வெள்ளி, 29 டிசம்பர், 2017

அத்வைதம் ஏற்புடையதல்ல என்று நான் சொல்லவில்லை. அத்வைதம் ஒரு மெய்யியல்தரிசனம். அது அறிவார்ந்த தர்க்கத்துடன் விளக்கப்படும்போது தத்துவம்
அதை ஒரு மதம்போல ‘பரப்ப’ முடியாது. அதன் தேவையை எவ்வகையிலோ முன்னரே சற்றேனும் உணராதவர்களுக்கு அது புரியாது. அதை பாடமாகப் பயில்வது பயனற்றதும்கூட
இவ்வுலகில், இதன் லாபநஷ்டங்கள் இன்பதுன்பங்கள் நன்மைதீமைகள் பாவபுண்ணியங்கள் என்னும் இருமையில் முழுமையாக ஆழ்ந்து வாழ்க்கையை அறிபவர்களுக்கு அதனால் ஆவதொன்றுமில்லை. எங்கோ அதற்கப்பால் மனம் சென்றுவிட்டவர்களுக்குரியது அது.
அது எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். நான் கடும் துயரின் கணம் வழியாக அங்கே சென்றேன். அற்புதமான இயற்கையனுபவங்கள் வழியாகச்சென்றார் நித்ய சைதன்ய யதி
நோயற்றவர்கள் மருந்துண்பதுபோல வெறும் தர்க்கமாக அத்வைதத்தை அறிவது. நான் சொல்வது அதையே
==================================
தமிழில் அத்வைதம் :
இந்த நூலை நான் படித்திருக்கிறேன் . இந்திய சிந்தனை மரபில் வந்த, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் – தமிழில் வந்த அருமையான அத்வைத நூல்
---------------------------------------------------------------------------------
அன்புள்ள ஜெ
சங்கரர் உரையை நாலைந்துமுறை கேட்டுவிட்டு இதை எழுதுகிறேன் அது புரிய ஒரு கோணம் என்பதனால் என்னால் தொகுத்துக்கொள்ள பலநாட்கள் ஆகியது. ஆனால் மிகச்சிறந்த ஒரு பயிற்சியாக இருந்தது
சங்கரர் பௌத்தர்களுடனான விவாதத்தில் அவர்கள் கேட்ட மேலதிகத் தத்துவக்கேள்விகளுக்கு அவர்களின் நியாய சாஸ்திரத்தைக்கொண்டே உரிய பதில் சொல்லி அவர்களை வென்று வேதாந்தத்தை ஸ்தாபனம் செய்தார்
ஆறுமதங்களையும் ஒன்றாகக் கருதும் ஷன்மதம் அமைப்பை உருவாக்கினார். அதைப்பரப்ப ஏகதண்டிகள் என்னும் குருமரபை உருவாக்கினார்.
ஆனால் அவரது சிந்தனைகள் ஒரு சிறிய ஞானவட்டத்துக்குள்ளேயே இருந்தன. அவற்றுக்கு பெரிய அளவிலான ஸ்தாபன மதிப்பு இருக்கவில்லை.
பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் இந்து மதம் தன்னை தொகுத்துக்கொள்ளவேண்டிய அரசியல்கட்டாயம் உருவானபோது சங்கரர் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டார்
வித்யாரண்யர் அவரை ஒரு பேரரசின் பின்னணி கொண்டவராக ஆனார். அவரே சங்கரர் பேரால் ஸ்மார்த்தர் என்னும் அமைப்பை உருவாக்கினார். அது அன்றிருந்த ஆறுமதங்களிலும் உள்ல பூசகர்களை ஒன்றாக ஆக்கிய ஒரு முறை
அந்தமுறை இந்துமதத்தைக் காப்பாற்றியது. ஸ்மார்த்தர்கள் தங்கள் வரலாற்றுப்பங்கை ஆற்றினர்கள். ஆலால் அவர்கள் மாற்றத்துக்கு எதிரான நிலைச்சக்தி
இப்படி சங்கரர் பேரால் ஆறுமதம் இணைக்கப்பட்டபோது சங்கரர் ஆறுமதங்களுக்கும் பொதுவான பக்திமார்க்கத்தலைவராக ஆனார். ஆகவே அவர் பேரில் ஆறுதெய்வங்களையும் பாடும் தோத்திரநூல்கள் பிறந்தன
இந்தக்கவசத்தை பதினெட்டாம் நூறாண்ண்டில் வேதாந்தம் கழற்றியது. சங்கரர் மீண்டும் புதிதாகப்பிறந்தார். அதுவே ராமகிருஷ்ண மடம் போன்றவை
நான் சுருக்கிக்கொண்டது சரியா?
வேத்பிரகாஷ்
=============
Dear Jeyamohan
There is a lone inscription found on sankara bhashyam of Virarajendra period ( son of Rajenda 1)

*

அன்புள்ள சங்கர்
ஆர்வமூட்டும் செய்தி.
ஆனால் இதில்கூட சங்கரபாஷ்யம் என எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதே ஒழிய சங்கரர் பெயர் உள்ளதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இத்துறையில் அறிஞர்கள் பலர் விவாதித்து பொதுமுடிவுக்கு எட்டுவதற்காக காத்திருக்கவேண்டியதுதான். வரலாற்றியலில் பொதுவாக அதுவே முறைமை.
சங்கரவேதாந்தம் எட்டாம்நூற்றாண்டு முதல் இரு சரடுகளாக  இருந்துகொண்டே இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏகதண்டி துறவிகளின் மரபாக ஒரு சரடு. வேதாந்திகளால் ஆராயப்படும் ஒரு வலுவான தத்துவத்தரப்பாக ஒரு சரடு. அதற்கான வரலாற்றுத்தருணம் வந்தபோது அவரது ஞானமரபினரில் இருந்து அது பேருருவம் கொண்டது

ஜெ

ஜெ
சங்கரர் உரை பலவகையிலும் திறப்பாக இருந்தது. நீங்கள் சொன்ன பலவிஷயங்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. சங்கரர் பற்றிய கதைகளை பிற்காலத்தைய புராணக்கற்பனைகள் என்று சொல்லலாம். ஆனால் சங்கரரின்சௌந்தரிய லஹரி போன்றவற்றை பிற்காலத்தையவை என்று சொல்லத்தோன்றவில்லை. அவை சாதாரண மனிதர்களால் இயற்றப்படக்கூடியவை அல்ல.
மேலும் ஷண்மத சமன்வயத்தை உருவாக்கிய சங்கரபகவத்பாதர்  ஞான கர்ம சமுச்சயத்தையும் உருவாக்கினார் என்று நம்புவதில் தவறில்லை என்பதே என்னுடைய எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் ஞானநூல்களில் சங்கரர் பக்தியைக் கடுமையாகக் கண்டிப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்
ஆனால் உங்கள் உரை வரலாற்று நோக்கில் பல கோணங்களில் சிந்திக்கவைக்கிறது. நவீன இளைஞன் ஒருவன் சங்கரரை நோக்கி வருவதற்கு சம்பிரதாயமான எந்த ஒரு உரையையும் விட இதுவே பொருத்தமானது என்று தோன்றுகிறது. இன்றைக்குத்தேவை வெறுமே பக்தியை முன்வைக்கும் உரைகள் அல்ல. இந்தவகையான ஆழமான நவீன உரையாடல்கள்தான் என்று நினைக்கிறேன்
அனைத்துவாழ்த்துக்களும்
அன்புடன்
சங்கரநாராயணன்



ஜெமோ
சங்கரரின் ஷண்மத சமக்ரமார்க்கம் ஒரு விஸ்வரூபத்தை எடுப்பதற்கு இந்துஞான மரபின்மேல் நடந்த படையெடுப்புகள் காரணம் என்றும் ஸ்மார்த்த சம்பிரதாயம் அதைப்பாதுகாக்க எடுக்கப்பட்ட பெரும் முயற்சி என்றும் வெளிப்படையாகச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். ஆனால் கூடவே இஸ்லாமியத் தாக்குதலை நைச்சியமாக சுல்தானியத்தாக்குதல் என்று
------------------------
உரை சாதாரண பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்ததைக் கண்டேன்.சங்கரரின் வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாமே அவர் மறைந்து ஐநூறு வருடங்களுக்குப்பிறகு உருவானவை என்று சொன்னீர்கள். சங்கரர் பெயரில் உள்ள பஜகோவிந்தம் சௌந்தரிய லஹரி போன்ற நூல்கள் அவரால் எழுதப்பட்டவை அல்ல என்று சொன்னீர்கள். இதெல்லாம் புதிய சங்கரரை வெளிப்படுத்தின. பக்தர்களுக்கு அவர் என்ன வேதாந்தம் சொன்னாலும் கடைசியில் பக்தியில் வந்துதானே சரண் ஆனார் என்று சொல்வதில் ஒரு திரில் இருக்கிறது. அதைத்தகர்த்துவிட்டீர்கள்.
ஆனால் வேதாந்தத்தில் இருந்து அத்வைதம் எப்படி வேறுபடுகிறது, சங்கரரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன என்று விளக்கிய இடம் முக்கியமானது. வழக்கமாக விவாதங்களில் மறுதரப்பை கேவலப்படுத்துவார்கள். எதிர்தரப்பினர் சங்கரருக்கு விஷம் வைத்தார்கள், அவர் தப்பினார் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் இல்லாமல் பௌத்தம் சங்கரவேதாந்தம் அளவுக்கே மகத்தான ஞானதரிசனம் என்று சொன்னீர்கள். அதுவும் எனக்கு ப்பிடித்திருந்தது.
எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது ரிச்சர்ட் கிங் போன்றவர்களை மேற்கோள் காட்டி சங்கரர் அவர் காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை பெரும்பாலான இந்துஞானநூல்களிலும் எதிர்தரப்பாக இருந்த பௌத்த நூல்களிலும் பெரிதாகக்குறிப்பிடப்படவில்லை என்பதுதான். அது சங்கரர் முன்வைத்த ஆறுமதம் என்னும் அமைப்புக்கு சரித்திரபூர்வமான ஒரு தேவை வந்தபோது அந்த தரிசனம் விஸ்வரூபம் கொண்டதனால்தான் என்று விளக்கியது மிக முக்கியமானது. சங்கரர் இத்தனைபெரிய ஆளுமையாக ஆனது அவரது ஏகதண்டி சம்பிரதாயத்தின் உள்ளடக்கமாக இருந்த ஒருமைஞானத்தால்தான்
நானும் ஒரு ஸ்மார்த்தன் என்ற வகையில் ஸ்மார்த்த சம்பிரதாயம் என்பது ஒரு சாதி எல்ல ஒரு காலகட்டத்தில் இந்துமதத்தை பாதுகாப்பதற்காக உருவான மாபெரும் நிலைச்சக்தி என்றும் அவர்கள் ஆறுமதங்களையும் ஒன்றாக்கி ஒரே வழிபாட்டுமுறையாக ஆக்கி ஐநூறாண்டுக்காலம் நீட்டித்தனர் என்றும் இந்துக்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னது எனக்கு உத்வேகத்தை அளித்தது. ஒரு சாதியாக இன்றைக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அது உருவானது ஒரு பெரிய நோக்கத்துக்காக என்றபோது இதைத்தெரிந்துகொள்ளாமலிருந்ததை நினைத்து வருந்தினேன்
=========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக