வெள்ளி, 17 டிசம்பர், 2021

 தேசிய கீதம் பாடுவது பற்றிய சர்ச்சையும் 

கேரளா பினராயி விஜயன் அரசின் 

உறுதிமிக்க நடவடிக்கையும்!

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2016ல் நாடு 

முழுவதும் ஒரு சர்ச்சை எழுந்தது. தேசிய 

கீதம் பாட மாட்டோம் என்றும் தேசிய கீதம் 

இசைக்கப் படும்போது அதற்கு மரியாதை 

செலுத்த மாட்டோம் என்றும் சில சமூக 

விரோதிகள் அறிவித்தார்கள். இது சர்ச்சை 

ஆனது. தொடர்ந்து விஷயம் உச்சநீதிமன்றம் 

வரை போனது.


2016ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது.

அதன்படி சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் 

பாடப்பட வேண்டும் என்றது அத்தீர்ப்பு.


தீர்ப்பு வந்த பிறகும், சிலர் தேசிய கீதத்திற்கு 

வேண்டுமென்றே மரியாதை அளிக்காமல்

அநாகரிகமாக நடந்து கொண்டனர்.


இத்தகைய இழிந்த நபர்கள் தமிழ்நாட்டில் 

அதிகம். தேசிய கீதமாவது, மயிராவது 

என்று ஆணவத்துடன் கொக்கரித்த இந்தச் 

சமூக விரோதிகளை அன்றைய எடப்பாடி 

அரசு யாரும் செய்யவில்லை. இந்தச் 

செயலின்மைக்கு எடப்பாடி ஒரு தற்குறி 

என்பது ஒரு காரணம். அதிமுக அரசு 

மானங்கெட்ட அரசு என்பதும் அது 

impotent அரசு என்பதும் அடுத்த 

காரணம். நிற்க.


கேரளத்தில் என்ன நிலைமை?

பூர்ஷ்வா லிபரல்கள், அனார்க்கிஸ்டுகள்,

பின்நவீனத்துவக் கசடுகள் இப்படிப் பலரும் 

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்ய 

மாட்டோம் என்று திமிர் காட்டினார்.


பினராயி விஜயன் என்ன செய்தார்?

சமூக விரோதிகளின் திமிரை அடக்கினார்.

ஒரே வாரத்தில் 12 பேரைக் கைது செய்தார்.

13ஆவதாக ஒரு முக்கிய எழுத்தாளரையும் 

(கமல் சவரா) கைது செய்தார். இதில் 

ஒரு விசேஷம் என்ன தெரியுமா?

 

எழுத்தாளர் கமல் சவராவைக் கைது செய்த 

பினராயி விஜயன் அவர் மீது 124Aஐயும்

பிரயோகித்தார். 124A என்பது SEDITION charge,


Sedition எதற்கு? தேசிய கீதத்திற்கு மரியாதை 

செலுத்தாமல் இருந்ததைப் பற்றி  எழுதியதற்கு!


இது நாடு முழுவதும் பெரும் கண்டனங்களைக் 

கொண்டு வந்தது. எனவே 124Aஐ ரத்து 

செய்தார் பினராயி விஜயன்.


தமிழ்நாட்டில் இப்படி ஒன்று நடக்க முடியுமா?

யாராவது ஒரு எழுத்தாளர் மீது செடிஷன் 

சார்ஜ் (124A) போட முடியுமா?


ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ 

அப்படி நடந்து கொண்டது பினராயி விஜயன் 

அரசு. இதன் விளைவாக குட்டி முதலாளித்துவம் 

வாலைச் சுருட்டிக் கொண்டு கிடந்தது.


பினராயி விஜயன் பாசிசத் தன்மையுடன்தான் 

நடந்து கொண்டார். மிகவும் திமிராகத்தான் 

நடந்து கொண்டார். ஆனாலும் அவருக்கு 

இவ்விஷயத்தில் எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை.


தமிழ்நாட்டில் எந்த ஒரு போலி முற்போக்கானது 

பினராயி விஜயனை பாசிஸ்டு என்றானா? இல்லை.

போலி முற்போக்கை விடுங்கள். போலி 

மாவோயிஸ்டு எவனாவது பினராயி விஜயனை 

பாசிஸ்டு என்று சொன்னானா? இல்லை.


இதன் பொருள் என்ன? பினராயி விஜயனின் 

நடவடிக்கைகளை மக்கள் சரியானது என்று 

ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுதானே!

****************************************************


 


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக