புதன், 20 டிசம்பர், 2017

பிரபஞ்சம் கயிற்ரவா,அல்லது கானல்நீரா .கயிறு என்று தெரிந்ததும் பாம்பு மறைந்துவிடும்.ஆனால் கானல் என்று தெரிந்தாலும் நீர் மறைவதில்லை.கயிற்றரவை ஆங்கிலத்தில் ILLUSIONS-Wrong Perception என்பர்.கானல்நீரை HALLUCINATION-False Perception என்பர்.இதில் பிரபஞ்சம் எது? மாயை என்பது காட்சிப்பிழையா? உணர்வுப்பிழையா ?எங்கள் கண் ஒளித்தெறிப்பை உணர்வதால் உருவங்கள் தெரிகின்றன.அதே கண்X-Ray ஐ உணர்ந்தால் எலும்புக்கூடுகள் தெரியும்.Micro Wave வை உணர்ந்தால் எல்லாம் துகள்கள் ஆகத்தெரியும் .ஆக இவற்றில் எது உண்மைக்காட்சி.உணர்வைத்தானே உண்மையாக நம்புகிறோம்.அத்வைதம் இரண்டின்மை என்பது சைவசித்தாந்தம் ஆத்மா இறையுடன் சேர்ந்திருக்க முடியும் இறையாக முடியாது.உப்பு நீரில் கரைந்தாலும் நீராக முடியாதது போன்ற நிலை தான் சைவசித்தாந்தம் கூறும் அத்வைதம் என்பது என் புரிதல்.எல்லா சித்தாந்தங்களும் நிரூபிக்கப்படாத விளக்கங்களே(Theories).
--------------------------------------------------
இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும் தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம், விசிட்டாத்வைதம்,அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்க, இதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம்,உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போது, வேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று பேதக (வேறுபட்ட) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும், வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும், சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும், பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும், அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத, தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.

மூவகை வேதாந்தத்தில் (துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம்) புறநிலை கருத்துமுதல்வாதமும் அகநிலை கருத்துமுதல்வாதமும்

------------------------------
இந்து மதம் பல்வேறு தத்துவஞானப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் முதன்மையானவை என்று முதல் வரிசையில் வைத்து பேசப்படும்  தத்துவப் பிரிவுக்கு மூவகை வேதாந்தம் என்று அழைக்கப்படுகிறது. இது துவைதம்,விசிட்டாத்வைதம்அத்வைதம் என்ற மூன்று வேதாந்த கண்ணோட்டத்தை குறிப்பதாகும்.

மூன்று வேதாந்தத்திற்கும் ஆதார நூல்கள் ஒன்றாய் இருக்கஇதன் தத்துவ போக்குகள் மட்டும் எப்படி வேறுபடுகிறது என்பதை பார்ப்போம். வேதம்உபநிடதங்கள்பிரம்ம சூத்திரம்பகவத்கீதை ஆகிவற்றின் காலகட்டங்கள் மிகவும் நீண்டநெடியதாகும். இதனுள் பல்வேறு கருத்துப்போக்கை பார்க்க முடிகிறது. ஆதார நூல்களில் காணப்படும் சில வாக்கியங்களை மகா வாக்கியங்களாகக் கொண்டு அதற்கு விளக்கம் அளிக்கும்போதுவேறுபட்டு வேதாந்த மதம் மூன்று வகையாகிறது.

உபநிடதங்களில் சில வாக்கியங்கள் சீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று  பேதக (வேறுபட்ட) சுருதியாகவும்சீவாத்மாவும் பரமாத்மாவும் வேறாக இருந்தாலும்,வேறானவற்றில் ஒன்றி அந்தர்யாமியாய் பரமாத்மா இருப்பதாக  பேத அபேதக (வேறுபட்டும் வேறுபடாத) சுருதியாகவும்சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று  அபேதக (வேறுபாடற்ற) சுருதியாகவும் அமைந்துள்ளது. 

பேத சுருதியை வலியுறுத்தி துவைத வேதாந்தத்தை மத்துவரும்பேதஅபேத சுருதியை வலியுறுத்தி விசிட்டாத்வைத வேதாந்தத்தை ராமாநுசரும்அபேத சுருதியை வலியுறுத்தி அத்வைத வேதாந்தத்தை சங்கரரும் தத்தமது தத்துவஞானத்தையும் மதத்தையும் அமைத்தனர். இந்தக் கருத்துப் போக்குகள் இதற்கு முன்பு மத,தத்துவஞானத்தில் காணப்பட்டாலும் இதனை இம் மூவரும் மேம்படுத்தி விரிவாக்கி வளர்த்தனர்.

துவைதமும், விசிட்டாத்வைதமும் புறநிலைக் கருத்துமுதல்வாதமாகும். காணப்படும் உலகம், மனித உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டதும், வெளியில் இருக்கக் கூடியதுமான முழுமுதற் கருத்தின் விளைபொருள் என்றுரைக்கிறது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது படைப்புக்கான சக்தி இவ்வுலகிற்கு அப்பால் காணப்படுகிறது. அதனால் தான் தமிழில் இதற்கு அப்பாலைத் தத்துவம் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. துவைதம் புறநிலை கருத்துமுதல்வாதம் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

விசிட்டாத்வைதத்தை அகநிலை கருத்துமுதல்வாதமா? புறநிலை கருத்துமுதல்வாதமா? என்று வகைப்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அந்தர்யாமியாக பிரம்மம் எங்கும் உடனாய் இருப்பதாக அது கூறுவதால் இந்த சிக்கல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

விசிஷ்டாத்வைதம் என்பதை சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று இவர்கள்பொருள்கொள்கின்றனர். ஆனால் இதனைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும். பரம்பொருளைத் தத்துவமசி என்று அகத்தில் வைத்துப் பார்ப்பது அகநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருளைத் தமக்கு வேறான புறத்தில் வைத்து பார்ப்பது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பரம்பொருள் புறத்தில்தான் இருக்கிறது என்கிறார் ராமாநுசர்மேலும் அந்தர்யாமியாய் அனைத்திலும் உறைகிறார் என்றும் குறிப்பிடுகிறார். அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் சாட்சியாகத்தான  உள்ளார். எந்தச் செயற்பாட்டிற்கும் அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள் பொறுப்பாக மாட்டார்.

புறநிலைக் கருத்துமுதல்வாதமான துவைதம் புறத்தில் உள்ள பரம்பொருளின் ஆற்றலை அறிந்திட முடியாது. அதன் லீலையைப் புரிந்து கொள்ள முடியாது. நமது சிந்தனை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. பரம்பொருளின் ஆற்றலை அளந்தறிய முடியாது என்கிறது. மேலும் சித்துஅசித்துஈஸ்வரன் என்ற மூன்று உண்மைப் பொருளை துவைதம் போன்றே விசிஷ்டாத்வைதமும் ஏற்கிறது.  சித்து உயிர்களின் தொகுதியையும். அசித்து என்பது உயிரற்ற பொருட்தொகுதியையும்ஈஸ்வரன் என்பது பரம்பொருளையும் குறிக்கிறது.

விசிஷ்டாத்வைதம் பரம்பொருள் வேறுஆத்மா வேறு முக்தி பெற்ற ஆத்மாவும் வைகுண்டத்தில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்திடுவதே பணியாகும் என்று பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் வேறுபடுத்தியே பார்க்கிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறு என்பது மட்டுமல்லாதுபரமாத்மாவிடம் ஜீவாத்மா சரணடைவதே சிறந்ததாகக் குறிப்பிடுவதால்விசிஷ்டாத்வைதத்தைச் சிறப்புப் பொருந்திய துவைதம் என்றழைப்பதே பொருத்தமானதாகும்.


உலகம் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன பொருள்இந்த உலகம் இல்லை என்பதன்பொருள் என்னஉலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன?உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான்என் மனம்உங்கள் மனம் என்றுஎல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம் இருக்கிறது என்கிறது அத்வைதம்.உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்று அகநிலைக் கருத்துமுதல்வாதம் கருதுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தும் மனதின் படைப்பே என்கிறது. அதாவது படைக்கப்பட்ட அனைத்தும் அகத்தினால் தோன்றியதாகக் கருதுகிறது. அத்வைதமும் அவ்வாறே கருதுகிறது. அத்வைதம் அகநிலை கருத்துமுதல்வாதமாகும்.
----------------------------
அத்வைதிகளில் பலரும் மறுபிறவியை நம்புகிறார்கள்.பிரம்மம் வியாபகமும் ஒடுக்கவும் கொண்டது.ஒடுங்கியிருந்து வியாபகம் ஆகும் போது பிரபஞ்சம் என்று அழைக்கப்படும். பிரபஞ்சம் அழியும் போது பிரம்மம் முன்போல் ஒடுங்கிவிடுகிறது.ஓர்முறை வியாபகமாகி ஒடுங்குவதை யுகம் என்றழைக்கப்படும். இதன் அடிப்படையில் பிரம்மம் சிருஷ்டியாக அவதாரம் ஆகியிருக்கிறது.
=============

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக