சனி, 21 ஆகஸ்ட், 2021

 பிரபுக்குலம் யார் யார் ?

பழைய பென்ஷனைக் கொண்டுவர முடியாதென 

திமுக அரசு திட்டவட்டம்! சில விளக்கங்கள்!  

-------------------------------------------------------------------

மனித வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில்

ஒரு சமூக அமைப்பு இருந்தது. அது புராதன 

கம்யூனிச அமைப்பு (primitive communist society) 

என்று அழைக்கப்பட்டது.  


இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்து 

விட்டால், அதன் பிறப்பு முதல் இறப்பு 

வரை அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவது 

அந்தச் சமூகத்தின் பொறுப்பு. இது அந்தச் 

சமூகத்தின் விதியாக (rule or law) இருந்து வந்தது. 


பின்னர் வந்த சமூக அமைப்புகளில் இந்த விதி 

கடைப்பிடிக்கப் படவில்லை. ஏனெனில் 

அவை சுரண்டல் அமைப்புகள். முதலாளித்துவ 

சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்ததுமே,

சுரண்டலுக்கு ஓர் ஆள் கிடைத்து விட்டதாக 

முதலாளித்துவம் மகிழ்ச்சி அடையும்.


ஆனால் கம்யூனிச சமுதாய அமைப்பில், ஒரு 

குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை 

அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்கு கம்யூனிச 

சமுதாயம் பொறுப்பேற்றுக் கொள்கிறது.


பென்ஷனையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான்

பார்க்க வேண்டும். பென்சன் என்பது உறுதியான 

சோஷலிஸத் தன்மை கொண்ட ஒரு சமூகப் 

பாதுகாப்பு இயக்கம்.


சோஷலிஸப் பண்பாட்டில் பென்ஷனுக்கு 

இடம் உண்டு.இதைப் புரிந்து கொள்ளும் 

அறிவுடைமை இல்லையெனில் பிறழ்புரிதல் 

நேரிடும். அது சோஷலிஸப் பண்பாட்டை 

அரசு முதலாளித்துவமாகக் கருதி மயங்கும்.


ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 

இரவு 10 மணி வரை, RI முதல் டெபுடி தாசில்தார், 

தாசில்தார், சப் கலெக்டர், கலெக்டர் என்று 

அத்தனை பேருக்கும் பதில் சொல்லி, கடும் 

அலைச்சலுக்கு ஆட்பட்டு, உடலும் மனமும்

களைத்து ராத்திரி 10 மணிக்கு வீட்டுக்கு வந்து 

30ஆந்தேதியன்று ரூ 20,000 சம்பளம் வாங்குகிற

ஒரு சாதாரண VAOஐ பிரபுக் குலம் என்று சொல்ல 

மூளையில் குஷ்டரோகம் பிடித்திருக்க வேண்டும். 

அரசு ஊழியர்கள் பாட்டாளி வர்க்கத்தின் 

உறுப்பினர்களே தவிர பிரபுக்குலம் அல்லர்.


இந்தியா ஒரு சோஷலிஸக் குடியரசு என்று 

அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார் 

இந்திரா காந்தி. சோஷலிஸக் குடியரசு என்றால் 

பென்சன் கொடுக்க வேண்டும். கொடுக்கச் சொல்லி 

இந்த நாட்டின் பாட்டாளி வர்க்கம் கேட்கும்.

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவக் 

குடிஅரசு என்று எழுதி வைத்துக் கொண்ட பிறகு 

பென்ஷன் இல்லையென்று சொல்லுங்கள். நாங்கள் 

ஏற்றுக் கொள்கிறோம்.


கல்வி அறிவற்ற புழுத்த தற்குறிகளான 

அரசியல்வாதிகளும் கூத்தாடிகளுமே இந்தியாவில் 

பிரபுக் குலமாக இருக்கிறார்கள். ஒரு படத்தில் 

நடிக்க சம்பளமாக ரூ 50 கோடி வாங்குகிறான் 

புழுத்த கூத்தாடி சூர்யா அல்லது விஜய். பல கோடி 

ரூபாய் மதிப்பில் இந்தக் கூத்தாடிகளுக்கு 

சொந்தமாக பங்களாக்கள்.


இந்தக் கூத்தாடி நாய்கள் என்ன படித்து 

இருக்கிறார்கள்? M.Tech படித்து ITS தேர்வில் 

தேறி ஒரு முதல்நிலை அதிகாரியாக வேலையில் 

சேர்ந்த ஒரு தொழில்நுட்ப அறிஞருக்கு 

10 வருஷம் கழித்தாவது ரூ 50 கோடி 

கிடைக்குமா? கிடைக்காது.

பின் யார் பிரபுக்குலம்?


புழுத்த கூத்தாடி சூர்யா பிரபுக்குலமா?

அல்லது பிடித்தம் போக ரூ 10,000 சம்பளம் 

வாங்கும் VAO மாடசாமி பிரபுக் குலமா?



மார்க்சியத்தைக் கற்காமலும் புரிந்து 

கொள்ளாமலும் தற்குறியாக இருந்து கொண்டு 

மார்க்சியர்கள் பயன்படுத்தும் சொற்களை 

(jargon) பயன்படுத்துவதால் யாரும் 

மார்க்சியவாதி ஆகி விட முடியாது.


தன்னை தன் அடையாளங்களை மறைத்துக்

கொண்டு, முகநூலில் வீராவேசம் பேசுவதோ 

அல்லது சகல விஷயங்களிலும் கருத்துக் 

கூறுவதோ மார்க்சிய நடைமுறை அல்ல.

--------------------------------------------------------------

  

       .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக