ஞாயிறு, 3 டிசம்பர், 2017

டி எம் கிருஷ்ணாவின் பித்துக்குளித் தனங்கள்!
------------------------------------------------------------------------------------
1) தமிழகத்தின் சிறந்த கர்நாடக இசை மேதைகளில்
ஒருவர் டி எம் கிருஷ்ணா. இன்று கர்நாடக இசையில்
கோலோச்சும் சஞ்சய் சுப்பிரமணியன் இவரை
விட இசை மேதைமையில் அதிக உயரத்தில்
இருப்பவர்.

2) டி எம் கிருஷ்ணா தன்னை ஒரு இடதுசாரியாக
நினைத்துக் கொண்டிருப்பவர். அதாவது
தமிழக இந்தியப் போலிக் கம்யூனிஸ்டுகள்,
போலி இடதுசாரிகளே இவரின் ஆதர்சம்.

3) தா பாண்டியன், ஜி ராமகிருஷ்ணன் வகையறாக்களை
புரட்சியாளராகக் கருதுபவர் கிருஷ்ணா.

4) இதன் விளைவாக பல்வேறு போலி இடதுசாரிப்
பித்துக்குளித்தனங்களை சுவீகரித்துக்
கொண்டிருப்பவர் டி எம் கிருஷ்ணா.

5) டி வி எஸ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த, பெரும்
கோடீஸ்வரரான இவரை இடதுசாரிப்
புரட்சியாளராக மக்கள் அங்கீகரிக்க வேண்டுமாம்.

6) அதற்காக இவர் செய்யும் மூடத்தனங்கள்
அனைத்தும் விதூஷகத் தன்மை(clownish) வாய்ந்தவை.

7) கர்நாடக இசை பாமர மக்களுக்குப் புரியவில்லையாம்!
இவரின் ஆதங்கம் இது.

8) ஒய் திஸ் கொலவெரி கொலவெரிடி பாட்டு
எட்டுக்கோடி தமிழனுக்கும் புரியும். அது போல
தியாகராஜரின் எந்தரோ மஹானுபாவுலுவும்
நகுமோமுவும் புரியுமா?

8) பீத்தோவனின் ஐந்தாம் சிம்பனி எட்டுக் கோடித்
தமிழரில் எத்தனை பேருக்குப் புரியும்? அதைக்
கேட்டால் மகிழ்ச்சி அடைய வேண்டுமெனில்
அதற்கு இசை ஞானம் அவசியம்.

9) கர்நாடக இசையும் அப்படித்தான். ஏன் வட இந்திய
இந்துஸ்தானி இசையும் அப்படித்தான். அவற்றைக்
கேட்டு மகிழ இசை ஞானம் அவசியம்.

10) இசையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் அப்படியே.
அந்த அந்தத் துறை சார்ந்த ஞானம் இருந்தால்
மட்டுமே, அத்துறைகளின் சிறப்பு பிடிபடும்.

11) இயற்பியலில் குவான்டம் தியரி வந்து 100 ஆண்டுகள்
ஆகின்றன. எட்டுக் கோடித் தமிழர்களில், ஏன், 130 கோடி
இந்தியர்களை எத்தனை பேருக்கு குவான்டம் தியரி
தெரியும்?

12) குவாண்டம் தியரி மக்களுக்குப் புரியவில்லை
என்பதற்காக, அதைத் தூக்கி குப்பையில் போட
முடியுமா? போட்டால் உலகம் இயங்குமா?

13) a ப்ளஸ் b ஹோல் ஸ்கொயர் 99.99 சதவீதம்
பேருக்குப் புரியவில்லை என்பதற்காக, கணிதத்தை
என்ன செய்யலாம், கிருஷ்ணா அவர்களே!
*********************************************************
    


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக