வியாழன், 9 டிசம்பர், 2021

பிபின் ராவத் மரணம்! அஞ்சலி செலுத்துவோம்!

----------------------------------------------------------------------- 

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் 

தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் 

துணைவியார் மற்றும் 11 விமானப்படை/ராணுவ 

அதிகாரிகள் ஆகியோர் இன்று (08.12.2021)

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர் 

என்பது நெஞ்சைப் பிழியும் சோகம் ஆகும்.

மரணம் அடைந்த 13 பேருக்கும் அஞ்சலி 

செலுத்துவோமாக. எஞ்சியிருக்கும் ஒருவர் 

விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று 

விழைகிறோம்.

      

இந்தக் கோர விபத்து தமிழ்நாட்டில் நீலகிரி 

மாவட்டத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்து திறம்படப் 

பணியாற்றி பல்வேறு ஆக்கிரமிப்புகளை 

அகற்றிய இன்னசன்ட் திவ்யா சில நாட்களுக்கு 

முன்பதான் மாவட்ட கலெக்டர் பதவியில் 

இருந்து இடமாற்றல் செய்யப் பட்டிருந்தார்.


நீலகிரியோ கொடைக்கானலோ மலைப் 

பகுதிகளில் உயரமான கட்டிடம் கட்டுவதற்கு 

முன்னால், இந்திய விமானப் படையில் 

இருந்து NOC (No Objection Certificate) பெற 

வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு 

வர வேண்டும். அப்போதுதான் மலைப் 

பகுதிகளைப் பாதுகாக்க முடியும்.


உயரமான இடங்களில் ரிசார்ட் கட்டும்போது 

அந்த ரிஸார்ட்டுகளில் இருந்து கொண்டு, 

எப்போதுமே தாழ்ந்த உயரத்தில் பறக்கும் 

ஹெலிகாப்டர்களைக் கண்காணிக்க முடியும்.


நீலகிரி போன்ற ஏதேனும் ஒரு மலைப்பகுதியில் 

Location Aயில் ஒரு ரிசார்ட் இருக்கிறது என்று 

வைத்துக் கொள்வோம். இந்த ரிசார்ட் MSLல் 

(Mean Sea Level) இருந்து n மீட்டர் உயரத்தில் 

இருப்பதாகக் கொள்வோம். அதாவது 

altitude h (A) = n meter.   


இதே மலைப்பகுதியில், Location Bயில் உள்ள 

ஒரு ஹெலிபேடில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் 

புறப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 

இது MSLல் இருந்து முதலில் n மீட்டர் உயரத்திலும் 

அடுத்து n+5 மீட்டர் உயரத்திலும், பின்னர் 

n+10 மீட்டர் உயரத்திலும் பறப்பதாக 

வைத்துக் கொள்வோம். எனவே முதலில் இதன் 

altitude h (B) = n meter .


இப்போது altitude h (A) =  altitude h (B) = n meter. 

இதிலிருந்து இவ்விரண்டும் contours என்பது

உறுதியாகிறது.  


மலைப்பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் பறக்கும்போது 

அது பாதுகாப்பாகப் பார்க்க வேண்டுமெனில், அதற்கு 

எந்த ஒன்றும் (கட்டிடம் போன்றவை) ஒரு CONTOURஆக 

இருக்கக் கூடாது. 1 நாட்டிக்கல் மைல் அல்லது 

2 நாட்டிக்கல் மைல் தூரம் என்பது குறுகிய தூரமே.


இரண்டு காண்டூர்களுக்கு இடையில் 1 நாட்டிக்கல் 

மைல் தூரம் இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றை 

அணுக முடியும். அதாவது காண்டூர் A யில் இருந்து 

காண்டூர் Bக்கு ACCESS கிடைக்கும்.


இந்த நிலைமையில் காண்டூர் B ஒரு பறக்கும் 

ஹெலிகாப்டராக இருந்தால், காண்டூர் Aயில் இருந்து 

அதை யாரும் எவ்விதத்திலும் அணுக இயலாமல்

செய்ய வேண்டும். இதுவே பறக்கும் 

ஹெலிகாப்டர்களின்  பாதுகாப்பை உத்தரவாதம் 

செய்யும் ஒரே வழி. இதை NO CONTOUR THEORY என்று 

புரிந்து கொள்ளுங்கள்.


எதிர்காலத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களின் 

பாதுகாப்பை மேற்கூறிய முறையில் உத்தரவாதம் 

செய்ய வேண்டும்.

***************************************************  

       

       




      

          


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக