வெள்ளி, 17 டிசம்பர், 2021

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை

கட்டாயமாக்கிய திமுக அரசின் 

உத்தரவை வரவேற்கிறோம்!

------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------- 

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் 

நீராரும் கடலுடுத்த என்ற பாடலை 

தமிழ்தாய் வாழ்த்தாக அங்கீகரித்து 

பொது நிகழ்வுகளில் கட்டாயம் பாடப்பட 

வேண்டும் என்றும், பாடும்போது

அனைவரும் எழுந்து நின்று மரியாதை 

செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு 

உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவை நியூட்டன் அறிவியல் மன்றம் 

முழுமனதாக வரவேற்கிறது.


தமிழ்நாடு இன்றுள்ள சூழலில், இப்பாடலைப் 

பாடுவதைக் கட்டாயம் ஆக்குவது மிகவும் 

தேவையான ஒன்று.


முன்னெப்போதையும் விட. தமிழ்நாட்டிலும் 

இந்தியாவிலும் பின்வரும் மூன்று 

கடைந்தெடுத்த பிற்போக்குத் தத்துவங்கள்

மக்களிடம் செல்வாக்குப் பெற்று, சமூகத்தைச் 

சீரழித்துக் கொண்டிருக்கின்றன.


அவை:::

1) பின்நவீனத்துவம் 

2) அராஜகவாதம் எனப்படும் அனார்க்கிஸம் 

3) பூர்ஷ்வா தாராளவாதம்.


தமிழ்த்தாய் வாழ்த்தையோ ( நீராரும் கடலுடுத்த)

தேசிய கீதத்தையோ (ஜன கண மன)

ஏற்காமல், மதிக்காமல், அவை பாடப்படும்போது 

மரியாதை செலுத்தாமலும் 

சமூகத்தில் இருந்து விலகி நிற்கிற 

சமூக விரோதிகள் தமிழ்நாட்டில் அதிகம்.

இந்தியாவிலும் இவர்கள் பெருகி வருகிறார்கள்.


ஸ்டாலின் அவர்களின் இந்த உத்தரவு 

மேற்கூறிய சமூக விரோதிகளுக்கு 

ஒரு இடி. இது தேவை.


கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் அவர்களுக்கு 

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் என்ற ஒன்று 

உண்டு.


பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் 

பதறுகின்ற மனிதர்காள் 

பாரில் கடையர் எழுங்கள் 

வீறுகொண்டு தோழர்காள்!

என்று தொடரும் அப்பாடல் உலகின் முதல் 

சோஷலிச அரசான சோவியத் ஒன்றியத்தில் 

அன்று மக்கள் அனைவராலும் விரும்பிப் 

பாடப்பட்டது.  


மதிப்புக்குரிய ஸ்டாலின் அவர்கள் இந்த 

உத்தரவைப் பிறப்பித்ததை வரவேற்கிறோம்.

அத்துடன் அவர் கூடுதலாக ஒன்றும் 

செய்ய வேண்டும்.


தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மறுப்பவர்கள்,

பாடாதவர்கள், பாடப்படும்போது எழுந்து நின்று 

மரியாதை செய்யாதவர்கள் ஆகியோருக்கு 

தண்டனை வழங்கக்க் கூடிய ஒரு சட்டத்தை 

சட்ட மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இத்தகைய சட்டம் இல்லாமல் வெறும் உத்தரவு 

விரும்பிய பயனைத் தராது.


 ரூ 500 அபராதம் முதல் ஆறு மாதம் சிறை 

வரை தண்டனைகள் அமைய வேண்டும்.

இதை ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

****************************************************************

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் 

எழுதியதை யாரும் திருத்தவில்லை. அவர் 

எழுதிய பாயிரத்தில் இருந்து தேவையான 

வரைக்கும் எடுத்துக் கொண்டு அது 

தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கப் பட்டுள்ளது. 

இதெல்லாம் trivial matter. 



தெலுங்கரான ஈவெரா தமிழ் மீதான 

காழ்ப்புணர்ச்சியால் அவ்வாறு 

பேசி இருக்கிறார். அதை யாருமே 

பொருட்படுத்தவில்லையே!

ஒரு 50 ரூபாயை அவரிடம் கொடுத்து

அந்தப் பாடலை ஆதரித்துப் பேசச் 

சொன்னால், ஆதரித்திருக்கவும் 

செய்வார் அவர்.  


இப்போதும் அதே வரிகள் 

அப்படியேதான் உள்ளன.

மனோன்மணீயத்தின் textஐ 

யாரும் மாற்றவில்லை; மாற்றவும் 

இயலாது. பேராசிரியர் அ ச ஞான 

சம்பந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தை 

அன்று எதிர்க்கவில்லையே.

 

நெல்லையில் உள்ள சேப்டர் பள்ளி

நிர்வாகத்தையும் அப்பள்ளியை 

இயக்கம் கிறித்துவத் திருச்சபையையும்

வன்மையாக கண்டிக்கிறோம்.


தமிழக அரசே இப்பள்ளியை ஏற்று 

நடத்த வேண்டும்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக