செவ்வாய், 21 டிசம்பர், 2021

 பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்!

உணவில் நஞ்சு காரணமாக 

பெண் தொழிலாளர்கள் அவதியும் 

நிர்வாகத்தின் மெத்தனமும்!

--------------------------------------------------------------

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில்

Foxconn என்னும் பன்னாட்டு நிறுவனம் உள்ளது.

கணினி சார்ந்த தொழிற்சாலை இங்குள்ளது.

பெண்தொழிலாளர் உட்பட  இதில் பல ஆயிரம் பேர் 

வேலை செய்கின்றனர். 


டிசம்பர் 18 முதல் இங்கு போராட்டம் நடைபெற்று 

வருகிறது. பெண் தொழிலாளர்கள் உண்ட உணவு  

நச்சுத்தன்மை அடைந்து நூற்றுக் கணக்கில் 

தொழிலாளர்கள் மருத்துவ மனைகளில்

அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் 

தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் 

Foxconn நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் 

கண்டித்தும் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் 

திரண்டு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை 

நடத்தினர்.


இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை 

பெற்று வந்த 8 பெண் தொழிலாளர்கள் இறந்து 

விட்டதாக ஒரு செய்தி வந்தது. இது போராட்டத்தை 

மேலும் தீவிரப் படுத்தியது.சாலை மறியலில் 

ஈடுபட்டனர் பெண் தொழிலாளர்கள்.


பின்னர் எவரும் இறக்கவில்லை என்ற உண்மை 

தெரிந்தது. தற்போது போராட்டம் முடிவுக்கு 

வந்துள்ளது.


இந்த ஒட்டு மொத்த விவகாரத்திற்கும் முழுப் பொறுப்பு 

Foxconn நிர்வாகமே. உணவில் நஞ்சு என்ற விஷயத்தை 

மூடி மறைத்தும் சிகிச்சை பெற்று வருவோர் பற்றிய 

விவரத்தை வெளியே கூறாமல் மறைத்தும் 

பிரச்சினையைப் பெரிதாகியது Foxconn நிர்வாகம்.


உண்மைகள் மறைக்கப்படும்போது வதந்திகள் 

கிளம்புவது இயற்கையே. நிர்வாகம் 

தொழிலாளர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகக் 

கருதி நடத்தி இருக்க வேண்டும் 

(should have taken the workers into confidence).


உணவு நஞ்சானது ஒரு விபத்து என்று எடுத்துக் 

கொண்டாலும் அதன் பின்னரான விஷயங்களை 

நிர்வாகம் அணுகிய விதமானது criminal negligence 

of duty ஆகும்.


Foxconn நிறுவனத்தின் FM அதிகாரியோ அல்லது 

HR அதிகாரியோ ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில்

தோன்றி தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று

வரும் விவரங்களை மக்கள் அறிந்திடுமாறு 

தெரிவித்தால் வதந்திகள் தோன்ற முடியுமா?


இதைச் செய்ய Foxconn நிறுவனத்தை யார் 

தடுத்தது? முட்டாள்களே, இது எலக்ட்ரானிக் 

உலகமடா. 


Foxconn நிறுவனத்தின் மேலாளரையும் அதன் 

HR அதிகாரியையும் CRIMINAL NEGLIGENCE 

OF DUTY என்ற குற்றச்சாட்டில் தமிழக அரசு 

கைது செய்திருக்க வேண்டும். ஆனால் 

அவர்கள் கைது செய்யப் படவில்லை.

இது தமிழக அரசின் நியாயத் தராசு

சாய்ந்து கிடப்பதை உணர்த்துகிறது.

************************************************

 

 


             



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக