சனி, 11 டிசம்பர், 2021

 மாரிதாசை UAPA சட்டத்தில்

கைது செய்திருக்க வேண்டும்!
மாவோயிஸ்ட் விவேக்கை
UAPAவில் கைது செய்யம்போது
மாரிதாசை ஏன் UAPAவில் கைது செய்யவில்லை?
----------------------------------------------
யூடியூப் சானல் ஒன்றை நடத்தி வருகிறார்
மதுரை திரு மாரிதாஸ் என்பவர். இவர்
தமது டுவிட்டரில் தெரிவித்த ஒரு கருத்துக்காக
திமுக ஐடி பிரிவு பொறுப்பாளர் காவல்
துறையில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின்மீது காவல்துறை நடவடிக்கை
எடுத்து திரு மாரிதாஸ் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
124A சட்டப்பிரிவின் கீழும் அவர் மீது வழக்குப்
போடப்பட்டு உள்ளது.
அவர் எழுதிய டுவீட் குறிப்பைப் படித்துப்
பார்த்தேன். மூன்று வாக்கியங்களால் ஆன
டுவீட் அது. அதில் SEDITION CHARGEக்கு
எதுவுமே இல்லை.
திரு மாரிதாஸ் எழுதிய டுவீட் SEDITIONல்
வருமென்றால், எட்டாங்கிளாஸ் பையன்
வீட்டுப் பாடமாக எழுதிக் கொண்டு செல்லும்
கட்டுரையின்மீதும்கூட SEDITION CHARGE
போட முடியும்.
Arbitrariness to the core!
நீதிமன்றத்தில் sedition charge நிற்கவே நிற்காது
என்று கருதுகிறேன் (merits of the caseன்
அடிப்படையில் வழக்கைப் பரிசீலித்தால்).
இந்த வழக்கில் FIR will be quashed என்று கருதுகிறேன்.
சுதந்திரம் என்பது பிரிவுபடாதது
(Freedom is indivisible)என்று கூறியுள்ளார்
காரல் மார்க்ஸ்.(Freedom is indivisible).
இதன் பொருள் பலருக்கும் தெரியாது.
எனினும் அதை விளக்கிச் சொல்லும் பொருட்டு
கோனார் நோட்ஸ் போட இப்போது நேரமில்லை.
மார்க்ஸ் சொன்னதன் பொருள் என்ன?
சிறையில் அடைக்கப்பட்ட மாரிதாசுக்கும்
புகார் கொடுத்த திமுக ஐடி பிரிவு
பொறுப்பாளருக்கும் ஒரே சுதந்திரம்தான்.
இருவரின் சுதந்திரமும் பிரிவுபடுவதில்லை.
அதாவது மாரிதாஸ் சுதந்திரமாக இருந்தால்தான்
ஐ டி பிரிவு பொறுப்பாளரும் சுதந்திரமாக
இருக்க இயலும்.
இயற்பியல் படித்தவர்கள் symmetry பற்றியும்
symmetry breaking பற்றியும் படித்திருக்கக் கூடும்.
சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் symmetry breaking
இருக்கக் கூடாது என்கிறார் மார்க்ஸ். நிற்க.
124A பிரிவில் ஒருவரைக் கைது செய்வதற்குரிய
மிகத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை
உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு,தேனாம்பேட்டை
தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம்
முன்பு ஒரு தொழிற்சங்கப் போராட்டம்
நடத்தியபோது எங்கள் மீது
(NFTE, AIBEA, AITUC,AICCTU etc சங்கங்களைச்
சேர்ந்த சுமார் 100 பேர்) 124A சட்டப்பிரிவைப்
பிரயோகித்து வழக்குப் போட்டான் அந்த
இன்ஸ்பெக்டர். பின்னர் சைதாப்பேட்டை
மாஜிஸ்திரேட் எங்கள் அனைவரையும் சொந்த
ஜாமீனில் விடுதலை செய்தார் என்பது வரலாறு.
124A சட்டப் பிரிவைப் பிரயோகிப்பதற்கான மிகத்
தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளும் உரிய
கட்டுப்பாடுகளும் இருந்தால், உதாரணமாக
மாவட்ட கலெக்டர் அனுமதியுடன்தான் 124A
போட முடியும் என்று இருந்தால், அந்த இன்ஸ்பெக்டர்
எங்கள் மீது 124A போட்டிருக்க முடியுமா?
இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் திரு மாரிதாசின்
கைதை நான் எதிர்க்கிறேன் என்று புரிந்து
கொள்ளக் கூடும். அப்படிப் புரிந்து கொண்டால்
அது பிறழ்புரிதல் ஆகும்.
திரு மாரிதாசின் கைதையும் அவர் சிறையில்
அடைக்கப் பட்டு இருப்பதையும் நான்
வரவேற்கிறேன். அரசியலில் எப்போதுமே
நிகழ்வுகள் ஒரு வட்டச் சுழற்சியைக்
கொண்டிருக்கும். abc என்ற ஆர்டர்
இப்போது இருந்தால், அடுத்து bca என்றும்
அதற்கடுத்து cab என்றும் மாறும்.
10ஆம் வகுப்பு CBSE கணக்குப் பாடப்
புத்தகத்தில் உள்ள CYCLIC FACTORIZATION
பற்றிப் படிக்கவும். (TN state boardன்
சமச்சீர் கல்விப் பாடப் புத்தகத்தில்
cyclic factorization கிடையாது)
இந்த வட்டச் சுழற்சி இருப்பதால், இன்று
சிறையில் அடைக்கப் பட்டவர்கள் நாளை
சிறையில் அடைப்பவர்களாக மாறுவார்கள்.
நிலப்பிரபுத்துவக் கூறுகளான பழிவாங்கும்
கூறுகளை உள்ளடக்கிய பூர்ஷ்வா அரசியலில்
வட்டச் சுழற்சி உத்தரவாதம் செய்யப்பட்டு
உள்ளது.ஒரு தாரணத்தைப் பார்ப்போம்.
ப சிதம்பரத்திடம் அதிகாரம் இருந்தது; வரம்பற்ற
அதிகாரம். கூடவே தனது அதிகாரத்தைப்
பிரயோகித்துக் காட்ட வேண்டும் என்னும்
எண்ணமும் அவரிடம் மேலோங்கி இருந்தது.
எனவே in exercise of the powers conferred under
section...... என்று கூறி அமித்ஷாவைச் சிறையில்
அடைத்தார் சிதம்பரம்.
அதிகாரமும் பதவியும் யார் எவருக்கும் சாசுவதம்
அல்ல. காலம் மாறியது. ப சிதம்பரம் அதிகாரம்
இழந்தார். அமித்ஷா அதிகாரம் பெற்றார்.
விளைவு! வட்டச் சுழற்சி நிகழ்ந்தது.
I, the undersigned, in exercise of the powers
conferred under section such and such ......
என்று கூறி சிதம்பரத்தைச் சிறையில்
அடைத்தார் அமித்ஷா.
இந்திய அரசியலிலே மிக அதிகமான IQ
உடையவர் ப சிதம்பரம். ஆனால் என்ன
பிரயோஜனம்? சிதம்பரத்தை விட கணிசமாக
IQ குறைந்த அமித்ஷா, சிதம்பரத்தை
உள்ளே வைத்து விட்டார்.
இதில் எப்போதுமே, வட்டச் சுழற்சியில்
இரண்டாவதாக வருபவர்கள் பழிவாங்கும்
உணர்வுடன் மிகுந்த வன்மத்துடன் செயல்படுவது
நிலப்பிரபுத்துவக் கூறுகளைக் கொண்ட
பூர்ஷ்வா அரசியலின் பண்பாக இருக்கிறது.
திஹார் சிறையில் ஆறு மாத காலம் களி தின்ற
பிறகு வெளிவந்த சிதம்பரம் தம்மிடம் இருந்த
சகலத்தையும் இழந்து வெளியே வந்தார்.
அவரின் மொத்த அரசியல் வாழ்வும்
அஸ்தமனம் ஆனது.
மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் காலஹ சர்வம்!
........ஆதி சங்கரர், பஜ கோவிந்தம்........
---------------------------------------------------------
பின்குறிப்பு:
UAPA சட்டத்தின்கீழ் மாரிதாசைக் கைது
செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
விவேக் என்னும் மாவோயிஸ்ட் தோழர் UAPA
சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாசாவது சொந்தக் கருத்தை
எழுதியமைக்காக 124Aயின் தாக்குதலை
எதிர்கொண்டுள்ளார். விவேக், பாவம்,
சொந்தக் கருத்து எதையும் எழுதவில்லை.
ஒரு ஆங்கில ஏட்டில் வந்த செய்தியை
மொழிபெயர்த்துப் போட்டார்; அவ்வளவுதான்!
UAPAவில் உள்ளே வைத்து விட்டார்கள்.
பின்குறிப்பு-2
கருத்துரிமை, தாலியறுத்த உரிமை
என்றெல்லாம் எவனாவது HYPOCRITE
பேசினாலோ, எவனாவது இங்கு எதிர்மறையாக
கமெண்ட் போட்டாலோ அவர்களின்
முதுகுத் தொலி உரிக்கப் படும்.
******************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக