புதன், 15 டிசம்பர், 2021

 அரசு ஆதரவாளர் மாரிதாஸ்!

----------------------------------------------

பாஜக ஆதரவாளரும் ஒரு யூடியூப் சானலை 

நடத்தி வருபவருமான திரு மாரிதாஸ் மீது 

திமுக அரசால் போடப்பட்ட தேசத்துரோக 

வழக்கை (sedition charge etc) மதுரை 

உயர்நீதிமன்றக் கிளை இன்று (14.12.2021)

தள்ளுபடி செய்தது.


திரு மாரிதாஸ் தீவிரமான ஒரு அரசு ஆதரவாளர் 

(staunch supporter of the state) . இங்கும் இந்தக் 

கட்டுரை முழுவதும்  அரசு (state) என்பது 

அதற்குரிய கறாரான மார்க்சிய லெனினிய 

அர்த்தத்தில் பிரயோகிக்கப் படுகிறது.


அரசு என்பதன் மார்க்சிய லெனினிய அர்த்தம் 

என்ன என்று தெரியாதவர்கள் அருள்கூர்ந்து 

இதற்குமேல் இந்தப் பதிவைப் படிக்க 

வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.


ஓர் அரசு ஆதரவாளர் மீது, அரசின் கொள்கைகளை 

நியாயப்படுத்திப் பரப்புரை செய்கிறவர் மீது 

124A  சட்டப் பிரிவைப் பிரயோகிப்பது

கேலிக்கூத்தாக முடியும். எந்த நீதிமன்றத்திலும் 

அரசு ஆதரவாளர்கள் மீதான 124Aஐ sedition chargeஐ   

நிரூபிக்க இயலாது.


124A என்பது  அரசைத் தீவிரமாக எதிர்ப்பவர்கள் மீது     

பிரயோகிக்க உண்டாக்கப்பட்ட சட்டப் பிரிவு.

அதை அரசு ஆதரவாளர் மீது பிர்யோகிப்பது

புத்தி பேதலித்த நிலையையே வெளிக்காட்டும்.


எனவே நீதிமன்றம் எடுத்த எடுப்பிலேயே 

திரு மாரிதாஸ் மீதான sedition chargeஐ 

நிராகரித்து விட்டது. அவர் மீதான வழக்கே 

ஒரு கேலிக்கூத்து என்றும் நீதியரசர் தமது 

தீர்ப்பில் தெளிவு படுத்தியுள்ளார்.


இனி வருங்காலத்தில் இந்தத் தீர்ப்பானது 

மிகவும் extensiveஆக மேற்கோள் காட்டப்படும். 

இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தங்களுக்குச் 

சாதகமான தீர்ப்பைப் பெற வழக்கறிஞர்கள் 

முற்படுவார்கள்.


திரு மாரிதாஸ் ஒரு பொறியாளர். பொறியியலில் 

முதுநிலை (master degree in engineering) 

படித்துள்ளார். அதாவது M.E பட்டம் 

பெற்றுள்ளார். ஒரு தனியார் பொறியியல் 

கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்த்து 

பின் அதை உதறிவிட்டு அரசியலில் 

குதித்துள்ளார்.He never challenged the state but defended it.    


அட மூடர்களே,

மாவோயிஸ்ட் கவிஞர் வரவரராவ் மீது  போடப்பட்ட  

sedition chargeஐ மாரிதாஸ் மீது போடுவீர்களாடா!


இந்நிகழ்வின் நிகர விளைவு திமுக அரசு 

மூக்கறுபட்டதுதான்!

*******************************************************  

       



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக