான் பிரதான எதிரி என்று
சொல்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
பிரதான எதிரிகள் ஆயிரம் பேர் இருக்க,
அவர்களை விட்டு விட்டு அத்வைதத்தை எதிரியாகச்
சுட்டுபவர்கள் பின்நவீனத்துவ தாசர்களே.

14) மார்க்சியத்தின் மொத்த எதிர்ப்பும் பின்நவீனத்தை
நோக்கிக் குவிந்து விடக்கூடாது என்பதற்காக,
எதிர்ப்பை திசை  திருப்பவும், மடைமாற்றவுமே
இவர்கள் அத்வைதமே பிரதான எதிரி என்று
வரையறுக்கிறார்கள். இவர்கள் மாறு வேடத்தில்
மார்க்சிய முகாமில் இருக்கும் பின்நவீனத்துவ
தாசர்கள்.

15) சமகால இந்தியச் சூழலை பருண்மையாக ஆய்வு
செய்து சரியான முடிவுக்கு வரும் மார்க்சியர்கள்
எவரும், மார்க்சியத்தின் பிரதான எதிரியாக
பின்நவீனத்துவம், தொண்டு நிறுவனங்கள் (NGOs)
ஆகியவை இருப்பதை உணர்வார்கள்.

16) அத்வைதம் மார்க்சியத்தின் பொருள்முதல்
வாதத்திற்கு ஒவ்வொரு அம்சத்திலும் எதிரிடையான
தத்துவம்தான். என்றாலும் மார்க்சியத்துக்கு
முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களால் விட்டது.
அது ஏற்கனவே வீழ்த்தப் பட்டு விட்டது. மார்க்சியம்
தோன்றிய பிறகு, இந்தியத் தத்துவ  அரங்கிலும்
மார்க்சியம் அத்வைதத்தை வீழ்த்தி விட்டது.

17) அத்வைதம் எதிரி முகாமில் இருப்பதுதான்.
எதிரி முகாமில் உள்ள எல்லாருமே பிரதான
எதிரி ஆக மாட்டார்கள்.எனவே அத்வைதம்
பிரதான எதிரி அல்ல. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்
வித்தியாசம் தெரிந்தவர்கள் இதை சரியென்று
ஏற்பார்கள்.
*************************************************************
பின்குறிப்பு:8ஆம் அம்சத்தில் குறிப்பிட்டுள்ள மண்டன
மிசுரர் (Mandana Mishra) பற்றிய குறிப்பு; இவர் ஆதிசங்கரர்
காலத்திய வேதாந்தத் தத்துவ ஞானி.பக்தி
மார்க்கத்தவர். ஆதிசங்கரர் இவருடன் வாதம் செய்து
இவரை வென்றார்.
------------------------------------------------------------------------------------------------
 அத்வைதம் நடைமுறை உலகில் (practical world)
வாழவில்லை. ஆனால்  வரலாற்றில் வாழ்கிறது.
எனவே அதற்கு ஏற்ற விதத்தில் அதை எதிர்கொண்டால்
போதும். அத்வைத விவாதம் ஒரு academic விவாதமே.

ஈ எம் எஸ் அவர்கள் அத்வைத ஆதரவாளரே.

ஈ எம் எஸ்ஸின் அத்வைத மயக்கம், மேற்கு வங்க கம்யூனிஸ்டுகளின் விவேகாநந்தர் மீதான அபிமானம்,
இளைஞர்கள் அத்வைதம் கற்பது ஆகிய அனைத்தும்
இருக்கத்தான் செய்கின்றன. இவை இருக்கத்தான்
செய்யும். ஏனெனில் சமகால உலகம் தகவல் தொடர்புத்
துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அத்வைதம்
பற்றி அமெரிக்க இளைஞர்  ஒருவர் தமது சென்னை
நண்பரிடம் முகநூலில் வினவலாம்.
**
இதனால் எல்லாம் அத்வைதம் ஒரு potential danger என்று
பொருள் ஆகாது. அத்வைதத்தை உரிய விதத்தில்
சந்திக்கலாம். சந்திப்போம். பொருள்முதல்வாதத்தை
அதிக அளவில் எடுத்துச் சென்றாலே  போதும்,
அத்வைதம் காணாமல் போய்விடும்.
**
 அத்வைதத்தை விட, இன்று பின்நவீனத்துவம்
கணிசமான பேரைப் பற்றிக் கொண்டுள்ளது.
அது அத்வைதத்தை விட பல மடங்கு கூடுதலான
ஆபத்து அல்லவா?
**
பிராட்டஸ்டெண்ட் கிறித்துவப் பின்னணி கொண்ட
சால்வேஷன் ஆர்மி (salvation army) போன்ற ஏகாதிபத்திய
நிறுவனங்கள் உலகெங்கும் செய்து வருவது என்ன?
மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரமும் மதமாற்றமும்தானே!
இதற்கான நிதியைக் கொட்டிக் கொடுப்பது யார்?
ஏகாதிபத்தியம்தானே! கணக்கற்ற எதிரிகள் இருக்கும்போது
**
எனவே பிரதான எதிரி என்ற வகைமையில் அத்வைதம்
வருமா? வராது. அது செத்த பாம்புதான்.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபேம் (Oxfam) என்ற  ஏகாதிபத்திய
நிறுவனம் இருக்கிறது. இது ஒரு தர்ம ஸ்தாபனம் என்ற
பெயரில் உலகின் ஏழைகளுக்கு தர்மம் (charity) செய்கிறது.
பணத்தையும் கொடுத்து மார்க்சியத்தையும் எதிர்த்துப்
பிரச்சாரம் செய்யும் ஒரு ஆபத்தான அமைப்பு இது.

இந்தியாவிலும் oxfam India  அமைப்பு உள்ளது; செயல்படுகிறது.
இந்தியாவில் ஒரு  நிறுவனமாக இது பதிவு செய்து
கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
(13)
அத்வைதம் ஒரு நழுவல்வாதம் (philosophy of escapism)!
அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்தா?
--------------------------------------------------------------------------
ஒரு தத்துவத்தைப் பரிசீலிக்கும்போது, அதன்
மீதான ஒரு குறைந்தபட்சப் பரிவு இருந்தால்தான்
அதிலுள்ள நல்ல அம்சங்கள் கண்ணில் படும்
என்றார் ஹெச் ஜி வெல்ஸ். இது அத்வைதத்திற்கு
மட்டுமல்ல எல்லாத் தத்துவங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக, தமிழ் வாசகச் சூழலில்,
நேர் எதிரான இரண்டு விஷயங்களை, தத்துவம்,
கோட்பாடு, அரசியல் இப்படி எதையாயினும்,
பரிசீலிக்கும்போது, பரிசீலனைக்கு உரிய நடுநிலை
என்பது அறவே இல்லை. நடுநிலை என்பது காய்தல்
உவத்தல் அகற்றிய மனநிலை ஆகும். நடுநிலை
என்பதற்கு இதுதான் பொருள்.

இதற்கு மாறாக, கண்மூடித்தனமான வெறுப்பைக்
கொட்டி, குப்பையைக் குவிப்பது ஆய்வும் ஆகாது;
பரிசீலனையும் ஆகாது. dispassionate assessment என்று
ஆங்கிலமரபில் கூறப்படுவதை, "காய்தல் உவத்தல்
அகற்றி ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"
என்கிறது தமிழ் மரபு. இதுதான் முந்திய வாக்கியத்தில்
கூறிய நடுநிலை ஆகும். எனவே தமிழ் மரபைப்
பின்பற்றி, அத்வைதப் பரிசீலனையைத்
தொடங்குவோம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து வருமா?
அத்வைதம் மார்க்சியப் பொருள்முதல்வாதத்துக்கு
சவாலாக விளங்குமா? இதுதான் இந்தக் கட்டுரையின்
பேசுபொருள்.

உண்மையிலேயே மிகவும் பலவீனமான ஒரு
கருப்பொருள் இது. மியூசியத்தில் சிவனே என்று
கிடக்கும் அத்வைதம் மார்க்சியத்துக்கு ஆபத்தை
ஏற்படுத்தி விடும் என்பதே ஒரு கற்பனை. கற்பனை
கூட அல்ல, வெறும் பிரமை.

சுரண்டல் வர்க்கங்கள் மியூசியத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் அத்வைதத்தை விழிப்புறுத்தி,
மார்க்சியத்துக்கு எதிராகப் பயன்படுத்தும்
ஆபத்து இருக்கிறது என்பதெல்லாம் சிறு
குழந்தைகளின் கனவில்தான் சாத்தியம்.

அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து என்று
கருதுபவர்கள் பின்வரும் கேள்விக்கு விடையளிக்க
வேண்டும். சமகால இந்தியாவின் பொருள் உற்பத்திக்கு
அத்வைதம் பயன்படுமா? இந்தக் கேள்விக்கான
விடையே, அத்வைதத்தால் ஆபத்தா என்ற
கேள்விக்கும் விடையாகும்.

சமகாலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும்
அத்வைதம் சமூகத்தின் பொருள் உற்பத்தியை
ஊக்குவித்தது இல்லை. ஏனெனில் அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவம் அல்ல.
It is a passive philosophy. புறவுலகை  ஒட்டுமொத்தமாக
நிராகரிக்கும் அத்வைதம் புறவுலகின் அனைத்துப்
பிரச்சினைகளையும் கூடவே நிராகரிக்கிறது.
கோடிக்கணக்கான மக்களின் லெளகீக
வ்யவஹாரங்களை (உலகியல் விவகாரங்களை)
அத்வைதம் கண்டு கொள்ளவே இல்லை
(did not give cognizance even).பிரச்சினைகளின் இருப்பையே
அத்வைதம் அங்கீகரிக்காதபோது, பிரச்சினைகளுக்கு
அதில் தீர்வு எப்படி இருக்க முடியும்?

இந்த விஷயத்தில் பௌத்தம் அத்வைதத்துடன்
கடுமையாக முரண்படுகிறது. மக்களின்
துன்பத்திற்கு என்ன காரணம் என்று ஆழ்ந்து
சிந்தித்தார் புத்தர். அந்தச் சிந்தனையின் விளைவே
பௌத்தம்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று
கண்டறிந்தார் புத்தர். இந்த உலகின் பிரச்சினைகளுக்கு
இந்த உலகிலேயே தீர்வு கூறினார் புத்தர்.
மறு உலகில் கிட்டப்போகும் சொர்க்கமே தீர்வு
என்ற மதங்களின் போலித் தீர்வை நிராகரித்தவர்
புத்தர். புத்தரைப் போன்று ஆதிசங்கரர் மக்களின்
துன்பத்திற்குக் காரணம் என்ன என்று
சிந்திக்கவில்லை. மிகவும் வசதியாக புறவுலகையே
நிராகரித்ததன்  மூலம், உலகியல் பிரச்சினைகளுக்கு
தீர்வு காணும் நெருக்கடியில் இருந்து  தப்பித்துக்
கொண்டவர் ஆதிசங்கரர். ஆக, அத்வைதம் ஒரு
நழுவல்வாதத் தத்துவம் (philosophy of escapism).

எனவே இந்திய ஆளும் வர்க்கங்களின் கரங்களில்
அத்வைதம் ஒரு வாளாகச் சுழலும் என்ற
கற்பனையெல்லாம் குட்டி முதலாளித்துவ
விடலைகளின் சுயஇன்பமே தவிர வேறல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ மதப்
பரப்பலுக்கு எதிராக அத்வைதத்தை விவேகானந்தர்
பயன்படுத்தியபோதும், அதை ஒரு கேடயமாகத்தான்
பயன்படுத்தினாரே தவிர, அதை வாளாகப்
பயன்படுத்தவில்லை; பயன்படுத்தவும் முடியாது.
ஏனெனில் அத்வைதம் தற்காப்புக்குப் பயன்படும்
தன்மை கொண்டதே தவிர, தாக்குதலுக்குப்
பயன்படும் தன்மை கொண்டதல்ல என்று உணர்ந்து
இருந்தார் விவேகானந்தர்.

எனவே அத்வைதத்தால் மார்க்சியத்துக்கு ஆபத்து
என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
நகைச்சுவை.

அப்படியானால், மார்க்சியத்துக்கு ஆபத்து விளைக்க
வல்ல சக்தி எது? பல சக்திகள் இருக்கின்றன.
அவற்றுள் பிரதானமானது .பின்நவீனத்துவம்.
அத்வைதம் ஆன்மிகம் என்ற ஒரே ஒரு துறையுடன்
நின்று போகிறது. ஆனால் பின்நவீனத்துவம்
மார்க்சியம் தலையிட்ட அத்தனை துறைகளிலும்
தானும் நுழைந்திருக்கிறது. அரசியல், பொருளாதாரம்,
அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு
என்று வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும்
மார்க்சியத்துடன் மல்லுக்கு நிற்கிறது பின்நவீனத்துவம்.

வியட்நாம் போர் போன்று போர் மூலம் மார்க்சியத்தை
வெற்றி கொள்வது என்ற செயல் தந்திரத்தை தற்போது
மாற்றிக் கொண்டுள்ளது ஏகாதிபத்தியம். மாறாக,
உலகெங்கும் NGO அமைப்புகள் என்னும் தன்னார்வக்
குழுக்களைத் தோற்றுவித்து, அவற்றுக்கு நிதியைக்
கொட்டிக் குவித்து, மூன்றாம் உலக நாடுகளில்
மார்க்சியத்துக்கு எதிராகச் செயல்படுவதே
ஏகாதிபத்தியத்தின் இன்றைய செயல்தந்திரம்.

விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதிய
தத்துவத்தை உருவாக்கி, லத்தீன் அமெரிக்க நாடுகளில்
மார்க்சியத்தை முறியடிக்க இன்றும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம்.

ஆக, இவை போன்ற அபாயங்களைத்தான் இன்று
மார்க்சியம் களத்தில் சந்திக்க வேண்டி இருக்கிறதே
தவிர, அத்வைதத்தை அல்ல.

அத்வைதத்தை எதிரியாகச் சுட்டுவதன் மூலம்,
மெய்யான எதிரிகளை கண் பார்வையில் இருந்து
மறைக்க முயற்சி செய்வதும் ஒரு தந்திரமே.

இதுவரை கூறியவற்றால், அத்வைதம்
மார்க்சியத்துக்கு இணக்கமானது என்று எவரும்
புரிந்து கொள்ளக் கூடாது. பொருள்முதல்வாதத்திற்கு
நேர் எதிரானது அத்வைதம். என்றாலும் அத்வைதத்தின்
தத்துவ உள்ளடக்கம் பொருள்முதல்வாதத்தால்
என்றோ முறியடிக்கப் பட்டு விட்டது. எனவே
செத்த பாம்பை ஏன் மீண்டும் அடிக்க வேண்டும்?
************************************************************  
   புறநானூற்றில் கடவுள் மறுப்பு 
இலக்கியத்தில் சார்வாகம்!
சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநாநூறு தமிழர்களின் பண்பாடு வரலாறு போன்ற குறிப்புக்களை நமக்கு வழங்கி தமிழர்களின் வாழ்வியலை விதந்தோதும் நூல்களில் மிக மேன்மையான நூலாகும்.
இந்நூலில் பண்டைய சார்வாகர்களின் உலகாயதப் பொருள்முதல்வாதம் (உலகாயதம்=கடவுள் மறுப்புக் கொள்கை) ஆங்காங்கே இழையோடிருப்பதை நாம் படிக்க முடியும்!
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 355ஆம் பாடல் வரிகள் "கடவுளும் இலவே!" என்று முடிகிறது!
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
விள‌க்க‌ம்:
பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்.
ஒளிரும் தந்தங்களை உடைய யானையை வீழ்த்துவர்
யானையை வீழ்த்தி இறந்த எம் முன்னோரின் நினைவைப் போற்றும் நடு கல்லைப் போற்றுவோமே
அன்றி, நெல் (அரிசி) போன்றவற்றைக் கொட்டி வழிபாடும் கடவுள் எங்களுக்கு இல்லை!
(மாங்குடிக் கிழார்)


சாதாவும் ஸ்பெஷலும்!
-----------------------------------------
விசிஷ்டாத்வைதம் என்றால் விசேஷமான அத்வைதம்
என்று பொருள். அதாவது சங்கரரின் அத்வைதம் சாதா
அத்வைதம் என்றால் ராமானுஜரின் அத்வைதம்
ஸ்பெஷல் அத்வைதம் ஆகும். அதாவது அது
சாதா தோசை. இது ஸ்பெஷல் தோசை.
**
இரண்டுமே கருத்துமுதல்வாதம்தான்.
கருத்துமுதல்வாதம் அல்ல பொருள்முதல்வாதமே
உலக மக்களுக்குப் பயன்படும் என்கிறோம்.
**

தமிழ் இலக்கணத்தில் "இனங்குறித்தல்" என்று ஒரு
விதி (rule) உண்டு. சோறு உண்டான் என்றால்
வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான் என்று பொருள்
அல்ல. சோற்றுடன் குழம்பு, கறி அனைத்தையுமே
உண்டான் என்ற பொருளையே "சோறு உண்டான்"
என்ற தொடர் குறிக்கும். அது போல, அத்வைதத்தின்
மீதான விமர்சனம் எல்லா வகை அத்வைதத்தையும்
குறிக்கும்.
------------------------------------------------------------------
விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)
Atlas shrugged (Ayn Rand)
இரண்டு நாவல்களையும் படித்து
அத்வைதம் vs புறவயவாதம் (objectivism)
பற்றி அறிக.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் அத்வைதக்
கருத்துகள் உள்ளன. அயன் ராண்ட்டின் Atlas shrugged
நாவலில் அத்வைதத்திற்கு எதிரான தத்துவமான
புறவயவாதம் (objectivism) என்னும் தத்துவம் பற்றிய
கருத்துக்கள் உள்ளன. இவை இரண்டும் நாவல்களே.
தத்துவ நூல்களை படித்துப் புரிந்து கொள்ளும்
ஆர்வமோ பொறுமையோ இல்லாதவர்கள் இவ்விரண்டு
நாவல்களையும் கதை போலப் படித்து, இவ்விரு
தத்துவங்கள் பற்றியும் அறியலாம்.
**
அயன் ராண்ட் (Ayn Rand) என்பவர் அமெரிக்கப் பெண்
எழுத்தாளர். 1980களிலேயே மறைந்து விட்டார்.

அத்வைதம் பற்றி அறிந்து கொள்ள ஆதிசங்கரரின்
விவேக சூடாமணி என்ற சிறு நூலைப் படியுங்கள்.
இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
தபோவனப் பிரசுராலயம் வெளியிட்டு உள்ளது
----------------------------------------------------------------------------------------
done (12) அத்வைதம் என்னும் தந்தக் கோபுரத் தத்துவம்!
வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு பதில்!
பாமர மக்களின் உலகியல் பிரச்சினைகளுக்கு
அத்வைதத்தில் தீர்வு இல்லை!
1) அத்வைதம் ஞான மார்க்கத்தை போதித்தது.
மார்க்கம் என்றால் வழி என்று பொருள். அத்வைதம்
கூறும் உன்னத நிலையை ஒருவர் அடைய வேண்டும்
என்றால் அவர் அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும்.
2) இதற்கு மாறாக, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்
பக்தி மார்க்கத்தைப் போதித்தது. இடைவிடாத பக்தி
மூலம் விசிஷ்டாத்வைதம் கூறும் உன்னத நிலையை
ஒருவர் எய்த முடியும் என்றார் ராமானுஜர்.
3) ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகிய இரண்டில்
பக்தி மார்க்கமே எளிதானது; எல்லோராலும்
கடைப்பிடிக்க சுலபமானது. கோடிக்கணக்கான
மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் உழன்று
கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஞான மார்க்கத்தைப்
பின்பற்றி ஞானத்தை அடைவது எப்போது? இதற்கு
எத்தனை பேர் முன்வருவர்?

4) ஆனால் பக்தி மார்க்கம் சுலபமான வழி.இது மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த வழி. ஞானம் தேவையில்லை;
பக்தியே போதும்; பக்தி இருந்தாலே ஞானம் உட்பட
எல்லாவற்றையும் அடையலாம் என்று போதித்தார்
ராமானுஜர். இப்போதனை வெகுமக்களை எளிதில்
கவர்ந்தது. இதனால் அத்வைதத்தை விட
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர்கள்
பெருகினர். இவ்வாறு ராமனுஜர் அத்வைதத்தை
முறியடித்தார்.

5) ராமானுஜர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்,
13ஆம் நூற்றாண்டில் மத்வர் பிறந்தார். இவர் துவைதம்
என்ற தத்துவத்தைத் தோற்றுவித்தார். ராமானுஜரை விட
சங்கரருடன் இவர் அதிகமாக முரண்பட்டவர். சங்கரின்
தத்துவம் அத்வைதம், அதாவது இரண்டல்ல ஒன்றுதான்
என்பது. மத்வரின் தத்துவம் எல்லாமே இரண்டுதான்
என்பது.எனவே தம் பங்குக்கு சங்கரரை அதிகமாகச்
சாடினார் மத்வர். மேலும் மத்வரும் மக்களால்
எளிதில் பின்பற்ற முடிந்த பக்தி மார்க்கத்தையே
போதித்தார். ஆக, ராமானுஜர், மத்வர் ஆகிய
இருவரின் தாக்குதலில் அத்வைதம் நிலைகுலைந்தது.

6) இவ்வாறு மக்களின் ஆதரவு இல்லாமல் மங்கிப்போன
அத்வைதம் அறிவுஜீவிகளின் ஒரு குறுகிய வட்டத்தில்
மட்டுமே செல்வாக்குடன் இருந்தது. பரந்துபட்ட
மக்களின் ஆதரவு (following) அத்வைதத்திற்கு இல்லை.
அத்வைதம் என்பது அறிவுஜீவிகளின் தத்துவம்
(philosophy of intellectuals). அது ஒரு தந்தக் கோபுரத் தத்துவம்.
அது என்றுமே பாமர மக்களின் தத்துவமாக
இருந்ததில்லை. பாமர மக்களின் உலகியல்
பிரச்சினைகளுக்கு அத்வைதத்தில்
ஒரு தீர்வும் இல்லை.

7) மேற்கூறிய யாவும் வரலாற்று நிகழ்வுகள். இவை
உண்மைகள் (FACTS). இவை உள்ளங்கை நெல்லிக்கனி
போல் தெரிபவை.

8) ஆனால் துரதிருஷ்ட வசமாக, வாசகர்களில்
சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மேற்கூறிய
உண்மைகளை (facts) மறுத்துக் கொண்டு
இருக்கின்றனர். இவர்கள் factsக்கும் opinionக்கும்
வித்தியாசம் தெரியாதவர்கள்.

9) Facts are sacred but opinions may differ என்பது ஒரு வாழ்வியல்
உண்மை ஆகும். மகாத்மா காந்தி இறந்து விட்டார்
என்ற வாக்கியம் ஒரு உண்மையை, ஒரு விவரத்தைக்
கூறுவது. அது கருத்து அல்ல. அதை எவரும் சர்ச்சைக்கு
உள்ளாக்க முடியாது. மீறி எவரேனும் சர்ச்சைக்கு
உள்ளாக்கினால் அது பேதைமை ஆகும்.

10) அதுபோலவே, அத்வைதம்  தோற்று விட்டது,
அது பின்பற்றுவோர் இல்லாமல் சுருங்கி விட்டது
என்ற கூற்றுகள் உண்மையான விவரங்கள்
(facts) ஆகும். அதில் சர்ச்சைக்கே இடமில்லை.

11) ராமானுஜர், மத்வர் ஆகிய இருவராலும்
முறியடிக்கப்பட்ட அத்வைதம், மக்கள் மன்றத்தில்
இருந்து அகன்று, அறிவுஜீவிகளின் குறுகிய வட்டத்தில்
வாழ்ந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக இதே
நிலையில் நீடித்த அத்வைதத்தை, 18-19ஆம்
நூற்றாண்டுகளில் பரமஹம்சரும் விவேகானந்தரும்
வெளியே எடுத்து மீண்டும் மக்கள் மன்றத்துக்குக்
கொண்டு வந்தனர். தத்துவச் செறிவு மிக்கதும்,
பக்தி சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராததுமான
அத்வைதம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கிறிஸ்துவ
மதப் பரப்பலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படும்
என்று பரமஹம்சரும் விவேகானந்தரும்
கண்டறிந்தனர்.

12) பக்தி, சடங்குகள் இல்லாததால்
அத்வைதம் ஒரு பிரபஞ்சத் தன்மையை (universal)
கொண்டிருக்கிறது என்று விவேகானந்தர்
உணர்ந்தார். எனவே மேலை நாடுகளில்
அத்வைதத்தைப் பரப்பினார். முந்திய
வாக்கியத்தில் கூறிய பிரபஞ்சத் தன்மை என்பதை
உள்ளூர்த்தன்மை அற்றது (No localism) என்று
புரிந்து கொள்ள வேண்டும்.

13) இவ்வாறு மங்கி மறைந்து மடிந்து போயிருக்க
வேண்டிய அத்வைதம் ஒரு சிறிய அளவிலான
மறுமலர்ச்சியை பரமஹம்சர் விவேகானந்தரால்
பெற்றது.

14) அத்வைதத்தின் இன்றைய நிலை என்ன? இந்த
2017இல் அத்வைதம் எந்த அளவு இந்திய மக்களிடம்
பரவி உள்ளது? எத்தனை ஆயிரம் பேர் அத்வைதத்தைப்
பின்பற்றுகின்றனர்?  (லட்சம், கோடி என்ற
பேச்சுக்கே இடமில்லை). இதற்கான விடை இதுதான்.

15) அன்று போல் இன்றும் மிகக் குறைவான
அறிவுஜீவிகளின் வட்டார எல்லைக்குள்ளேயே
அத்வைதம் முடங்கிக் கிடக்கிறது. அது
வெகுமக்களின் தத்துவமாக இல்லை. அறிவுஜீவிகளின்
நடுவே கூட, அத்வைதம் பற்றி அறிந்துள்ளோர்தான்
உள்ளனரே தவிர, அத்வைதத்தை வாழ்க்கை
நெறியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுவோர்
மிகச் சிலரே.

16) அறிவுஜீவிகளின் நடுவில் அத்வைதத்துக்கு இருந்த
கொஞ்ச நஞ்ச ஆதரவுக்கும் இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் பெண் எழுத்தாளர் அயன் ராண்ட்
மூலமாக ஒரு பேராபத்து ஏற்பட்டது. இவரின்
புறவயவாதம் (objectivism) என்னும் தத்துவமும்,
அத்தத்துவத்தை விளக்கி அவர் எழுதிய நாவல்களும்
இளம் அறிவுஜீவிகளின் சிந்தனையில் சக்தி மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தின. அயன் ராண்டின்
புறவயவாதம் சங்கரரின் அத்வைதத்தை
மூடத்தனமான தத்துவம் என்று நிரூபித்து
அத்வைதத்தை தூள் தூளாக நொறுக்கி விட்டது.

17) மேலே கூறிய அனைத்தும் சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட உண்மைகள் (indisputable facts).
வரலாறு நிரூபித்துள்ள உண்மைகள். இவற்றைச்
சர்ச்சைக்கு உள்ளாக்க முயல்வது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும்.
************************************************************
அத்வைதத்தை முதலில் தோற்கடித்தது
விசிஷ்டாத்வைதம். இந்த முதல்
தோல்வியில் இருந்து அத்வைதத்தால் மீண்டெழ
முடியவில்லை. இது வரலாற்று உண்மை. தொடர்ந்து
மத்வரின் துவைதமும் தனது முதல் எதிரியாக
அத்வைதத்தை வைத்து அதைக் கடுமையாக
எதிர்த்தது. இவற்றால் அத்வைதம் தாக்குப்
பிடிக்க முடியாமல் தோற்று ஓடியது. இது
வரலாறு நிரூபித்த உண்மை.
**
அத்வைதம் பற்றி எழுதும்போது அதை வீழ்த்திய
விசிஷ்டாத்வைதம் பற்றி எழுதாமல் இருக்க
முடியாது.நம் சமகாலத்தில் அயன் ராண்டின்
புறவயவாதம் (objectivism) மிச்சம் மீதியிருந்த
அத்வைதத்தின் செல்வாக்கையும் வெட்டி
வீழ்த்தி விட்டது. எனவே அத்வைதம் பற்றிய
கட்டுரையில், அதை வீழ்த்திய அயன் ராண்ட் பற்றி
எழுதாமல் இருக்க முடியாது.
**
----------------------------------------------------------------------------------------------------
அத்வைதம்
பின்நவீனத்துவமா?

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு  பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது.

விடுதலை இறையியல் (Liberation Theology) என்பது
ஏகாதிபத்தியத்தாலும் கிறித்துவப் பாதிரியார்களாலும்
உருவாக்கப்பட்டு மார்க்சியத்தை வீழ்த்தும்
நோக்குடன் அறிமுகப் படுத்தப் பட்டது. இது
இந்தியா, தமிழகம் உட்பட உலகெங்கும்
பரீட்சிக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்
இன்றும் செயல்படுத்தப் பட்டது. இதை கிறிஸ்துவ
மார்க்சியம் என்ற கயமைத்தனமான பெயரால்
ஏகாதிபத்தியம் அழைக்கிறது. விடுதலை இறையியல்
என்பது மார்க்சியத்திற்கு .எதிரானது. வெட்டி
வீழ்த்தப்பட வேண்டிய ஒன்று.

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் சோஷலிசத்தை திமுக எதிர்த்தது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.
------------------------------------------------------------
1) ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலைப் படிக்கவும்
அது அத்வைதக் கருத்துக்கள் அடங்கிய நாவல்.

2) கிறிஸ்துவ வெள்ளை ஏகாதிபத்தியத்  சுரண்டலை
எதிர்ப்பதில் பரமஹம்சர் விவேகானந்தருக்கு அத்வைதம்
பயன்பட்டது.

3) ஏகாதிபத்தயங்களுக்கு அத்வைதம் தேவைப்படவில்லை
தற்போது. தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவர்.

4) தத்துவம் என்பது எவர் மடியிலும் தவழும் குழந்தை.
5) அரவிந்தர், நாரயண குரு அத்வைதிகள். சமூக
சீர்திருத்தத்திற்கு அத்வைதம் பயன்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
done
1) அத்வைதம் என்பது ஒரு அருங்காட்சியகத் தத்துவம்.
இந்தியாவில் அது மியூசியத்தின் இருள் நிறைந்த
கடைசி அறையில் வைக்கப் பட்டுள்ளது. அரிஸ்ட்டாட்டில்
முதல் அயன் ராண்ட் வரை நீட்சே உட்பட மேலை
உலகினரின் தத்துவங்கள் இந்தியாவிலும் பிற
கீழ்த்திசை நாடுகளிலும் அறிமுகமான அளவுக்கு
ஆதிசங்கரரின் அத்வைதம் மேலை நாடுகளுக்குச்
சென்று சேரவில்லை. தத்துவங்களின் வரிசையில்
அத்வைதமும் ஒரு தத்துவமாக இடம் பெற்றுள்ளது
என்பதைத் தவிர உலகளவிலும் சரி, இந்திய
அளவிலும் சரி, வேறெந்த சிறப்பையும் அத்வைதம்
பெற்றிருக்கவில்லை.

2) தத்துவம் என்பது உலகை விளக்குவது
(interpreting the world).  உலகை விளக்கும்
தத்துவங்கள் அனைத்தும் கால எல்லைக்கு
உட்பட்டவை. அதாவது எந்தவொரு தத்துவமும்
அது தோன்றிய காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
முழுவதுமாக உட்பட்டது. அந்தந்தக் காலத்தின்
அறிவியல் வளர்ச்சிக்கு உட்பட்டே தத்துவங்களின்
உலக விளக்கம் (interpretation of the world) அமையும்.
இதற்கு எந்தத் தத்துவமும் விலக்கல்ல.

3) எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு
தத்துவம் அளித்த உலக விளக்கமானது காலப்
போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியில்
தவறானதாகி விடுவதும், அதன் காரணமாக
அத்தத்துவம் வழக்கு வீழ்ந்து விடுவதும் உண்டு.

4) அத்வைதம் அவ்வாறு வழக்கு வீழ்ந்துபோன
ஒரு தத்துவம் ஆகும். புறவுலகின் மெய்மையை
முரட்டுத்தனமாக மறுக்கும் தத்துவம் அத்வைதம்
என்பதை இங்கு நினைவு கூர வேண்டும். அறிவியல்
வளர்ச்சியின் விளைவாக, மனித சமூகம்
இயற்கையை, புறவுலகை நாளும் நாளும் அதிகமாக
அறிந்து கொண்டு, புறவுலகுடன் வினை புரிந்து,
இயற்கையைப் பெருமளவுக்கு மானுட  நலன்களுக்காகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட பிறகு, அத்வைதம்
மதிப்பிழந்தது.

5) மனித வாழ்க்கை என்பதே இயற்கையுடன்,
புறவுலகுடன் வினைபுரிவதுதான் என்று ஆன பிறகு,
புறவுலகையே மறுக்கும் அத்வைதம் எவ்வாறு
மானுட சமூகத்தால் ஏற்கப்படும்? இதனால்தான்
அத்வைதம் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளது.

6) இதற்கு மாறாக, புறவுலகின் மெய்மையை ஏற்கும்
எல்லா விதமான பொருள்முதல்வாத மற்றும்
கருத்துமுதல்வாதத்  தத்துவங்கள் இன்றளவும்
நடைமுறையில் உள்ளன.

7) எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய அத்வைதம்
ராமாநுஜரிடம் தன் முதல் தோல்வியைச் சந்தித்தது.
ராமாநுஜர் பன்னிரண்டாம் நூற்றாண்டில்
முன்மொழிந்த விசிஷ்டாத்வைதம் அத்வைதத்துடன்
தத்துவப்போரில் ஈடுபட்டது. அத்வைதத்தை
வீழ்த்தியது.

8) சங்கரர் ராமானுஜர் இருவரும் கருத்துமுதல்வாதிகளே.
இருவரின் தத்துவமும் கருத்துமுதல்வாதமே.
என்றாலும் புறவுலகு முற்றிலும் பொய் என்ற சங்கரரின்
அப்பாலைக் கருத்தை ராமானுஜர் நிராகரித்தார்.
எனவே, கருத்துமுதல்வாதமே சரி என்ற கொள்கை
உடையவர்கள் கூட, அத்வைதத்தை நிராகரித்து
விஷிஷ்டாத்வைதத்தை ஏற்றனர். ஆக சொந்த
முகாமிலேயே 12ஆம் நூற்றாண்டு வாக்கில்
அத்வைதம் முதல் தோல்வியைச் சந்தித்தது.அன்று
தொடங்கிய சரிவில் இருந்து இன்றுவரை
அத்வைதம் மீளவில்லை.

9) 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆங்கில
ஆட்சியின் விளைவாக, கிறிஸ்துவம் பெரும்
வேகத்துடனும், அரசின் ஆதரவுடனும் மொத்த
இந்திய சமூகத்தையும் ஆக்கிரமிக்கத்
தொடங்கியது. அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர்,
விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர்
கிறிஸ்துவத்தைக் காலத்தில் சந்திக்க அத்வைதத்தைக்
கையில் எடுத்தனர். விவேகானந்தர் வெளிநாடெங்கும்
அத்வைதத்தை அறிமுகப் படுத்தினார். இதன்
விளைவாகவே அத்வைதம் தத்துவ அரங்கில்
ஒரு செகண்ட் ரவுண்ட் (second round) வந்தது.
அத்வைதத்திற்கு இன்றுள்ள கொஞ்ச நஞ்ச
மரியாதைக்கு ஆதிசங்கரர் விவேகானந்தர்
கடமைப் பட்டுள்ளார்.

10) எட்டாம் நூற்றாண்டு தொடங்கி, 19ஆம்
நூற்றாண்டு விவேகானந்தர் வரை, மற்றும்
20ஆம் நூற்றாண்டின் அத்வைதிகளான கேரளத்து
நாராயண குரு வரை அத்வைதம் பலராலும்
விளக்கப்பட்டு வந்துள்ளது. வெளிநாடுகளிலும்
தத்துவத் துறையின் பல்வேறு அறிஞர்கள்
அத்வைதம் குறித்து விரிவாக ஆராய்ந்து பல
நூல்களை எழுதியுள்ளனர்.

11)  பொருள்முதல்வாதத்திற்கு அதன்
ஒவ்வொரு அம்சத்திலும் நேர் எதிரான தத்துவம்
அத்வைதம் ஆகும். முற்றிலும் முரண்பட்ட இரண்டு
விஷயங்களுக்கு உதாரணம் கூற  வேண்டுமென்றால்
பொருள்முதல்வாதத்தையும் அத்வைதத்தையும்
கூறலாம்.

12) அஹம் பிரம்மாஸ்மி (ஆத்மாவே பிரம்மம், நானே பிரம்மம்), தத்வமஸி (நீயும் கடவுளே) ஆகியவை மகா வாக்கியங்கள்
(Grand pronouncements)
உபநிடதங்களின் இந்த மகா வாக்கியங்களின் மீதுதான்
அத்வைதம் எழுந்துள்ளது. அத்வைதம் மட்டுமல்ல,
விசிஷ்டாத்வைதம் போன்ற கருத்துமுதல்வாதப்
பிரிவுகளும் இந்த மகா வாக்கியங்களை ஏற்பவையே.

13) உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பது
மார்க்சியத்தின் புகழ் பெற்ற வாக்கியம். இதற்கும்
அஹம் பிரம்மாஸ்மிக்கும் என்ன சம்பந்தம்? இவை
இரண்டும் எப்படிப் பொருந்த முடியும்?

14) முதலாளியும் தொழிலாளியும் ஒன்று (தத்வமஸி)
என்று எந்த முதலாளியாவது சொல்வானா?

20) அத்வைதமும் பொருள்முதல்வாதமும்
நீரும் நெருப்பும் போன்றவை. ஒன்று
மற்றொன்றுக்கு எதிரானது. *************************************************************                       
அத்வைதம் பின்நவீனத்துவமா?
சமகாலத்தில் அத்வைதம் பின்நவீனத்துவமாக
அவதாரம் எடுத்துள்ளதா?

பதில்: அத்வைதம் பின்நவீனத்துவம் அல்ல. மாறாக
அது முன்புராதனத்துவம் ஆகும். இரண்டும் ஒன்றல்ல.
இரண்டுக்கும் ஓட்டோ உறவோ கிடையாது.

ஒரு தத்துவத்தை அது பிறந்த காலத்தின் சமூகச்
சூழல்களே தோற்றுவிக்கின்றன. அத்வைதம் கி.பி
எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய
கீழைத்தத்துவம் (oriental philosophy). பின்நவீனத்துவம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட
சமூகச் சூழல்களில் ஐரோப்பாவில் பிறந்த
மேலைத் தத்துவம் (western philosophy).

இளமைப் பருவத்தில் இருந்த  இந்திய நிலவுடைமைச்
சமூகம் வளர்ந்து கொண்டிருந்தபோது, அத்வைதம்
தோன்றியது. முதலாளித்துவம் உச்சகட்ட வளர்ச்சியை
அடைந்து ஏகாதிபத்தியமாக மாறியிருந்த காலத்தில்
பின்நவீனத்துவம் தோன்றியது.

முதலாளித்துவம் என்றால் என்ன என்றே
ஆதிசங்கரருக்குத் தெரியாது. தமது இந்திய சமூகம்
பின்னாளில் முதலாளித்துவ சமூகமாக மாறும் என்று
கூட அவருக்குத் தெரியாது. ஆன்மிகம் (spiritualism)
என்ற ஒரு துறையைத் தவிர வேறு எதிலும் அத்வைதம்
நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால்
பின்நவீனத்துவம் அப்படியல்ல. அது வாழ்வியலின்
அனைத்துத் துறைகளிலும் தலையிட்டது.

ஆதிசங்கரர் என்ற தனியொரு தத்துவஞானியின்
சிந்தனையும் போதனைகளும் மட்டுமே அத்வைதம்
ஆகும். ஆனால் பின்நவீனத்துவம் என்பது பல்வேறு
காலக் கட்டங்களில், பல்வேறு அறிஞர்கள்
முன்மொழிந்த கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற
வேறுபாடுகள்.

தத்துவப் பரிசீலனையில், தத்துவத்தின் உள்ளமைப்பும் கட்டுமானமும் (structure and architecture) எப்படி
இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். ஒரு
தத்துவத்தைத் தீர்மானிக்கிற அம்சம் இதுதான்.

பிரம்மம் என்ற ஒற்றை மூலத்தை ஒற்றை மையத்தை
மட்டுமே கொண்டது அத்வைதம். அதில் விளிம்புக்கோ
பன்மைத்துவத்திற்கோ இடமில்லை. அது முற்றிலுமான
ஒருமைவாதம் (monism). பின்நவீனத்துவம் என்பது
மையம்-விளிம்பு போன்ற பல்வேறு இருமைகளில்,
இரண்டு இரட்டைகளுக்கும் வேறுபாடு இருக்கக்
கூடாது என்று வலியுறுத்தும் தத்துவம். மேலும் அது
பன்மைத்துவத்தை (pluralism) வலியுறுத்தும் தத்துவம்.
பின்நவீனத்துவம் வலியுறுத்துகின்ற எதற்கும்
அத்வைதத்தில் இடமில்லை.

பிரம்மம் என்பதே பிரபஞ்சத்தின் ஒரே உண்மை;
பேருண்மை என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின் இக்கருத்தை  பின்நவீனத்துவம் மூர்க்கமாகவும்
இகழ்ச்சியுடனும் நிராகரிக்கிறது. ஒரே உண்மை,
முழு உண்மை என்று மட்டுமல்ல உண்மை என்ற
ஒன்றே கிடையாது என்பதுதான் பின்நவீனத்துவத்தின்
சாரம். இந்தப் பிரபஞ்சத்தில், ஒன்றுக்கொன்று
சமமான, ஒன்றையொன்று சார்ந்த  பல்வேறு
கோட்பாடுகள் (theories) உண்டே தவிர,
உண்மை (truth) என்ற ஒன்று கிடையாது என்பதுதான்
பின்நவீனத்துவம். பொருள்முதல்வாதமும்
உண்மையல்ல; கருத்துமுதல்வாதமும் உண்மையல்ல;
இரண்டும் சம மதிப்புள்ள வெறும் கோட்பாடுகளே
என்பதுதான் பின்நவீனத்துவம். எல்லாக் கோட்பாடுகளும்
அனுமானங்களே தவிர உண்மையல்ல என்கிறது
பின்நவீனத்துவம்.  There is no truth at all என்பதுதான்
பின்நவீனத்துவம். இதை அத்வைதிகள் ஒத்துக்
கொள்வார்களா?

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை.
பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத்
தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும். காரல்
மார்க்சின் சோஷலிஸத் தத்துவத்தை நேரு காலத்திய
காங்கிரஸ் பயன்படுத்தியது என்பது வரலாறு. காகிதப்பூ
மனக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது என்று
அன்று காங்கிரசின் "சோஷலிசம்" விமர்சிக்கப்பட்டது.
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும்
பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான்
தத்துவம்.

பாஜக ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் இந்துத்துவம் என்பது
தீவிரமான செயல்பாட்டைக் கோருவது. அத்வைதம்
ஒரு செயலுறுத்தும் தத்துவமே அல்ல. It is very passive.
எனவே இந்துத்துவ சக்திகளுக்கு அத்வைதத்தை
தற்போது தங்களின் நலன்களுக்கு பயன்படுத்தும்
திட்டம் இல்லை.

பின்நவீனத்துவம் என்பது சமகாலத்திய
ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலுக்கு (globalisation)
ஆதரவாகப் பயன்படும் தத்துவம். மார்க்சியத்துக்கு
எதிராக நிறுத்தப்படும் தத்துவம். மார்க்சியத்திற்கு
கணிசமான சேதாரத்தை ஏற்படுத்திய தத்துவம்.
ஆனால் அத்வைதம் அப்படியல்ல. அது சமகால
ஏகாதிபத்தியத்திற்கு  பயன்பட்டதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை. மார்க்சியத்திற்கு எந்த விதத்திலும்
அத்வைதம் சவாலாக விளங்க முடியாது

இன்னும் நிறையக் கூறலாம். எனவே அத்வைதமும்
பின்நவீனத்துவமும் ஒன்றல்ல என்பது இதனால்
நிரூபிக்கப் படுகிறது.
------------------------------------------------------------------------------------------
1) Growth means change
2) define change disappearance of old
3) I think therefore I am Des cartes
4) power of mind
5) if  want to go Mars u have to travel for an year
but in mind travel, u go to Mars in 1 micro second
6) adviath is created to fight materialism
7) வாசகர் கேள்வி பதில்
8) மல்லனை வீஸ்த்திய சங்கரர்
9) பிரும்ம சூத்திரம்
10) Advaitham is not POMO
11) POMO SAYS ALL ARE ASSUMPTIONS
No truth all are mere theories
POMO says even Advaithis a mere theory and not trruth
பௌத்த சமண வேறுபாடு
மூவா முதலா உலகம் என்னும் சமணம்
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அத்வைத நூல்

அறிதல் அறிபடுபொருள் அறிபவன் மூன்றும் ஒன்றே.

------------------------------------------------------------------------------------
ஆதிசங்கரரும் அயன் ராண்டும் (Ayn Rand)!
Advaita versus Objectivism!
---------------------------------------------------------------------------------
1) அயன் ராண்ட் (Ayn Rand 1905-1982) என்பவர் ஒரு பெண்
எழுத்தாளர். இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
வாழ்ந்தவர். இவர் ஒரு நாவலாசிரியர். இவரின் பல
நாவல்களில் அ) The Fountainhead ஆ) Atlas shrugged ஆகிய
இரண்டு நாவல்களும் பெரும்புகழ் பெற்றவை.
இன்றளவும் உலகெங்கும்  இவ்விரண்டு நாவல்களும்
கொண்டாடப் படுகின்றன.

2)The Good Earth என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவரும்
இலக்கிய நோபல் பரிசு பெற்றவருமான பெர்ல் எஸ் பக்
(Pearl S Buck) போன்று அயன் ராண்ட்டை கருதக் கூடாது.
பெர்ல் எஸ் பக்கும் ஒரு பெண் எழுத்தாளரே.இவரின்
சம காலத்தவரே அயன் ராண்ட்.

3) மற்ற எழுத்தாளர்களுக்கும் அயன் ராண்டுக்கும்
மாபெரும் வேறுபாடு உண்டு.அயன் ராண்ட் ஒரு
தத்துவஞானியும் (philosopher) ஆவார்.இவரின் மகத்தான
தத்துவம் "புறவயவாதம்"(objectivism) ஆகும்.

4) இவரின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள இவரின்
Atlas shrugged மற்றும் The Fountainhead நாவல்களைப்
படிக்க வேண்டும். IIT, NITகளில் படிக்கும் ஒவ்வொரு
பொறியியல் மாணவனும் கண்டிப்பாக அன்று
முதல் இன்று வரை The Fountainhead நாவலைப்
படித்து வருகிறான். இந்நாவலின் கதாநாயகன்
ஹோவர்ட் ரோர்க் (Howard Roark) கட்டிடக்கலை
பயிலும் (B.Arch)  ஓரு கலகக்கார மாணவன்.
பழமைவாதத்தை சம்பிரதாயத்தை எதிர்த்து
உறுதியுடன் நின்று தன் சொந்த அறிவின் பலத்தில்
மகத்தான கட்டிடத்தை உருவாக்கியவன்.

5) புறவுலகம் என்னும் யதார்த்தமானது மனித
உணர்வுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாக நிற்பது
என்கிறார் ராண்ட். இது பருப்பொருள் பற்றிய
லெனினின் வரையறையுடன் ஒத்து வருவது.

6) "I think therefore I am"--Rane Descartes என்ற தெ கார்த்தேவின்
கருத்துமுதல்வாதத்திற்கு மரண அடி கொடுக்கிறார்
ராண்ட்.

7) மனித உணர்வு என்பது புறநிலை மெய்மையை
(reality) அறிவதே தவிர அதை உருவாக்குவது அல்ல
என்கிறார் ராண்ட். மனிதனால் புறவுலகை,
மெய்மையை  அறிய முடியும் என்றும் மனித அறிவு
அதற்கான தகுதியை உடையது என்றும் கூறுகிறார்
ராண்ட். பகுத்தறிவின் மூலமே மனிதன் அறிவைப்
பெற முடியும் (Reason is man's only means of acquiring knowledge)
என்கிறார் ராண்ட்.

8) அறியொணாவாதத்தை நிராகரிக்கிறார் ராண்ட்.
மதங்களை, இயற்கைக்கு மீறிய ஆற்றலை,
(supernatural), கருத்துமுதல்வாதத்தின் உள்ளுணர்வு,
இமானுவேல் கான்ட் போன்ற தத்துவஞானிகள்
முன்வைத்த இயற்கைக்கு அப்பாற்பட்ட முற்றிலும்
அகவயமான (purely subjective) பிரக்ஞை ஆகியவற்றை
அடியோடு நிராகரிக்கிறார் ராண்ட். மதம் மனிதனுக்குத்
தேவையற்றது என்கிறார் ராண்ட்.

9) அயன் ராண்டின் புறவயவாதம் பற்றி முழுவதுமாக
இங்கு விவரிப்பதற்கு இல்லை. வாசகர்கள் சுயமாகப்
படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். சுருங்கக்
கூறின், புறவயவாதம் என்பது லட்சியபூர்வ
முதலாளித்துவத்தின் பொருள்முதல்வாதம் ஆகும்.
(materialism of the ideal capitalism)

10)ஆதிசங்கரருக்கும்  அயன் ராண்டுக்கும் என்ன
சம்பந்தம்? ஆதிசங்கரரின் அத்வைதத்தை தத்துவ
அரங்கில் முறியடித்தனர் அயன் ராண்ட் ஆவார்.
அயன் ராண்ட் அத்வைதம் பற்றி அறிந்திருக்கவில்லை
என்பது மெய்யே. ஆனால் கருத்துமுதல்வாதத்தின்
ஒவ்வொரு கூறையும் நேரில் களத்தில் முறியடித்தவர்
ராண்ட்.

11) ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது புலன்களாலும்
பகுத்தறிவாலும் அறிய முடியாதா ஒன்று என்றால்,
அந்த பிரம்மம் பொய்யே என்கிறார் ராண்ட்.

12) பருப்பொருள் இயங்கும் விதிகளாலேயே
புறவுலகம் இயங்குகிறதே அன்றி எவருடைய
பிரக்ஞையாலும் அல்ல என்கிறார் ராண்ட்.

13) மேலும் அறிய விரும்பும் வாசகர்கள் அயன் ராண்டின்
நாவல்களையும் நூல்களையும் படித்துத் தெரிந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். உணவின் ருசி
அதைச் சாப்பிடும்போது தெரியும் (The proof of the
pudding is in eating) என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
அது போல அயன் ராண்டைப் படித்தால்தான் அவரின்
தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆயின்
ஒரு சிரமம் என்னவெனில் அவரின் நூல்கள் யாவும்
ஆங்கிலத்திலேயே உள்ளன; தமிழில் எவரும்
மொழிபெயர்க்கப் போவதில்லை. காலச்சுவடு
கண்ணனுக்குச் சொல்லுங்கள்; அவர் ராண்டின்
நாவல்களை மொழிபெயர்த்துப் பதிப்பிக்கக் கூடும்.

14) ஆதிசங்கரரின் அத்வைதமும் அயன் ராண்டின்
 புறவயவாதமும் வடதுருவம் தென்துருவம் போன்றவை.
தத்துவப்போரில்,சமகாலத்தில், அத்வைதம்
அயன் ராண்டால் வீழ்த்தப்பட்டு உயிர் துறந்து
விட்டது என்பதே உண்மை.

15) சமகாலத்தில், அத்வைதத்தை படித்தவர்களை
விட அயன் ராண்டை படித்தவர்கள் அதிகம். இன்றைய
இளைய தலைமுறையின் அறிவாளிப் பிரிவினருக்கு
அயன் ராண்ட் அறிமுகம் ஆனவரே எனவே அயன்
ராண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில்
ஆதிசங்கரருக்கு என்ன வேலை?

16) சமகால உற்பத்தியோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற
தத்துவம் அத்வைதம். சமகால உற்பத்திக்கு
எவ்விதத்திலும் பயன்படாத தத்துவம் அத்வைதம்.
அனால் அயன் ராண்ட் அப்படியல்ல.  உற்பத்தியோடு
நெருங்கிய தொடர்புடைய, உற்பத்தியை ஊக்குவிக்கிற
தத்துவம் ராண்டின் புறவயவாதம்.

17) அயன் ராண்டைக் குறிப்பிடாமல் அத்வைதம் பற்றிய
கட்டுரையோ நூலோ எழுதி விட முடியாது.
ராமன்-ராவணன், முருகன்-சூரபத்மன் என்பவை போல
ஆதிசங்கரரும் அயன் ராண்டும் பைனரிகள்.
வீழ்த்தியவர், வீழ்த்தப்பட்டவர், வீழ்த்தப்பட்ட பொருள்
மூன்றையும் ஒருசேரக் குறிப்பிடாமல் ஒரு கதை
முழுமை அடையாது.

18) அயன் ராண்டை குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு
முக்கிய காரணம் உண்டு. அத்வைத ஆதரவாளர்கள்
எந்தப் பிரிவு மக்கள் திரளிடம் (படித்த அறிவாளிப்
பிரிவினர், அறிவுஜீவி இளைஞர்கள்) அத்வைதத்தைக்
கொண்டு செல்கிறார்களோ அந்தப் பிரிவினர்
அயன் ராண்டை அறிந்தவர்களே. எனவே ஆதிசங்கரர்
(எதிர்) அயன் ராண்ட் (Advaita versus Objectivism) என்று
எதிர் எதிராக நிறுத்த வேண்டிய தேவை
பொருள்முதல்வாதிகளுக்கு இருக்கிறது.

19) ஆதிசங்கரரும் சரி, அயன் ராண்டும் சரி, மேட்டுக்
குடியினரால் ஆராதிக்கப் படுகிறவர்கள்.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் துலுக்காணத்துக்கும்
ஆதிசங்கரரையும் தெரியாது; அயன் ராண்டையும்
தெரியாது.  இரண்டுமே elite philosophy! என்றாலும்
அயன் ராண்டிடம் உள்ள முற்போக்குக் கூறுகளில்
ஒன்றுகூட ஆதிசங்கரிடம் கிடையாது. அதீதமான
அப்பாலைத் தத்துவம் அத்வைதம்; வாழ்க்கையில்
ஒரு பிரிவினருக்கு நன்கு பயன்படும் தத்துவம்
புறவயவாதம். (தொடரும்)

அத்வைதம்  செயலூக்கமற்ற ஒரு தத்துவம்.
மனிதனைச் செயலுறுத்த அத்வைதம் பயன்படாது.
வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்த
உப்புப்புளி மிளகாய்க்கான போராட்டமே இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்து வரும் மேட்டுக்குடியினருக்கான
தத்துவம் அத்வைதம். அத்வைதம் ஒரு லயன்ஸ் கிளப்
தத்துவம்; ஒரு லேடீஸ் கிளப் தத்துவம்.
-----------------------------------------------------------------------------       
7) அத்வைதம் ஓர் அப்பாலைத் தத்துவம்!
அதை எளிதில் வென்ற ராமானுஜர்!
-----------------------------------------------------------------------------
ஆதிசங்கரர் பிரம்மத்தை அவரின் சொற்களில்
வர்ணிப்பதைப் பார்ப்போம்.

1) பிரம்மம் ஒன்றே உண்டு; அது ஆதி அந்தமற்றது;
அளவு கடந்தது; சோதி மயமானது; அதுவன்றி
வேறொன்று இல்லை.
2) அறிவானந்தமாய, தனக்கென ஒரு செயலற்றதாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.

3) எப்பொருட்கும் உள்ளாய, புறம்பாய, உடனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே உண்டு.
4) எல்லாமாய் தனக்கொரு சார்பு இல்லாததாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.

5) குணம் குறி கடந்ததாய், ஏகனாய், மலரகிதனாய்
உள்ள பிரம்மம் ஒன்றே.
( மலரகிதனாய்= குற்றமற்றதாய்)
6) மனத்தால் அறிய முடியாததாய், வாக்கு மன
அதீதமாய் உள்ள பிரம்மம் ஒன்றே.

7) உண்மைப் பொருளாய் சோதி ரூபமாய்
ஒப்புயர்வு அற்றதான பிரம்மம் ஒன்றே.    
(பார்க்க: விவேக சூடாமணி சுலோகம் 463-469).

ஏகத்துவமான நிர்குண பிரம்மம் தவிர வேறு
எதுவுமே இப்பிரபஞ்சத்தில் உண்மையில்லை
என்னும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம்
மிகத் தீவிரமான ஓர் அப்பாலைத் தத்துவம்
(highly metaphysical). மிகவும் அரூபமானதும்
நுண்ணுணர்வால் மட்டுமே புரிந்து கொள்ளத்
தக்கதான ஓர் கடினமான தத்துவம் இது.
(highly abstract and overly theoretical).

மக்களின் லௌகீக வாழ்க்கைக்கும் ( material life)
ஆன்மிக வாழ்க்கைக்கும் (spiritual life) பெரும்
இடைவெளியை ஏற்படுத்தும் தத்துவம் இது.
எனவே இது பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.
இது சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கான
(elite) தத்துவம். சராசரி மக்கள் அத்வைதம் கூறுகிற
ஞான மார்க்கத்தை புரிந்து. ஏற்றுக்கொண்டு,
பின்பற்றுவது என்பது சாத்தியமற்றது.

எனவே ராமானுஜர் தம் விஷிஷ்டாத்வைதத்தைக்
கொண்டு மிகச் சுலபமாக அத்வைதத்தை வென்று
விட்டார்.ராமானுஜரின் கோட்பாடும் அத்வைதமே
என்ற போதிலும், அத்வைதத்தில் உள்ள அப்பாலைத்
தன்மையை (metaphysical) ,அகற்றி விட்டு, ஞான
மார்க்கத்திற்குப் பதிலாக பக்தி மார்க்கத்தைப்
பரிந்துரைத்தார். தத்துவம் என்பது உலகை
விளக்குவது.(interpreting the world). எந்தவொரு தத்துவமும்
மக்களின் பார்வையில்  இருந்து உலகை விளக்க
வேண்டும். அது மக்களால் எளிதில் புரிந்து
கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கணத்திற்குச்
சற்றும் பொருந்தி வராதது அத்வைதம்.
---------------------------------------------------------------------
பூசலார் நாயனார்
திருநின்றவூரில் மனக்கோயில்
கட்டியது போல்
குமரி அனந்தனும்
பாரத மாதாவுக்கு மனக்கோயில் கட்டலாமே!
அத்வைதம் வெல்லுமே!

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள
பூசலார் நாயனார் புராணத்தை வாசகர்கள்
படித்த பின்பு கருத்தைச் சொல்லலாமே!

பூசலாரின் மனக்கோயில் அத்வைதத்தை எப்படி  என்பதற்கு
நடைமுறைப் படுத்துவது  என்பதற்கு உதாரணம்.
---------------------------------------------------
(6) யாரும் பார்க்காதபோது ஆகாசம் நீல நிறமாக
இருக்குமா  என்கிறார் ஆதிசங்கரர்!

அத்வைதம் பற்றிப் பேசுகையில், அயர்லாந்து
நாட்டைச் சேர்ந்த பெர்க்லி பாதிரியார் நம்
அக்கறைக்கு உரியவர் ஆகிறார். பெர்க்லி
பாதிரியார் (Bishop George Berkeley 1685-1753) பதினெட்டாம்
நூற்றாண்டின் தத்துவஞானி.

Great men think alike என்று ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு.
இதற்கு இணங்க ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் 
ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள். சரி சமமான 
அத்வைத சிந்தனை!

எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரரும், அவருக்கு
ஆயிரம் ஆண்டுகள் பிந்திய பதினெட்டாம்
நூற்றாண்டின் பெர்க்லி பாதிரியாரும் ஒரே
வகையான கருத்து முதல்வாதத்தை வெவ்வேறு
காலக்கட்டத்தில் பெற்றெடுத்தார்கள்; முற்றிலும்
சுயேச்சையாக, ஒருவரை ஒருவர் சாராமல்.
மேற்கத்திய தத்துவ ஞானம் கீழ்த்திசை நாடுகளின்
தத்துவ ஞானத்திற்கு காலத்தால் பிந்தியதே
என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

மார்க்சிய மொழியில் கூறுவதானால், ஆதிசங்கரரின்
அத்வைதமும் பெர்க்லி பாதிரியாரின் தத்துவமும்
அகநிலைக் கருத்து முதல்வாதம் (subjective idealism)
என்று வகைமை பெறும். எப்படி என்று பார்ப்போம்.

புறவுலகம் (objective world) என்பது உண்மையில்
நின்று நிலவவில்லை (does not exist) என்பதைத்தான்
ஆதிசங்கரரும் பெர்க்லி பாதிரியாரும் ஒரே குரலில்
கூறுகின்றனர். மனத்தைச் சாராத (mind independent reality)
யதார்த்தம் என்பது இல்லை என்கின்றனர்
இருவரும். யாரும் பார்க்காதபோது  ஆகாசம்
நீல நிறமாக இருக்குமா என்று கேட்டார்
ஆதி சங்கரர்.

பொருள் என்பது மனத்தைச் சார்ந்தது; மனத்தைச்
சாராமல் பொருள் இருக்க முடியாது என்று
அடித்துக் கூறுகின்றனர் இருவரும். பொருளின்
நிலைக்களன் மனமே; மனமே பொருள் நின்று
நிலவுகிற களம்; மனத்தின் எல்லைக்கு
அப்பால் பொருள் நின்று நிலவுவதில்லை.
மனத்தைத் தாண்டிய எந்த இருப்பும் பொருளுக்கு
இல்லை. ஆக மொத்தத்தில் மனமே பிரதானம்;
பொருள் என்பது இரண்டாம்பட்சமே. சகலமும்
மனமே. அதாவது அனைத்தும் கருத்தே;
அனைத்தும் சிந்தனையே.பொருள் என்பது சிந்தனைக்குக் கட்டுப்பட்டது; பொருள் என்பது சிந்தனைக்குக் கீழ்ப்பட்டது.

பொருள் என்பதற்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
(physical existence) கிடையாது; பொருளுக்கு மானசீக
இருப்பு மட்டுமே உண்டு. ஆதிசங்கரர் மற்றும்
பெர்க்லி பாதிரியாரின் அகநிலைக்
கருத்துமுதல்வாதம் என்பது இதுதான்.

ஆதிசங்கரர் பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை
முன்மொழிகிறார். பெர்க்லி பாதிரியார் அப்படி
எந்த ஒரு பிரம்மத்தையும் முன்மொழியவில்லை.
சிற்சில வேறுபாடுகள் இருவருக்கும் இருந்த
போதிலும், சாராம்சத்தில் இருவரின் தத்துவமும்
அகநிலைக் கருத்துமுதல்வாதமே.

ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது சிந்தனையே;
கருத்தே. அதாவது ஆன்மாவே. நீயும் பிரம்மம்,
நானும் பிரம்மம்; எல்லாமே பிரம்மம், பிரம்மத்தைத்
தவிர வேறு ஒன்றும் இல்லை என்று முழங்குகிறார்
ஆதிசங்கரர்.

சரி, ஆதிசங்கரரின் பிரம்மம் என்பது எங்கு
இருக்கிறது? அதன் இருப்பிடம் என்ன? பிரம்மம்
என்பது மனத்தில் இருக்கிறது. மனமே பிரம்மம்;
சிந்தனையே பிரம்மம்; கருத்தே பிரம்மம்.
இதுதான் அத்வைதம் தருகிற விடை.

கருத்தை அதன் உச்சபட்ச உயரத்தில் வைத்து
விடுகிறார் ஆதிசங்கரர். எவராலும் எப்போதும்
தொட முடியாத உயரம் அது. சிந்தனையைத் தவிர
மீதி அனைத்தின் இருப்பையும் ஒரேயடியாக
நிராகரித்து விடுகிறார் ஆதிசங்கரர். இருப்பது
ஒன்றுதான்; அதுதான் பிரம்மம், அதாவது சிந்தனை.
அதைத்தவிர வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தில்
இல்லை. இதுதான் அத்வைத சாரம்.

அப்படியானால் பிரம்மம் என்பது கடவுளா?
நிச்சயமாக இல்லை. பரிபூரண சர்வ சுதந்திரமான
தூய அறிவே (pure reason) பிரம்மம். ஆக கடவுளுக்கும்
மேலாக பிரம்மத்தை சிருஷ்டித்தார் ஆதிசங்கரர்.
ஏனைய கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்குமான வேறுபாடு இதுதான்.
எனவேதான் கருத்துமுதல்வாதத்தின் அதிஉச்சமாக
அத்வைதம் திகழ்கிறது.

அத்வைதத்தின் மாயக்கவர்ச்சி இந்த பிரம்மத்தில்தான்
உள்ளது. கடவுளுக்கோ சடங்குகளுக்கோ அத்வைதம்
எந்த விதமான சிறப்பிடத்தையும் அளிக்கவில்லை.
இதன் மூலம் அத்வைதம் கடவுள் மறுப்புத் தத்துவம்
என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. ஆயின்
அத்வைதம் என்பது என்ன? அது ஒரு பொருள்மறுப்புத்
தத்துவம் (immaterialism). பெர்க்லி பாதிரியார் தமது
தத்துவத்தை பொருள்மறுப்புத் தத்துவம் என்றே
அழைத்தார்.

உலகில் எந்த தத்துவஞானியும் அளிக்காத சிறப்பை,
உச்சத்தை சிந்தனைக்கு அளித்தவர் ஆதிசங்கரர்.
அ) சிந்தனைக்கும் அதன் விளைவான தூய
அறிவுக்கும் கட்டற்றதும்  சர்வ சுதந்திரத்துடன்
கூடியதுமான உச்சத்தை அத்வைதம் வழங்குவதாலும்
ஆ) கடவுள், சடங்குகள், பக்தி ஆகியவற்றை ஒரு
பொருட்டாகக் கொள்ளாமல் இருப்பதாலும்
இ) பிரம்மம் என்பதற்கு ஒரு பிரபஞ்சத் தன்மை
(universal) இருப்பதாலும் ஈ) பிரம்மத்தை அறியும் எவர்
ஒருவரும் முக்தி அடையலாம் என்று அத்வைதம்
உறுதி தருவதால் இது ஒரு கோட்பாட்டு ரீதியான
சமத்துவம் கொண்டதாக இருப்பதாலும்
இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு
அறிவுஜீவிகள் அத்வைதத்தை ஏற்கத் தலைப்பட்டனர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த
சரஸ்வதி, கேரளத்தின் நாராயண குரு, பாரதியார்
உள்ளிட்டோர் அத்வைதிகளாகத் திகழ்ந்தனர்.
ஆதிசங்கரரோடு கடுமையாக முரண்பட்ட
ராமானுஜரும்  அத்வைதத்தையே சிற்சில திருத்தங்களுடன் "சிறப்பிக்கப்பட்ட
அத்வைதம்" என்ற பெயரில் போதித்தார்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் புறநிலைக்
கருத்துமுதல்வாதம் (objective idealism) ஆகும். ராமானுஜரின்
கருத்துமுதல்வாதம் கிரேக்கத்தின் பிளேட்டோவின்
கருத்துமுதல்வாதத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தியத் தத்துவ அரங்கில் கணிசமான காலத்திற்கு
கருத்துமுதல்வாதம் குழந்தைப் பருவத்திலேயே
இருந்தது. அதுவும் சவலைப் பிள்ளையாகவே
இருந்தது. கருத்துமுதல்வாதம் அதன் வளர்ச்சியையும்
உச்சத்தையும் தொட்டது ஆதிசங்கரரின்
அத்வைதத்தில்தான். பொருள்முதல்வாதத்துடன்
ஒப்பிடும்போது, கருத்துமுதல்வாதம் பல மடங்கு
பின்தங்கியே நின்றது.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கெளதம புத்தரின்
பொருள்முதல்வாதம் முரசறைந்து வெற்றியைக்
கொண்டாடியது. புத்தர் ஆன்மா  என்ற ஒன்று இல்லை
என்று திட்டவட்டமாக மறுத்தார். அவரது நிராத்மவாதம்
(theory of no soul) மிகவும் புகழ் பெற்றது. ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதிசங்கரர் அத்வைதத்தை
முன்மொழிந்து ஆன்மாவே அனைத்தும் என்று
சொல்கிறவரை புத்தரின் நிராத்மாவாதமே
(நிர் ஆத்மா = ஆத்மா இல்லை) தத்துவ அரங்கில் 
மறுக்கப்படாமல் நிலவி வந்தது.

பௌத்த  தத்துவ ஞானிகளான நாகார்ஜுனர்,
திக்நாகர், தர்மகீர்த்தி ஆகியோரின்
தத்துவங்களுக்கும் அத்வைதத்திற்கும் உள்ள
ஒற்றுமை வேற்றுமைகள் குறித்து அடுத்த
கட்டுரையில் காண்போம்.
-------------------------------------------------------------------------------------
கால்களுக்குப் பதிலாக தலையின் மீது
நின்று கொண்டிருக்கும் ஆதி சங்கரர்!
--------------------------------------------------------------------
பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சிப் போக்கில்
பொருள் என்றால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
கருத்துமுதல்வாதிகள் இந்தக் கேள்வியை மிகவும்
வலுவாக எழுப்பினார்கள். குறிப்பாக இருபதாம்
நூற்றாண்டின் கருத்துமுதல்வாதிகள்
பொருள்முதல்வாதிகளை நோக்கி இந்தக்
கேள்வியைத் தொடுத்தார்கள். எனவே பொருள்
என்பதை அதவாது பருப்பொருள் என்பதை
வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது
(matter had to be defined).

ஆயின் அதற்கு முன்பு, அதாவது இருபதாம்
நூற்றாண்டுக்கு முன்பு, பருப்பொருள் என்பது
வரையறை செய்யப்பட வில்லையா? பண்டைக்காலம் தொட்டே பருப்பொருள் என்பது வரையறுக்கப்பட்டு
இருந்தது. பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம்,
அதாவது பருப்பொருள் என்ற கருத்தை இந்தியாவில்
பௌத்தர்கள் உள்ளிட்ட பொருள்முதல்வாதிகள்
முன்மொழிந்து இருந்தனர். கிரேக்கத்தில்
அரிஸ்ட்டாட்டில் நான்கு மூலக் கொள்கையை
(four elements theory) முன்மொழிந்து இருந்தார். நிலம், நீர்,
தீ, காற்று. ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின்
சேர்க்கையே இவ்வுலகம் என்று பௌத்தர்களும்,
ஏனைய பண்டையப் பொருள்முதல்வாதிகளும்
கூறியிருந்தனர். இந்த ஐந்து பஞ்ச பூதங்களில்,
ஆகாயம் என்பதை மட்டும் தவிர்த்து விட்டு,
நான்கு மூலக் கொள்கையை (Earth, water, fire, wind)
உருவாக்கி இருந்தார் அரிஸ்ட்டாட்டில்.

இவை அனைத்தும் அறிதல் முறை சார்ந்த அதாவது
epistemological வகைப்பட்ட வரையறைகளாகவே
இருந்தன. அறிவியலின் வரையறையாகவும் இதுவே
இருந்தது. அரிஸ்ட்டாட்டில் அவர் காலத்திய (கி.மு 384-
கிமு 322) பௌதிக விஞ்ஞானி (Physicist) மட்டுமல்ல
அவர் காலத்தின் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.
ஆக,  கெளதம புத்தர் காலத்திலும், அரிஸ்ட்டாட்டில்
காலத்திலும், இவர்களுக்கெல்லாம் வெகுவாகப்
பின்தங்கிய எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கரர்
காலத்திலும் பஞ்ச பூதக் கொள்கையே பருப்பொருள்
பற்றிய கொள்கையாக உலகம் முழுவதும் நிலவி
வந்தது.

பரிசோதனை அறிவியல் (experimental science) என்பது
அரிஸ்டாட்டில் காலத்தில் மேற்கத்திய அறிவியலில்
கிடையாது. கலிலியோ காலத்தில்தான் (1564-1642)
முதன் முதலாக பரிசோதித்து உண்மையை
அறியும் முறைமை நடைமுறைக்கு வந்தது.

நவீன அறிவியல் கணக்கற்ற பரிசோதனைகள்
மூலம் பருப்பொருள் (matter) என்பதை மிகவும்
கறார் ஆகவும் துல்லியமாகவும் வரையறுத்துள்ளது.
அது பற்றிய முழுமையான விவரங்கள் இக்கட்டுரையின்
வரம்புக்கு அப்பாற்பட்டவை.

எனினும், பருப்பொருள் என்பது, அது நுண்பொருள்
ஆயினும் பெரும்பொருள் ஆயினும் (micro or macro)

அ) அண்டவெளியில் தனக்கென ஓர் இருப்பை
உடையது; அண்டவெளியில் நின்று நிலவுவது
(matter does exist)
ஆ) அண்டவெளியில்  ஓர் இடத்தை அடைக்கும்
தன்மையது (occupies space)
இ) நிறை (mass) உள்ளிட்ட பல்வேறு பண்புகளை
உடையது.

பருப்பொருள் என்றால் என்ன என்பதற்கு அறிவியல்
தரும் சுருக்கமான வரையறை இதுவே.

தம் காலத்திய கருத்துமுதல்வாதிகளின், குறிப்பாக
மாஹ் (Mach) போன்றவர்களின் கேள்விக்கு விடையாக
பொருள் என்பதை லெனின் பின்வருமாறு
வரையறுத்தார். "பொருள் என்பது மனிதனின்
சிந்தனைக்கு அப்பால், புறநிலையில் நின்று நிலவும்
ஒரு யதார்த்தம்" என்பதே பொருள் பற்றிய லெனினின்
வரையறை.

உங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு முருங்கை மரம்
நிற்கிறது. அந்த மரம் உங்கள் கொல்லையில் இல்லை
என்று நீங்கள் நினைத்தாலும், அது இருக்கத்தான்
செய்கிறது. உங்கள் தெருவில் ஒரு கோவில் இருக்கிறது.
அது அங்கே இல்லை என்று நீங்கள் நினைப்பதால்,
அது அங்கே இல்லாமல் போய்விடுவதில்லை.

உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
 என்பதைப் பொறுத்ததல்ல பொருளின்
இருப்பு. நீங்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்
பொருள் இருப்பது இருக்கத்தான் செய்யும். அதாவது
உங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை
யதார்த்தமாக (objective reality) பொருள் இருக்கிறது.
பருப்பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு
என்ற அறிவியலின் வரையறையையே லெனினும்
கூறுகிறார். லெனினின் வரையறையின் முக்கிய
அம்சம் பொருள் என்பது ஓர் அகநிலை அம்சம் அல்ல
(matter is not subjective) என்பதுதான்.

புத்தர் உள்ளிட்ட  பண்டைய பொருள்முதல்
வாதிகளுக்கு பொருள் பற்றிய நவீன அறிவியலின்
வரையறையோ லெனினின் வரையறையோ
தெரியாது எனினும் பொருள் என்பது மனித
சிந்தனையைச் சாராத சுயேச்சையான
இருப்பு உடையது என்பது நன்கு தெரியும்.

பொருள் பற்றிய வரையறையைப் பொறுத்து
ஆதிசங்கரர் மிகவும் தனித்துவத்துடன் திகழ்கிறார்.
பருப்பொருள் என்ற ஒன்று இல்லவே இல்லை;
அது வெறும் மாயையே என்கிறார் ஆதிசங்கரர்.

மண்ணும் மரமும் செடியும் கொடியும் மலையும்
கடலும் காற்றும் நீரும் நிலவும் ஆகிய இவை யாவும்
மாயை என்கிறார் ஆதிசங்கரர். மனிதன் மட்டுமல்ல
ஐந்தறிவு நான்கறிவு உடைய குறையறிவு
உயிரினங்களும் புறவுலகம் உண்மை என்ற
கருத்தின் மீதுதான் வாழ்கின்றன. காலையில்
சூரிய உதயத்தில் கூட்டை வீட்டுக் கிளம்பும்
பறவைகள் மாலையில் சூரிய அஸ்தமனத்தின்போது
கூட்டை அடைகின்றன. கூட்டை விட்டுஇரைதேடக்  கிளம்புவதற்கும்  மீண்டும் கூடு அடைவதற்கும்
பறவைகளுக்கு வழி காட்டுவது எது? பிரம்மமா,
இல்லை சூரியனா?

வேட்டைக்குச் செல்லும் நாய்கள் தங்களின் மோப்ப
சக்தியை எங்கிருந்து பெறுகின்றன? காவல்
துறையின் நாய்கள் குற்றம் நடந்த இடத்தை முகர்ந்து
பார்த்து விட்டு குற்றவாளி எங்கு போயிருந்தாலும்
அந்த இடத்தைக் கண்டு பிடிப்பது எப்படி?
இதற்கு பொருள் பற்றிய அறிவு காரணமா அல்லது
பிரம்மம் காரணமா?

பருப்பொருளை புறவுலகை முற்றிலுமாக மூர்க்கத்
தனமாக மறுக்கும் அத்வைதம் எப்படி உலகிற்கு
வழிகாட்டும் தத்துவம் ஆகும்? பெர்க்லி பாதிரியாரின்
அகநிலைக் கருத்து முதல்வாதம் பற்றி ஏற்கனவே
பார்த்துள்ளோம். புறவுலகு என்பது மனதின்
சிருஷ்டியே என்பதுதான் பெர்க்லி பாதிரியாரின்
கருத்துமுதல்வாதம். அதைப்  போன்றதுதான்
ஆதிசங்கரரின் அத்வைதமும்.

என்றாலும் பிற கருத்து முதல்வாதத் தத்துவங்களுக்கும்
அத்வைதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு உண்டு.
பொருள், கருத்து என்ற இரண்டின் உண்மையை
(உண்மை=உள்ள தன்மை, இருப்பு) பல்வேறு கருத்து
முதல்வாதப் பிரிவுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
பொருள் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது,
இவ்விரண்டில் கருத்தே முதன்மையானது
என்பதுதான் கருத்து முதல்வாதம். ஆனால்
அத்வைதத்தைப் பொறுத்தமட்டில், பொருள் கருத்து
என்னும் இவ்விரண்டில், கருத்து மட்டுமே இருக்கிறது
பொருள் என்பது இல்லவே இல்லை. எனவே அத்வைதம் கருத்துமுதல்வாதம் அல்ல, வெறும் கருத்துவாதம் ஆகும்.

பொருளின் உண்மையை மறுத்து, பொருளே மாயை,
(பொருளே இல்லை) என்பதன் மூலம் அத்வைதம்
பொருள்முதல்வாதத்தின் நேர் எதிர் துருவத்தில்
தன்னை இருத்திக் கொண்டுள்ளது. பொருள்முதல்
வாதத்தின் ஒரு ஒற்றை அம்சத்தோடு கூட உடன்பட
முடியாத நிலையை சிருஷ்டித்துக் கொண்டுள்ளது
அத்வைதம்.இதன் மூலம் உலகியலுக்கு நேர் எதிரான
ஒரு  பொய்மையில் குடிகொண்டுள்ளது அத்வைதம்.

சென்னை அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளை
ஒட்டிக் கொண்டு செல்லும் ஒருவருக்கு திடீரென்று
அத்வைத மனநிலை வாய்த்து விடுகிறது என்று
வைத்துக் கொள்வோம். அவரால் ஒழுங்காக வீடு
போய்ச்  சேர முடியுமா? அல்லும் பகலும் அனவரதமும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கிற புறவுலகை இல்லை
என்று மறுப்பதன் மூலம் யார்தான் என்ன பயனை
அடைய முடியும்?

இந்த உலகின் பிரச்சினைகளுக்கு இந்த உலகில்
தீர்வு காண்பதே ஒரு தத்துவத்தின் பயன்.அத்வைதம்
யதார்த்த உலகின் இருப்பையே அங்கீகரிக்காத
நிலையில், யதார்த்த உலகின் பிரச்சினைகளுக்கு
அதில் எங்ஙனம் தீர்வு இருக்க இயலும்? துன்ப
துயரங்களில் சிக்குண்டு அலைக்கழிக்கப்படும்
மக்களுக்கு அத்வைதத்தில் என்ன தீர்வு உள்ளது?

புறவுலகை பருப்பொருளை மறுத்து ஆதிசங்கரர்
முன்வைக்கும் வாதங்களின் வெறுமையை
இப்போது பரிசீலிப்போம்.

பொருள் என்பது சதா சர்வ காலமும் மாறிக்கொண்டே
இருக்கிறது. அது ஒரு நிலையில் இருப்பதில்லை.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றுக்கு (பொருளுக்கு) சுயேச்சையான இருப்பு என்பது எப்படி இருக்க முடியும்?
எனவே பொருள் என்பது மாயை என்கிறார்
ஆதிசங்கரர்.

தண்ணீர் என்பது ஒரு பொருள். இது  இரண்டு
ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும்
கொண்டுள்ள ஒரு மூலக்கூறு. இதை H2O என்பர்.
சென்னையில் நம் வீட்டில் குடத்தில் உள்ள நீர் அறை வெப்பநிலையில் 30 டிகிரி செல்சியசில்
இருக்கும். இதை ஒரு பாத்திரத்தில்
வைத்து சூடு படுத்தினால், 100 டிகிரி செல்ஸியசை
எட்டியதும் நீராவியாகி விடும். இதே தண்ணீரை ஒரு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர்வித்தால்
அது பனிக்கட்டியாக மாறிவிடும். இந்த நிகழ்வுகளை
நவீன அறிவியல் "கட்ட மாற்றம்" (change of phase)
என்கிறது. இந்தக் கட்ட மாற்றத்தால் தண்ணீர்
என்பது மாறி விடுவதில்லை. அதாவது தண்ணீரில்
உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையோ
அல்லது ஆக்சிஜன் எண்ணிக்கையோ மாறி
விடுவதில்லை. தண்ணீர் தண்ணீராகத்தான்
இருக்கிறது. தண்ணீர் அமோனியாகவோ
மீத்தேனாகவோ மாறி விடுவதில்லை.

ராமசாமி என்பவருக்கு 102 டிகிரி (ஃ பாரன்ஹீட்)
காய்ச்சல் வந்து விடுகிறது. பின்னர் குணமாகி
விடுகிறது. குணமாகியபின் உடலின் வெப்பநிலை
98.4 ஃபாரன்ஹீட்டுக்கு வந்து விடுகிறது. காய்ச்சல்
வந்ததால் ராமசாமி துலுக்காணமாக மாறி
விடுவாரா? இல்லை அல்லவா? அது போலவே
கட்ட மாற்றத்தால் (வெப்பநிலை மாற்றத்தால்)
பொருள் மாறி விடுவதில்லை. பொருள் மாறி
விடுவதில்லை என்பதன் அர்த்தம் பொருள் நிலையாக
இருக்கிறது என்பதுதான். எனவே பொருள்
நிலையானதல்ல என்ற ஆதிசங்கரரின் வாதம்
அடிபட்டுப் போய் விடுகிறது.

எலக்ட்ரான் என்பது ஒரு நுண்ணிய துகள். இது
ஒரு பருப்பொருள். இதன் அளவு (SIZE), அதாவது
எலக்ட்ரானின் ஆரம் 2.81 X 10^minus 15 ஆகும்.
இதன் நிறை 9.1 X 10^ minus 31 ஆகும். ஆக எலக்ட்ரான்
என்பது மிகவும் நுண்ணியது; மிகவும் குறைந்த
நிறை உள்ளது. என்றாலும் இந்த அண்ட வெளியில்
எலக்ட்ரான் இல்லையென்று எவராலும் கூற
இயலுமா?

இந்தக் கட்டுரையை எழுதும் நான் சென்னையில்
இருக்கிறேன். சென்னை நகரின் அட்ச ரேகை
(latitude) 13.067 439 N; தீர்க்க ரேகை (longitude) 80.237 617 E.
சென்னை நகரம் 13 மீட்டர் உயரத்தில் (elevation from MSL,
MSL = Mean Sea Level), இந்தக் கட்டுரையை மதுரையில்
இருந்து வாசிக்கும் ஒருவர் 9.939 093 அட்ச ரேகையிலும்
78.121 719 தீர்க்க ரேகையிலும் 137 மீட்டர் உயரத்திலும்
(elevation) இருப்பார். இதன் மூலம் பொருட்களுக்கு
இருப்பு உண்டு என்பது நிரூபிக்கப் படுகிறது.
இந்த நிரூபணம் அத்வைதத்தின் மாயையை
சம்மட்டியால் அடிக்கிறது.

படுபயங்கரமான அப்பாலைத் தத்துவமான
அத்வைதம் கூறும் பிரம்மம் இந்த பிரபஞ்சத்தில்
எங்கே இருக்கிறது? அதன்  இருப்பிட அச்சுகளை
(position coordinates) எவரேனும் சுட்ட இயலுமா? இயலாது.
ஏனெனில் பிரம்மம் என்பதற்கு மொத்தப் பிரபஞ்சத்திலும்
எந்த இடமும் கிடையாது. அது ஆதிசங்கரரின்
மூளையில் மட்டுமே குடிகொண்டிருந்த ஒரு
கருத்து; சிந்தனை. ஆதிசங்கரரின் பிரம்மம்
என்பது ஒரு பொருள் அல்ல. உண்மையில்
பிரம்மம் என்பதுதான் மாயை. பிரம்மம் என்பதுதான்
பொய்.பிரம்மம் என்பதுதான் எந்த பௌதிக இருப்பும்
அற்றது.உண்மையில் இல்லாதது.

ஆதிசங்கரர் தம் தலையின் மீது நின்று கொண்டு
இருக்கிறார். அவரை அவரின் கால்களின் மீது நிறுத்த
வேண்டும்.அதற்கு அவரின் அத்வைதத்தைத் திருத்த
வேண்டும். புறவுலகம் பொய், பருப்பொருள் மாயை
என்ற ஆதிசங்கரரின் கருத்தியலை, பருப்பொருள்
மெய் என்றும் புறவுலகம் மெய் என்றும் திருத்த
வேண்டும். அப்போது அது ஒரு கருத்து
முதல்வாதமாகவேனும் நிலைக்கும். இல்லையேல்
யார் எவருக்கும் பயனற்ற வெற்று அப்பாலைத்
தத்துவமாக, வீணானதாக, அகற்றப் பட வேண்டிய
கழிவாக மட்டுமே எஞ்சும்.
-----------------------------------------------------------------------------------------------       
  5) பொருளின் இயக்கம்:
ஏங்கல்ஸ் கூறியது சரியா?
ஆதிசங்கரர் கூறியது சரியா?

"பிரம்மம் மட்டுமே மெய்; மீதி அனைத்தும் பொய்"
என்ற ஆதிசங்கரர் தத்துவ விவாதங்களின் போது
பெரும் இடரைச் சந்தித்தார். நாம் வாழும் இந்த உலகம்
உண்மையானது என்பதை ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு ஜீவராசியும் அன்றாடம் தங்களின்
நேரடி அனுபவத்தின் மூலம் உணர்ந்து வருகின்றனர்.
இதனால் புறவுலகம் பொய்யானது என்ற ஆதிசங்கரரின்
கருத்து மக்களால் ஏற்கப்படவில்லை. மொத்த மக்கள்
சமூகமும் மெய் என்று உணர்ந்த ஒன்றை பொய் என்று
நிறுவுவது ஆதிசங்கரருக்கு எளிதாக இல்லை.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
என்ற குறளுக்கு ஏற்ப 'வையத்து அலகை'யாகக்
கருதப்பட்டார் ஆதிசங்கரர். (அலகை= பேய்)

இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்க ஆதிசங்கரர் "வியவகாரிக
ஸத்யம்" என்ற ஒரு கருத்தை அறிமுகம் செய்தார்.
நடைமுறை உண்மை (practical truth) என்று இதற்குப் பொருள்.
அதை பிரசித்தி பெற்ற கயிற்றரவு உதாரணத்தின்
மூலம் விளக்கினார்.

1) அரையிருட்டில் கயிற்றைப் பார்க்கும் ஒருவன், அதைப்
பாம்பாக உணர்கிறான். வெளிச்சம் வந்ததும் அது
பாம்பல்ல என்று உண்மையை உணர்கிறான். இவ்வாறு
சிறிது நேரம் கயிறானது பாம்பு என்ற உண்மையாக
இருக்கிறது. இந்த உண்மையை ஆதிசங்கரர்
"பிரதிபாஷிக சத்யம்" என்று அழைத்தார். இதன்
பொருள் பிரமையான உண்மை என்பதாகும்.

2) நல்ல வெளிச்சத்தில் ஒருவன் கயிற்றைக்
கயிறாகவே உணர்கிறான். கயிறு கயிறாகவே
உணரப்படும் இந்த உண்மை வியவகாரிக ஸத்யம்
ஆகும். அதாவது நடைமுறை உண்மை (practical truth)
ஆகும்.

3) எனினும் இவ்விரண்டும் உண்மையல்ல. மெய்யான
உண்மை என்பது பிரம்மம் மட்டுமே உண்மை
என்பதாகும். இது பரமார்த்திக ஸத்யம் ஆகும்.

இவ்வாறு வியவகாரிக ஸத்யம் என்ற கோட்பாட்டைப்
புகுத்தியதன் மூலம் தாக்குதலில் இருந்து தற்காத்துக்
கொண்டாலும், அது யதார்த்தத்தில் அத்வைதத்தை
பலவீனப் படுத்தி விட்டது.

இதனால்தான் ராமானுஜர் சங்கரரின் அத்வைதத்தில்
சில திருத்தங்களைச் செய்து, தமது விஷிஷ்டாத்வைதக்
கொள்கையை உருவாக்கினார். விசேஷித்த அத்வைதம்
என்று இதற்குப் பெயர். விஷிஷ்டாத்வைதத்தில்,
புறவுலகம் மாயை என்ற சங்கரரின் கருத்தை,
ராமானுஜர் நிராகரித்து புறவுலகின் மெய்மையை
உறுதி செய்தார்.

புறவுலகம் (objective world) பொய் என்பதற்கான தமது
வாதங்களை பின்வருமாறு ஆதிசங்கரர் முன்வைத்தார்.
புறவுலகம் என்பது பருப்பொருளால் ஆனது
(material world; contains matter). பருப்பொருளானது தொடர்ந்து
இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது.
அதற்கு ஒரு சாசுவத இருப்பு இல்லை. பொருள் என்பது
நின்று நிலவவில்லை (does not exist); எனவே பொருளாலான
புறவுலகம் மெய்யல்ல; பொய்யே.

ஆதிசங்கரரின் குரு கோவிந்தர். கோவிந்தரின் குரு
கெளட பாதர். கி.பி ஏழு எட்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்கள் இவர்கள். அறிவியலின் வளர்ச்சி
அதன் குழந்தைப் பருவத்தில் இருந்த காலம் அது.
அறிவியல் கொள்கைகள் பரவலாக மொத்த
சமூகத்தையும் சென்று சேராத காலம் அது.

கிரேக்கத்தில் அரிஸ்ட்டாட்டிலும் இந்தியாவில்
ஆரிய பட்டரும் நிறுவிய அறிவியலே அப்போதைய
அறிவியலின் உச்சமாக இருந்த காலம் அது.
தம் காலத்தின் தலைசிறந்த அறிஞர் ஆதிசங்கரர்
என்பதில் எவரும் ஐயம் கொள்வதற்கில்லை.
என்றாலும், நவீன அறிவியலின் தற்கால வளர்ச்சியில்,
12ஆம் வகுப்பு படிக்கும் ஒரு எளிய சிறுவன்,
ஆதிசங்கரின் "இயங்குகின்ற பருப்பொருள்"
(matter which is in motion) பொய்யானது என்ற கோட்பாட்டை
எளிதில் தகர்த்து நொறுக்கி விடுவான்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும்
சுற்றி வருகிறது. மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டர்
(தோராயமாக) வேகத்தில் பூமியானது சூரியனைச்
சுற்றி வருகிறது. அவ்வப்போது படுத்து ஒய்வு எடுத்துக்
கொண்டும் இளைப்பாறிக் கொண்டும் மிஞ்சிய
நேரத்தில் மட்டுமே சூரியனைச் சுற்றுவதல்ல பூமி.
மாறாக, இடைவிடாத நிரந்தரமான சுழற்சி அது.
இந்த இயக்கம் நின்று விட்டால் என்ன ஆகும்? பூமி
சுற்றுவதை நிறுத்திக் கொண்டால், பூமியானது
சூரியனால்  ஈர்க்கப்பட்டு அழிந்து விடும். பூமி
மட்டுமல்ல, பிற கோள்களும் சூரியனைச் சுற்றி
வருகின்றன. எந்தக் கோளும் இயக்கத்தை மறுத்து
இயங்காநிலையில் இருப்பதில்லை. இயங்கினால்
மட்டுமே வாழ்வு, இயங்காவிட்டால் மரணம் என்ற
நிலையிலேயே எல்லாக் கோள்களும் உள்ளன.

பிரும்மாண்டமான கோள்கள் மட்டுமல்ல, நுட்பமான
அணுவில், அணுவைச் சுற்றி வரும் எலக்ட்ரான் போன்ற
மெல்லிய துகளுமே சுற்றிக் கொண்டுதான்
இருக்கிறது. சுற்றாத துகள் எதுவும் இந்தப்
பிரபஞ்சத்தில் இல்லை.

இதனால்தான் மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ்,
"பொருளின் இருத்தல் அதன் இயக்கத்தில்தான் உள்ளது"
(Motion is the mode of existence of matter) என்றார்.

Motion in the most general sense, conceived as the mode of existence, 
the inherent attribute of matter, comprehends all changes and processes 
occurring in the universe, from mere change of place right up to thinking.
(பார்க்க: எங்கல்ஸ், இயற்கையின் இயக்கவியல்,
அத்தியாயம் மூன்று, Forms of motion).

இயங்குவதால் மட்டுமே அது பொருளாக இருக்கிறது
என்கிறார் எங்கல்ஸ். இயங்குவதால் அது
பொருளே அல்ல என்கிறார் ஆதிசங்கரர். எது சரி?
விடையை நாம் யாரும் சொல்ல வேண்டாம்.
12ஆம் வகுப்பு இயற்பியல் மாணவர்கள் விடை
சொல்லட்டும்.
--------------------------------------------------------------------------------------
பௌத்தம் ஆத்மாவை முற்றிலுமாக நிராகரித்தது.
ஆனால் பௌத்தத்திற்கு சற்றே முந்திய சமணம்
ஆத்மாவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. பௌத்தம்
சமணம் இரண்டுமே வேதங்களை மறுத்துத்
தோன்றிய பொருள்முதல்வாத வகைப்பட்ட
மதங்களே. பிரபஞ்சத்தை கடவுள் படைக்கவில்லை
என்றுதான் இரு மதங்களும் கூறுகின்றன.
பொருட்களின் சேர்க்கையால்தான் பிரபஞ்சம்
உண்டானது என்பதே இவ்விரு மதங்களின்
போதனையாகும். 
----------------------------------------------
Y (4) காலத்தால் பிந்திய கருத்துமுதல்வாதம்!
கருத்துமுதல்வாதம் தோன்றியது ஏன்?
மனித குலம் கண்டறிந்த முதல் தத்துவம்
பொருள்முதல்வாதமே. கருத்து முதல்வாதம்
காலத்தால் பிந்திப் பிறந்த தத்துவம் ஆகும்.
இந்தியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளில்
மட்டுமின்றி, மேற்கத்திய சமூகத்திலும் இதுவே
நிகழ்ந்தது.

எந்தவொரு  தத்துவமும் தோன்றுவதற்கு உகந்த
சமூகச் சூழல் வேண்டும். அது அதற்கான தேவை
இல்லாமல் எந்தத் தத்துவமும் தோன்றி விடுவதில்லை.
உலகம் முழுவதும் உள்ள மானுட சமூகத்தின் தொடக்க
காலத்தில் கருத்து முதல்வாதம் தோன்றுவதற்கான
எத்தகைய சமூக அவசியமும் நிலவவில்லை.

சமூகத்தின் மொத்த உற்பத்தியும் அதனால் விளைந்த
உபரியும் (surplus) சமூகத்தின் அத்தனை
உறுப்பினர்களாலும் சரிசமமாக நுகரப்பட்ட  காலம்
ஒன்று இருந்தது. உபரி என்பது அனைவருக்குமானது
என்ற உணர்வுடன், எவர் ஒருவரின் பங்கையும் எவர்
ஒருவரும் அபகரிக்காமல் இருந்த ஒரு பொற்காலம் அது.
மேற்கத்திய ஐரோப்பிய சமூகத்திலும் சரி, இந்தியா
போன்ற கீழ்த்திசை சமூகத்திலும் சரி, ஆப்பிரிக்க
ஆஸ்திரேலிய பழங்குடிச் சமூகங்களிலும் சரி,
உலகெங்கும் உபரியின் மீதான சமஉரிமை நிலவிய
காலம் அது.

இத்தகைய சமூக அமைப்பை மார்க்ஸ் புராதனப்
பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கிறார்.
சமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் எதுவும் ஏற்படாத
காலம் இது. இக்காலக் கட்டத்தின் மிக இயற்கையான
தத்துவமாக, பொருள்முதல்வாதம் நிலவியது.
பொருள்முதல்வாதம் சமத்துவத்தை தத்துவார்த்த
உள்ளடக்கமாகக் கொண்டுள்ள தத்துவம் ஆகும்.
சமூகத்தின் வளர்ச்சியை ஒட்டியே தத்துவமும்
வளர்ச்சி பெறும். இங்கு குறிப்பிடும் பொருள்முதல்வாதம்
கருநிலையில் இருந்த பொருள்முதல்வாதம் ஆகும்.

காலம் செல்லச் செல்ல, வளர்ச்சியின் இயக்கப்
போக்கில், மானுட சமூகத்தில் வர்க்கப் பிரிவினை
ஏற்பட்டது. அடிமைகள் என்றொரு முற்றிலும் புதிய
வர்க்கம் உண்டானது. இந்த வர்க்கத்தினருக்கு
சமூகத்தின் உபரியின் மீதான உரிமை மறுக்கப்
பட்டது. இந்த அடிமைகளைக் கட்டியாளும்
எஜமானர்களுக்கு மட்டுமே உபரியின் மீதான
முற்றுரிமை உறுதி செய்யப்பட்டது.

மானுட சமூகத்தில்  முதன்முதலில் ஏற்பட்ட
மிகப்பெரிய பாரதூரமான மாற்றம் இது. பழைய
நிலைமைகள் மாறி விட்டன. முற்றிலும் புதிய
நிலைமைகள் சமூகத்தில் தோன்றி விட்டன.
புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய சிந்தனை
சமூகத்திற்குத் தேவைப்பட்டது. எனவே புதிய
தத்துவம் பிறந்தது. அதுதான் கருத்துமுதல் வாதம்
ஆகும்.

சமூகம் மொத்தமும் உழைத்து, அதனால் கிடைத்த
உபரியை சமூகம் மொத்தமும் சமமாக  நுகர்ந்த
புராதனப் பொதுவுடைமை சமூகத்தில் அறிவு என்பது,
(அதாவது சிந்தனை என்பது) இயற்கையை
அறிவதே என்பதாக இருந்தது. இயற்கையோடு
வினைபுரியும் இயக்கப் போக்கிலேயே, அதாவது
உழைப்பின் போக்கிலேயே சமூகம் அறிவைப்
பெற்றது. அறிவைப் பெறும் வாயிலாக உழைப்பு
இருந்தது. இந்த வாயிலானது எதை முன்னிட்டும்
எவரைப்பொறுத்தும் சாத்தப்படவில்லை என்பது
புராதனப் பொதுவுடைமை சமூகத்தின் சிறப்பாகும்.

ஆண்டான் அடிமைச் சமூகத்தில் உழைப்புச் சுரண்டல்
என்ற முற்றிலும் புதிய செயல்பாடு தோன்றுகிறது.
இது சமூகத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.
உழைப்புச் சுரண்டலை சமூகத்திற்கு விளக்கவும்,
அதை நியாயப் படுத்தவும், சமூகத்தில் புதிதாக
ஏற்பட்டு விட்ட அசமத்துவத்தை (asymmetry) விளக்கவும்
புதியதொரு சிந்தனையும் சிந்தனை முறையும்
தேவைப்படுகின்றன. இந்தத் தேவையை
நிறைவேற்றவே கருத்துமுதல்வாதம் பிறக்கிறது.

கிரேக்கத்தின் மாபெரும் தத்துவஞானியும் கி.மு
ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான
பிளேட்டோவின் கருத்துமுதல்வாதம் முன்பத்தியின்
கூற்றுக்கு ஆகச் சிறந்த உதாரணம் ஆகும். பிளேட்டோவின்
குகை உருவகம் (allegory of the cave) என்ற சித்தரிப்பைப்
படித்தால் இதை நன்கு உணரலாம்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நால்வகை
வேதங்களும் தொன்மைக்கால இந்தியாவைப்
படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வரலாற்று
ஆவணங்கள் ஆகும். உலகெங்கும் கிடைத்த
அத்தனை ஆவணங்களிலும் தொன்மை மிக்கதாக
நால்வகை வேதங்கள் கருதப் படுகின்றன.

இந்தியச் சமூகம் இனக்குழுச் சமூகமாக கூடி வாழ்ந்த
காலத்தில் எழுதப்பட்டவையே நால்வகை வேதங்கள்.
இவை யாவும் தனி ஒரு புலவரால் இயற்றப் பட்டவை அல்ல.

வேதம் என்றால் அறிவு என்று பொருள். வேதங்கள்
நான்கும் தொகை நூல்களே. சங்க இலக்கியத்தின்
எட்டுத் தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு,
குறுந்தொகை போன்ற தொகை நூல்களே வேதங்கள்.
பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால்
பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.
வேதங்கள் யாவினும் தொன்மை மிக்கது ரிக் வேதம்
ஆகும். மொழிகள் வரி வடிவம் பெறும் முன்னரே
வேதங்கள் பாடப்பட்டன. தொடர்ந்து வாய்
மொழியாகவே பேணப்பட்டன.

நால்வகை வேதங்களிலும் தத்துவக் கருத்துக்கள்
என்பவை மிக அற்ப அளவிலேயே (trace level) உள்ளன.
அவை மக்கள் குழுவாகச் சேர்ந்து பாடிய பாடல்களே.
அவற்றில் ஒளி சிந்தும் தத்துவம் எதுவும் புதைந்து
கிடைக்கவில்லை. மனித சிந்தனையின், மனித
அறிவின் குழந்தைப் பருவ வெளிப்பாடுகளே
வேதங்கள்.

ரிக் வேத காலத்தில் சாதி வருணம் போன்ற
பாகுபாடுகள் இனக்குழுச் சமூகத்தில் தோன்றி
இருக்கவில்லை. ஏற்றத்தாழ்வற்ற சுரண்டலற்ற
ஒரு இனக்குழுச் சமூக வாழ்க்கையையே ரிக்
வேதம் படம் பிடித்துக் காட்டுகிறது என்கிறார்
மார்க்சிய வரலாற்று அறிஞர் தேவி பிரசாத்
சட்டோபாத்யாயா. (பார்க்க: இந்தியத் தத்துவம்:
ஓர் அறிமுகம் (தமிழில்: வெ கிருஷ்ணமூர்த்தி),
மூன்றாம் பதிப்பு,  படைப்பாளிகள் பதிப்பகம்,
சென்னை, பக்கம்-169).

நால்வகை வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட
உபநிடதங்களில் தத்துவக் கருத்துக்கள் சற்று
வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளன. உபநிடதங்களே
வேதாந்த தத்துவத்தின் தோற்றுவாய் ஆகும்.

உபநிடதங்களும்கூட ஒற்றைப்பார்வை கொண்டவை
அல்ல. அவற்றின் கருத்துக்கள் அனைத்தும்
ஒருபடித்தானவையும் அல்ல (not homogeneous).
எனவே பிற்காலத்தில் தோன்றிய தத்துவஞானிகள்
உபநிடதக் கருத்துக்களில் ஓர் ஒருபடித்தான
தன்மையை உருவாக்கும் பொருட்டு, உபநிடதங்களை
விளக்கி நூல்களை எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட
நூற்களுள் தலைசிறந்தது பாதராயணர் இயற்றிய
பிரம்ம சூத்திரம் ஆகும். இந்நூல் எழுதப்பட்ட
காலத்தை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை.
கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம்
நூற்றாண்டு வரையிலான 700 ஆண்டுகளுக்குள்
இது எழுதப்பட்டிருக்கக் கூடும்.

வேதாந்த தத்துவத்தின் அடிப்படை நூல் பிரம்ம
சூத்திரமே ஆகும். ஆதி சங்கரர், ராமானுஜர்,
மத்வர் ஆகிய தத்துவ ஆசான்கள் பிரம்ம
சூத்திரத்திற்கு உரை எழுதியதன் மூலமே தத்தம்
கொள்கைகளான அத்வைதம், விஷிஷ்டாத்வைதம்,
துவைதம் ஆகியவற்றை நிலைநாட்டினர்.
------------------------------------------------------------------------------------------
Y (3) அத்வைதம்: ஒரு சிமிழ் அளவிலான வரலாறு!
தூய அறிவே (pure reason) பிரம்மம்; அதுவே சாரமான
உண்மை என்றார் ஆதி சங்கரர். உண்மை என்பது
இரண்டற்றது என்பதால் பிரம்மம் தவிர மீதி
அனைத்தும் பொய், மாயை என்றார் ஆதி சங்கரர்.

சங்கரர் காலத்திய இந்தியத் தத்துவ ஞானம் ஆறு
வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது.
ஆறு பிரிவுகளும் ஆறு தரிசனங்கள் என தத்துவ
ஆசிரியர்களால் வழங்கப்பட்டன. அவற்றில்
பொருள்முதல்வாதமே மேலோங்கி இருந்தது.

1) சாங்கியம் 2) யோகம் 3) நியாயம் 4) வைசேஷிகம்
ஆகிய நான்கும் பொருள்முதல் வாத தரிசனங்கள்.
பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகிய இரண்டும்
கருத்துமுதல் வாத தரிசனங்கள். இவையே வேதாந்தம்
என்ற பெயரால் வழங்கப் பட்டன.

பூர்வ மீமாம்சை பக்தியாலும் சடங்குகளாலும்
நிரம்பி வழிந்த தரிசனம். அதில் தத்துவச் செறிவு குறைவு.
அது பக்தி மார்க்கத்தைப் போதிக்கிறது.

உத்தர மீமாம்சையே ஒப்பீட்டளவில் தத்துவச் செறிவு
மிகுந்தது. இது ஞான மார்க்கத்தை போதிக்கும்
தரிசனம். இதுவே அத்வைதத்தின் தோற்றுவாய்.

ஆதிசங்கரர் சடங்குகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
இது மத நிறுவனங்களுக்கு எதிரான மூர்க்கமான
கலகக்குரலாக இருந்தது. எனவே மத நிறுவனங்கள்
அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதிசங்கரரை
எதிர்த்தன.

பொருள்முதல்வாதத்தை தீவிரமாக எதிர்த்தார்
சங்கரர். எனவே எல்லாப் பொருள்முதல்வாதிகளும்
சேர்ந்து ஆதிசங்கரரை எதிர்த்தனர். சுருங்கக் கூறின்
தம் காலத்தில் வேறெந்த தத்துவ ஞானியையும் விட
அதிகமாக எதிர்க்கப் பட்டவர் ஆதிசங்கரரே.
------------------------------------------------------------------------------------
(2)மார்க்சியப்  பார்வையில் அத்வைதம்!
கருத்துமுதல் வாதத்தின் உச்சமே அத்வைதம்!
இந்தியத் தத்துவஞானத்தின் உச்சகட்ட ஆக்கம் எது
என்ற கேள்விக்கு அத்வைதம் என்று விடை தரலாம்.
எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் அத்வைதத்திற்குப்
பிறவியளித்தார் என்ற போதிலும், நூற்றாண்டுகளைக்
கடந்தும் அத்வைதம் தன்னை ஒரு வலுவான தத்துவப்
பள்ளியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கான
காரணங்களில் ஒன்றாக, ஆதிசங்கரருக்கு முன்பே
அத்வைத சிந்தனை இந்திய மரபில் உருவாகி
இருந்தமையை உணர வேண்டும்.

கழிந்து போன இந்த 12 நூற்றாண்டுகளில், ஆதிசங்கரரின்
அத்வைதம் தொடர்ந்து வளர்சிதைமாற்றம்
(metabolism) அடைந்து கொண்டே வந்துள்ளது.
புறக்கணிக்க முடியாத ஒரு சிந்தனைப் பள்ளியாக
அத்வைதம் நிலைபேறு அடைந்தமைக்குக் காரணம்
நிகழ்ந்த இந்த வளர்சிதை மாற்றமே.

எனினும், தமிழகச் சூழலில் அத்வைதத்திற்கு ஒரு
எதிர்மறை முத்திரை (negative connotation) இருப்பதையும்
கவனம் கொள்ள வேண்டும். மிகவும் அழுத்தமாக
விழுந்துள்ளது இந்த எதிர்மறை முத்திரை.

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே" என்னும்
ஆய்வு முறைமையைக் கைக்கொண்டு அத்வைதம்
குறித்து ஆய்வோம்.

உலகின் எந்த மூலையில் எந்தவொரு தத்துவம்
தோன்றினாலும், தத்துவங்களின் இருபெரும்
வகைமையில் (classification) அது ஏதேனும் ஒன்றில்
அடங்க வேண்டும். பொருள்முதல்வாதம், கருத்து
முதல்வாதம் என்னும் இரு பெரும் வகைமையில்,
அத்வைதம் கருத்துமுதல் வாதம் என்னும்
வகைமையில் அடங்குகிறது.

உலகில் இதுவரை தோன்றிய கருத்து முதல்வாதத்
தத்துவங்கள் அனைத்திலும், ஆக உயர்ந்ததும்
கருத்து முதல்வாதத்தின் சிகரமாகக் கருதத் தக்கதுமான
தத்துவம் அத்வைதம் ஆகும். இன்று இந்த 2017ஆம்
ஆண்டிலும்கூட, அத்வைதத்தை மிஞ்சுகிற ஒரு
கருத்து முதல்வாதத் தத்துவம் தோன்றவில்லை.
தோன்றவும் இயலாது. ஏனெனில், கருத்தின் முழுமுதல்
தன்மையை (absoluteness), அதன் மாண்பை infinity அளவு
உயரத்தில் வைத்து விட்டது அத்வைதம். இதற்கு மேல்
உயரம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் இல்லை.

"பிரும்மம் ஒன்றே மெய்; பிரபஞ்சம் பொய்" என்கிறது
அத்வைதம். "உயிர் என்பது பிரும்மமே; வேறு எதுவும்
இல்லை" என்கிறது அத்வைதம். ஆதிசங்கரரின்
சொற்களில் கூறுவதானால்,
"ப்ரம்ம ஸத்ய ஜகன் மித்ய ஜீவோ ப்ரம்மைவ நா பர"
என்பதே. இந்த சுலோகம் அத்வைதத்தின் மஹா சாரம்
ஆகும்.

(பிரும்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யம்
(Sankara Bhasya on Brahma Sutra) மற்றும் விவேக சூடாமணி
ஆகிய ஆதிசங்கரரின் மூல நூல்களில் இருந்தே
இக்கட்டுரைத் தொடர் முழுவதிலும் இடம் பெறும்
மேற்கோள்கள் சுலோகங்கள் எடுத்தாளப் படுகின்றன).

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தை, ஒட்டு மொத்த
இயற்கையை, ஒட்டு மொத்தப் பருப்பொருளை
(matter) மாயை (illusion) என்றும் பொய் என்றும்
கூறுகிறது அத்வைதம். பிரும்மம் மட்டுமே மூல
ஆதாரமானது, முழுமுதல் ஆனது, மாற்றங்களுக்கு
ஆட்படாதது, நித்தியமானது (eternal), எனவே ஆதியும்
அந்தமும் அற்றது என்று கூறுகிறது அத்வைதம்.

சதாசர்வ காலமும் இயங்கிக் கொண்டும், இயக்கத்தின்
போக்கில் மாறிக்கொண்டும் இருக்கின்ற
பருப்பொருளால் ஆன பிரபஞ்சம் ( ஜகத்) மெய்யாக
நின்று நிலவவில்லை (unreal; does not exist) என்கிறது
அத்வைதம். பிரும்மம் மட்டுமே மெய்; அது மட்டுமே
நின்று நிலவுவது என்கிறது அத்வைதம்.

ஆயின், அத்வைதம் கூறுகிற பிரும்மம் என்பது எது?
கடவுளா? இல்லை. தூய அறிவே பிரும்மம் என்கிறது
அத்வைதம். இதன் பொருள் சிந்தனையே பிரும்மம்
என்பதாகும்; கருத்தே முழுமுதலானது (absolute)
என்பதாகும். சுருங்கக் கூறின், அத்வைதம் என்ற
தத்துவம் கருத்து முதல்வாதத்தின் அதி உச்சம் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------

2) மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்று
பொருள்முதல் வாதமாகும். அது போலவே,
அத்வைதத்தின் தோற்றுவாய் பிற்கால வேதாந்தம்
ஆகும். அதாவது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை
என்பதாக அறியப்படும் இரண்டில் உத்தர மீமாம்சையே
அத்வைதத்தின் தோற்றுவாய் ஆகும். பூர்வ மீமாம்சை
கடவுளை, கடவுளர்களை வழிபட வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தும் தத்துவம் ஆகும்.

3) ஆதிசங்கரரின் அத்வைதம் கடவுளைச்
சிறப்பிக்கவில்லை. முழுமுதல் அறிவையே
எதனையும் விட உயர்ந்ததாக முன்வைக்கிறது.      
*********************************************************
Y1 அத்வைதம் என்றால் என்ன?
மார்க்சியப் பார்வையில் அத்வைதம்:
ஓர் எளிய அறிமுகம்!
-------------------------------------------------------------------
1) கி.பி  எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, காலடி ஆதி
சங்கரர் உருவாக்கி வளர்த்தெடுத்த ஒரு தத்துவமே
அத்வைதம். அத்வைதம் என்றால் இரண்டற்றது
(no dualism) என்று பொருள்.

2) மானுட வாழ்க்கையில் பெருமளவுக்கு இருமைகள்
வந்து போகின்றன. பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு,
நன்மை-தீமை, உண்மை-பொய், சரி-தவறு என்பவை
போன்ற இருமைகள் (binaries) மானுட  வாழ்வில் அன்றாடம்
உணரப் படுபவை.

3) ஆதிசங்கரரின் தத்துவம் இருமையை நிராகரித்து
ஒருமையை, மூல ஒருமையை முன்வைக்கும்
தத்துவம் ஆகும் (monoism).

4) இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு பகுதியாக அத்வைதம்
உள்ளது. அத்வைதம் குறித்த விளக்க நூல்கள்
யாவும் அன்று சம்ஸ்கிருத  மொழியில் இருந்தன.
ஆதிசங்கரரின் காலத்தில் தத்துவ அரங்கில் மிகப்
பெரிதும் விவாதிக்கப்பட்ட ஒரு தத்துவமாக அத்வைதம்
இருந்தது.

5)  பிற்காலத்தில் மேனாட்டார் அத்வைதம் குறித்து
அறிய நேர்ந்ததும், அத்வைத விளக்க நூல்கள்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. இன்றைய இணைய
உலகில் அத்வைதம் குறித்து பல்வேறு விளக்கங்கள்
ஆங்கிலத்தில் எளிதில் கிடைக்கின்றன.

6) என்றாலும் அத்வைதம் குறித்து தமிழில் எழுதப்பட்ட
நூற்கள் மிகவும் அற்ப சொற்பமே. எனவே தமிழ் மட்டுமே
அறிந்துள்ள வாசகர்களால் அத்வைதம் குறித்து
ஒரு மிக எளிய அடிப்படைப் புரிதலைக் கூடப்
பெற வழியில்லாத சூழல் நிலவுகிறது.

7) ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே அத்வைதத்தை
அறிய முடியும் என்ற நிலையிலேயே தமிழ் வாசகர்கள்
இருத்தப் பட்டுள்ளார்கள். இது அத்வைதம் பற்றி
அறிவதை கடினமான ஒன்றாக ஆக்கியுள்ளது.

8) நமது முந்தைய தலைமுறைகளில் ஒரு குறிப்பிட்ட
விழுக்காட்டினர் சம்ஸ்கிருத அறிவு பெற்றுத்
திகழ்ந்தனர். யாரினும் கூடுதலான சமஸ்கிருதப்
புலமை பெற்றுத் திகழ்ந்தவர் மறைமலை அடிகள்.
காளிதாசனின் சாகுந்தலம் என்னும் சம்ஸ்கிருத
நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மறைமலை
அடிகள். சமகாலத் தலைமுறையில் சமஸ்கிருதம்
கற்றோர், ஒப்பீட்டளவில், நமது முந்தைய
தலைமுறைகளை விட மிகவும் குறைவு.

9) அத்வைதம் இந்த மண்ணில் தோன்றிய தத்துவம்.
என்றாலும் சமகாலத்தில்,இந்த மண்ணில்தான் இது
குறைவாக அறியப்பட்டு இருக்கிறது என்ற
உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

10) இருபெரும் முகாம்களாக இந்த உலகத்தையே
இரண்டாக்கிய பொருள்முதல்வாதம், கருத்து முதல்வாதம்
ஆகிய தத்துவங்களை அலசி ஆராய்ந்து, கருத்து
முதல்வாதத்தை வீழ்த்தி பொருள் முதல்வாதத்தை
அரியணையில் ஏற்றிய மார்க்சிய மூல ஆசான்கள்
காரல் மார்க்ஸும் ஏங்கல்சும் அத்வைதம் பற்றி
அறிந்திருக்கவில்லை.

11) இந்தியாவைப் பற்றி அறிய விரும்பிய மார்க்சுக்கு
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் எழுதிய ஒருபக்கச்
சார்பான ஆங்கில நூல்களே கிடைத்தன. அவற்றை
வெறுத்து ஒதுக்கிய மார்க்ஸ், இந்தியாவைப் பற்றி
இந்தியர்களால் எழுதப்பட்ட நூற்களைக் கற்க
விரும்பினார். அத்தகைய நூற்கள் எல்லாம்
சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றைக் கற்கும்
பொருட்டு தம் அந்திம காலத்தில் மார்க்ஸ்
சமஸ்கிருதம்  கற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால்
சமஸ்கிருதம் கற்று முடிப்பதற்குள் மார்க்ஸ்
மறைந்து விட்டார். எனவேதான் மார்க்ஸும்
ஏங்கல்சும் அத்வைதம் குறித்து எதுவும் கூறவில்லை.

12) பின்னர் வந்த மூல ஆசான்களான லெனின், ஸ்டாலின்,
மாவோ ஆகியோரும் அத்வைதம் குறித்து  எதையும்
அறிந்திருக்கவும் இல்லை; கருத்துக் கூறவும் இல்லை.
அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை. அவர்களின்
முன்னுரிமைகள் வேறு.

13) விவேகானந்தரின் சிக்காகோ பேருரையும்
(1893 செப்டம்பர்), அவரின் அமெரிக்கச் சுற்றுப்பயணமும்
அத்வைதத்திற்கு ஒரு அறிமுகத்தை தத்துவத்
தளத்தில் வலுவாக ஏற்படுத்தின. தொடர்ந்து
மேனாட்டவரால் அத்வைதம் அலசி ஆராயப் பட்டது.
என்றாலும் இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளன.

14) ஒட்டு மொத்தத்தில் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு
தமிழ் வாசகன் அத்வைதத்திற்கு முற்றிலும்
அந்நியமானவன் என்ற நிலையே இப்போது வரை
நீடிக்கிறது.இதற்கு ஒரு நிவாரணமாக, அத்வைதம்
குறித்த தமிழ்நூலை எழுதி வெளியிடுவது என்று
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் முடிவு செய்துள்ளது.

15) உழைக்கும் வர்க்கத்து மக்களுக்கானதாக, எளிய
நடையில், அத்வைத சாரத்தை எவராலும் எளிதில்
புரிந்து கொள்ளத் தக்கதாக. மார்க்சியப் பார்வையில்
அத்வைதம் என்னும் சிறியதொரு நூல் இது/

**************************************************************
அத்வைதத்தின் நவீன வடிவங்களும்
ஆதிசங்கரரின் புதிய அவதாரங்களும்!
-------------------------------------------------------------------------
முன்குறிப்பு: மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற
வெளிவரவிருக்கும் நூலில் இருந்து ஒரு கட்டுரை இது!
-----------------------------------------------------------------------------------------------------
1970களில் இந்தியாவில் இரண்டு ஆன்மிகவாதிகள்
மிகவும் பிரபலம். ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (1895-1986).
இன்னொருவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990).

இருவரில் ரஜனீஷ் இளையவர். இருவருமே பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் பிறந்தவர்கள். இருவரும் உலகம்
முழுவதும் சுற்றி தங்கள் சித்தாந்தத்தைப்
பரப்பியவர்கள். இருவருக்கும் அமெரிக்க சீடர்கள்
அதிகம். அமெரிக்காவில் ஆசிரமம் நடத்தியவர்
ரஜனீஷ்.

இந்த ஆச்சார்ய ரஜனீஷ்தான் பின்னாளில் ஓஷோ
என்று அழைக்கப்பட்டார்.ஓஷோ என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ஆசான் என்று பொருள்.

ஓஷோ ஒரு கருத்துமுதல்வாதி. சிந்தனைக்கு கட்டற்ற
சுதந்திரத்தை அவரின் சித்தாந்தம் அளிக்கிறது.
அந்த வகையில் ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு
இவரின் சித்தாந்தம் மிக நெருக்கமாக வரும்.

நிலவுடைமைச் சமூக காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசைத்
தத்துவங்கள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வு
மறுப்பை வலியுறுத்தும். அதற்கு மாறாக, ஓஷோவின்
தத்துவம் நுகர்வை, இன்ப நுகர்ச்சியை தீவிரமாக
வலியுறுத்துகிறது. பாலியல் வேட்கை, பாலியல்
உறவுகள் ஆகியவை மிகவும் அழுத்தத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் கொந்தளிப்பு
நிலவும் என்கிறார் ஓஷோ. எனவே பாலியல்
சுதந்திரம் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தினார் ஓஷோ. கழிபெருங்காமம்,
கட்டற்ற பாலுறவு ஆகியவற்றை அவர் ஆதரித்தார்.
இதன் காரணமாக செக்ஸ் சாமியார் என்று பெயர்
பெற்றார்.

ஒருபுறம் மனதின் கட்டற்ற சுதந்திரத்தை வலியுறுத்திய
ஓஷோ, மறுபுறம் கட்டற்ற இன்ப நுகர்ச்சியை
வலியுறுத்தினார். இதன் மூலம் கருத்துமுதல்
வாதம், பொருள்முதல் வாதம் ஆகிய இரண்டின்
விசித்திரமான ஒரு கலவையை உருவாக்கினார்.
இதுவே அவரின் சித்தாந்தம் ஆகும்.

மேலும் மஹாயான புத்தமதம் கூறும் கருத்துமுதல்
வாதம்,  நீட்ஷேயின் தத்துவங்கள் ஆகியவற்றின்
செல்வாக்கும் இவரின் சித்தாந்தத்தில் உண்டு.
A rare blend of various philosophical thoughts is Oshoism!

ஆதிசங்கரரைப் போலவே ஓஷோவும் மதங்களை
எதிர்த்தார்; சடங்குகளை எதிர்த்தார். சங்கரரைப் போல
ஓஷோவும் கடவுளுக்கு பெரிய முக்கியத்துவம்
எதையும் அளிக்கவில்லை. பொருள் என்பதையே
முற்றிலுமாக மறுத்த ஆதிசங்கரரைப் போல்
அல்லாமல், ஓஷோ பொருளின் பங்கை
மறுக்கவில்லை. இதனால் ஓஷோவின் தத்துவத்தில்
அப்பாலைத் தன்மைக்கு இடமில்லை. இதன்
காரணாமாக ஓஷோவின் சிந்தனைகள் அவரின்
மரணத்திற்குப் பின்னரும் மடிந்து விடாமல்
உள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஒரு கல்லூரியில் தத்துவப்
பேராசிரியராகப் பணியாற்றிய ஓஷோ, வேலையைத்
துறந்து முழுநேர ஆன்மிகவாதியாக மாறிய பின்னர்
கணக்கற்ற நூல்களை எழுதி உள்ளார்.

இருக்கின்ற அமைப்பை மாற்ற முடியாது என்ற
கொள்கையைப் போதித்தவர் ஓஷோ. மார்க்சியத்தை
சோஷலிஸ்ட் கொள்கைகளை எதிர்த்தார் ஓஷோ.
கிறிஸ்துவ மதத்தை முற்றிலுமாக  எதிர்த்தவர் ஓஷோ.
ஏசு கிறிஸ்து கிருஷ்ணரின் அவதாரமே என்று ஓஷோ
கூறியதால் அமெரிக்காவில் அவரால் தொடர்ந்து
நீடிக்க முடியவில்லை.


 




   
   
                      



 


                 



 
        
      



        







    
 





       







  

     







.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக