புதன், 8 டிசம்பர், 2021

 உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் முடிவை 

முன்கூட்டியே அறிவிக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------

இன்று (7.12.2021) நடைபெற்ற உலக சதுரங்க 

சாம்பியன் போட்டியின் 99ஆம் ஆட்டத்தில் 

கார்ல்சன் வென்றார். நெப்போ தோல்வி அடைந்தார்.


புள்ளிகள்: 

கார்ல்சன் = 6.

நெப்போ = 3. 

இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. 

மொத்தம் 14 ஆட்டங்கள். இதில் 7.5 பெற்றால் வெற்றி!

            

முதல் 5 ஆட்டம் டிரா. 6ஆவது ஆட்டம் 

மாரத்தான் ஆட்டமாக ஏழே முக்கால் மணி 

நேரம் நீடித்து 136 நகர்த்தல்களில் முடிந்தது.

அதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.


7ஆம் ஆட்டம் டிரா. 8, 9 ஆட்டங்களில் 

கார்ல்சன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.. 

இப்போது 9ஆம் ஆட்டத்தின் இறுதியில் 

புள்ளிகள் பின்வருமாறு::-

கார்ல்சன் = 6.

நெப்போ = 3.


மொத்தம் 14 ஆட்டங்களில் 9 ஆட்டம் 

முடிந்து விட்டது. எஞ்சி இருப்பது 

5 ஆட்டம் மட்டுமே. 


7.5 புள்ளிகள் எடுத்தால் வெற்றி.

கார்ல்சன் இன்னும் 3 ஆட்டங்களை 

டிரா செய்தால் போதும். அவர் வெற்றி 

(6+1.5 = 7.5)அடைந்து விடுவார்.


நெப்போ ஜெயிக்க வேண்டுமென்றால், 

அவர் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களில் 

1ல் டிரா செய்து 4ல் ஜெயிக்க வேண்டும்.

அப்போது அவர் 7.5 புள்ளிகள் 

பெற்று சாம்பியன் ஆகலாம்.


இதற்கு வாய்ப்பே இல்லை. உலகப் பேரதிசயம் 

நடந்தாலும் நடக்கலாமே  தவிர,நெப்போவால்  

4 ஆட்டங்களில் கார்ல்சனைத் தோற்கடிப்பது 

என்பதற்கு சாத்தியம் இல்லை.


ஆக மீண்டும் கார்ல்சனே வெற்றி பெறுவார்!

உலக சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் 

கொள்வார். இதுதான் துபாயில் நடைபெற்று வரும் 

உலக சதுரங்க சாம்பியன் போட்டி 2020ன் முடிவு.


கார்ல்சனுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.


நியூட்டன் அறிவியல் மன்றம் மிகுந்த துணிச்சலுடனும் 

அளவு கடந்த மதிநுட்பத்துடனும் போட்டியின் 

முடிவை முன்கூட்டியே அறிவிக்கிறது.

இதுதான் முடிவு! நாங்கள் எதை அறிவிக்கிறோமோ 

அதுதான் முடிவு! எமது தீர்க்க தரிசனம் 

பொய்த்ததே இல்லை! 2013ல் ஆனந்த்-கார்ல்சன் 

போட்டியின்போதும் கார்ளசனே வெற்றி 

பெறுவார் என்பதை முன்கூட்டியே 

அறிவித்தது நாங்களே!


மனிதகுல வரலாற்றின் அளவிடற்கரிய 

பெருந் தீர்க்க தரிசனத்துடன் முடிவுகளை 

முன்கூட்டியே கணித்து அறிவிக்கிறோம் நாங்கள்!

நாங்கள் இவ்வாறு முன்கூட்டிக் கணித்ததெல்லாம் 

பின்னர் மெய்ப்படும்போது வானில் இருந்து 

வானவர்களும் தேவதூதர்களும் இடைவிடாமல் 

பூச்சொரிவது வாடிக்கையாக உள்ளது.

 

எனவே முடிவு தெரிந்ததும் ஒரு அபூர்வ 

வானியல் நிகழ்வு, அதாவது விண்ணோர்கள் 

பூச்சொரியும் நிகழ்வு ஏற்படும். அது குறித்து 

விளக்கமளிக்க Astrophysicists திணறுவார்கள்.

ஆனால் நியூட்டன் அறிவியல் மன்றம் அதற்குச் 

சரியான விடையளிக்கும்.  

   **************************************************


   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக