திங்கள், 6 டிசம்பர், 2021

மானுடம் வென்றதம்மா!
--------------------------------------
நிலவைச் சுற்றி வருதல். நிலவில் தரையிறங்குதல்,
நிலவில் நடத்தல் இம்மூன்றுமே சந்திரயான்-2.

22 ஜூலை 2019ல் விண்ணில் ஏறிய சந்திரயான்-2
செப்டம்பர் 7ல் நிலவில்  மென்மையாகத் தரையிறங்கும்.

நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி படாத நிழல் 
பிரதேசத்தில் தண்ணீரின் இருப்பை இது ஆராயும்.   

பெண் விஞ்ஞானிகளின் பொறுப்பில் சந்திரயான்-2
வனிதா முத்தையா திட்ட இயக்குனர்:
ரித்து கரிதால் மிஷன் இயக்குனர்!

கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் திரைப்படத்தின்
செலவை விட சந்திரயான்-2வின்
செலவு ரூ 50 கோடி குறைவு!  

சந்திரயான்-2 நம் நாட்டின் பெருமை!
மற்ற நாடுகளின் பொறாமை!!

நியூட்டன் அறிவியல் மன்றம்
அறிவியல் பரப்புதலின் அர்ப்பணிப்பு!
தலைமை: பி இளங்கோ சுப்பிரமணியன்
ilangophysics@gmail.com
அலைபேசி: 94442 30176.    


இந்தியாவின் சதுரங்கத் தந்தை
விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்னும்
பாரத ரத்னா வழங்கவில்லை என்பதற்காக
மோடி அரசு நாண வேண்டும்!

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்
1970களில், மானுவல் ஆரன் என்பவர்தான்
இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க வீரர்.
தமிழரான இவர் நெல்லை மாவட்டத்துக்காரர்.

இவர் ஒரு கிராண்ட் மாஸ்டர் அல்லர். இவர் வெறும்
சர்வதேச மாஸ்டர் (IM International Master) மட்டுமே.

இந்தியாவில் சதுரங்கம் என்பது மிகவும்
தாழ் நிலையில்தான் இருந்தது. ஆனந்த்தான்
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். இன்று
இந்தியாவில் கணக்கற்ற கிராண்ட் மாஸ்டர்கள்
வந்து விட்டனர். இதற்கெல்லாம் மூல காரணமாகவும்
பெரும் ஆதர்சமாகவும் இருந்தவர் ஆனந்த்.

டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்கியதில்
எமக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் டெண்டுல்கரை
விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த
ஆனந்தைப் புறக்கணிப்பது சரியல்ல.

சதுரங்கம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர்
அறிவியல் ஒளி முந்தைய இதழ் ஏதோ ஒன்றில்
நான் எழுதிய சதுரங்கம் என்ற கட்டுரையைப்
படிக்கலாம்.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 முண்டங்கள்
பெரிய இடத்தில் அதாவது அதிகார மையத்தில்
உள்ளன. ஆனால் எந்த முண்டமாவது ஆனந்துக்கு
குரல் கொடுத்ததா? இல்லை. சதுரங்கம் என்றால்
என்ன என்றே தெரியாத தற்குறி முண்டங்கள்
அவர்கள். சரி, எந்த வட இந்திய முண்டமாவது குரல்
கொடுத்ததா? இல்லை. மொத்தம் 543 முண்டங்கள்!
புழுவினும் இழிந்த முண்டங்கள்!


டெண்டுல்கர் என்ன 90 வயதுக் கிழவரா?
அவருக்கு பாரத ரத்னா  வழங்கும்போது 
அவரின் வயது என்ன? எனவே வயது அல்ல
பிரச்சினை.

வயது குறைந்த பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு
நோபல் பரிசே வழங்கப் பட்டுள்ளதே!


டெண்டுல்கரை விட ஆனந்த் மூன்று வயது மூத்தவர்.


--------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏட்டில் 2018ல் வெளிவந்த
சதுரங்கம் பற்றிய என் கட்டுரையில் இருந்து
சில பத்திகள்! இன்னும் வரும்!
 ----------------------------------------------------------------
படத்தில்:
லெனின் அலெக்சாண்டர் பக்தனோவ் என்பவருடன்
சதுரங்கம்  விளையாடும் காட்சி.
அருகில் மாக்சிம் கார்க்கி!

தற்போது கிலோகிராம் என்பது மாக்ஸ் பிளாங்க்கின்
மாறிலியின் (Planck's constant) அடிப்படையில்
வரையறுக்கப் பட்டுள்ளது. XI Physicsல் முதல் பாடமே
அன்றும் இன்றும் Units and measurementsதான்.

இந்தப் புதிய வரையறை இன்னும் பாடப்
புத்தகங்களில்  கொண்டுவரப் படவில்லை.

ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன். எமது பதிவுகள்
IQ > 110 உள்ளவர்களுக்காக மட்டுமே எழுதப் படுவது.


சதுரங்கம் என்பது கணிதம். அது அறிவியல்.
அது IQ குறைந்த, புழுவினும் இழிந்த மூடர்களின்
அறிவுக்குப் புலப்படாதது.
உங்களின் அறிவின் வரம்புக்குள் அடங்காத
விஷயங்களில் கருத்துச்  சொல்ல வேண்டாம்.

குட்டி முதலாளித்துவ அற்பப் புழுக்கள்
தங்களின் அறியாமையை வெளிப்படுத்த இங்கு
அனுமதி இல்லை.


அறிவொளி பழனிச்சாமி

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு இதுவரை இருந்த
மத்திய அரசுகள் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண்
ஆகிய விருதுகளை பல்வேறு காலக்கட்டங்களில்
வழங்கி உள்ளன. பாரத ரத்னா மட்டுமே இன்னும்
வழங்கப் படாமல் உள்ளது. அதை வழங்குமாறு
நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.

1987ல் பத்மஸ்ரீ
2000ல் பத்மபூஷண்
2008ல் பத்மவிபூஷண்
என்று ஆனந்த்துக்கு விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே மோடி அரசு பாரதரத்னா விருதை வழங்க
வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.
டாக்டர் மன்மோகன் சிங் அரசு ஆனந்த்துக்கு
பத்மவிபூஷண் விருதை வழங்கியது, இப்போது
மோடி அரசின் முறை. விருது வழங்குவது மோடி அரசின் கடமை.

எத

உலகின் எந்த சதுரங்க வீரருக்கும்
ஆனந்துக்கு நிகரான அனுபவம் சதுரங்கத்தில் இல்லை.
டெண்டுல்கருக்கு பாரதரத்னா வழங்கும்போது
அவருக்கு என்ன பெரிய அனுபவம் இருந்தது?
கிரிக்கெட் ஆட்டத் திறன் மட்டும்தானே இருந்தது!
-------------------------------
 
  
 



  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக